Friday 25 August 2023

சேயா சேயாதே


 சேயா சேயாதே தேயா சேயாசே

மாயா மாயாவா வாயா மாயாமா வாயா மாவாயா மாயா சேமாசே யோயா நேயாவோ யாயே தேயாளே


naaga panchami yai aduththu varuvathu நாகசஷ்டி #நாகசஷ்டி அன்று சர்ப்பத்துடன் இணைந்த முருகப்பெருமானின் திருவடிவத்தினை விரதமிருந்து பூஜிக்கின்றனர்‌. நாகப்பிணையல்களைக் கண்ணால் காண்பதாலும்; வணங்குவதாலும் பூர்வ ஜென்ம பாவங்கள் நசிந்து புண்ணியங்கள் பெருகும்.
இல்லற உறவுகள் மேம்படும்.
வாழ்வில் ஏற்படும் தடைகள் நீங்கி வளங்கள் பெருகும்.
இதனாலேயே, அனைவரும் எளிதாகக் காணும்படியான இடங்களில், அடிக்கடி கண்களில் படக்கூடிய இடங்களில் இந்த நாகக்கற்களை நிலைப்படுத்தினர். முன் ஜென்மத்தில், தம்பதிகளைப் பிரித்தல்; வம்சங்களை அழித்தல் போன்ற கடுமையான பாவங்களைச் செய்பவர்கள், அவற்றின் விளைவாக மறு ஜென்மத்தில் சர்ப்பாதி தோஷங்களால் பெரும் துன்பங்களை அடைவர்.
இத்தகைய தோஷங்கள் திருமணத் தடை, குழந்தையின்மை ஆகிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது சாஸ்திரங்கள் கூறும் உண்மை. இத்தகையவர்கள் தங்கள் தோஷங்கள் அகன்றிட நாகக்கற்களை வழிபடுவதினால் தோஷங்கள் தொலைந்து வாழ்வில் சுபிக்ஷம் ஏற்படும்.
நல்லெண்ணெய் தீபங்கள் ஏற்றி வழிபடுதல் மிகுந்த நற்பலன்களைத் தரும். #பாம்பன்சுவாமிகள் இயற்றிய #துவிதநாகபந்தம் துதியை தினமும் பாராயணம் செய்து வந்தால் அனைத்து விதமான நாக தோஷங்களும் நீங்கும். முதலில் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, பாம்பன் சுவாமிகள் இயற்றிய துவித நாக பந்தம் துதியை தினமும் பாராயணம் செய்து வரவும்.
துவிதநாகபந்த படத்தினை அச்சிட்டு பூசையறையில் வைத்துக்கொள்ளவும். முதன் முதலில் ஆரம்பிக்கும்போது

அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளிலோ அல்லது திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளிலோ ஆரம்பிக்கவும்.
அவ்வாறு இயலவில்லை எனில் செவ்வாய்க் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 27 முறை பாராயணம் செய்யவும்.
முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நதியில் 27 முறை பாராயணம் செய்யவும். திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளும், மகம் நட்சத்திரம் வரும் நாளும் மிக மிக சிறப்பானவை.
பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 27 முறை பாராயணம் செய்யவும்.
துவிதநாகபந்த படம் உடன் இருத்தல் மிக நன்று. அதன் பின்பு தினமும் 27 முறை பாராயணம் செய்து வரவும்.
முருகனின் படம் அல்லது சிலை இல்லாத நிலையில் பித்தளையில் ஒரு வேல் வாங்கிக் கொள்ளவும்.
அதனை முருகனாக பாவித்து மேற்கண்ட துதியை பாராயணம் செய்யவும். தினமும் 27 முறை பாராயணம் செய்யவும். சர்ப்ப தோஷம், காலசர்ப்ப தோஷம், பாம்புகளின் தொல்லை, பாம்புகளை அடித்ததால் வந்த தோஷம், குழந்தைகள் மாலை சுற்றி பிறந்த தோஷம், பிரசவ கால துன்பம் மற்றும் ராகு, கேது கிரகங்களின் தோஷங்கள் நீங்கி என்றும் நிம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை. தற்பொழுது கிரகங்கள் அனைத்துமே காலசர்ப்ப தோஷத்தின் பிடியில் இருப்பதால் இந்த படத்தை பிரிண்ட் அவுட் எடுத்து பார்க்கவும். உங்களின் சட்டை பாக்கெட்டில் லாமினேஷன் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இயன்றவர்கள் அடிக்கடி இந்த பாடலை நன்கு மனப்பாடம் செய்து முருகப்பெருமான் வழிபாடு செய்யுங்கள். நிறைய பேரின் ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷத்தின் தாக்கம் இருக்கும் அல்லது காலசர்ப்ப யோகம் இருக்கும். ராகு கேது தசை நடப்பவர்கள், புத்தி நடப்பவர்கள் அடிக்கடி எந்த விஷயமென்றாலும் தடை தாமதங்கள் தடங்கல்களை சந்திப்பவர்கள் இதை பயன்படுத்த வேண்டும். குழந்தைபேறு அடையாதவர்கள், குழந்தை பாக்கியம் தடை உள்ளவர்கள் இதை அடிக்கடி பார்க்கவும்.

சரியான மருத்துவ உதவிகள் thane ungalai thedi vandhu கிடைக்கும். ஒரு நல்ல காரியத்திற்கு செல்லும் பொழுது இந்த படத்தை கையில் வைத்துக் கொண்டு வேண்டிக் கொள்ளுங்கள். அந்த காரியம் நல்லபடியாக நடக்கும்.
ஆதலால் இது நம் அனைவருக்கும் எளிய பரிகாரங்களில் ஒன்றாகும். சேயா சேயாதே தேயா சேயாசே மாயா மாயாவா வாயா மாயாமா வாயா மாவாயா மாயா சேமாசே யோயா நேயாவோ யாயே தேயாளே

சேயா சேயாதே தேயா சேயாசே மாயா மாயாவா வாயா மாயாமா வாயா மாவாயா மாயா சேமாசே யோயா நேயாவோ யாயே தேயாளே!