Thursday 28 June 2018

கோமாதா ஸ்துதி!

பசுவானவள் பரமேஸ்வரனுக்குத் தாயாகவும், வசுக்களுக்கு பெண்ணாகவும் ஆதித்யர்களுக்கு சகோதரியாகவும் நாபியில் அமிர்தத்தை வைத்துக் கொண்டவளாகவும், இருக்கிறாள். பசுவை அடிக்கவோ, விரட்டவோ கூடாது. பூஜிக்க வேண்டுமென வேதம் சொல்கிறது. தேவிபாகவதம், பிரும்ம வைவர்த்தம் போன்ற புராணங்கள் ஸுரபி உபாக்யானம் மிக அழகானது. பிரும்ம சிருஷ்டியில் உலகம் உய்ய முதலில் பசுவைப்படைத்து அதன் உடலில் பதினான்கு உலகையும் முப்பத்து முக்கோடி தேவர்களையும் இருக்கச் செய்தான். அதில் முதலில் வந்தவர்களான தர்மராஜனும் காலதேவனும்தான் முகத்தில் இருந்தனர். மற்றவர்கள் உடல் எங்கும் குடியேறினார்கள். இதில் இரண்டு பேர்கள் தாமதமாக வந்தார்கள். அவர்கள் மஹாலட்சுமியும் கங்கையும். பசுவின் உடலில் இவர்களுக்கு இடம் இல்லை.

லட்சுமியும் கங்கையும் பசுவை மிகவும் வேண்டினார்கள். எங்கேயாவது இருக்க ஓர் இடம் கொடுத்தால் போதும் என்று கெஞ்சினார்கள். பசுவும், தாய்மார்களே, உங்கள் மீது எனக்கு அனுதாபம் இருக்கிறது. ஆனால் இடமே இல்லையே, ஒன்று வேண்டுமானால் செய்யுங்கள், என் உடலிலிருந்து வரும் சாணம், கோமூத்ரம் இரண்டும் யாருக்கும் சொந்தமாகவில்லை. நீங்கள் விரும்பினால் அதில் இருக்கலாம் என்று சொல்ல லட்சுமியும் கங்கையும் மிகுந்த சந்தோஷத்துடன் அந்த இடத்தில் வாஸம் செய்ய ஆரம்பித்தார்கள். அதனால் இன்றைக்கும் பசுவின் பின் புறத்தில் லட்சுமியும், கங்கையும் இருப்பதாக சாஸ்திரம். அதனால் பசுவின் சாணமும், கோமூத்ரமும் சகல பாபங்களையும் போக்கி லட்சுமி கடாட்சம் அளிக்கக் கூடியது என்கிறது சாஸ்திரம்.
வைகுண்டம், ஸத்யலோகம் போன்று கோலோகம் என்று உள்ளது. அதில் ராதிகையுடன் ஸ்ரீகிருஷ்ணன் பக்த ரக்ஷகனாக இருக்கிறார். அங்கு காமதேவனைப் படைத்து அதன் கன்றுகளை கோலோகம் முழுவதும் வைத்து கிருஷ்ணனும் ராதையும் பூஜை செய்வதாக தேவி பாகவதத்தில் இருக்கிறது. இந்திர பூஜையை விட கோ பூஜையே மேலானது என்று ஸ்ரீ கிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். கோவை லட்சுமியாக பாவித்து வேதோக்த்த ஸ்ரீஸுக்தத்தினால் ஓம் ஸுரப்யை நம: என்னும் மந்திரம் சொல்லி ஆவாஹனாதி தூபதீப நைவேத்யம் முதலானவைகளுடன் ஸ்ரீகிருஷ்ணன் பூஜை செய்ய மற்றும் பிரும்ம தேவன் சரஸ்வதியுடனும் இந்திரன் இந்திராணியுடனும் பூஜை செய்தார்கள்.

நமோ தேவ்யை மஹா தேவ்யை ஸுரப்யை ச நமோ நம
கவாம் பீஜஸ்வ ரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே
நமோ ராதாப் பிரியாயைச பத்மாம் சாயை நமோ நம
நம: கிருஷ்ணப் பிரியாயை ச கவாம் மாத்ரே நமோ நம
கல்ப விருக்ஷஸ்வ ரூபாயை ஸர்வேஷாம் ஸந்ததம் பரம்
ஸ்ரீதாயை தன தாயை ச வ்ருத்தி தாயை நமோ நம
சுபதாயை ப்ரஸன்னாயை கோப தாயை நமோ நம
யசோதாயை கீர்த்தி தாயை தர்மக்ஞாயை நமோ நம
இதம் ஸ்தோத்ரம் மஹத் புண்யம் பக்தி
யுக்தச்ச ய: படேத்
ஸகோ மான் தனவான்ச் சைவ கீர்த்திமான்
புத்ர வான் பவேத்!

இந்த ஸ்லோகத்தை கூறி கோபூஜை, பிரதட்சிணம் செய்தால் எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.


தொழிலில் அபரிதமான வளர்ச்சி!

மாதம் தோறும் செய்து தொழிலில் அபரிதமான வளர்ச்சியையும்,செல்வ வளத்தையும் பெறுங்கள்........
சுயதொழில் செய்யும் ஒவ்வொருவரும் மகம் நட்சத்திரம் வரும் நாளன்று உங்கள் ஊரில் இருக்கும் ஆலயத்திற்குச் செல்லுங்கள்!
விநாயகர் ஆலயமாக இருந்தாலும் சரி;
முருகக் கடவுள் ஆலயமாக இருந்தாலும் சரி;
நாராயணர் கோவிலாக இருந்தாலும் சரி;
சிவாலயமாக இருந்தாலும் சரி;
நரசிம்மர் ஆலயமாக இருந்தாலும் சரி;
பைரவர் ஆலயமாக இருந்தாலும் சரி;
மஹாவராகி ஆலயமாக இருந்தாலும் சரி;
அம்பாள் ஆலயமாக இருந்தாலும் சரி;

அபிஷேகம் நடைபெறும் போது அந்த தண்ணீரை கோமுகம் வழியாக வெளியேறும் போது பிடிக்க வேண்டும்;

நமது அலுவலகத்தில் தெளிக்க வேண்டும்;மகம் நட்சத்திரம் முடிவதற்குள் தெளிக்க வேண்டும்;

ஒவ்வொரு மாதமும்  செய்து வருக; மகத்தான செல்வச் செழிப்பினை அடையுங்கள்!!!


புதாஷ்டமி விரதம்!

புதாஷ்டமி  அன்றைய தினம் விரதமிருந்து சிவன் கோவில் சென்று பைரவர் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாகும்.
சுக்ல பட்சம் அல்லது கிருஷ்ண பட்சம் அஷ்டமி "புதன்கிழமை" அன்று வந்தால் அன்றைய தினம் அம்பிகையை வழிபட்டு அன்னதானம் செய்ய வேண்டும்.
புதாஷ்டமி விரதம் பற்றி "சிவ மகா புராணத்தில்" சொல்லப்பட்டுள்ளன. அஷ்டமி விரதம் பற்றிய செய்திகளும் சிவ ஆகம புராணத்தில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
 அஷ்டமி திதி பற்றி :-
அஷமி என்பது - எட்டாவது திதி. அதிலும், தேய்பிறையில் வரும் அஷ்டமி மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. அஷ்டமி நாட்களில் தட்சணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வதும் விரதமிருப்பதும் நல்ல பலனைத் தரும்.
அஷ்டமியில் விரதம் இருப்பவர்கள் உடல் ஊனமில்லாமலும், செல்வச் செழிப்புடனும் இருப்பார்கள் என்றும் "சிவபுராணம்" கூறுகிறது.

புதாஷ்டமி விரதம் பிறந்த கதை :-
கவுசிகன் என்பவன் மிக விலையுயர்ந்த எருது ஒன்றினை வளர்த்து வந்தான். அந்த எருது ஒரு சமயம் காணாமல் போனது. காணாமல் போன எருதினைத் தேடி புறப்பட்டான் கவுசிகன். கவுசிகன் தனியாகச் செல்லாமல் தனது சகோதரியையும் தன்னுடன் அழைத்துச் சென்றான்.
இருவரும் சேர்ந்து பல நாட்கள் எருதினைத் தேடினார்கள். இருவரும் அன்ன ஆகாரம் ஏதும் இன்றி இருந்தார்கள். பசி இருவரையும் வாட்டியது.
இறுதியில் ஒரு குளத்தில் தேவலோகப் பெண்கள் ஜலக்ரீடை செய்து கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர்களிடம் சென்று தங்கள் இருவருக்கும் பசிப்பதாகவும், பசிக்கு உணவு வேண்டும் என்றும் கேட்டார்கள்.
அப்போது தேவலோகப் பெண்கள் விரதம் ஒன்றைப் பற்றிச் சொல்லி அந்த விரதத்தை மேற்கொண்டால் உங்களுக்கு உணவும் கிடைக்கும். மேலும், காணாமல் போன உங்களுடைய எருதும் கிடைக்கும் என்று கூறினார்கள்.
இவ்வாறு தேவலோகப் பெண்களால் கூறப்பட்ட விரதமே "புதாஷ்டமி விரதம்". அதாவது வளர்பிறை அல்லது தேய்பிறையில் வரும் அஷ்டமியானது - புதன்கிழமை அன்று வந்தால் அந்த அஷ்டமி "புதாஷ்டமி" என்றழைக்கப்படும்.
அதன்படி இன்று வளர்பிறை அஷ்டமி மற்றும் புதன்கிழமை - இன்றைய தினம் புதாஷ்டமி விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.

விரதப் பலன்கள் :-
தேவலோகப் பெண்கள் இவ்வாறு கூறிய விரதத்தினைக் கேட்ட கவுசிகன், புதாஷ்டமி விரதம் இருந்தான். காணாமல் போன எருதான காளை கிடைத்தது. அவன் சகோதரிக்கும் நல்ல கணவன் கிடைத்தான். கவுசிகன் புதாஷ்டமி விரதம் இருந்ததால் அரசனானான்.
கவுசிகனின் சகோதரி பெயர் - விஜயை. அவளுக்குக் கிடைத்த கணவன் யமன்.
கவுசிகனுடைய பெற்றோர்கள் நரகத்தில் அவதிப்பட்டுக் கொண்டு இருந்தார்கள். கவுசிகன் புதாஷ்டமி விரதம் கடைப்பிடித்த பலனால் அவனுடைய பெற்றோர்களும் நரகவேதனையில் இருந்து விடுபட்டார்கள்.
இன்றைய தினம் செய்யக்கூடிய ஜபம் மற்றும் பூஜைகள் 10 மடங்கு நன்மை தரும்.
புதாஷ்டமி விரதம் இருந்தால் இழந்த பொருட்களைத் திரும்பப் பெறலாம். நன்மக்கட்பேறு உண்டாகும். மரணத்திற்குப் பின்பு பேரின்ப வாழ்வு நிச்சயம்.
இன்றைய தினம் அதிகாலை சிவன் திருக்கோவில் சென்று சிவபெருமானையும், அம்பிகையையும், பைரவரையும் வழிபட்டு விரதத்தைத் துவக்கலாம். அதேபோல மாலையும் சிவன் திருக்கோவில் சென்று வழிபட்டு விரதத்தை பூர்த்தி செய்வது சிறந்தது.

புதாஷ்டமி வழிபாடுகள் :-
இன்றைய தினத்தில் எட்டு விதமான அக்னி வழிபாடுகளுடன் அஷ்ட லட்சுமிகளையும் வழிபட வேண்டும்.
எட்டு வழிபாடுகள் :-
1. விளக்கேற்றுதல்
2. ஹோமம்
3. அக்னிப் பூர்வமாகத் தயாராகும் அன்னத்தைத் தானமளித்தல்
4. ஊதுவத்தி தீபம்
5. கற்பூரத் தீபம்
6. சாம்பிராணித் தீபம்
7. பல வகையான தீபங்கள் (உலோகம், மண், எலுமிச்சை தீபம் - இவைகளை கோவிலில் இறைவனின் சன்னிதானத்தில் ஏற்ற வேண்டும்). வீட்டில் காமாட்சி விளக்கு, குத்துவிளக்கு, அகல் விளக்கு ஏற்றலாம்.
8. ஓடும் நதிகளில் மிதக்கும் இலை மடக்கு ஜல தீப பூஜை (நதிகளில் இலைகளின் மேல் அகல்விளக்கு தீபம் ஏற்றி வழிபடுதல்).
இவ்வாறு எட்டு வழிபாடுகள் செய்ய முடிந்தவர்கள் செய்யலாம். அல்லது வீட்டின் பூஜையறையில் விளக்கேற்றி வழிபாடு செய்து, கோவில் சென்று அம்பிகையை வழிபட்டு அன்னதானம் செய்யலாம்.

புதாஷ்டமி நாட்களில் பூமிக்கு வந்து அஷ்ட லக்ஷ்மிகளையும் வழிபடுபவர் "வித்யாரண்ய மகரிஷி". இன்றைய தினத்தில் மேலே கூறப்பட்டுள்ள வகையில் அன்னையை வழிபடுபவர்களுக்கு இந்த வித்யாரண்ய மஹரிஷியின் அருள் தாமாகவே நிறைந்து வந்து கிட்டும்.
சாகம்பரி தேவி மூலிகை சக்திகள் நிறைந்த அசோக மரத்தை தோற்றுவித்த திருநாள் "புதாஷ்டமி" தினமாகும்.
புதனும் - அஷ்டமியும் கூடும் நாட்களில் ஆலயங்களில் உள்ள அசோக மர தரிசனம் மற்றும் மரத்தை வலம் வருவது விசேஷம்.
அசோக மரத்திற்கு ஆறு வகையான சோக மூல காரணங்களை உணர்வித்து, பிராயச்சித்த - பரிகாரங்களைப் பெற்றுத்தரும் தெய்வீக சக்திகள் உண்டு.

புதாஷ்டமியான இன்று எட்டு முறை ஆலய தரிசனம், எட்டுப் பிரதட்சிணங்கள், எட்டு ஆலய தரிசனம், ஸ்ரீகிருஷ்ணரின் எட்டு விதமான தரிசனங்களை பெற முயற்சிக்கலாம்.
108 லிங்கங்களைக் கொண்ட ஒரே கல் வடிவ "நூற்றியெட்டு லிங்க தரிசனமான - கும்பகோணம் அருகேயுள்ள நூற்றியெட்டுச் சிவாலய வழிபாடு சிறப்பானதாகும்".
தன்னையும் அறியாமல் செய்த பிழை, கோபம், சூடான பேச்சு, கவனக்குறைவு, ஞாபகமறதி போன்றவற்றால் ஏற்படும் கஷ்ட - நஷ்டம், உறவு முறிவு, பணியில் பிரச்சினை போன்றவற்றிற்குத் தக்க பிராயச்சித்தம் "புதாஷ்டமி பூஜை" மிகப்பெரிய பலனாகும்.
ஸ்ரீகிருஷ்ண பகவானுக்கு அபிஷேகம், ஆராதனை, சந்தனக் காப்பு, பாத பூஜை, விஸ்வரூப பூஜை, தூபக் காப்பு மற்றும் காலை - மாலை இரண்டு வேளைகளிலும் கோ பூஜை போன்ற எட்டு பூஜைகளை நிகழ்த்தி வழிபாடு செய்யலாம்.
அமர்ந்த கோலத்தில் அருளும் காஞ்சிபுரம் - ஸ்ரீபாண்டவத்தூதப் பெருமாளை கிருஷ்ண மூர்த்தியாக ஆராதனை செய்வது விசேஷமானது.
குறைந்த படிப்பு எனத் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் முன்னுக்கு வர இருக்க வேண்டிய விரதம் - புதாஷ்டமி விரதம்.
அதிகப் படிப்பு படித்தும் வேலையில்லாமல் இருப்பவர்களுக்கும், தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் இருப்பவர்களுக்கும் - வேதனை தீர்ந்து நிம்மதி பிறக்கும் நன்னாள் "புதாஷ்டமி" தினமே.

சிறப்பு :-
காலத்தால், பிரளயத்தால் அழிவுறா ஆயக் கலைகள் பெற வேண்டி ஸ்ரீ சரஸ்வதி தேவி - ஸ்ரீ காலபைரவரை வணங்கி, ஸ்ரீ ஹயக்ரீவரிடம் குருகுல வாசல் பூண்ட நாள் புதாஷ்டமி.
தினமும் வாழ்வில் ஏற்படும் பயம், அச்சம் போன்றவை தெளிவதுடன், எதிர்காலத்தில் நம்முடைய சந்ததியை காத்து ரட்சித்துக் கொள்வதற்கான இந்நாளில் "அதி அற்புதமான மகா வித்யா பைரவ சக்திகள்" கிட்டும்.
ஸ்ரீ கால பைரவருக்கு புனுகு, கஸ்தூரி கலந்த சந்தனக்காப்பு இட்டு முந்திரி மாலை சார்த்தி, சிவராத்திரி போல ஆறு அல்லது எட்டு கால வழிபாடுகளை நிகழ்த்தலாம்.
இன்றைய தினத்தை "காலத்தைப் பற்றிய நுண்ணிய அறிவைத் தரும் தினமாகப் போற்றுகிறார்கள் சித்தர்கள்".
காலத்தின் சக்தியையும், மகத்துவத்தையும் உணர்வதற்குக் கால பைரவர் பூஜை மிக மிக முக்கியமானதாகும்.
புதாஷ்டமியின் சிறப்பு என்னவென்றால் "எட்டுவிதமான சௌகார சக்திகள் நிறைந்துள்ள நல்ல நாளே - புதன்கிழமையாக அமைகிறது". புதன் கிரகத்திற்கு உரித்தான எண் "ஐந்து". இதில் அஷ்டமியும் சேர்வதால் இன்னும் கூடுதலான கால சக்திகள் - வித்யா சக்திகளுடன் சேர்ந்து பல நற்பலன்களை வாரி வழங்குகின்றன.
இன்றைய தினம் நம்மால் முடிந்த அளவு அன்னதானம் செய்து, திருத்தலம் சென்று, கால பைரவரையும் வழிபட்டு, விரதம் இருந்தால் மகத்தான - வளம் நிறைந்த வாழ்வு அமையும்.


இஷ்டி காலம்!

இஷ்டி காலம் என்றால் என்ன? இதோ விளக்கம்...
நாட்காட்டியில் இஷ்டி காலம் என்று குறிப்பிட்டிருப்பதைக் கண்டிருப்பீர்கள். அது என்ன 'இஷ்டி' என்று சிலருக்குத் தெரியாமல் இருக்கலாம். இதோ அவர்களுக்கான விளக்கம்...
இஷ்டி என்பது அமாவாசை அல்லது பௌர்ணமி திதியின் இறுதிப்பகுதியாகும். அதாவது, நான்காம் பாகமாகும். பிரதமை திதியின் முதல் மூன்று பாகமும்கூடிய காலம் இஷ்டி. நேற்று தை அமாவாசை முடிந்ததால், இன்று இஷ்டி காலமாக உள்ளது. இந்த நாளில் நாம் பூஜைகளை மேற்கொண்டால், பூஜைக்குரிய தேவர்கள் அருகிலேயே வந்து சூட்சும ரூபமாக நின்று வணக்கங்களை ஏற்றுக்கொள்வார்கள் என்று ஜோதிட, ஆன்மிக நூல்கள் சொல்கின்றன,

அகிலாண்டேஸ்வரி அஷ்டோத்திர_சத_நாமாவளி!

ஓம் கல்யாண்யை நம:
ஓம் த்ரிபுராயை நம:
ஓம் பாலாயை நம:
ஓம் மாயாயை நம:
ஓம் த்ரிபுரஸுந்தர்யை நம:
ஓம் ஸுந்தர்யை நம:
ஓம் ஸெளபாக்யவத்யை நம:
ஓம் க்லீங்கார்யை நம:
ஓம் ஸர்வ மங்களாயை நம:
ஓம் ஏகாக்ஷர்யை நம:
ஓம் ஸ்கந்த ஜநந்யை நம:
ஓம் பராபஞ்சதசாக்ஷர்யை நம:
ஓம் த்ரைலோக்ய மோஹனாதீசாயை நம:
ஓம் ஸர்வாசாபூரவல்லபாயை நம:
ஓம் ஸர்வ ஸம்÷க்ஷõபணா தீசாயை நம:
ஓம் ஸர்வ ஸெளபாக்யதேச்வர்யை நம:
ஓம் ஸர்வார்த்த ஸாதகாதீசாயை நம:
ஓம் ஸர்வ ரக்ஷõகரா தீசாயை நம:
ஓம் ஸர்வரோக ஹராதீசாயை நம:
ஓம் ஸர்வஸித்திப்ரதாய காயை நம:
ஓம் ஸர்வாநந்த மயாதீசாயை நம:
ஓம் யோகிநீசக்ரநாயிகாயை நம:
ஓம் பக்தானுக்ரக்தாயை நம:
ஓம் ரக்தாங்க்யை நம:
ஓம் சங்கரார்த்தசரீரிண்யை நம:
ஓம் புஷ்பபாணேக்ஷúதநு: பாசாங்குசகரோஜ்வலாயை நம:
ஓம் ஸச்சிதானந்தல ஹர்யை நம:
ஓம் ஸ்ரீ வித்யாயை நம:
ஓம் த்ரிபுரேச்வர்யை நம:
ஓம் ஸர்வ ஸம்÷க்ஷõபிண்யை நம:
ஓம் சிவாயை நம:
ஓம் அநங்க குஸுமாயை நம:
ஓம் புவனேச்வர்யை நம:
ஓம் குப்தாயை நம:
ஓம் குப்ததராயை நம:
ஓம் நித்யாயை நம:
ஓம் நித்யக்லின்னாயை நம:
ஓம் மதத்ரவாயை நம:
ஓம் மோஹின்யை நம:
ஓம் பரமாநந்தாயை நம:
ஓம் காமேச்வர்யை நம:
ஓம் தருண்யை நம:
ஓம் கலாயை நம:
ஓம் கலாவத்யை நம:
ஓம் பகவத்யை நம:
ஓம் பத்மராக கிரீடின்யை நம:
ஓம் ரக்த வஸ்த்ராயை நம:
ஓம் ரக்த பூஷாயை நம:
ஓம் ரக்த கந்தானு லேபனாயை நம:
ஓம் ஸெளகந்திக மிலத்வேண்யை நம:
ஓம் மந்த்ரிண்யை நம:
ஓம் மந்த்ர ரூபிண்யை நம:
ஓம் தத்வத்ரயாயை நம:
ஓம் தத்வமய்யை நம:
ஓம் ஸித்தாந்த புரவாஸிந்யை நம:
ஓம் ஸ்ரீமத்யை நம:
ஓம் மஹா தேவ்யை நம:
ஓம் மஹாகாள்யை நம:
ஓம் பரதேவதாயை நம:
ஓம் கைவல்யரேகாவசின்யை நம:
ஓம் ஸர்வேச்வர்யை நம:
ஓம் ஸர்வமாத்ருகாயை நம:
ஓம் விஷ்ணு ஸ்வஸ்ரே நம:
ஓம் வேதமய்யை நம:
ஓம் ஸர்வ ஸம்பத் ப்ரதாயிகாயை நம:
ஓம் கிங்கரீபூதகீர்வாண்யை நம:
ஓம் ஸுதாபாநவிநோதின்யை நம:
ஓம் ஆதாரவீதீ பதிகாயை நம:
ஓம் ஸ்வாதிஷ்டான ஸமாச்ரயாயை நம:
ஓம் மணிபூர ஸமாஸீனாயை நம:
ஓம் அநாஹதநிவாஸின்யை நம:
ஓம் ஆக்ஞாபத்ம ஸமாஸீனாயை நம:
ஓம் வீசுத்தி ஸ்தல ஸம்ச்ரயாயை நம:
ஓம் அஷ்டத்ரிம்சத் கலாமூர்த்யை நம:
ஓம் ஸுஷும்னாத்வார மத்யகாயை நம:
ஓம் யோகீச்வர மநோத்யேயாயை நம:
ஓம் பரப்ரஹ்ம வரூபிண்யை நம:
ஓம் சதுர் புஜாயை நம:
ஓம் சந்த்ர சூடாயை நம:
ஓம் புராணாகமரூபிண்யை நம:
ஓம் கார்யை நம:
ஓம் விமலாயை நம:
ஓம் வித்யாயை நம:
ஓம் பஞ்சப்ரணவரூபிண்யை நம:
ஓம் பூதேச்வர்யை நம:
ஓம் பஞ்சாசத்வர்ண ரூபிண்யை நம:
ஓம் ÷ஷாடாந்யாஸ மஹா பூஷாயை நம:
ஓம் காமாக்ஷ்யை நம:
ஓம் தசமாத்ருகாயை நம:
ஓம் அருணாயை நம:
ஓம் ஆதாரசக்த்யை நம:
ஓம் லக்ஷ்ம்யை நம:
ஓம் த்ரிபுர பைரவ்யை நம:
ஓம் மஹாபூஜா ஸமாலோலாயை நம:
ஓம் ரஹோ யஜ்ஞ ஸ்வரூபிண்யை நம:
ஓம் த்ரிகோண மத்ய நிலயாயை நம:
ஓம் ஷட்கோணபுரவாஸின்யை நம:
ஓம் வஸுகோணபுரவா ஸின்யை நம:
ஓம் தசார த்வந்த்வ வாஸின்யை நம:
ஓம் சதுர்தசாந்த கோணஸ்தாயை நம:
ஓம் வஸுபத்ம நிவாஸின்யை நம:
ஓம் ஸ்வராப்ஜ பத்ர நிலயாயை நம:
ஓம் வ்ருத்தத்ரய நிவாஸிந்யை நம:
ஓம் ஸ்ரீமத் பீஜகுசஸ்தந்யை நம:
ஓம் அகிலாண்டேஸ்வரியே நம:
ஓம் ஸ்ரீமஜே நம:
ஓம் ஸ்ரீராஜராஜேச்வர்யை நம:
ஓம் அகிலாண்டகோடிப்ரும் ஹாண்டஜனன்யை நம:

பள்ளியறை பூஜையின் மகத்துவங்களும்,அதன் பெருமைகளும்!

இரவுக் கால பூஜை சிவாலயத்தில் நிறைவு ஆனப் பின்னர்,ஈசனுடைய திருப்பாதத்திற்கு அரிய அலங்காரம் செய்ய வேண்டும்;அந்த அலங்காரம் செய்த திருப்பாதத்தை பல்லக்கில் வைத்து கோவிலுக்குள் வலம் வரவேண்டும்;அப்படி வலம் வரும் போது,நாதஸ்வரம்,சங்கு,உடுக்கை,பேரிகை,துந்துபி,மத்தளம் மற்றும் திருக்கையிலாய வாத்தியம் என்று அழைக்கப்படும் பஞ்சவாத்தியங்கள் இசைக்க வேண்டும்;இவைகளை யார் ஒருவர் சம்பளம் வாங்காமல் ஒரு பிறவி முழுவதும் இசைக்கின்றார்களோ,அவர்களே சிவலோகம் என்று அழைக்கப்படும் திருக்கையிலாயத்தில் இசைக்கும் கணங்களாக பொறுப்பேற்கின்றார்கள்;
ஒவ்வொரு தினமும் ஒரு சில நல்ல செயல்களையாவது செய்தோம் என்ற மன நிறைவு உடன் காலதேவனாகிய மஹாகால பைரவப் பெருமானுக்கு நாம் செய்யும் முறையான வழிபாட்டு தின நிறைவுதான் இந்த பள்ளியறை பூஜை!
பள்ளியறை பூஜைக்கு பல்லக்கில் ஈசன் வலம் வரும் போது,சிவபுராணம்,பதிகங்கள் பாடி வரவேண்டும்;இதைத் தரிசித்தாலே வளமான வாழ்க்கையை நாம் அமைக்கின்றோம் என்று அர்த்தம்;
பள்ளியறை பூஜைக்கு பல்லக்கு தூக்கி ஈசனைச் சுமந்து வரும் பாக்கியம் எவருக்குக் கிட்டுகின்றதோ,அவர்கள் மறுபிறவியில் பொறியியல் வல்லுநர்களாகவும்,பல மாடிக்கட்டிடங்களுக்குச் சொந்தக் காரர்களாகவும்,பல ஆயிரம்கோடி ரூபாய்களுக்கு அதிபதியாகவும் மாறுவார்கள்;
பள்ளியறை பூஜைக்கு பூக்கள்,பூச்சரங்கள்,நிவேதனம் செய்து தருபவர்கள் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கக் காரணமாக இருக்கும்;
பள்ளியறை பூஜைக்கு பசும்பால் தருபவர்களுக்கு அருமையான வாரிசுகள் இப்பிறவியிலேயே கிட்டும்;
பள்ளியறை பூஜைக்கு எண்ணெய்,நெய்,மின் விளக்கு தானம் செய்பவர்களுக்கு பல ஆயிரக் கணக்கானவர்களுக்கு கல்வி தரும் பாக்கியத்தை அடுத்த பிறவியில் பெறுவார்கள்;
திங்கட்கிழமை அன்று பள்ளியறை பூஜைக்குரிய பொருட்களை தானம் செய்து,அதில் கலந்து கொள்பவர்கள் அதன் பிறகு தமது வாழ்க்கையில் மகத்தான திட்டங்களை தங்கு தடையின்றி செயல்படுத்தி வெற்றி காண்பார்கள்;
ஆயில்யம்,கேட்டை,மூலம்,பூராடம் நட்சத்திரங்களில் பிறந்த பெண்களுக்கு மிகவும் சிரமப்பட்டே வாழ்க்கைத் துணை அமையும்;எனவே,இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒரு வருடம் வரை தினமும் பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்;ஆயில்யம் நட்சத்திரமும்,செவ்வாய்க்கிழமையும் வரும் நாளன்று தமது வருமானத்தில் பள்ளியறை பூஜைக்குத் தேவையான பொருட்களை அன்பளிப்பாக தந்து,அவசியம் கலந்து கொள்ள வேண்டும்;
அரசு மற்றும் தனியார்த் துறையில் பதவி உயர்வுக்குக் காத்திருப்பவர்கள் புதன் கிழமையன்று பள்ளியறை பூஜைக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருவதோடு,கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்;
அனைத்துவிதமான சித்திகளும் கிடைக்க பலர் பல பிறவிகளாக முயற்சி செய்து கொண்டே இருக்கின்றார்கள்;அவர்கள் ஒருவருடம் வரை தினமும் பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்;மேலும் அனுஷம் நட்சத்திரமும் வியாழக்கிழமையும் வரும் நாட்களில் பள்ளியறை பூஜைக்குத் தேவையான பொருட்களை தம்மால் முடிந்த அளவுக்கு வாங்கித்தரவேண்டும்;கலந்து கொண்டு மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்;
கணவனுடைய நோய் பல காலமாக இருந்தால் அது தீர,அவருடைய மனைவியானவர், வெள்ளிக்கிழமை பள்ளியறை பூஜையை சிறப்பிக்க தம்மால் ஆன முயற்சியில் ஈடுபடவேண்டும்;
அற்புதமான வாரிசு மகனாகவோ அல்லது மகளாகவோ பெற விரும்பினால் சனிக்கிழமையன்று பள்ளியறை பூஜையில் கலந்து கொள்வதோடு,அதற்குத் தேவையான பொருட்களை வாங்கி அன்பளிப்பாகத் தரவேண்டும்;
பிரிந்த வாழ்க்கைத் துணை சேரவும்,காணாமல் போய் பல ஆண்டுகள் என்ன ஆனார்கள் என்பதை அறியவும்,அறிந்த பின்னர் திரும்பி வரவும் மூன்றாண்டுகள் வரை தினமும் பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்;அசுபதியும் ஞாயிற்றுக்கிழமையும் வரும் நாட்களில் பள்ளியறை பூஜைக்குத் தேவையான பூக்கள்,பால்,நைவேத்தியம் போன்றவைகளை வாங்கித் தரவேண்டும்;(ஒரு போதும் பாக்கெட் பால் வாங்கித் தரக் கூடாது என்பதை நினைவிற் கொள்க)
பள்ளியறை பூஜைக்கு பூக்கள் கட்டித் தருபவர்கள் மறுபிறவியில் அதிகமான சம்பளம் தரும் வேலையில் சேருவர்;அவர்களது மகனும்,மகளும் மற்றும் பேரன் பேத்திகள் அதிக சம்பளம் தரும் வேலையில் இருப்பார்கள்;குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் வரை இப்படிச் செய்தால் மட்டுமே இப்படிப்பட்ட பலன் கிட்டும்;
பள்ளியறை பூஜைக்கு பால்,நைவேத்தியங்கள் செய்து கொடுப்பவர்களும்,பள்ளியறை பூஜை நிறைவடைந்த பின்னர்,ஏழைகளுக்கு தானமாக நைவேத்தியத்தைத் தருபவர்களுக்கு ஒழுக்கமும் பக்தியும் நிறைந்த குழந்தைகள் இப்பிறவியிலும்,மறுபிறவியிலும் பிறப்பார்கள்;
பள்ளியறை பூஜையில் கர்ப்பிணிப் பெண்கள் கலந்து கொண்டு,அதன் முடிவில் பசுவுக்கு பழங்கள் கொடுத்துக் கொண்டு வந்தால்,சுகப்பிரசவம் ஏற்படும்;நைவேத்தியப் பாலை பலருக்கும் தந்தால் அவர்களுக்கு வலியில்லாத பிரசவம் உண்டாகும்;குழந்தை பிறக்கும் தருணத்தில் இறை சிந்தனை உண்டாகும்;இப்படிப்பட்ட சிந்தனை உண்டானால்,அவர்களுக்கு பிரசவ வைராக்கியம் உருவாகுவற்குப் பதிலாக முக்தி வைராக்கியம் உண்டாகும்;
பள்ளியறை பூஜையிலும்,அதன் நிறைவுப்பகுதியிலும் அன்னதானம் செய்பவர்கள் தொழிலில் அமோக வளர்ச்சியை அடைவார்கள்;பல மடங்கு லாபம் அவர்களைத் தேடி வரும்;
பள்ளியறை பூஜைக்கு எண்ணெய்,நெய் தொடர்ந்து தருபவர்களுக்கு முதுமைக்காலத்தில் கண் சார்ந்த வியாதிகள் ஒருபோதும் வராது,
அகத்திய மாமுனிகள் அவர் தமது நூல்களில்  பித்தத்தால் வரும் உடல் எரிச்சலை தணிக்க மிக சுலபமான ஒரு மார்க்கத்தை காட்டி இருக்கிறார். அதை உங்களுக்கு சொன்னால் நீங்களே அதை வீட்டில் இருந்தபடியே செய்து பூரண குணம் அடையலாம்
கொத்தமல்லி விதை அதாவது தனியா 200 கிராம் சீனா கற்கண்டு 400 கிராம் சீரகம், அதிமதுரம், கருஞ்சீரகம் காட்டு சீரகம் சன்ன லவங்க பட்டை, கருவாய் பட்டை போன்றவைகள் தலைக்கு 30 கிராம் எடுத்து கொள்ளுங்கள் இவற்றில் சீனா கற்கண்டு தவிர மற்றவற்றை உரலில் போட்டு இடித்து கதர் துணியில் சலித்து கொள்ளுங்கள் பிறகு சீனா கற்கண்டையும் பொடி செய்து முதலில் இடித்த மூலிகை பொருள்களோடு கலந்து வைத்து கொள்ளுங்கள் பிறகு காலை மாலை இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து வாயில் போட்டு வென்னீர் குடித்து வாருங்கள் அதிகபட்சமாக 90 நாட்களில் உங்கள் வியாதி முற்றிலும் விலகி விடும். இது வைத்திய முறை மட்டுமல்ல ஜோதிட ரீதியாக குறைவாக இருக்கும் கிரகத்தின் ஆகர்சனத்தை அதிகபடுத்தி தரும் ரகசிய முறையும் ஆகும்.

தேவி சக்திக்கு அபிஷேகமும் அதன் பலன்களும்!

அனுதினமும் தேவி சக்தியை வழிபடும்அம்பாள் பக்தரா நீங்கள்?

1. வில்வ இலைகளால் தேவியைப் பூஜிப்பவர்கள் இம்மையிலும் மறுமையிலும் சந்தோஷமாக இருப்பார்கள்.
2. கற்பூரம், கஸ்தூரி, அகில், குங்குமப்பூ ஆகியவற்றுடன் சந்தனம் கலந்து சக்திக்கு அபிஷேகம் செய்தால், பல பிறவிகளில் செய்த பாவம் தொலையும்.
3. ஸ்ரீலட்சுமிதேவிக்கும், ஸ்ரீசரஸ்வதி தேவிக்கும் மாம்பழச் சாறு கொண்டு அபிஷேகம் செய்தால், நித்தியத்துவம் கிடைக்கும்; அழியா புகழ் பெறலாம் என்கின்றன ஞானநூல்கள்.
4. ரத்தின ஆபரணங்களைச் சமர்ப்பித்து தேவியை ஆராதிப்பவன் குபேரன் ஆவான். பூக்களால் தேவியை பூஜிப்பவருக்கு கயிலாய வாசம் கிடைக்கும்.

தேவி சக்திக்கு அபிஷேகமும் அதன் பலன்களும்!
நினைத்தது நிறைவேறும்...!
அம்பாளுக்கு ரோஜா மாலை சமர்ப்பித்து வழிபடுவதால், நினைத்தகாரியம் உடனே நிறைவேறும்.
அதேபோல், அம்மனுக்கு வேப்பிலை மாலை அணிவித்து வழிபட்டால், நீண்டநாள் குணம் ஆகாமல் வாட்டும் பிணிகள், வெகுசீக்கிரம் அகலும்.
சகல செல்வங்களும் ஸித்திக்கும்...!
சிவாலயத்தில் ஏழு வகை தானங்கள் செய்வது சிறப்பு.
அதாவது
1. எலுமிச்சை,
2. வெல்லம்,
3. அவல்,
4. மாதுளை,
5. நெல்,
6. தேங்காய்,
7. பசும்பால்..
இந்த ஏழு வகைப் பொருட்களை, சிவாலயத்தில் தானம் அளிப்பதால் சகல செல்வங்களும் கிடைக்கும்.
கல்வி கலைகளில் சிறக்க...!
குழந்தைகள் நன்றாகப் படிக்க, பெருமாள் கோயில்களில் அஸ்த நட்சத்திரத்தன்று துளசி மாலை சாற்றி வழிபடவேண்டும்.
அதேபோன்று, சரஸ்வதிதேவிக்கு புனர்பூச நட்சத்திர நாளில் அர்ச்சனை ஆராதனை செய்வதாலும் கல்வியில் சிறந்து விளங்கலாம்.
சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த ஸாதகே சரண்யே த்ரயம்பிகே தேவி நாராயணி
நமோஸ்துதே.
நன்றி: ஆன்மீகம்\\\


அஷ்டலக்ஷ்மீ காயத்ரி!!

அஷ்டலட்க்ஷமி காயத்ரி!!
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே!! விஷ்ணுபத்ந்யைச தீமஹி!!
தந்நோ லக்ஷ்மீ: ப்ரசோதயாத்!
ஆதிலட்சுமி காயத்ரி !!
ஓம் மஹாதேவ்யைச வித்மஹே !!
மஹாசக்தியை ச தீமஹி!!
தந்நோ ஆதிலக்ஷ்மீ :ப்ரசோதயாத்!
தான்யலட்சுமி காயத்ரி !!
ஓம் மஹாதேவ்யைச வித்மஹே !!
மங்கள ரூபின்யை தீமஹி!!
தந்நோ தான்யலக்ஷ்மீ :ப்ரசோதயாத்!
வீரலட்சுமி காயத்ரி !!
ஓம் மஹாதேவ்யைச வித்மஹே !!வீரசக்தையைச தீமஹி!!
தந்நோ தைர்யலக்ஷ்மீ: ப்ரசோதயாத்!
கஜலட்சுமி காயத்ரி !!
ஓம் மஹாதேவ்யைச வித்மஹே !!மஹாபலாயைச தீமஹி!!
தந்நோ கஜலக்ஷ்மீ :ப்ரசோதயாத்!
சந்தானலட்சுமி காயத்ரி !!
ஓம் மஹாதேவ்யைச வித்மஹே!! வம்சவர்த்தநாயை தீமஹி!!
தந்நோ சந்தானலக்ஷ்மீ :ப்ரசோதயாத்!!
விஜயலட்சுமி காயத்ரி !!
ஓம் மஹாதேவ்யைச வித்மஹே!! விஜயபலதாயை தீமஹி!!
தந்நோ விஜயலக்ஷ்மீ :ப்ரசோதயாத்!
வித்யாலட்சுமி காயத்ரி !!
ஓம் மஹாதேவ்யைச வித்மஹே சு!!கீர்த்தனாயை தீமஹி!!
தந்நோ வித்யாலக்ஷ்மீ :ப்ரசோதயாத்!
தனலட்சுமி காயத்ரி!!
ஓம் மஹாதேவ்யைச வித்மஹே !!
கனகதாராயை தீமஹி!!
தந்நோ தனலக்ஷ்மீ :ப்ரசோதயாத்!

கோ தானம்!

கோ மாதா சகல தெய்வங்களும் தன்னுள் அடங்கியதால் ஸர்வ தேவ ஸ்வரூபீ 

கோமாதா பூலோகம், பாதாலலோகம், ஸுவர்க்கம், பித்ருலோகம், கந்தர்வலோகம் , வைவஸ்வத பட்டினம், சத்ய லோகம் என எல்லா லோகத்தையும் கடக்க வல்லவள். நாம் செய்யும் பாவங்களை ஐந்து பிரிவாக விஷ்ணு புராணம், அக்னி புராணம், கருட புராணம் முதலிய புராணங்கள் சொல்கின்றன. அவை மஹா பாதகம், உப பாதகம், ஜாதிப்ரம்ஸ பாதகம்,அபாத்ரிகரண பாதகம் , மலினிகரண பாதகம். அனேகமாக எல்லா பாவங்களும் இந்த ஐந்து பிரிவுகளில் வந்துவிடும். இந்த பாவங்கள் ஏதோ ஒரு வழியில் கர்ம வினையாக ஜன்ம ஜன்மாந்திரமாக தொடர்கிறது. இதிலிருந்து விடுபட்டாலொழிய, ஜன்மம் கடையேற வழி திறப்பதில்லை. இந்த பாவங்கள் ச்ராவன ரிஷிகளால் சொல்லப்பட்டு சித்ரகுப்தனால் கணக்கில் எடுக்கப்பட்டு யமதர்மராஜனால் வைவஸ்வத பட்டினத்தில் அதற்கு உண்டான பலா பலன்களை நிர்ணயம் செய்யப்படுகின்றன. நமது அந்திம காலங்களில் இவை நிதர்சனமாக இயங்க ஆரம்பித்துவிடுகின்றன. நம்முடைய இறப்பிற்கு பிறகு நம் ஜீவன் 12 நாள் ப்ரேத ஸம்ஸ்காரத்திற்கு பிறகு 13 ஆம் நாள் தனது யாத்திரையை தொடங்குகிறது. 12 மாத காலம்( பித்ருக்களுக்கு1 நாள்)தொடர்ந்து வைவஸ்வத பட்டணம் அடையும். வழியில் வைதரிணி என்னும் நதி இருப்பதாகவும் அது புண்யாத்மாக்களுக்கு தெளிந்த நீரோடையாக கடப்பதற்கு எளிதாகவும், பாபாத்மாக்களுக்கு மலம், சீழ், அழுகிய ப்ரேதம், ரத்தமும் மாம்சமுடன் கொடிய ஜீவராசிகளுடன் கூடிய கடக்கமுடியாததாகவும் இருப்பதாக கருட புராணம் கூறுகிறது. வைதரிணியை கடக்கமுடியாத ஜீவன் தன் இலக்கை அடைய முடியாமல் பாதியில் தவிக்கும். மேல் சொன்ன ஐந்து வகை பாவத்திற்கும் முக்கியமாக இந்த ஒரு காரணத்துக்காகத்தான் கோதானமும் கோ சம்ரக்ஷணமும் ப்ராயசித்தமாக கருட , விஷ்ணு, அக்னி புராணங்களும் க்ருத்ய ஸுத்ரங்களும் சொல்கின்றன. நாம் செய்த கோதான பலனால் வைதரிணி நதிக்கரையில் கோமாதா தோன்றுவாள். அவளுடைய வாலை பிடித்துக்கொண்டால் நம்மை சுலபமாக கடத்திவிடுவாள் என்று கருட புராணம் சொல்கிறது.

பொதுவாக தானங்கள் ஏதோ ஒரு உலகியல் விஷயங்களை பூர்த்தி செய்வதாக இருக்கும். இருப்பவர் இல்லாதவர்க்கு தானம் கொடுப்பதால் , கொடுப்பவர் கைமேலாகவும் வாங்குபவர் நிறம் தாழ்த்தியோ உட்கார்ந்து கொண்டோ கையை தாழ்த்தி பெற்றுக்கொள்வது வழக்கம். கோமாதாவும், கண்ணிகையும் (ப்ரஜாபத்யத்தால்) உலகியல் விஷயத்துக்கு அல்லாமல் ஜீவன் கடையேர உறுதுணையாய் இருப்பதால் இந்த தானத்தை கொடுப்பவனும் பெறுபவனும் (காரணனும் கர்த்தாவும்) ஒரே மாதிரியான புண்யத்தை அடைகிறார்கள்.அதனாலயே இந்த கோதானமும் கண்ணிகா தானமும் குடுப்பவரும் வாங்குபவரும் சரிசமமாக நின்று கொண்டு செய்யவேண்டும் என்று சாஸ்திரங்கள் உறைக்கின்றது..தானங்களிலேயே சிறந்ததாகவும் சொல்லப்படுகிறது.

பசுவை தானம் கொடுப்பவர், பசுவின் ஒவ்வொரு ரோமத்திற்கும் ஒரு ஆண்டாக இறந்த பிறகு பலஆயிரம் வருடங்கள் கோ லோகத்தில் கிருஷ்ண பகவானுடன் சேர்ந்திருப்பார் என்று கூறப்படுகிறது.
பசு தானத்தால் ஒருவர் தனது முன் ஏழு, பின் ஏழு தலைமுறையினர் மோட்சத்திற்கு போக வழி செய்கிறார். தான் அறியாமல் செய்த பாவங்களும் விலகுகிறது. கோ தானத்தை பல காரணங்களுக்காக செய்கிறார்கள்.
ஒருவர் தான் இறக்கப் போகிறோம் என்று தெரிந்தவுடன் தனக்காக தானே கோ தானம் செய்யலாம். ஒரு மனிதன் உயிர் பிரியும் பொழுது அவருக்காக உக்ராந்தி கோ தானம் என்று செய்வதுண்டு.
இறந்த 12 ஆம் நாள் ஜீவன் வைதரினி நதியை கடக்க வேண்டி செய்ய படும் கோதானம் வைதரிணி கோதானம் என்று பெயர்.

பசுக்களை அதன் கன்றுடன் சேர்த்து நன்கு படித்த பண்டிதர்களுக்கும், அதைப் பராமரிக்கக்கூடியசக்தி உள்ளவர்களுக்கும் தானம் செய்ய வேண்டும். அல்லது, ஆலயங்களில் உள்ள கோ சாலைகளுக்கு பசுவை தானமாகக் கொடுக்கலாம். தானம் குடுப்பதோடு அல்லாமல் அதனை பராமரிக்க குறைந்த பக்ஷம் ஒரு வருடத்திற்காவது (பித்ருக்களுக்கு ஒரு நாள்) உபகாரமும் கூடவே தரப்படவேண்டும். தானம் பெற்றவரும் வியாபார நோக்குடன் இல்லாமல் பசுவையும் கன்றையும் சம்ரக்ஷணம் செய்து பாலை தெய்வ கார்யங்களுக்கும், சத்கார்யங்களுக்கும் உபயோகபடுத்த வேண்டும்.இதை செய்யாத பக்ஷத்தில் தானம் பெருபவர் பாபத்தை சம்பாதிக்க நேரும்.
தானம் குடுப்பவர் பசுவையும் கன்றையும் அதனுடைய வாலை பிடுத்துக்கொண்டு உத்தேசித்த பலனை மனதில் சங்கல்பம் பண்ணிக்கொண்டு அதற்கு உண்டான மந்திரங்களுடன் வடக்கு நோக்கி பசுமாட்டின் வாலை அவர் கையில் கொடுத்து பத்னியுடன் தீர்த்தம் விட்டு தானம் செய்யவேணடும்
கோமாதாவின் தானத்தினாலும், சம்ரக்ஷனத்தினாலும் எல்லா நலன்களையும் பெற ப்ரார்த்திப்போம்.
கோ ஸ்துதி:---
நமோ தேவ்யை மஹா தேவ்யை ஸுரப்யை ச நமோ நம
கவாம் பீஜஸ்வ ரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே
நமோ ராதாப் பிரியாயைச பத்மாம் சாயை நமோ நம
நம: கிருஷ்ணப் பிரியாயை ச கவாம் மாத்ரே நமோ நம
கல்ப விருக்ஷஸ்வ ரூபாயை ஸர்வேஷாம் ஸந்ததம் பரம்
ஸ்ரீதாயை தன தாயை ச வ்ருத்தி தாயை நமோ நம
சுபதாயை ப்ரஸன்னாயை கோப தாயை நமோ நம
யசோதாயை கீர்த்தி தாயை தர்மக்ஞாயை நமோ நம
இதம் ஸ்தோத்ரம் மஹத் புண்யம் பக்தி
யுக்தச்ச ய: படேத்
ஸகோ மான் தனவான்ச் சைவ கீர்த்திமான்
புத்ர வான் பவேத்!

சங்கு நாராயண சஞ்ஜீவி!

சங்கு நாராயண சஞ்ஜீவி!
இந்த சங்கு நாராயண சஞ்ஜீவியும் சித்தர்கள் அருளிச் சென்ற 21 வகை சஞ்ஜீவிகளில் ஒன்றாகும், இந்த மூலிகையை தொடர்ந்து உண்டு வந்தால் சிரஞ்சீவியாய் வாழ முடியும் என்று சித்தர்கள் சொல்லிச் சென்றனர். இதன் இலை பார்பதற்கு சங்கு போன்று இருக்கும். இந்த இலைக்கு நடுவில் சங்கு போன்ற அமைப்பு காணப்படும். வலம்புரி சங்கு இருக்கும் இடத்தில் எப்படி தோஷங்கள் அண்டாது என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றன, அந்த வலம்புரி சங்கை விட நூறு மடங்கு சக்தி கொண்டது சங்கு நாராயண சஞ்ஜீவி இது நம் கையில் இருந்தால் எந்த விதமான தோஷமும் நம்மை அண்டாது, கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம் மற்றும் ஜாதகத்தில் உண்டாகும் பலவித தோஷங்களும் நம்மை விட்டு விலகி ஓடும், நாம் இருக்கும் இடத்தில் உள்ள வாஸ்து தோஷங்களும் நீங்கிவிடும். சங்கு நாராயண சஞ்ஜீவி தொழில் வியாபாரங்களில் உள்ள எதிர்ப்புகள் போட்டிகள் சூழ்சிகளை முறியடிக்கும், எதிரிகள் நம்மை கண்டு அஞ்சுவர், தொழில் வியாபாரங்களில் முன்னேற்றத்தையும் வெற்றியையும் அதிகப்படியான பொருள் வரத்தையும் உண்டாக்கும், தன்னம்பிக்கையும் தைரியத்தையும் கொடுக்கும், குடும்பத்தில் உள்ள பிணக்குகளை நீக்கி சந்தோசத்தையும் மனஅமைதியையும் மகிழ்ச்சியும் உண்டாக்கும், மொத்தத்தில் நிறைவான வளமான வாழ்வினையும், சமூகத்தில் அந்தஸ்து பட்டம் பதவி கொளரவம், அரசியலில் வெற்றி, மற்றும் சங்கு நாராயண சஞ்ஜீவி லக்ஷ்மி நாராயணரின் அருளினையும் பெற்றுத்தரும்.
சிவப்பு நத்தைசூரி :
எத்தை சொன்னாலும் அத்தை செய்யும் நத்தை சூரி" என்பது சித்தர் வாக்கு, அதாவது நாம் இந்த நத்தை சூரியை அணிந்து கொண்டு என்ன பலனை நினைத்து வேண்டுகிறோமோ அந்த வேண்டுதலை நிறைவேற்றும் சக்தி நத்தை சூரிக்கு உண்டு. இந்த நத்தை சூரி நாம் வேண்டும் வரங்களை அருளும் அபூர்வ சஞ்ஜீவி மூலிகை ஆகும். இந்த நத்தை சூரியில் ஆறு வகைகள் இருந்தாலும் சித்தர்கள் பயன்படுத்தியது சிவப்பு நிற நத்தை சூரி, இந்த நத்தை சூரி கிடைப்பதற்கு அரிது என்றாலும் இந்த நத்தை சூரியே கேட்கும் வரங்களை அருளும், மற்ற வகை நத்தை சூரிக்கு இந்த சக்தி இல்லை. நத்தை சூரி சகல காரிய சித்தியை கொடுக்கும், லக்ஷ்மி கடாச்சத்தை உருவாக்கும், சகல ஜன வசியம், தொழில் வசியம், வியபார வசியம், நவ கிரக வசியம், தெய்வ வசியம் தரும். சகல காரியங்களிலும் வெற்றியை தேடி தரும்.
மஹாலக்ஷ்மி தன ஆகர்ஷண மூலிகை :
மஹாலக்ஷ்மி தன ஆகர்ஷண மூலிகை என்று சித்தர்களால் போற்றப்பட்டது வெள்ளை நிற பூக்களை உடைய விஷ்ணு கரந்தை ஆகும். நீல நிற பூக்களை கொண்ட விஷ்ணு கரந்தையை அனைவரும் பார்த்திருப்பார்கள். ஆனால் வெள்ளை நிற மலர்களை கொண்ட விஷ்ணு கரந்தையை பார்பதற்கு மிகவும் அரிது, இதுவும் அறிய வகை சஞ்ஜீவி மூலிகை ஆகும். இந்த மூலிகை தன ஆகர்ஷணத்தை உண்டாக்கும். ஆகர்ஷணம் என்றால் அழைப்பு என்று பொருள், உலகில் உள்ள செல்வங்களை எல்லாம் ஈர்த்து நம்மிடம் தரும் வல்லமை கொண்டது இந்த மஹாலக்ஷ்மி தன ஆகர்ஷண மூலிகை என்னும் வெள்ளை விஷ்ணு கரந்தை. அஷ்ட லக்ஷ்மிகளை நம் இல்லத்தில் நிலைப்பெற வைக்கும் ஆற்றல் கொண்டது மஹாலக்ஷ்மி தன ஆகர்ஷண மூலிகை.
கந்தர்வ ராஜ சஞ்ஜீவி மூலிகை
இந்த கந்தர்வ ராஜ சஞ்ஜீவி மூலிகையும் அபூர்வ பலன்களை வாரி வழங்குவதாகும். மன்னர்கள் ஆண்ட காலங்களில் மன்னர்கள் தம்மிடம் உள்ள செல்வங்களை பாதுகாக்க பயன் படுத்தியது இந்த கந்தர்வ ராஜ சஞ்சீவி மூலிகை. தம்முடைய கஜானாவில் தங்கம், வெள்ளி, வைரம், நவரத்தினம், மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் முதலான தம்மிடம் உள்ள செல்வங்களை பாதுகாக்க, செல்வங்கள் மேலும் வந்து கஜானாவில் குவிய இந்த அபூர்வ கந்தர்வ ராஜ சஞ்ஜீவி மூலிகையை தமது கஜானாவில் வைத்து குறிப்பிட்ட நாட்களில் பூஜைகளையும் அந்த மூலிகை வேருக்கு செய்து வந்தனர். கந்தர்வ ராஜ சஞ்ஜீவி மூலிகை நம்மிடம் இருந்தால் நமது செல்வங்களை வற்றாமல் பாதுகாக்கும், செல்வங்களை நம் இல்லங்களில் குவிய வைக்கும்.

ரசமணி!

ரசமணி உடலில் அணிவதன் மூலம் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும், உடலுக்கு களைப்பு என்பதே ஏற்படாது.
குடும்பம், வியாபாரம் மற்றும் தொழில் வளர்ச்சி வெற்றிக்கு பெரிதும் துணைபுரியும்.
உடலில் ஓடும் இரத்த ஓட்டத்தை ஒரே சீராகவும், இரத்தத்தை சுத்தி செய்தும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது, முக்கியமாக இரத்த அழுத்த சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கபட்டவர்கள் இதை அணிவதால் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.

குண்டிலினியின் அடி நாதமான கருமையத்தை சுத்திசெய்யும் தன்மை இந்த ரசமணிக்கு உண்டு. இதனால் ரசமணி அணிந்தவர் நினைக்கும் அனைத்து நன்மைகளும் நடக்கும், மேலும் விந்து சக்தியை கெட்டி படுத்தும் தன்மை ரசமணிக்கு உண்டு, இதனால் ரசமணி அணிபவரின் சிந்தனை, புத்திசாலித்தனம் மிளிரும்.
பேய், பிசாசு , காத்து , கருப்பு மற்றும் துர்சக்திகளிடம் இருந்து நம்மை கத்து நிற்கும் சக்தி இதற்கு உண்டு.
செய்வினை கருப்பு , பில்லி , சூன்யம் போன்ற கெட்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும், மீட்டு எடுக்கவும் ரசமணியை பயன்படும்.
ரசமணியை அணிந்துகொண்டால் சம்பந்தப்பட்டவரின் தேசஸ் அதிகப்படுகிறது.
வண்டி, வாகனங்களில் செல்லும்பொழுது விபத்துகளை தடுக்கும் தன்மை ரசமணிக்கு நிச்சயம் உண்டு.

ரசமணி அணிபவரின் விழிப்புணர்வு மேலோங்கி நிற்கும்.
உடல் வெப்பநிலையை சரிசமமாக பாதுகாக்கிறது, உடல் வெப்பத்தை குறைத்து, உடலை சரியான நிலையில் சீராக வைத்து பாதுகாக்கிறது.
உடல் உறுப்புகள் சரியாக இயங்குவதற்கு ரசமணிகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன.

எந்த நோயும் உடலை அவ்வளவு சீக்கிரம் பாதிக்காது , உடல்நிலை கெட்டு போக வாய்ப்பே இல்லை, தனது உடல் நோய்க்காக மருத்துவ செலவுகள் அதிகம் செய்பவர்கள் அனைவருக்கும் இந்த ரசமணி ஒரு வர பிரசாதம்.
வயதானாலும் இளைமையுடன் வைத்திருக்கும் சக்தி இந்த ரசமணிக்கு எப்பொழுதும் உண்டு , மேலும் ரசமணி அணிபவரை தோற்ற பொலிவுடன் வைத்திருக்கும்.
ஞாபக சக்தியை மேலோங்கி நிற்கும், தம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சியை தரும், கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும்.

சிறு குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பு தருவதில் ரசமணி மிகவும் பயன்படும், குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்ப்படும் நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
மேலும் பல்வேறு பயன்களை ரசமணி அணிவதால் பெறமுடியும்....



சங்கு நாராயண சஞ்ஜீவி மூலிகை!

வலம்புரி சங்கு இருக்கும் இடத்தில் எப்படி தோஷங்கள் அண்டாது என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றன, அந்த வலம்புரி சங்கை விட நூறு மடங்கு சக்தி கொண்டது சங்கு நாராயண சஞ்ஜீவி இது நம் கையில் இருந்தால் எந்த விதமான தோஷமும் நம்மை அண்டாது, கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம் மற்றும் ஜாதகத்தில் உண்டாகும் பலவித தோஷங்களும் நம்மை விட்டு விலகி ஓடும், நாம் இருக்கும் இடத்தில் உள்ள வாஸ்து தோஷங்களும் நீங்கிவிடும். 

சங்கு நாராயண சஞ்ஜீவி தொழில் வியாபாரங்களில் உள்ள எதிர்ப்புகள் போட்டிகள் சூழ்சிகளை முறியடிக்கும், எதிரிகள் நம்மை கண்டு அஞ்சுவர், தொழில் வியாபாரங்களில் முன்னேற்றத்தையும் வெற்றியையும் அதிகப்படியான பொருள் வரத்தையும் உண்டாக்கும், தன்னம்பிக்கையும் தைரியத்தையும் கொடுக்கும், 

குடும்பத்தில் உள்ள பிணக்குகளை நீக்கி சந்தோசத்தையும் மனஅமைதியையும் மகிழ்ச்சியும் உண்டாக்கும், மொத்தத்தில் நிறைவான வளமான வாழ்வினையும், சமூகத்தில் அந்தஸ்து பட்டம் பதவி கொளரவம், அரசியலில் வெற்றி, மற்றும் சங்கு நாராயண சஞ்ஜீவி லக்ஷ்மி நாராயணரின் அருளினையும் பெற்றுத்தரும்

---------------------------

சங்கு நாராயண சஞ்சீவி

இது பசியை தாங்கக் கூடியது. அதேசமயம் களைப்பு வராது.
இது கசப்பு புளிப்பு துவர்ப்பு என மூன்று
சுவை உடையது.
இதன் இவை நிழலில் உலர்த்தி பொடி செய்து இரண்டு விரலால் அள்ளும் அளவுக்கு எடுத்து காலை மாலை இருவேளை தேனில் கலந்து சாப்பிடும் முன்பு சாப்பிட்டு வர இருதய சம்பந்தப்பட்ட
இருதய பலவீனம் மாரடைப்பு இருதய ஓட்டை போன்ற பிரச்சனைகள் தீர்ந்து குணமாவது மட்டுமன்றி உடல் அதிக உற்சாகமாக இருக்கும்.
இம்மூலிகையின் தண்டுப் பகுதியில் இருக்கும் சதையை மட்டும் எடுத்து
சென்னை லயோலா கல்லூரி பூச்சியல் ஆய்வு நிறுவனம் முனைவர் திரு பாண்டிக்குமார் அவர்கள் ஆய்வு செய்து சர்க்கரை வியாதிக்கு நல்ல முறையில் பயன்படுகிறது என தெரிவித்துள்ளார்.
இதன் சமூலத்தை நிழலில் உலர்த்தி ஒரு மண்டலம் சாப்பிட்டு வர காயகல்பம். இம்மூலிகையை சாப்பிட்டவர்களுக்கு த்
தான் இதன் அருமை தெரியும்.
படத்தை பாருங்கள் அதன் தண்டு பகுதியில் உள்ள சதையும் இரத்தம் போல் இருக்கும் அதுவும் புளிப்பு இனிப்பு துவர்ப்பு சுவை உடையது.
இம்மூலிகையை தனவசியம் என்று செல்வார்கள். அது எப்படியோ ஆனால் ஒரு மண்டலம் சாப்பிட்டு வர உடம்பு நல்ல அழகு பெற்று முக வசியமாகும்.

பித்ருக்களின் ஆசிகளைப் பெற!

நமது முன்னோர்களாகிய பித்ருக்களின் ஆசிகளைப் பெற:-
நமது வீட்டில் ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு முதல் நாள் அன்று வருகை தருவர்;வந்து,அமாவாசை முடியும் வரை இரண்டு நாட்கள் வரை தங்குவர்;
நாம் உலகத்தில் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் வருவதும்,வந்து நம்மை ஆசிர்வாதிப்பதும் யுகம் யுகமாக நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது;
அப்படி வரும் போது அவர்கள் தங்கும் பொருட்கள் பட்டியல்:
உரல்,
ஆட்டுக் கல்,
,செம்புப் பாத்திரம்,
நெல் மூட்டை,
அரிசிப்பானை,
நறுமணம் தரும் பூக்கள்,
மூங்கிலில் செய்யப்பட்டடபொருட்கள்,
சுரைக் குடுவை,
துளசி மாடம்,
பசு,
மிருதங்கம்,
மாங்கல்யச் சரடுகள்,
வெட்டி வேர்,
மெட்டி,
மாசிக்காய்,
சீந்தல் கொடி,
பிரண்டை,
கஸ்தூரி மஞ்சள்,
பஞ்சபாத்திரமும்
உத்திரிணியும்,
நமக்கு அதே போல நமது முன்னோர்களாகிய பித்ருக்களின் ஆசிகள் கிடைக்க வேண்டாமா?
x

உலக்கை,
முறம்,
மண்பானை,
சந்தனக் கல்,
சந்தனக் கட்டை,
அம்மி
இவைகளில் ஏதாவது ஐந்து பொருட்களாவது நமது வீட்டில் இருப்பது அவசியம்;
ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று பித்ரு தர்ப்பணம் செய்து வந்தாலே நமது அனைத்து கடன்/நோய்/எதிரி/வருமானப் பற்றாக்குறை முழுமையாக நீங்கிவிடும்;
மாதம் தோறும் பித்ரு தர்ப்பணம் அல்லது ஆண்டுக்கு மூன்று முறையாவது (ஆடி அமாவசை,புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை) அல்லது புரட்டாசி அமாவாசையிலாவது செய்து வர வேண்டும்;ீ
கூடவே மாதம் தோறும் குலதெய்வ வழிபாடு மற்றும் மாதம் தோறும் சிவராத்திரியன்று அண்ணாமலை கிரிவலம் சென்றால் போதுமானது;
கால.மாற்றத்தில் அவர் அவர்களின் செயல்பாடுகள் மூலமாக மேலே கூறப்பட்ட பொருட்கள் நமது வீட்டில் இல்லாமல் போய்வி்ட்டது
எவர் வீட்டிலும் இவை அனைத்தும் இருக்கின்றனவோ அவர்களுக்கு அவர்களது முன்னோர்களாகிய பித்ருக்களின் ஆசிகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன;