Tuesday 12 December 2017

உங்க ராசிப்படி நீங்க எப்படி ? குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை!

சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம்



வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென்று போய்க்கொண்டே இருக்கும் ராசிகள் சர ராசிகள் எனப்படும்..அந்தளவு வேகம் நிறைந்தவர்கள் ..ஒரே பாட்டில் பணக்காரன் ஆக வேண்டும் என்பது போல பம்பரமாக சுழலக்கூடியவர்கள்...

இவர்களுக்கு குடும்பம் என்பது அடிக்கடி மறந்து போய்விடும்..வீட்டை விட வெளியில் இருக்கத்தான் அதிகம் பிரியப்படுவார்கள்...போனில்தான் பெரும்பாலும் இவர்களை பிடிக்க முடியும்.பெரும்பாலும் என்னைப்போல வேகம் இல்லை...எனக்கு ஆப்போசிட்டான குணம் இருக்குறதை கட்டி வெச்சிட்டாங்க என புலம்புவது வாடிக்கை. 

மேசம் ராசியினருக்கு ரொம்ப நாகரீகம்,அழகான,ஆடம்பர செலவு செய்யும் வாழ்க்கை துணை அமையும்..ஊட்டி போலாமா கொடைக்கானல் போகலாமா..கார் எப்போ வாங்கலாம் என்ற ரீதியில்தான் பேச்சு இருக்கும்..செலவு கொஞ்சம் கூட செய்வார்கள்..ஆனாலும் மத்தவங்க கிட்ட பெருமையா சொல்லிக்குற மாதிரி துணைதான் அமையும்..எப்பவாவது ஜாலின்னா பரவாயில்லை..எப்பவுமே ஆட்டம் பாட்டம்ன்னா எப்படி..?ன்னு எதிர்பார்ட்டி புலம்பும்.

துலாம் ராசியினருக்கு அதிகாரமா பேசக்கூடிய,கட்டுப்படுத்த முடியாத வாழ்க்கை துணை அமையும்.எல்லோரும் என் பேச்சை கேளுங்க..நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன்..விட்டுக்கொடுத்து போனாதான் கெட்டு போகாம வாழலாம்..

கடகம் ராசியினருக்கு குடும்ப வாழ்க்கை பெரும்பாலும் திருப்தி அளிப்பதில்லை காரணம் 7ஆம் வீடாக சனி வீடு வருவதால் பல சிக்கல்கள் வருகிறது.பல கடக ராசியினர் ஏமாந்து விட்டேன் என புலம்புவதுதான் அதிகம்..எட்டுக்குடையவனும் அவர்தான் என்பதால் ,நஷ்டம் ஆவதும் ,போராடுவதுமாக இருக்கு.திருமன விசயத்தில் நிதானமாக முடிவெடுத்தால் நல்லது நடக்கும்..சனி பாதிக்காமல் இருந்தால் அமைதியான வாழ்க்கையாக இருக்கும்.

மகரம் ராசியினருக்கு ஊருக்குள்ள நல்ல செல்வாக்கு இருக்கும் வாழ்க்கை துணை அமையும்.அழகான அன்பான துணைதான் பெரும்பாலோனோர்க்கு அமைந்து இருக்கிறது.மனைவி வந்த நேரம்தான் நான் நல்லாருக்கேன் என சொல்லும் மகர ராசியினர் அதிகம்...சந்திரன் கெட்டால் மட்டுமே சிக்கலாகி விடுகிறது.

ஸ்திர ராசிகள் ;எடுத்த முடிவில் உறுதியாக இருப்பவர்கள்..நிலையான எண்ணமும் செயலும் கொண்டவர்கள் இந்த ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் ...இவர்களுக்கு வாழ்க்கை துணை எப்படி அமையும்...இது லக்னத்துக்கும் பொருந்தும்.ராசிக்கும் பொருந்தும்...பொதுவான கருத்துக்கள்தான்...ஜாதகத்தில் இருக்கும் கிரக நிலைக்கு ஏற்ப கொஞ்சம் மாறலாம்...ஆனால் அடிப்படை மாறாது.முடிந்தவரை இருப்பதை சொல்கிறேன்.

ரிசபம்-இவங்களும் ஸ்திர ராசி...வாழ்க்கை துணையும் ச்திரம் என்பதால் இருவருமே பிடிவாத கரர்கள்தான் சண்டை வந்தால் விடியும் வரை தீராது.ரிசபம் பணம் சம்பாதிப்பதில் அதிக ஆர்வம்.வாழ்க்கை துணை அடிக்கடி மருத்துவ செலவை வைக்கும்.எதுவும் இல்லை எனில் புலம்ப ஆரம்பிச்சுருவாங்க..குடும்பத்தின் மீது அதிக பற்று கொண்டவர்கள் தான் இருவருமே என்பதால் மற்றவர்கள் பொறாமை கொள்ளுமளவு குடும்பம் நடக்கும்..ஆனால் இருவருக்குள்ள் அடிக்கடி பனிப்போர் நடக்கும்..
.
சிம்மம்;சிங்கத்து கிட்ட மாட்டிக்கிட்ட புள்ளி மானா தவிக்கிறேன்னு வாழ்க்கை துணை புலம்பல் தினசரி எதிரொலித்தாலும் தன் வால்யூமை குறிச்சுக்கவே மாட்டார்.அடிக்கடி சிங்க அவதாரம் எடுப்பதால் குடும்பம் அடிக்கடி டேஞ்சர் ஜோனுக்கு போய்தான் திரும்பும்.தொழில் மீது நல்ல பக்தி உடையவர்.வாழ்க்கை துணை அடிமை போல இருக்கனும் என்பார்..ஆனால் நல்ல மனுசன்..கோபம் இருக்குற இடத்துல குணமும் இருக்கும்...சிம்ம ராசிக்காரங்க பலாப்பழம் மாதிரி மேலதான் முள்ளு இருக்கும் உள்ளே முழுக்க இனிப்புதான் என்பதால் வாழ்க்கை துணை இவரை சரியா புரிஞ்சு வெச்சிருப்பாங்க..இருப்பினும் இவர்கள் அடிக்கடி மட்டம் தட்டுவதை ரசிக்க மாட்டாங்க..கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை.ஆன்மீகம்,கடவுள் பக்தி கொண்டவர்களாக வாழ்க்கை துனை அமையும்.

விருச்சிகம்;இவங்களுக்கு வாழ்க்கை துணை நன்ராக அமையும்..ஆனா இவங்களே அடிக்கடி அதை துன்புறுத்தி பார்ப்பாங்க...நல்ல அழகு,இனிமை,சம்பாதிக்கும் திறன் இருக்கும் துணை அமைந்தாலும் அவங்க சொந்தக்காரங்க கிட்ட அவங்க காட்டும் ஈடுப்பாடு நமக்கு பிடிக்கிறதில்லை.மாமியார் பிரச்சினை அடிக்கடி தலை காட்டும்.அமைதியான வாழ்க்கை துணை அமையும்..அன்பும்,பாசமும் அதிகம்.நாகரீகமா நடந்துக்குவாங்க...அவங்க மாமனார் மாமியாரை மதிப்பாங்க ஆனா இவருக்குதான் அவங்க ஆளுகளை பிடிக்காது எல்லாம் சுயநலம் என்பார்கள்

கும்பம்;ரொம்ப கரெக்டா நடந்துக்குற வாழ்க்கை துணை அமையும்..கொஞ்சம் ஆணவமா பேசுவாங்க...ஆனா நல்லவங்கதான் ...நேர்மை,நியாயம் விரும்பும் வாழ்க்கை துணையாக இருக்கும்.குடும்ப வாழ்வில் அடிக்கடி ஈகோ பிரச்சினை தலைகாட்டும் இருவருமே சரிக்கு சரி பலமானவர்கள் என்பதால் யாரேனும் விட்டுகொடுத்தால் குடும்பம் கெட்டு போகாது.மாமனார்,மாமியார் பிரச்சினை இருக்கும்.ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.சமூகத்தில் நல்ல மதிப்பு கொண்டவர்கள் வாழ்க்கை துணையாய் அமையும்.கோபத்தை குறைச்சுக்குங்க உடம்புக்கும்,வீட்டுக்கும் நல்லது என வாழ்க்கை துணையிடம் அடிக்கடி சொல்ல வேண்டி வரும்.




உங்க ராசிப்படி நீங்க எப்படி ..4 மிதுனம்,கன்னி,தனுசு,மீனம்

உபய ராசிகள் என்பது மிதுனம்,கன்னி,தனுசு,மீனம் ஆகும்..இவை நான்கும் ராசிக்கட்டத்தில் ஒவ்வொரு மூலையிலும் இருக்கும் ராசிகளாகும்..நான்கு மூலைகளிலும் போய் சந்தில் மாட்டிக்கொள்கின்றன...அது போலவே இந்த ராசியினரும் எப்போதும் அடைபட்டு இருக்கும் குணமுடையவர்.

ஒரு பிரச்சினை என்றால் மனசு கஷ்டமாகி படுத்துக்கொள்வர்.அதிகம் செயல்படாத ராசி.வீடு தான் இவர்களுக்கு உலகம்.அலுவலகம் விட்டால் வீடு.குழந்தைகள் மீது உயிரையே வைத்திருப்பர்.நான் வாழ்வதே குழந்தைகளுக்காக என்பர்.அடிக்கடி குழப்பத்தில் ஆழ்ந்து விடுவர்.யார் என்ன சொன்னாலும் நம்புவர்.ஏமாந்தும் விடுவர்....வரவு செலவுக்கு இவங்க ஒத்து வர மாட்டாங்க..கடன் இவங்க யாருக்காவது கொடுத்தா திரும்பி வராது....பிஞ்சு மூஞ்சி என்பது இவர்களுக்குதான்.ஆனா சவுண்ட் பலமா இருக்கும்.

இன்னொரு உபய ராசியினரை கல்யாணம் செய்துகிட்டா பிரச்சினை இல்லை..ஆனா சர ராச்யினரை கல்யாணம் செய்துகிட்டா அவங்க என்ன சொல்றாங்களோ அதைதான் கேட்கனும்.மனைவி சொல்லே மந்திரம் என வாழ்வது இவர்கள்தான்.மாமனார் மாமியார்க்கு கட்டுப்பட்ட மாப்பிள்ளை...கல்யாணம் வரைக்கும் அம்மா,அக்கா,அண்ணன் தான் தெய்வம்..கல்யாணத்துக்கு அப்புறம் மனைவி,மாமனார் ,மாமியார்தான் தெய்வம் என வாழ்வது இந்த ராசியினர்தான்..பாசக்காரங்க...மென்மையானவங்க..
கடும் சொல் தாங்காதவர்கள்...கடுமையா உழைக்கவும் முடியாது...

மிகப்பெரும் அறிவாளிகள்..அறிவால்தான் சம்பாதிப்பர்.உடல் அழைப்பு ஆகாது.அது இவங்களுக்கு தெரியாது.....நிறைய சம்பாதிக்கும் வித்தை இவர்களுக்குதான் தெரியும்...பங்கு வர்த்தகம்,வங்கி பணி,ஆன்மீகம் சார்ந்தவை,பைனான்ஸ்,வியாபாரம் போன்றவற்றில் இவர்களே இருக்கின்ரனர்.உட்கார்ந்து சம்பாதிக்கும் எல்லா துறைகளிலும் இவர்களை பார்க்கலாம் ..

மிதுனம் ராசியினர் மனைவி /கணவன் சொல் மட்டும் கேட்டு நடந்து கொண்டால் எந்த ஆபத்தும் இல்லை.குடும்பம் நல்லாருக்கும்...மாமியாரால் ஆதாயம் உண்டு.
 
கன்னி ராசியினர் மனைவி ஆன்மீகம் கடவுள் பக்தி கொண்டவர். நல்லவர்.மாமனார்தான் அடிக்கடி வம்பிழுப்பார்.
 
தனுசு ராசியினர் மனைவி/கணவர் அறிவாளி.அவர்கள் சொல்படி செயல்படுவது உத்தம பலன் தரும்.
மீனம் ராசியினர் கணவன் /மனைவி கலகலப்பானவர் செல்வாக்கானவர்.உங்கள் கடும் சொல்தான் அடிக்கடி அவரை கடுப்பாக்கும்.மாமனாரால் ஆதாயம் உண்டு. 



உங்க ராசிப்படி நீங்க எப்படி..?






சர ராசிகள் ;மேசம்,கடகம்,துலாம்,மகரம் ...உறுமீன் வரும் வரை காத்திருக்கும் கொக்கு போல சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பார்கள் ..பாயிண்ட் பாயிண்ட் வரட்டும் என காத்திருந்து நெத்திய்டியாக தாக்குவதுதான் இவர்கள் பாணி.எதிலும் வேகம்,விவேகம் .எல்லா விசயத்திலும் அனுபவம் உடையவர்கள்...ஊர் நாட்டாமை இவர்கள்தான் என்பதால் எல்லா பிரச்சினைக்கும் இவர்கள் நான் சொல்றேன் தீர்ப்பு என முன்னாடி ஏதாவது ஆதாயம், கிடைக்குமான்னு பார்ப்பாங்க...எப்பவும் பெரிய ஆட்களுடன் பழகத்தான் விரும்புவார்கள்..தன்னை பெரிய ஆட்களாக காட்டிக்கொள்ளவே விரும்புவார்கள்..மிகப்பெரும் உலக சாதனையாளர்கள் ,மகான்கள்,உலக தலைவர்கள்  இந்த ராசிகளில் பிறந்திருக்கின்றனர்.

ஸ்திர ராசிகள் ;ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் இவர்கள் ஒரு தடவை முடிவு எடுத்திட்டா இவர்கள் பேச்சை இவர்களே கேட்க மாட்டார்கள் ....அதில் இருந்து மாறவும் மாட்டார்கள்..தப்பா இருந்தாலும் சரியா இருந்தாலும் அதில் பிடிவாதமாக இருப்பார்கள்...ரெண்டு ஸ்திர ராசிக்காரங்க சண்டையோ வாக்குவாதமோ செய்ய ஆரம்பித்தாலும் விடிய விடிய தொடரும்..எங்கும் எதிலும் நிலைத்து நிற்பார்கள் தான் எடுத்த முடிவில் பிடிவாதமாக இருப்பார்கள் ...நிலையான வெற்றியை பெறுவார்கள் ....வாழ்க்கையில் ஜெயிக்காமல் ஓய மாட்டார்கள். வாழ்வில் ஏதேனும் ஒரு சாதனையை செய்வார்கள்

உபய ராசிகள் ;;மிதுனம்,கன்னி,தனுசு ,மீனம் அப்படி செய்யலாமா இப்படி செய்யலாமா என யோசித்து கொண்டே சொதப்பி விடும் புத்திசாலிகள் ..மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வதில் கில்லி...ஆனா இவங்களுக்கு இவங்களே வெச்சிக்குவாங்க கொள்ளி...எதிலும் இரட்டை நிலைதான்..மரம் ஏறும் போது ஒரு புத்தி இறங்கும்போது ஒரு புத்தி என்பார்களே அது இவர்களுக்கு பொருந்தும்.மனசு மாறிக்கிட்டே இருக்கும்.ஏமாற்றம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.அறிவாளிகள் ,யாரையும் பார்த்தவுடன் கணிக்க கூடியவர்கள்..ஆன்மீகத்தில் ,பண விசயத்தில் சிறந்தவர்கள் ...இவர்கள் துணை இருந்தால் வாழ்வில் வெற்றி அடையலாம்..





Friday 7 April 2017

உன்னத வாழ்வருளும் உஜ்ஜயினி காளி!

51 சக்தி பீடங்கள் - 48  

மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினி பிரசித்தி பெற்ற திருத்தலம். ஏழு மோட்சபுரிகளுள் ஒன்றான இத்தலத்தில்தான் மகாகவிகாளிதாசர் அன்னை காளிகா தேவியின் அருள் பெற்று கவிச் சக்ரவர்த்தி ஆனார். இந்த காளி தேவியின் திருவருளைப் பெற்ற விக்ரமாதித்தன் உலகம் புகழும் வண்ணம் அரசாட்சி செலுத்தினான். தண்டி எனும் கவிஞர் பெருமைபட வாழ்ந்ததும் உஜ்ஜயினியே. ஒரு சமயம் உஜ்ஜயினியைத் தலை நகராகக் கொண்ட அவந்திகாபுரியில் ஒரு அந்தணர் தன் நான்கு மகன்களுடன் வசித்து வந்தார். அப்பொழுது தூஷணன் எனும் கொடியவன் அந்த அந்தணர் புரியும் யாகங்களுக்கும் தெய்வ வழிபாட்டு முறைகளுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அதனால் அவ்வூரில் வாழ்ந்து வந்த அனைவரும் அந்த அந்தணரின் தலைமையில் ஒன்று கூடி மண்ணினால் ஆன ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி சிவ பூஜை செய்தனர். 

சிவ பூஜை செய்த மண் எடுத்த இடம் பெரிய குளமாக மாறியது. வழக்கப்படி தூஷணன் சிவ பூஜைக்கு இடையூறு செய்ய வந்தபோது அக்குளத்தினின்று ஈசன் மகாகாளேஸ்வரராக வெளித் தோன்றி அவனை வதைத்தார். அந்த அந்தணரின் வேண்டு கோளுக்கிணங்க ஈசன் அங்குள்ள பக்தர்கள் அனைவருக்கும் காட்சி கொடுத்தார். இத்தலம் 12 ஜோதிர் லிங்கத் தலங்களுள் ஒன்று.  கிருஷ்ண பகவானால் ஆராதிக்கப்பட்டும், விக்ரமாதித்தனுக்கு திருவருள்புரிந்தும் அருளிய தேவி இந்த சக்திபீடத்தில் ஹரசித்திமாதா என்று வணங்கப்படுகிறாள். சக்தி பீடங்களுள் இப்பீடம் ருத்ராணி பீடமாக போற்றப்படுகிறது.  இந்த தேவி சரணடைந்தோரைக் காப்பவள். மாங்கல்ய பாக்யம் அருள்பவள். அன்பானவள். மகாசக்தி. உலகம் முழுவதும் சக்தியாக பரவி நிற்பவள். 

பேராபத்துகளிலிருந்து காத்தருள்பவள். தன் பாத கமலங்களை வணங்குவோரைக் காப்பாற்றுபவள். பைரவகிரி எனும் இப்பீடத்தில் அவந்தி சக்தியாய் அமர்ந்த பேரழகி. திருநீலகண்டரின் உயிராக விளங்குபவள். துன்புறும் மானிடர்களுக்கு உதவ உஜ்ஜயினியில் ஒப்பற்ற மாமணியாய் துலங்குபவள். நவ வித ஸித்திகளையும் தன் பக்தர்களுக்கு நல்குபவள். ஆயகலைகள் 64ம் இந்த சக்திபீட நாயகியைச் சரணடைவோரைச் சரணடைகின்றன.  அப்பகுதி மக்களுக்கு இவளே கண்கண்ட தெய்வமாகத் திகழ்கிறாள். விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அங்குள்ள அணையா குண்டத்திலிருந்து ஆரத்தி எடுத்து அம்பிகையை ஆராதிக்கின்றனர். 

இத்தேவியின் திருவருளைப் பெற்ற விக்ரமாதித்தனைப் பற்றி அறிவோம். சரித்திரம் பல விக்ரமாதித்தர்களைக் கண்டாலும், பட்டி விக்ரமாதித்தனே மிகவும் புகழ் பெற்றவன். அவன் காளிதேவியை நேரில் தரிசித்து வரம் பெற்றவன். காளியின் திருவருளால் அரிய சிம்மாசனம் கிடைக்கப்பெற்று அதிலிருந்து ஆயிரம் ஆண்டுகள் அரசாட்சி புரிந்தவன். விக்ரமாதித்தனுக்கு பட்டி எனும் நண்பன் இருந்தார். ஒரு நாள் அவர்கள் இருவரும் வீதியில் சென்று கொண்டிருந்த போது காளியின் உருவம் பதித்த கருங்கல்லைக் கண்டனர். அதனருகில் மகாகாளியின் திருவருளைப்பெறும் வழிமுறைகள் குறித்த வாசகங்கள் கற்களில் செதுக்கப்பட்டிருப்பதைக் கண்டனர். 

அதன்படி அங்குள்ள ஆலமரத்தில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் ஐந்து உறிகளை ஒரே வீச்சில் அறுத்தெறிந்து விட்டு அருகில் உள்ள திரிசூலத்தில் பாய்ந்தான் விக்ரமாதித்தன். அதனால் மனமகிழ்ந்த காளிதேவி அங்கு தோன்றி, விக்ரமாதித்தனை ஆட்கொண்டு அவன் விருப்பப்படி அழகிய அரண்மனையையும் ஆயிரம் வருட ஆயுளையும் அருளினாள். அதை அறிந்த விக்ரமாதித்தனிடம் மிகுந்த அன்பு கொண்ட பட்டி தானும் அவனுடன் என்றும் இருக்க காளிதேவியை நோக்கித் தவம்புரிந்தான். தவத்துக்கு மெச்சிய அன்னை அவனுக்கு 2000 ஆண்டுகள் நீண்ட ஆயுளை வரமாக அளித்தாள். இருவரும் ஒன்றாகவே வாழ்ந்து மறைய வேண்டுமென்று நினைத்த விக்ரமாதித்தன் தனக்கு கொடுக்கப்பட்ட 1000 வருட அரசாட்சியை நீட்டிப்பதற்காக ஆறு மாதங்கள் காட்டிலும் ஆறு மாதங்கள் நகரிலுமாக கழித்தான். 

விக்ரமாதித்தனுக்கு திருவருள் புரிந்த இந்த காளி அடுத்து ஒரு மூடனை மகாகவியாக்கினாள். அதை அறிவோம். சுதன்மன் மற்றும் சுந்தரவதி எனும் அரசதம்பதியர்க்கு மகளாகப் பிறந்த வித்யாரத்னம் மிகவும் புலமை பெற்று விளங்கினாள். பல புலவர்களையும் கவிஞர்களையும் வாதில் தோற்கடித்து அவமானப்படுத்தி எள்ளி நகையாடினாள். அதனால் பலரின் வெறுப்புக்கும் ஆளானாள்.  அவளைப் பழிவாங்கக் காத்திருந்த அவர்கள் ஒரு மூடனைக் கண்டுபிடித்து அவனை சிறந்த கவிஞன் என அவளிடம் அறிமுகப்படுத்தி சூழ்ச்சி செய்து அவளுக்கு மணமுடித்தனர். திருமணமான பின் அவன் மூடன் என்பதை அறிந்து அவள் அவனை ஒதுக்கினாள். 

அதனால் மனம் நொந்து இந்த காளியிடம் நீயே துணை என சரணடைந்த மூடனை மகாகவிஞனாக்க திருவுளம் கொண்ட தேவி தன் திரிசூலத்தால் ப்ரணவமந்திரத்தை அவன் நாவில் எழுத அவன் பார் புகழும் கவிஞனானான், காளியின் திருவருள் பெற்ற அவன் ‘‘காளிதாஸன்’’ என்றானான். காளிதாசன் எழுதிய ஸ்யாமளாதண்டகம், மேகசந்தேஸம். குமாரசம்பவம் போன்ற நூல்கள் காலத்தால் அழியாதவை. இத்தலத்தருகே க்ஷிப்ரா நதிக்கரையில் குண்டலேஸ்வரர் எனும் சிவாலயம் உள்ளது. அங்கு உள்ள நந்தியம்பெருமான் நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். அவர் அமர்ந்தால் உலக ப்ரளயம் ஏற்படும் எனும் கருத்து நிலவுகிறது.

கும்பமேளாவைப் போலவே இங்கும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘‘ஹம்ஹஸித் மேளா’’ கொண்டாடப்படுகிறது. 30 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் போது க்ஷிப்ரா நதியில் நீராடி, ஈசனையும் ஹரசித்திமாதாவையும் தரிசித்தால் மறுபிறவி கிடையாது என்பது நம்பிக்கை. கண்கண்ட தெய்வமாய் கவலைகளைப் போக்கும் காளியை சரணடைவோம்.

அக்ஷர சக்தி பீடங்கள்


பீடத்தின் பெயர் குருக்ஷேத்திரம். அம்பிகையின் வலது கணுக்கால் விழுந்த சக்திபீடம். அக்ஷரத்தின் நாமம்(  ). அக்ஷர சக்தியின் நாமம் வரதாதேவி எனும் நாராயணி தேவி. இவள் ஸ்படிகம் போன்ற தூய வெண்ணிறம் கொண்டவள். பட்டாடை அணிந்து ஸர்வாபரண பூஷிதையாக பொலிபவள். நான்கு திருக்கரங்களில் மேலிரு திருக்கரங்கள் தாமரை மலர்களைத் தரிக்க கீழிரு திருக்கரங்கள் அபய வரத முத்திரைகள் தரிக்கின்றன. அழகே உருவாய் அருளே வடிவாய் திகழ்பவள் இந்த நாராயணி தேவி. பீட சக்தியின் நாமம் ஸாவித்ரி. ஸ்தாணு பைரவர் இந்த சக்திபீடத்தின் காவலர். குருக்ஷேத்திரம் த்வைபாயனஸரோவரம் அருகே இந்த சக்திபீட நாயகி திருவருட்பாலிக்கிறாள்.

கரும்பன்ன வாழ்வருளும் கரும்பார்குழலி!

51 சக்தி பீடங்கள் - 49

சிறிக்கும் குளித்தலைக்கும் இடைப்பட்ட மலை ரத்னாசலம் எனப்படும். தமிழக சக்தி பீடங்களுள் இந்த சக்திபீடம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சக்திபீடநாயகி அராளகேசியம்மன் என்றும் கரும்பார்குழலியம்மை என்றும் வணங்கப்படுகிறாள். இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் தேவி கோலோச்சுகிறாள். இந்த சக்திபீடத்தைச் சுற்றியுள்ள சிவாலயங்களில் ஈசன் காலையில் கடம்பர், மதியத்தில் சொக்கர், மாலையில் திருஈங்கோய் மலைநாதர், அர்த்தசாமத்தில் சிம்மேசர் என வழிபடப்
படுகிறார். மதியம் சொக்கர் என்று வணங்கப்படுபவர். இந்த ரத்னாசலமலையில் வீற்றிருக்கும் ரத்னகிரீஸ்வரரை வாட்போக்கிநாதர், சொக்கர் என வணங்குகின்றனர். இவருக்கு அபிஷேகம் செய்யும்பால் உடனே கெட்டித்தயிராக மாறும் அற்புதம் இன்றும் நிகழ்கிறது. இம்மலையின் மீது காகங்கள் பறப்பதில்லை. 

இந்த சக்திபீடநாயகி அபய வரதம் தாங்கிய கீழிரு கரங்களும், தாமரை மலர்களைத் தாங்கிய மேலிரு கரங்களுமாக திருவருட்பாலிக்கிறாள். இங்கு வரும் பக்தைகள் தங்கள் மாங்கல்யம் நிலைக்க தேவியை வேண்டி நிற்கின்றனர். வேண்டி நிற்போரின் குறைகளைத் தீர்ப்பவள்தானே அம்பிகை. குமாரி எனும் திருப்பெயரில் இந்த சக்தி பீடமாம் ரத்னாவளி பீடத்தில் அரசாள்பவள். இவளே சூரபத்மன் போன்ற அசுரர்களை அழித்த முருகப் பெருமானை ஈன்றவள். ஈசன் மகிழ முருகப் பெருமானுக்கு வேலாயுதத்தை தந்தருளியவள். அப்பெருங்கருணையை மனிதர்களும் பெற்ற ஐம்பத்தோரு சக்தி பீடங்களிலும் பரவி நிற்பவள். நீலகண்டனின் உயிர். இவளே மதுரையில் மலயத்வஜ பாண்டியன் மகிழ மீனாட்சியாகவும், காசியிலே விசாலாட்சியாகவும், காஞ்சியிலே காமாட்சியாகவும் திருவருட்பாலிப்பவள். இந்த அம்பிகை ஈசனுடன் இணைந்து இந்த ரத்னாவளி பீடத்தில் ஜொலிக்கிறாள். 

தேவி திருவருட்பாலிக்கும் ரத்னாசல மலைக்குக் கீழே ஐயனார் சந்நதியும், வைரப்பெருமாள் சந்நதியும் உள்ளது. பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஐயனார் சந்நதியில் பூட்டு வாங்கி பூட்டுகின்றனர். தங்கள் பிரச்னைகள் யாவும் பூட்டு போட்டதுபோல் தீர்ந்து விடும் என்பது அவர்கள் அனுபவ நம்பிக்கை. அதே போன்று அவர்களின் பிரச்னைகளும் ஐயனார் திருவருளால் தீரும் அற்புதம் இங்கே நிகழ்கிறது. அதே போன்று வைரப் பெருமாள் சந்நதியில் ஒரு தலையற்ற உருவம் உள்ளது. அதன் காரணம் யாதெனில், முன்னொரு காலத்தில் சிவபக்தரான பெருமாள் தன் தங்கைக்கு மழலை வரம் வேண்டி ரத்னேஸ்வரரிடம் வேண்டினார், அவ்வாறு மழலை வரம் கிட்டினால் மழலையின் தலையைக் கொய்து காணிக்கையாக்குவதாகவும் வேண்டிக் கொண்டார், அதன்படி ஈசன் அவருக்கு மழலைவரம் தர அந்த மழலையின் தலையைக் கொய்து காணிக்கையாக்கினார். 

ஈசன் அவர் பக்தியை மெச்சி அந்த மழலையை பழையபடி மாற்றியருளினார். இன்றும் ஈசனுக்கு கற்பூர ஆரத்தி எடுத்த பின் வைரப் பெருமாளுக்கும் காண்பித்த பின்னரே பக்தர்களுக்கு ஆரத்தி அளிக்கப்படுகிறது. ஈசனின் நிர்மால்ய மாலையும் வைரப் பெருமாளுக்கு சாத்தப்படுகிறது. மழலை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வேண்டிக்கொண்டு பலன் பெறுகின்றனர். சுந்தரர் இம்மலைக்கு வந்தபோது இம்மலையே ரத்னமாக ஜொலித்ததாம். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மழைக்காலத்தில் மழையினால் மண் கரைந்து போகும்போது இம்மலையின் ஏராளமான ரத்னங்கள் கிடைக்குமாம். ஒரு முறை பதினோரு செட்டியார்கள் ஒன்று சேர்ந்து தங்கள் வணிகத்தால் கிடைத்த லாபத்தைக் கோயிலில் பிரித்துக் கொண்ட போது எத்தனை முறை பிரித்தாலும் பன்னிரெண்டு பங்கே வந்து திகைத்தபோது அசரீரி வாக்கின்படி 12வது பங்கை ஈசனுக்கு அளித்தாராம். 

இன்றும் அந்தச் செட்டியார்களின் வம்சத்தவர் வருடத்திற்கு ஒருமுறை இங்கு வந்து விலையுயர்ந்த ஆபரணங்களைச் செலுத்தி வழிபடுகின்றனர். 
ஒருமுறை ஆலயத்திற்கு வந்த ஆரிய அரசரிடம் அங்கிருந்த அந்தணர் காவிரி நீரைக் கொணர்ந்து ஈசனுக்கு அபிஷேகம் செய்ய கட்டளையிட, அதன்படி செய்த அரசர் எவ்வளவு நீரை எடுத்து வந்தாலும் நீர் கொட்டப்படும் பாத்திரம் நிரம்பாமல் போகவே தன் வாளால் அந்த அந்தணரை வெட்ட முயலும் போது அவர் ஈசனாக மாறி அருளியதால் இத்தலநாதர்  வாட்போக்கி நாதராக அருள்கிறார், இன்றும் இவருக்கு காவிரி நீரிலேயே அபிஷேகங்கள் செய்யப்படுகிறது. 
அம்பிகையின் கடைக்கண் பார்வை சிறிதே சிறிது பட்டாலும், அவர்கள் உலகம் முழுவதையும் ஒரு குடைகீழ் ஆள்வார்கள். 

அவன் தேவேந்திரனாகி ஐராவதத்தில் ஆரோகணித்துச் செல்வான், தேவர்கள் அவனுக்கு ஏவல் புரிவர். மன்மதன் பார்த்துப் பொறாமை கொள்ளும் வகையில் பேரெழில் படைத்து, தேவதாசிகள், அப்ஸரஸ்கள் போன்றோர் காதல் கொள்வர். அவன் வாக்குகளில் தாம்பூல நறுமணம் வீசும். அவர்கள் நித்திய யெளவனுத்துடன் வாழ்வர் என மூகர் தன் மூகபஞ்சசதியின் ஸ்துதி சதகத்தில் கூறியபடி கரும்பார் குழலி தன் பக்தர்களுக்கு மேற்சொன்ன பலன்கள் அத்தனையையும் தந்தருளும் ஸர்வசக்தி படைத்தவள். கரும்பார்குழலியின் பதமலர்கள் பணிந்து கரும்பைப் போல் இனிய வாழ்வு பெறுவோம்.

அக்ஷர சக்தி பீடங்கள்

பீடத்தின் பெயர் ஜயந்தி. தேவியின் இடது கணுக்கால் விழுந்த சக்தி பீடம். அக்ஷரத்தின் நாமம்(   ). அக்ஷர சக்தியின் நாமம் ஸ்ரீதேவி எனும் மங்கள கெளரி தேவி. இவள் ஒளிரும் பொன்னாபரணங்கள் அணிந்து, பொன்னிற ஆடை உடுத்தி, இரு கைகளிலும் தாமரை மலரை ஏந்தி கீழிரு கைகளை அபய, வரத
முத்திரை காட்டிய வண்ணம் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் எழுந்தருளி அருட்பாலிக்கிறாள். பீட சக்தியின் நாமம் ஜயந்தி.  இந்த சக்தி பீடம் க்ரமதீஸ்வரர் எனும் பைரவரால் காக்கப்படுகிறது. அஸ்ஸாம் ஷில்லாங்கிலிருந்து 52 கி.மீ. தொலைவில் ஜயந்தியா மலையில் இப்பீடம் உள்ளது. பார்பாக் (Paurbagh) என்பது இந்த சக்திபீடம் உள்ள கிராமத்தின் பெயரா

மங்களங்கள் பெருக்கும் மானஸரோவர்!

51 சக்தி பீடங்கள் - 50

திபெத்  மானஸரோவர் ஏரி நீல நிறமாக அருட்காட்சியளிக்கிறது. ஆதிசங்கரர் தரிசித்த சக்தி பீடங்களுள் இப்பீடம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்தத் தடாகமே  தேவியாக வழிபடப்படுகிறது. இது இமாலயத்தில் உள்ளதாலேயே சிறப்பாகக் கருதப்படுகிறது. இந்த தடாகத்தின் நீர் உலகிலேயே மிகமிகத் தூய்மையானது.  இவ்வுலகில் தேவர்கள் மகிழ மானஸா எனும் இப்பீடத்தில் தாக்ஷாயணியாக தேவி விளங்குகிறாள். கருணையே வடிவான இவ்வன்னை தாங்க முடியாத  வேதனையில் வருத்தும் உயிர்களை அணைத்து ஆதரிப்பவள். உள்ளத்தில் புகும் பயனற்ற தீய குணங்களை நீக்குபவள். ஆதரவுடன் நல்ல உபதேசங்களைச்  செய்து மனித மனங்களில் பேதமற்று ஞானதீபத்தை ஏற்றுபவள். சோதனைகளை வெல்ல ஆற்றல் தருபவள். சாதனைகளைச் செய்ய அருள் பொழிபவள். இந்த  அன்னையை மனம் கசிந்து அன்புடன் பாடி நாத வெள்ளத்தைப் பெருக்க பேரின்பத்தைத் தருபவள். தாக்ஷாயணி அன்னையைப் பணிந்து அனைத்து நலன்களையும்  பெறுவோம். 

திபெத் என்ற சொல்லுக்கு ‘த்ரிவிஷ்டபம்’ என்ற சமஸ்கிருதப் பெயர் உண்டு. அதன் பொருள் சொர்க்கம் எனப்படும். மகாபாரதத்தில் இப்பகுதி தேவகுலம் என்று  குறிப்பிடப்பட்டுள்ளது. அர்ஜுனன் தவம் செய்த இடம் இதுவே. தவம் முடிந்து அர்ஜுனனை அழைத்துப் போக இந்திர ரதம் இவ்விடத்திற்குத்தான் வந்ததாம்.  எனவேதான் இவ்விடம் சொர்க்க பூமியாக கருதப்படுகிறது. இந்த மகாபுனிதமான ஏரியில் தேவகன்னிகைகள் குளிப்பதாகக் கூறப்படுகிறது. அன்னை இங்கு  மகாசக்தியாக விளங்குகிறாள். இமயமலையின் மணி முடியாம் கயிலயங்கிரிக்கு அருகில் இப்பீடமான மானஸரோவர் அமைந்துள்ளது. தட்சனின் மகள்  தாட்சாயணி. இப்பீட சக்தியின் பெயரும் அதுவே. பார்வதியின் அம்சமே அவள். இத்தடாகம் மிகவும் எழிலானது. அழகில் இதற்கு நிகரான தடாகம் உலகில்  எங்குமில்லை. 

கயிலை மலையும், மானஸரோவர் தடாகமும் சேர்ந்து கெளரி சங்கரம் எனும் சிவசக்தி வடிவாக அருட்காட்சியளிக்கின்றது. கயிலை மலைக்குத் தெற்கில் அதன்  அடியிலிருந்து 40 மைல் தொலைவில் இந்தப் புனிதத் தடாகம் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 15000 அடி உயரத்தில் உள்ளது. நான்முகனால்  தோற்றுவிக்கப்பட்ட தடாகம் இது எனும் ஐதீகம் உள்ளது. இதில் ஒருமுறை நீராடினால் பாவங்களும், தீவினைகளும் நீங்குவதாக திபெத்திய புராணத்திலும் இடம்  பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பாலி சமஸ்கிருத நூல்கள் இந்தத் தடாகத்தை அனேடாடா அல்லது அனவடாட்பா என்றும் மகாபாரதம் பிந்துசாரா என்றும் ஜைன  நூல்கள் பத்மஹரோடா என்றும் போற்றுகின்றன. இந்த தடாகத்தின் நடுவே பெரிய அரண்மனையில் நாகராஜா வசிக்கிறார். ஏரியின் கரையிலுள்ள நாவல்  மரங்களிலுள்ள பழங்கள் ஏரியில் விழுவதால் அந்த நிலப்பகுதி ஜம்புலிங் என்று அழைக்கப்படுகிறது. 

அவற்றில் சில நாகங்கள் உண்ணுவதாவும் சில பொன்னாக மாறி நீரில் மூழ்குவதாகவும் தங்கத்தாமரைகள் மலர்வதாகவும், ராஜஹம்ஸங்கள் நீந்துவதாகவும்,  மானஸரோவரைப்பற்றி புராணங்கள் பகர்கின்றன. காலை சுமார் 3 மணியளவில் தேவர்கள் ஜோதி வடிவமாக ஏரிக்கு மத்தியில் மூழ்கி நீராடும் அற்புதம் இங்கு  நிகழ்கிறது. அம்மையப்பனிடம் ஆணவம் இருக்கக்கூடாது. ஒரு முறை ராவணன் தேரில் இவ்விடம் வந்தபோது இமயமலையானது தேரைத் தடுத்ததால்  கோபமடைந்த ராவணன் இந்த இமயமலையை தூக்க முற்பட்டபோது மலை சற்றே ஆடியது. உடனே ஈசன் தன் கால் கட்டைவிரலால் அழுத்த ராவண்னின்  கைகள் மலைக்கு அடியில் சிக்கிக் கொண்டது. மிகவும் தவித்த பின்னர் அவன் ஈசனை சாம கானத்தால் பாட ஈசன் அவன் கைகளை விடுவித்தான். ஈசனும்  சக்தியும் உறைந்துள்ள இவ்விடத்தில் ராவணனின் ஆணவமும் அவன் கைகளைப் போன்றே நசுக்கப்பட்டது. 

காரைக்கால் அம்மையோ ஈசனின் இருப்பிடமாதலால் இமய மலையை மிதிக்க அஞ்சி தலையால் நடந்து முக்தி பெற்ற இடம். ஈசனுக்கு அணுக்கத் தொண்டராக  விளங்கிய கசுந்தரர் திருத்தொண்டத் தொகை பாட தென்னாட்டில் அவதரித்தார். ஈசன் அவரை யானை மேல் ஆரோகணித்து வரச் செய்து கயிலையில்  ஆட்கொண்டது வரலாறு. அப்பருக்கு அருள்புரிந்த எம்பிரான் அவரை மானஸரோவரில் குளிக்கச் செய்து திருவையாற்றில் தரிசனம் தந்தருளினார். தர்மரும்,  அர்ஜுனனும் குருக்ஷேத்திரப் போரில் வெற்றி பெற வேண்டி கண்ணனோடு இங்கு வந்து ஆயுதங்களைப் பெற்றுச் சென்றதாக மகாபாரதம் கூறுகிறது. ஈசன்  கருணை மலையாகவும், அம்பிகை தடாக வடிவிலும் அருள் பாலிக்கும் மானஸரோவரில் தாட்சாயணியின் திருவருளைப் பெற அவள் பாதங்களைப் பணிவோம்.

அக்ஷர சக்தி பீடங்கள்

பீடத்தின் பெயர் கரதோயா எனும் யுசாத்யா. தேவியின் வலது கால் கட்டைவிரல் விழுந்த பீடம். அக்ஷரத்தின் நாமம் . அக்ஷர சக்தியின் நாமம் ஷண்டாதேவி.  சிவந்த நிறத்துடன் மஞ்சள் பட்டாடை உடுத்தி இரு தாமரை மலர்களை ஏந்தி வர அபய முத்திரைகள் தரித்து கம்பீரமான ராஜஹம்ஸத்தில் ஆரோகணித்து  அமர்ந்தவள் இத்தேவி. பீட சக்தியின் நாமம் பூததாத்ரி. இப்பீடத்தை க்ஷீரகண்டகர் எனும் பைரவர் பாதுகாக்கிறார்.  பங்களாதேஷ் பார்த்தமான் (Bardhaman)  ரயில் நிலைய சந்திப்பிற்கு 32 கி.மீ. வடக்கே ஷீர்கஞ்ச் உள்ளது. அங்குதான் இந்த சக்திபீடம் உள்ளது. இத்தேவியை வணங்குவோர் பாவங்களும் பந்த பாசங்களும்  நீங்கும். செந்தாமரையும் வெட்கும் படியான மென்மையான திருவடிகளைக் கொண்ட தேவியிவள். பங்களாதேஷில் வழிபடப்படுவதால் அங்குள்ள இந்தியர்கள்  உருவமில்லாமல்தான் தேவியை வழிபடுகின்ற

Wednesday 29 March 2017

பங்குனி உத்திரம்!

யுகாதி பண்டிகை!

யுகாதி சுலோகம்!

யுகாதி பண்டிகை அன்று கீழ்கண்ட சுலோகம் சொல்லி வெல்லம் கலந்த வேப்பம்பூ பச்சிடியை ஆண்கள் பெண்கள் என அனைவரும் சாப்பிட வேண்டும், இதனால் வைரம் போன்ற உடலும், அனைத்து ஸம்பத்தும் கிட்டும்.

சதாயூர் வஜ்ர தேஹாய சர்வ சம்பத்கராய ச | 
சர்வாரிஷ்ட விணாசாய நிம்பஸ்ய தல பக்ஷ்ணம் ||

யுகாதி கொண்டாட்டம்! 

பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் யுகாதி கொண்டாட வேண்டும். அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால்கூட மறுநாள்தான் உகாதி கொண்டாட வேண்டும் என்பது விதி. மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த உகாதி பண்டிகை உணர்த்துகிறது.

தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டு யுகாதி ஆகும். மகாராஷ்டிர மக்கள் இதே நாளை குடிபாட்வா எனவும் சிந்தி மக்கள் சேதி சந்த் எனவும் பலவறாக கொண்டாடுகின்றனர். யுகத்தின் ஆரம்பத்தை யுகாதி என அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகையை தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஜோதிட ரீதியாக குரு தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளின் அதிபதியாகவும் செவ்வாய் தெலுங்கு தமிழ் மராட்டியம் ஆகிய மொழிகளின் அதிபதியாகவும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

தெலுங்கு மக்கள் தெலுங்கு பேசுபவர்கள் மற்றும் ஆந்திர மக்கள் செவ்வாயின் அதிக்கம் நிறைந்து காணப்படுகின்றனர். ஒல்லியான தேகம், முரட்டுதனம் கடின உழைப்பு, எளிதில் உணர்ச்சி வசப்படுவது, அதிக காரம் மிகுந்த உணவுகளை விரும்பி சாப்பிடுவது செவ்வாயின் காரக குணங்களாகும்.

கன்னட மக்கள் அதேநேரம் கன்னடம் பேசுபவர்களும் கன்னடர்களும் சாத்வீகமானவர்களாகவும் இனிப்பு மற்றும் நெய் சேர்த்த காரம் குறைந்த உணவு உண்பவர்களாகவும் பருத்த தேகமுடையவர்களாகவும் இருக்கின்றனர்.

செவ்வாய் பகவான் தெலுங்கு வருடப்பிறப்பு எந்த தினத்தில் வருகிறதோ அந்த தினத்தின் கிரகம் அந்த வருடத்தின் ராஜாவாக அமைவார். 

அதே போன்று சித்திரை மாதம் பிறக்கும் நாளின் அதிபதியே அந்த வருடத்தின் மந்திரியாகும். 

இந்நாளில் மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்து புத்தாடை அணிந்து உகாதி பச்சடி செய்வதில் இருந்து நாள் ஆரம்பிக்கிறது. உகாதி அன்று பல்வேறு இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், தெலுங்கு சாகித்ய நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்குதல் ஆகியவை உகாதி நாளன்று நடைபெறும்.


உகாதி பச்சடி உகாதி அன்று அறுசுவை கூடிய பதார்த்தமாக உகாதி பச்சடி செய்யப்படுகிறது. இது உகாதி அன்று செய்யப்படவேண்டிய மிக முக்கியமான பதார்த்தமாகும். இந்த உகாதி பச்சடி வேப்பம்பூ, மாங்காய், புளி, வெல்லம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படுகிறது. இந்த புத்தாண்டு அனைத்து மகிழ்ச்சி, துக்கம் முதலிய அனைத்தையும் உடைய ஒன்றாக இருக்கும் என்பதை குறிக்கிறது. இந்தப் பதார்த்தத்தை கன்னட மொழியில் பேவு பெல்லா என அழைப்பர்.

யுகாதி சுலோகம்!

யுகாதி பண்டிகை அன்று கீழ்கண்ட சுலோகம் சொல்லி வெல்லம் கலந்த வேப்பம்பூ பச்சிடியை ஆண்கள் பெண்கள் என அனைவரும் சாப்பிட வேண்டும், இதனால் வைரம் போன்ற உடலும், அனைத்து ஸம்பத்தும் கிட்டும்.

சதாயூர் வஜ்ர தேஹாய சர்வ சம்பத்கராய ச | 
சர்வாரிஷ்ட விணாசாய நிம்பஸ்ய தல பக்ஷ்ணம் ||

பஞ்சாங்கம் படித்தல்!

யுகாதி பண்டிகை ஒரு ஆண்டாகிய யுகத்தின் தெய்வ அனுகூலத்தையும் உலக மக்களின் வாழ்க்கை நலன்களையும் முன்னதாகவே அறிந்துகொள்ளக்கூடிய காலக்கண்ணாடியாக திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்து விதமான அங்கங்களைக் கொண்ட மங்களகரமான பஞ்சாங்கப் படனமாக மலர்கிறது. திருமலையில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்திகளை தங்க வாசல் அருகில் எழுந்தருளச் செய்து ஆஸ்தானம், பஞ்சாங்கம் படித்தல் நிகழ்ச்சி நடைபெறும்.

பங்குனி சௌபாக்ய கௌரி விரதம்!


லக்ஷ்மி பஞ்சமி!


பங்குனி சந்தான சப்தமி!


பெளமசதுர்த்தி!

சதுர்த்தி திதியும் செவ்வாய்கிழமையும் ஒன்றுசேரும் நாளுக்கு  பெளமசதுர்த்தி  என்று பெயர்

இன்று ஒரே படத்தில்  இருக்கும்  ஶ்ரீகணபதிமுருகனை  பூஜித்து  கொழுக்கட்டை யும்துவரம்பருப்பு  சுண்டலும்  நிவேதனம்  செய்துஸ்தோத்ரம்  சொல்லி  ப்ரார்தித்து  கொள்வதால் தீராத கடனும் தீரும்

கடன்  கொடுத்தவர்களால்  ஏற்படும்  தொல்லை  நீங்கும்.

அசோகாஷ்டமி!


ஸ்ரீ ராம நவமி!

காரடையான் நோன்பு!


முன்னோர் ஆசி தரும் கருடசேவை!

கருட சேவை வழிபாடு மிகுந்தபுண்ணியத்தைத் தரவல்லது. எனவேதான் பிரம்மோற்சவ நாட்களில் கருட சேவையை தரிசனம் செய்யவே அதிக பக்தர்கள் திரள்வார்கள். 

கருட சேவையை பக்தர்கள் மட்டுமின்றி, மறைந்த முன்னோர்களான பித்ருக்களும் வருவார்கள் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடலை விட்டு நீங்கும் எல்லா ஆன்மாக்களும் இறைவன் காலடி நிழலில் இளைப்பாறும் பாக்கியத்தை எளிதில் பெற்று விட முடியாது.

கர்ம வினைகள் காரணமாக பல ஆத்மாக்களால் மோட்சத்தை எட்ட இயலாது. அத்தகைய ஆன்மாக்கள் தங்கள் துன்பங்கள், துயரங்களில் இருந்து விடுபட கருட சேவையை கண்டால் பலன் கிடைக்கும். எனவே ஆத்மாக்கள் கருட சேவை தினத்தன்று பூலோகம் வர கருடன், பெருமாளிடம் சிறப்பு அனுமதி பெற்றுள்ளார்.

இந்த சலுகையை பயன்படுத்தி பித்ருக்கள், கருட சேவையை தரிசனம் செய்ய வருவார்கள். அப்போது அவர்கள் கருட சேவையைக் காண தம் குடும்பத்தைச் சேர்ந் தவர்கள் யாராவது வந்து இருக்கிறார்களா என்று தேடுவார்கள்.

நாம் கருட சேவையை காண சென்றிருந்தால் நம் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். மனம் குளிர நம்மை ஆசீர்வாதம் செய்வார்கள்.

எனவே கருட சேவையை தரிசிக்க சென்றால் பெருமாள் தரும் ஆசியுடன், நம் முன்னோர்களின் ஆசியையும் நாம் எளிதில் பெற முடியும்.





மங்களம் தரும் ஸ்ரீ மீனாட்சி அம்மன் போற்றி!

ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி 1
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் அருமறையின் வரம்பே போற்றி
ஓம் அறம் வளர்க்கும் அம்மையே பொற்றி
ஓம் அரசிளங் குமரியே போற்றி
ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி
ஓம் அமுத நாயகியே போற்றி
ஓம் அருந்தவ நாயகியே போற்றி
ஓம் அருள் நிறை அம்மையே போற்றி
ஓம் ஆல்வாய்க் கரசியே போற்றி 10
ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி
ஓம் ஆதியின் பாதியே போற்றி
ஓம் ஆலால சுந்தரியே போற்றி
ஓம் ஆனந்த வல்லியே போற்றி
ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி
ஓம் இமயத் தரசியே போற்றி
ஓம் இடபத்தோன் துணையே போற்றி
ஓம் ஈஸ்வரியே போற்றி
ஓம் உயிர் ஓவியமே போற்றி
ஓம் உலகம்மையே போற்றி 20
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எண்திசையும் வென்றோய் போற்றி
ஓம் ஏகன் துணையே போற்றி
ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஒப்பிலா அமுதே போற்றி
ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி
ஓம் கற்றோர்க் கினியோய் போற்றி
ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி
ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி 30
ஓம் கல்யாண சுந்தரியே போற்றி
ஓம் கனகமணிக் குன்றே போற்றி
ஓம் கற்பின் அரசியே போற்றி
ஓம் கருணை ஊற்றே போற்றி
ஓம் கல்விக்கு வித்தே போற்றி
ஓம் கனகாம்பிகையே போற்றி
ஓம் கதிரொளிச் சுடரே போற்றி
ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி
ஓம் காட்சிக் கினியோய் போற்றி
ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி 40
ஓம் கிளியெந்திய கரத்தோய் போற்றி
ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி
ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
ஓம் கூடற் கலாப மயிலே போற்றி
ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி
ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி
ஓம் சக்தி வடிவே போற்றி
ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி
ஓம் சிவகாம சுந்தரியே போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி 50
ஓம் சிவயோக நாயகியே போற்றி
ஓம் சிவானந்த வல்லியே போற்றி
ஓம் சிங்கார வல்லியே போற்றி
ஓம் செந்தமிழ்த் தாயே போற்றி
ஓம் செல்வத்துக் கரசியே போற்றி
ஓம் சேனைத் தலைவியே போற்றி
ஓம் சொக்கர் நாயகியே போற்றி
ஓம் சைவநெறி நிலைக்கச் செய்தாய் போற்றி
ஓம் ஞானாம்பிகையே போற்றி
ஓம் ஞானப் பூங்கோதையே போற்றி 60
ஓம் தமிழர் குலச் சுடரே போற்றி
ஓம் தண்டமிழ்த் தாயே போற்றி
ஓம் திருவுடை யம்மையே போற்றி
ஓம் திசையெலாம் புரந்தாய் போற்றி
ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
ஓம் திருநிலை நாயகியே போற்றி
ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி
ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
ஓம் தென்னவன் செல்வியே போற்றி
ஓம் தேன்மொழி யம்மையே போற்றி 70
ஓம் தையல் நாயகியே போற்றி
ஓம் நற்கனியின் சுவையே போற்றி
ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி
ஓம் நல்ல நாயகியே போற்றி
ஓம் நீலாம்பிகையே போற்றி
ஓம் நீதிக்கரசியே போற்றி
ஓம் பக்தர்தம் திலகமே போற்றி
ஓம் பழமறையின் குருந்தே போற்றி
ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி
ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி 80
ஓம் பவள வாய்க் கிளியே போற்றி
ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி
ஓம் பாண்டி மாதேவியின் தேவே போற்றி
ஓம் பார்வதி அம்மையே போற்றி
ஓம் பிறவிப் பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பெரிய நாயகியே போற்றி
ஓம் பொன் மயிலம்மையே போற்றி
ஓம் பொற்கொடி அன்னையே போற்றி 90
ஓம் மலயத்துவசன் மகளே போற்றி
ஓம் மங்கல நாயகியே போற்றி
ஓம் மழலைக் கிளியே போற்றி
ஓம் மனோன்மணித் தாயே போற்றி
ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி
ஓம் மாயோன் தங்கையே போற்றி
ஓம் மாணிக்க வல்லியே போற்றி
ஓம் மீனவர் கோன் மகளே போற்றி
ஓம் மீனாக்ஷி அம்மையே போற்றி
ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி 100
ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி
ஓம் யாழ் மொழி யம்மையே போற்றி
ஓம் வடிவழ கம்மையே போற்றி
ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி
ஓம் வேத நாயகியே போற்றி
ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் அம்மையே அம்பிகையே போற்றி போற்றி
ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி போற்றி



ஜ்வாலாமாலினி நித்யா! 14

ஜ்வாலாமாலினி நித்யா இந்த நித்யாதேவி பிரளய கால அக்னியைப் போன்ற தேக காந்தியும், புன்முறுவல் தவழும் ஆறு திருமுகங்களும், பன்னிரெண்டு திருக்கரங்களும் கொண்டருள்பவள். தன் திருக்கரங்களில் முறையே பாசம், கத்தி, வில், கதை, சூலம், வரத முத்திரை, அங்குசம், கேடயம், பாணம், அக்னி, மழுவோடு அபய முத்திரையையும் தரித்திருப்பவள். 

ஆற்றலின் வடிவமாகத் திகழ்பவள். பத்மம் எனும் தாமரையின் மேல் நின்ற திருக்கோலம் கொண்டவள். அன்னையின் திருமுடிகளில் ஒளிமிக்க ரத்னாபரணங்கள் இழைத்த மகுடங்கள் மின்னுகின்றன. செவிகளில் தோடுகளும், கழுத்தில் ரத்னங்கள் இழைக்கப்பட்ட பளிச்சிடும் பதக்கங்கள், காசு மாலை, தோள்வளை, கை வளையல்கள், பாதங்களில் தண்டை, கொலுசு என ஸர்வாபரணபூஷிதையாய் பேரழகு பூத்துக் குலுங்கும் வடிவினளாகத் திகழ்கிறாள் இந்த நித்யா தேவி.

அனைத்து உயிர்களுக்கும் ஆதார சக்தியாக ‘‘ஜ்வாலா’’ பீடத்தில் ஸித்திதா எனும் மாபெரும் சக்தியாகத் திகழ்ந்து அம்பிகையை ஒளி வடிவில் கண்டு மகிழும் ஞானிகளுக்கும், யம தர்மராஜனின் பாசக்கயிற்றில் சிக்கி ஜீவனை இழுக்கும்போது அன்னையின் பேரொளியில் கலந்திட விரும்பும் அன்பர்களுக்கும் அருள்பவள்.

இந்த அம்பிகையின் அருள் எனும் மழையால் நம் துயரங்களெல்லாம் தீயிலிட்ட பஞ்சு போலாகும். நம் வினைகளையெல்லாம் தீர்க்கும் வித்தகி. வேண்டும் வரங்களை வாரிவாரி வழங்கி நம்மை ஆட்கொள்ளும் நாயகி. வரப்ரசாதி. முறையான வழியில் நிறைந்த வருவாயும் லாபமும் அளிக்கக் கூடியவள் இத்தேவி. 

பகை என்று ஏதும் இல்லாததாக்கி அனைவரையும் வல்லமை உடையவராக்கும் சக்தி படைத்தவள். தன்னை நிகர்த்த சக்தி கூட்டங்கள் சூழ தன்னைப் பணிந்த அனைவரையும் இன்புற்று வாழ வரம் தரும் தேவியின் பாத கமலங்களை சரணடைவோம். பண்டாசுரனுடன் லலிதா தேவி நடத்திய யுத்தத்தில் இந்த நித்யா தேவி 100 யோஜனை விஸ்தாரம் நீளமும், 30 யோஜனை விஸ்தாரம் அகலமும் 30 யோஜனை விஸ்தாரம் உயரமும் உள்ள ஒரு நெருப்புக் கோட்டையை சிருஷ்டித்த வல்லமை மிக்கவள். 

அவ்வளவு வல்லமை மிக்க தேவியின் கருணை பக்தர்களுக்காக  எதைத்தான் செய்யாது?வழிபடு பலன்இந்த அம்பிகையைத் துதிப்போர்க்கு தனாகர்ஷணமும், ஸர்வ வசியமும், ஸ்த்ரீ புருஷ சேர்க்கையும், துக்க நாசனமும் சித்திக்கும். தாக்க வரும் தீமைகளும், விரோதங்களும் சூரியனைக் கண்ட பனி போல் விலகும். சகல தேவதா ப்ரீதி சித்திக்கும்.

ஜ்வாலாமாலினி காயத்ரி
ஓம் ஜ்வாலாமாலின்யை 
வித்மஹே
மஹாஜ்வாலாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.

மூலமந்த்ரம்
ஓம் நமோ பகவதி ஜ்வாலாமாலினி
தேவ தேவி ஸர்வ பூத
ஸம்ஹாரகாரிகே ஜாதவேதஸி ஜ்வலந்தி
ஜ்வல ஜ்வல ப்ரஜ்வல
ப்ரஜ்வல ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ரரரரர
ரர ஜ்வாலாமாலினி ஹும்
பட் ஸ்வாஹா. 

த்யான ஸ்லோகங்கள் 
ஜ்வல ஜ்வல நஸம்காசாம் 
மாணிக்ய முகுடோஜ்வலாம்
ஷட் வக்த்ராம் த்வாதச புஜாம் 
ஸர்வாபரண பூஷிதாம்

பாசாங்குஸௌ கேட கட்கௌ 
சாப பாண கதா தரௌ
குவவந்நிவ சாபிநீ ததாநம் கரபங்கஜை:
ஸ்வஸமாநாபி ரபித: சக்திபி: 
பரிவாரிதாம்

சாருஸ்மித லஸத்வக்த்ர ஸரோஜாம்
 த்ரீஷணாத்விதாம்
த்யாத்வைவ முபசாரைஸ் 
தைரர்ச்சயேத்தாம்து நித்ய ச:
பாலாக்ஷாப்ஜ பவேந்த்ர 

விஷ்ணுநமிதாம் பட்கார 
வர்ணாத்மிகாம்
மாலாம் பக்த ஜனார்த்தி மங்களகராம் பாக்யப்ரதாம் ச்யாமளாம்
மூலாதாரகதாம், த்ரிலோக ஜனனீம் முக்திப்ரதான
 வரதாம்

ஜ்வாலாமாலினீம் நமாமி சிரஸாம் ஜாம்பூனதாபாம் சிவாம்.
த்யாயேத் தேவீம் மஹாநித்யாம் ஸ்வர்ணாபரண பூஷிதாம்
உத்யத் வித்யுல்லதா காந்தி ஸ்வணீம்ஸுக விராஜிதாம்
மஹா ஸிம்ஹாஸன ப்ரௌடாம்
 ஜ்வாலாமாலாம் கராவினீம்
அரிஸங்கௌ கட்க கைடௌத்ரி
ஸூலம் டமரும் ததா

பானபாத்ரம் ச வரதம் தததீ ஸத்ரு 
நாஸினீம்.
உத்யத் வித்யுல்லதா காந்தி 
ஸர்வாபரண பூஷிதாம்
மஹாஸிம்ஹாஸன ப்ரௌடாம்

 ஜ்வாலாமாலாம் கராகிணீம்
அரிஸங்கௌ கட்க கேடௌ 
த்ரிஸூலம் டமரும் ததா
பானபாத்ரம் ச வரதம் தததீம் 
ஸம்ஸ்மரேத் யஜேத்
யஸ்ய: ஸ்மரண மாத்ரேண
 பாலயந்தே பயாபஹ:

ஸுக்த ஜ்வாலாமாலினி 
நித்யா ஸ்லோகம்
 ஸுக்த ஸம்ஸ்துதாம் ஓளகார ப்ரக்ருதிக, அங்கதா கலாத்மிகாம்
ஜ்வாலாமாலினி நித்யா ஸ்வரூபாம் ஸர்வ ஸௌபாக்ய தாயக
சக்ர ஸ்வாமினீ ஆத்மாகர்ஷிணீ ஸக்தி ஸ்வரூபாம்

 வாஸுதேவ வக்ஷஸ்தல கமல வாஸினீம் ஸர்வமங்கள
தேவதாம் ஸாம்ராஜ்ய லக்ஷ்மி 
ஸ்வரூப ஜ்வாலாமாலினி
நித்யாயை நமஹ 

வழிபட வேண்டிய திதிகள்
ஸுக்ல பக்ஷ சதுர்த்தசி / க்ருஷ்ண 
பக்ஷ த்விதியை
(சதுர்த்தசி திதி ரூப ஜ்வாலாமாலினி நித்யாயை நமஹ)
நைவேத்தியம்

சத்துமாவு
பூஜைக்கான புஷ்பங்கள்
செவ்வரளி
திதிதான பலன்
சத்துமாவை தேவிக்கு நிவேதித்து தானம் அளித்தால் நோய் அகலும். சிவ கடாக்ஷம் கிட்டும்.
பஞ்சோபசார பூஜை

ஓம் ஜ்வாலாமாலினி நித்யாயை கந்தம் கல்பயாமி நமஹ
ஓம் ஜ்வாலாமாலினி நித்யாயை தூபம் கல்பயாமி நமஹ
ஓம் ஜ்வாலாமாலினி நித்யாயை தீபம் கல்பயாமி நமஹ
ஓம் ஜ்வாலாமாலினி நித்யாயை நைவேத்யம் கல்பயாமி நமஹ
ஓம் ஜ்வாலாமாலினி நித்யாயை கற்பூர நீராஞ்ஜனம் தர்சயாமி நமஹ

இத்திதியில் பிறந்தோரின் குண நலன்கள் சற்றே முன்கோபம் உடையவர்கள். மனோ வசியமுடையவர்கள். பெரும்பாலும் நாத்திகர்கள். இயல்பாகவே நல்ல தோற்றப் பொலிவைக் கொண்டிருப்பவர்கள். தங்களுடைய செயல்கள் எல்லாவற்றையும் வெற்றிகரமாக நடத்திக் கொள்ளும் திறமையை இயல்பாகப் பெற்றிருப்பர். தங்களை எதிர்ப்பவர்களையும் பகைப்பவர்களையும் வென்று தம்முடைய ஆற்றலை எளிதாக வெளிப்படுத்தும் வெற்றியாளர்களாகத் திகழ்பவர்கள். 

யந்திரம் வரையும் முறைசந்தன குங்குமக் கலவையால் எட்டிதழ்கள், நான்கு வாயில்களுடைய இரு சதுரங்கள் கொண்ட யந்திரம் வரையவும். முக்கோண மூலைகளில் இச்சா, க்ரியா, ஞான சக்திகள் பூஜிக்கப்படவேண்டும். ஷட்கோண மூலைகளில் டாகினி, காகினி முதலிய ஆறாதார அம்பிகைகளையும், அஷ்ட கோணங்களில் தேவியின் சக்திகளான கஸ்மாரா, விஸ்வகபாலா, லோலாக்ஷீ, லோலஜீவிகா, ஸர்வபக்ஷா, ஸஹஸ்ராக்ஷீ, நி:ஸங்கா, ம்ஹ்ருதிப்ரியா, போன்ற சக்திகளையும் எட்டு தளங்களில் அசிந்த்யா, அப்ரமேயா, பூர்ணரூபா, துராஸதா, ஸர்வகா, ஸித்திரூபா, பாவனா, ஏகரூபிணி போன்ற சக்திகளையும் பக்தியுடன் த்யானித்து பூஜிக்க வேண்டும். 

அகத்தியர் அருளிய சுக்ல பக்ஷ  சதுர்த்தசி ஜ்வாலாமாலினி நித்யா துதி 
சதுர்த்தசியான பதினான்காய் நின்ற
தற்பரத்தி சிற்பரத்தி சற்கோணத்தில் 
குதித்தோடிப் போகாமல் எட்டில் சேர்ந்து
கும்பகமாய்த் தம்பணத்துள் கூட்டியாடி
விதியான பிரமலபி வளரவென்றும்
விளங்குவுமே செய்வதுதான் விந்தை தாயே
துதிக்கறியாப் பாலனெனைக் காத்தல் வேண்டும்
சோதியே மனோன்மணியே சுழிமுனை வாழ்வே. 

சற்கோணம் தேவி வீற்றிருக்கும் நவகோணம் ‘‘ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே’ - அபிராமி அந்தாதி. நீ குடியிருக்கும் நவகோணத்தை விட்டு வந்து நான் செய்யும் அஷ்டாங்க யோகத்தில் சேர்ந்து உன் திருவடிகளில் என்னை சேர்த்துக் கொள் (அஷ்டாங்க யோகம் = யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், த்யானம், தாரணை, சமாதி)

அகத்தியர் அருளிய க்ருஷ்ணபக்ஷ சதுர்த்தசி ஜ்வாலாமாலினி நித்யா துதி
சேமமது தரவெனக்கு நேரே வாவா
திரிபுரையே சாம்பவியே மணப்பது வாணி
காமனையும் வாமனையும் 
படைத்த தாயே

கன்னிகையே வளர்பிறையே கனக மாதா
நீ மறைவாய் நின்றதென்ன நினைவேயம்மா
நீடுழி காலமெல்லாம் நினைவேயாகி
க்ஷேமகலை போலாகி உருவம் காட்டும்
சோதி மனோன்மணி சுழிமுனை வாழ்வே. 

மாத்ருகா அர்ச்சனை
ஓம் ஜ்வாலின்யை நமஹ
ஓம் மஹாஜ்வாலாயை நமஹ
ஓம் ஜ்வாலாமாலாயை நமஹ
ஓம் மஹோஜ்வலாயை நமஹ
ஓம் த்விபுஜாயை நமஹ

ஓம் ஸௌம்ய வதனாயை நமஹ
ஓம் க்ஜான புஸ்தகதாரிண்யை நமஹ
ஓம் கபர்தின்யை நமஹ
ஓம் க்ருதாப்லாஸாயை நமஹ
ஓம் ப்ரஹ்மாண்யை நமஹ
ஓம் ஸ்வாத்ம வேதின்யை நமஹ

ஓம் ஆத்மஞானாயை நமஹ
ஓம் அம்ருதாயை நமஹ
ஓம் நந்தாயை நமஹ
ஓம் நந்தின்யை நமஹ
ஓம் ரோமஹர்ஷிண்யை நமஹ

ஓம் காந்த்யை நமஹ
ஓம் கால்யை நமஹ
ஓம் த்யுத்யை நமஹ
ஓம் மத்யை நமஹ
ஓம் பீக்ஷயேச்சாயை நமஹ
ஓம் விஸ்வகர்ப்பாயை நமஹ

ஓம் ஆதார்யை நமஹ
ஓம் ஸர்வ பாலின்யை நமஹ
ஓம் காத்யாயன்யை நம:நமஹ
ஓம் காலயாதாயை நமஹ
ஒம் குடிலாயை நமஹ

ஓம் அனிமேக்ஷிக்யை நமஹ
ஓம் மாத்ரே நமஹ
ஓம் முஹூர்த்தாயை நமஹ
ஓம் அஹோராத்ர்யை நமஹ
ஓம் த்ருட்யை நமஹ

ஓம் கால விபேதின்யை நமஹ
ஓம் ஸோமஸூர்யாக்னி மத்யஸ்தாயை நமஹ
ஓம் மாயாத்யாயை நமஹ
ஓம் ஸுநிர்மலாயை நமஹ
ஓம் கேவலாயை நமஹ
ஓம் நிக்ஷ்கலாயை நமஹ

ஓம் ஸுத்தாயை நமஹ
ஓம் வ்யாபின்யை நமஹ
ஓம் வ்யோமவிக்ரஹாயை நமஹ
ஓம் ஸ்வச்சந்த பைரவ்யை நமஹ
ஓம் வ்யோமாயை நமஹ

ஓம் வ்யோமாதீதாயை நமஹ

ஓம் பதேஸ்தீதாயை நமஹ
ஓம் ஸ்துத்யை நமஹ
ஓம் ஸ்தவ்யாயை நமஹ
ஓம் ந்ருத்யை நமஹ

ஓம் பூஜ்யாயை நமஹ
ஓம் பூஜார்ஹாயை நமஹ
ஓம் பூஜகப்ரியாயை நமஹ