Tuesday 21 February 2017

சொர்க்கப் பேறு அருளும் விருட்சங்கள்!

மரங்களில் இறைத்தன்மை பொதிந்துள்ளதால் அவை பூசனைக்குரியதாகின்றன.ஒரு கோவிலைக் கட்டும்முன்பு அதன் மூலவழிபாடு ஒரு மரத்தின் கீழிருந்துதான்தொடங்குகிறதுஎந்த மரத்தின் கீழிருந்து வழிபாடு தொடங்கியதோ அந்த மரம்அத் தலத்தின் தல
விருட்சமாகிறது.


சில இடங்கள் வனங்களாக இருந்துஅங்கு இறைவன் எழுந்தருளி அருட்காட்சிதந்தபின்னர் அவையும் திருத்தலங்களாகப் போற்றப்பட்டனசிதம்பரம் எனப்படும்தில்லைவனம்மதுரை எனப்படும் கடம்ப வனம்திருநெல்வேலி எனப்படும்வேணு வனம் ஆகியவை இத்தகைய தலங்களே.


தலவிருட்சங்கள் என்பவை புல்லினம் முதல் பல வருடங்கள் நிலைத்து நிற்கும்மரங்கள் வரையிலான வெவ்வேறு தாவர இனத்தைச் சார்ந்தவை.


தாவரங்களின் பூபிஞ்சுகாய்கனிவேர்பட்டை ஆகிய அனைத்து பாகங்களுமேமனிதனின் நோய்களைத் தீர்க்கும் தன்மை உடையனவாக விளங்குகின்றன.இறைவன் மனிதனுக்குப் பிறவிப் பிணி தீர்ப்பவனாய் இருப்பதுபோல்,தாவரங்களில் உறைந்து உடல் பிணியையும் தீர்த்தருளுகிறான் என்றநம்பிக்கையேமரங்கள் வழிபாட்டுக்குரியனவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கானகாரணம் எனலாம்.


புல்வகையைச் சேர்ந்த தலவிருட்சங்கள் இருக்கும் தலங்கள் சில:


தர்ப்பைப்புல்திருநள்ளாறுகோரைப்புல்திருச்சாய்க்காடுவிழல்திருவிளநகர்


செடி வகையைச் சார்ந்த தலவிருட்சங்கள் சில:


துளசிதிருவிற்குடிஅலரிதிருக்கரவீரம்வீழிச்செடிதிருவீழிமிழலை.


கொடி வகைத் தலவிருட்சங்கள் சில:


முல்லைதிருக்கருகாவூர்திருமுல்லை வாயில்மல்லிகைதிருச்சிக்கல்.


மரவகைத் தலவிருட்சங்கள் சில:


குருந்தமரம்திருப்பெருந்துறைவில்வமரம்திருவையாறுபனைமரம்-திருப்பனந்தாள்புன்னை மரம்திருநாரையூர்திருப்புகலூர்ஆலமரம்-திருவெண்காடு.


இவ்வாறு ஒவ்வொரு தலத்துக்கும் மூர்த்திகளும் தீர்த்தங்களும் அமைந்திருப்பதுபோல் தலவிருட்சங்களும் அமைந்துள்ளன.


சந்தனம்தேவதாருகற்பகம்மந்தாரம்பாரிஜாதம் ஆகிய ஐந்தும்தேவதருக்களாகப் போற்றப்படுகின்றனஇவை கேட்டதைத் தரும் சக்திகொண்டவை.


விருட்சங்கள் இறைத்தன்மை பெற்றிருப் பதற்கான புராண வரலாறும்கூறப்படுகிறது.


ஒருசமயம் இந்திரன் கயிலை சென்றபோது சிவகணங்கள் தடுத்தனஅதனால்இந்திரன் 
அக்னியை ஏவினான்அக்னி அந்தண உருக்கொண்டு ஈசனும் தேவியும்இருக்குமிடம் சென்றான்அக்னியைக் கண்டு கோபம் கொண்ட பார்வதிதேவி


""இந்திரனின் ஏவலால் அனுமதியின்றி வந்தமையால் தேவர்கள் அனைவரும்பெண்களாகக் கடவது'' என்று சாபமிட்டாள்இதையறிந்து வருத்தமுற்ற தேவர்கள்தேவியைத் துதித்தனர்தேவி அவர்களுக்குக் காட்சி கொடுத்து


""என் வாக்குபொய்க்காதுநீங்கள் அனைவரும் விருட்சங்களாகுக'' என்று கூறி மறைந்தாள்.அதன்படி தேவர்கள் விருட்சங் களாயினர்தேவப்பெண்கள் செடிகளாயினர்.ஊர்வசி,  ரம்பை போன்றோர் பூமரங்களாயினர்.


தேவியின் வாக்குப்படி விஷ்ணு பகவான் அசுவத்த விருட்சமாகவும்சதாசிவன்வட விருட்சமாகவும்பிரம்மன் பேலா மரமாகவும்இந்திரன் மா மரமாகவும்,இந்திராணி மரா மரமாகவும் மாறினர்.


மரங்கள் நமக்குத் தேவையான பிராண வாயுவை வெளியிட்டுநமக்குத்தேவையற்றதும் தீங்கு விளைவிப்பதுமான கரியமில வாயுவைஉட்கொள்கின்றனமரங்களின் இச்செயல்மூலம் நம் ஆரோக்கியமும்,சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகின்றனஆகவே மரங்கள் போற்றிப்பாதுகாக்கப்படவேண்டியவை என்பதை அறிவியல்ரீதியாகவும் ஏற்று
க்கொள்ள
வேண்டியுள்ளது.


கார்த்திகைப் புராணத்திலுள்ள விருட்ச சாஸ்திரப் பலனைக் கூறும் ஒரு பாடல்மரங்கள் வளர்ப்பதன் பயனைக் கூறுவதாக அமைந்துள்ளது.


ஓர் அரசுஆலும் வேம்பும்
ஒரு பத்து புளியும் மூன்று
சீருடன் விளவும் வில்வம்
மூன்றுடன் சிறந்த நெல்லி
பேர்பெறும் ஐந்தும் ஒன்றும்
யார் பயிர் செய்தாரேனும்
அவர்க்கில்லை நரகம்தானே'
என்பது அப்பாடல்.


ஒரு அரசுஆலம்வேம்புபத்து புளியமரம்மூன்று விளாமூன்று வில்வம்ஆறுநெல்லிமரம் ஆகியவற்றை நட்டு வளர்ப்பவர்க்கு நரகமில்லை என்கிறதுஇப்பாடல்கார்த்திகை மாத வளர்பிறையில் மரக்கன்றுகளை நடவேண்டும்.


மரம் வளர்த்தலின் முக்கியத்துவத்தை நம் முன்னோர்கள்அறிவுறுத்திச்சென்றபடி நாடும் நாமும் நலம்பெற மரங்களை வளர்ப்போம்வழிபடுவோம்.





No comments:

Post a Comment