Friday 30 October 2015

ஐஸ்வர்யம் அருளும் சௌபாக்ய லக்ஷ்மீ !

  

  ஐஸ்வர்யம் அருளும் சௌபாக்ய லக்ஷ்மீ!   

 ஸெளமங்கல்யாம்பீப்ஸிதா: பதிமதீ:
ஸெளந்தர்ய ரத்னாகரா:
பர்த்தாஸங்கமுபேயுஷீ: ஸுவஸனீ:
ஸீமந்தனீஸ் ஸுப்ரியா:
ப்ரேம்ணா புத்ரகிருஹாதி பாக்யவிபவை:
ஸம்யோஜ்ய ஸம்ரக்ஷதீம்
ஸ்ரீ விஷ்ணுப்ரியகாமினீம் சுபகரீம்
ஸெளபாக்ய லக்ஷ்மீம் பஜே


 சௌமாங்கல்யத்தை விரும்பும் சுமங்கலிகள் சௌபாக்ய லட்சுமிக்கு பிரியமானவர்கள். அவர்களை ப்ரேமையுடன் குழந்தைகளையும், வீடு, தோட்டம், வாகனம், ஐஸ்வரியம், ஆரோக்கியம், மாங்கல்யம் முதலாக கொடுத்து ரட்சிக்கும் ஸ்ரீ விஷ்ணுவிடம் அதிகமாக ஆசை வைத்திருக்கும் சௌபாக்ய லட்சுமி அம்மாளை ஜெபிக்கிறேன்.









ஸ்ரீ மங்கள சண்டிகா தேவி ஸ்தோத்திரம்

  


மூலமந்திரம்!



 ஓம் ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம், ஸர்வ பூஜ்ய தேவி
மங்கள சண்டிகே ஹும், ஹும், பட் ஸ்வாஹா!



ஸ்ரீ மங்கள சண்டிகா ஸ்தோத்திரம்!


 ரட்ச ரட்ச ஜகன்மாதா: தேவி மங்கள சண்டிகே
ஹாரிகே விபதாம் ராசே ஹர்ஷ மங்கள காரிகே
ஹர்ஷ மங்கள தட்ச ஹர்ஷ மங்கள தாயிகே
சுபே மங்கள தசேக்ஷ சுபே மங்கள சண்டிகே

மங்களே மங்களார்ஹேச ஸர்வ மங்கள மங்களே
ஸதாம் மங்களதே தேவி ஸர்வேஷாம் மங்களாலயே
பூஜ்யே மங்கள வாரேச மங்களா பீஷ்ட தேவதே
பூஜ்யே மங்கள பூபஸ்ய மனுவம்சஸ்ய ஸந்தகம்

மங்களா திஷ்டாத்ரு தேவி மங்களானாம் சு மங்களே
ஸம்ஸார மங்களாதாரே மோக்ஷ மங்கள தாயினி
ஸாரேச மங்களாதாரே பாரேச ஸர்வ கர்மணாம்
ப்ரதி மங்கள வாரேச பூஜ்யே மங்கள ஸுகப்ரதே!



 இந்த உலகத்தைக் காத்து அருள்கின்ற தாயே; ஆபத்துகள் வராமல் காத்து நிற்பவளே:
ஆபத்துக்கள் வந்துவிட்டாலும் அகற்றுபவளே: மங்கள தினமான செவ்வாய்க்கிழமை தோறும்
வணங்கத் தக்க மங்கள உருவானவளே: இந்த உலகின் மங்களத்திற்கு மூலகாரணமாய் விளங்குபவளே; எல்லா நிலைகளிலும் மங்களத்தைத் தருபவளே;
புண்ணியம், பாவம் ஆகியவற்றைக் கடந்து நிற்பவளே;
ஒவ்வொரு மங்கள வாரத்திலும் எனக்கு எல்லாவிதமான மங்களத்தையும்
அளித்துக் காத்து அருள்வாயாக.
****
ஆபத்து காலத்திலும், வழக்குகளின் வெற்றிக்காகவும் கடன் உபாதை நீங்கவும், தோஷபரிஹாரமாகவும் சௌபாக்கியங்களை அடையவும் பாராயணம் செய்யலாம். மும்மூர்த்திகளும் தேவர்களும் துதித்த இம்மந்திரம் மஹாசக்தி வாய்ந்தவை என்று ஸ்காந்தம் தேவீ பாகவதத்தில் சொல்லப்படுகிறது.

முதலில் ருத்திரனும் பின் அங்காரக பகவானும் மங்களன் என்ற பேரரசனும் பூஜித்து, நினைத்த காரியத்தை அடைந்தனர். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை (மங்களவாரம்) தோறும் பூஜித்தலும், 108 முறை பாராயணமும் மிகவும் விசேஷமாகக் கூறப்படுகிறது.

கன்னிகைகளுக்கு மங்களத்தை கொடுப்பது விவாஹாதி சோபனம். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும், ராகுகாலத்தில் துர்காதேவியை வழிபட பலன் கிடைக்கும். 









Thursday 29 October 2015

மங்களம் நிறைக்கும் கணபதி மந்திரங்கள்!




தொடங்கும் சகல காரியங்களிலும்  விக்கினங்களும் வராமல் காத்து, வேண்டியவருக்கு வேண்டிய வரம் அருளும் வள்ளலும்,  ஆத்மார்த்த சிநேகிதரும், முழுமுதற் கடவுளும் ஆன, ஓம் என்னும் பிரணவ மந்திரத்தில் குடி கொண்டு யானை முகமும், பெருத்த தொந்தியும் வாய்ந்தவரான ஸ்ரீ கற்பக மூர்த்தியை வணங்குகிறேன்.



சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே.


பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும். இது விஷ்ணு சகஸ்ரநாமத்தில் உள்ளது.

எல்லாவிதத் தடைகளும் இடையூறுகளும் நீங்கவும், மறைந்து போகவும், வெள்ளை நிற உடையணிந்து கொண்டிருப்பவரும், நான்கு கரங்களை உடையவரும், எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளும், நிலவைப் போன்ற தன்மையுடையவரும், எப்பொழுதும் ஆனந்தமயமாக அருட்காட்சியளிக்கும் விநாயகரைத் தியானிப்போம்.

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்!

யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன்.


விநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில் பணியின் கனிந்து.

கொடிய துன்பங்களை வேரறுப்பவர், பொருள் பற்றைத் தணிவிப்பவர், வானுலகிற்கும் மண்ணுலகிற்கும் தலைவர். இத்தன்மையினரான விநாயகரைப் பணிந்து வணங்கினால் நன்மை பல பெற்று வாழலாம்.




ஸ்ரீ வல்லப மஹா கணபதி மந்திரம்!

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வர
வரத சர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா


தன ஆகர்ஷண கணபதி மந்திரம்!

ஓம் க்லாம் க்லீம் கம் கணபதயே வரவரத மம தன
தான்ய சம்ருத்திம் தேஹி தேஹி ஸ்வாஹா


வ்ராத கணபதி மந்திரம்!

ஓம் நமோ வ்ராத பதயே நமோ கணபதயே நம:
ப்ரமதபதயே நமஸ்தேஸ்து லம்போதராய
ஏகதந்தாய விக்னவிநாசினே சிவ சுதாய
வரத மூர்த்தயே நமோ நம:


சக்தி விநாயக மந்திரம்! " ஓம் ஹ்ரீம் க்ரீம் கணபதயே நம: "


விநாயகர் காயத்ரி!

ஓம் தத்புருஷாய வித்மஹே;
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி: ப்ரசோதயாத்!


ஸ்ரீலட்சுமி கணபதி மந்திரம்!

ஓம் ஸ்ரீம்கம் சௌம்யாய லட்சுமி கணபதயே
வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா!


சர்வ வித்யா கணபதி மந்திரம்!

தினமும் காலையில் 108 முறை சொல்ல, கல்வி அறிவு வளர்ச்சி பெறும். அறிவு விருத்தியாகும். தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உண்டாகும்.

ஐம் ப்ளூம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே
வர வரத ஐம் ப்ளூம் சர்வ வித்யாம் தேஹி ஸ்வாஹா!


செய்யும் காரியங்களில் தடைகள் விலக!

மஹா கணபதிர் புத்தி ப்ரிய: ஷிப்ர ப்ரஸாதத ந
ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமாபுத்ரோஸ்க நாஸந;

இதை தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்.


ஸ்ரீமஹா கணேச த்யானம்!

ஓம் கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
கவிம் கவீனா முபம ச்ரவஸ்தமம்
ஜ்யேஷ்ட்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத
ஆன : ச்ருண்வன்னூதிபி : ஸீத ஸாதனம்!



அகஜானன பத்மார்க்கம் கஜானனம் அஹர்நிசம்
அனேகதம் தம் பக்தானாம் ஏக தந்தம் உபாஸ்மஹே!


வக்ர துண்ட மஹாகாய சூர்யகோடி ஸமப்ரப
அவிக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா!


மூக்ஷ?க வாஹந மோதக ஹஸ்த
சாமர கர்ண விலம்பித ஸுத்ர
வாமந ரூப மஹேச்வர புத்ர
விக்ந விநாயக பாத நமஸ்தே!


மனநிம்மதி பெற ஸங்கஷ்ட நாசன கணேச ஸ்தோத்திரம் ...

இதைப் பாராயணம் செய்வதால் ஸர்வ கார்ய சித்தி ஏற்படும். எல்லாவிதமான இடையூறுகளும் விலகி, காரிய சித்தி, தனலாபம், புத்ர லாபம் முதலியவைகள் ஏற்படும். குடும்பம் சுபிட்சமாக விளங்கும்.

ஸ்ரீ கணேஸாய நம: நாரத உவாச
ப்ரணம்ய ஸிரஸா தேவம் கௌரீ புத்ரம் விநாயகம்
பக்தா வாஸம் ஸ்மரேந் நித்யாமயு: காமாத்த ஸித்தயே
ப்ரதமம் வக்ர துண்டம் ச ஏகதந்தம் த்விதீயகம்
த்ருதீயம் க்ருஷ்ண பிங்காக்ஷம் கஜவக்த்ரம் சதுர்த்தகம்
ஸம்போ தரம் பஞ்சமம் ச ஷஷ்டம் விகடமே வச
ஸப்தமம் விக்னராஜம் ச தூம்ரவர்ணம் ததாஷ்டகம்
நவமம் பால சந்த்ரம் ச தஸமம் து விநாயகம்
ஏகாதஸம் கணபதிம் த்வாதஸம் து கஜானனம்
த்வாதஸைதானி நாமானித்ரி ஸந்த்யம்ய: படேந்நர:
நச விக்னபயம் தஸ்ய ஸர்வஸித்திகரம் ப்ரபோ:
வித்யார்த்தீ லபதே வித்யாம் தனார்த்தி லபதே தனம்
புத்ராத்தீ லபதே புத்ரான் மோக்ஷõர்த்தீ லபதே கதிம்
ஜபேத் கணபதி ஸ்தோத்ரம் ஷட்பிர்மாஸை: பலம்லபேத்
ஸம்வத்ஸரேண ஸித்திம் ச லபதே நாத்ர ஸம்ஸய:
அஷ்டப்யோ ப்ராஹ்மணேப்யஸ்ச லிகித்வாய: ஸமர்ப்யேத்
தஸ்ய வித்யா பவேத் ஸர்வா கணேஸஸ்ய ப்ரஸாதத:
ஸம்பூர்ணம்!


வறுமை நீங்கி வளமுடன் வாழ மகா கணேசாஷ்டகம்!

நிம்மதியான வாழ்வு பெற கீழ்க்கண்ட ஸ்லோகங்களை, நாள்தோறும் விநாயகருக்கு முறைப்படி பூஜைகள் செய்து பாராயணம் செய்து வந்தால் நற்பலன்கள் கிட்டும். விநாயகரை வழிபடும் போது மோதகம், அவல்பொரி, அப்பம், அதிரசம், விளாம்பழம் போன்றவற்றை நிவேதனமாக வைத்து அருகம்புல்லைக் கொண்டு அர்ச்சனை செய்து இச்சுலோகங்களைப் பாராயணம் செய்தால் விசேஷ பலன்கள் கிடைக்கும்.

1. ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம்
லம்போதரம் விசாலாக்ஷம் வந்தே அஹம் கண நாயகம்
2. மௌஞ்சி கிருஷ்ணாஜினதரம் நாகயக்ஞோப வீதினம்
பாலேந்து விலஸன் மௌலிம்வந்தே அஹம் கணநாயகம்
3. அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபி: பரிபாலிதம்
பக்த ப்ரியம் மதோன்மத்தம்வந்தே அஹம்கணநாயகம்
4. சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூஷிதம்
சித்ரரூபதரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம்
5. கஜவக்த்ரம் ஸுர ச்ரேஷ்டம் கர்ணசாமர பூஷீதம்
பாசாங்குச தரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம்
6. மூஷிகோத்தம ஆருஹ்ய தேவாஸுர மஹாஹவே
யோத்துகாமம் மஹாவீர்யம் வந்தே அஹம் கணநாயகம்
7. யக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த வித்யாதரை: ஸதா
ஸ்தூயமானம் மஹபத்மானம்வந்தே அஹம்கணநாயகம்
8. ஸர்வவிக்ன ஹரம்தேவம் ஸர்வவிக்ந விவர்ஜிதம்
ஸர்வஸித்திப் ப்ரதாதாரம் வந்தே அஹம் கணநாயகம்
9. கணாஷ்டகம் இதம் புண்யம் பக்திதோ: ய: படேந்நர
விமுக்த ஸர்வ பாபேப்யோ ருத்ரோம் ஸகச்சதி.


ஏகாக்ஷர கணபதி: 
 " ஓம் கம் கணபதயே நம: "

மகாகணபதி :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்
கணபதயே வரவரத ஸர்வ ஜனம் மே
வசமானய ஸ்வாஹா!


மோகன கணபதி :
ஓம் வக்ரதுண்ட ஏக தம்ஷ்ட்ராய
க்லீம் ஹ்ரீம் கம் கணபதயே
வரவரத ஸர்வஜன மே வசமானய ஸ்வாஹா!


லக்ஷ்மி கணபதி :

ஓம் ஸ்ரீம் கம் ஸெளம்யாய கணபதயே
வரவரத ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா !

ஓம் கம் ஸ்ரீம் ஸெளம்யாய
லக்ஷ்மீ கணேச வரவரத
ஆம் ஹ்ரீம் க்ரோம்
ஸர்வஜனம் மே வஸமானய ஸ்வாஹா !

வக்ர துண்ட ஏகதம்ஷ்ட்ராய க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்
கம் கணபதயே வரவரத ஸர்வஜனம் மே
வஸமானய ஸ்வாஹா ஓம் க்லீம் ஸெள:


ருணஹர கணபதி : 
 " ஓம் கணேச ருணம் சிந்தி வரேண்யம் ஹும் நம: பட் "

மகாவித்யா கணபதி :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கலௌம் கம் கஏஈல ஹ்ரீம்
கணபதயே ஹஸகஹல ஹ்ரீம் வரவரத
ஸகலஹ்ரீம் ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா


ஹரித்ரா கணபதி :
ஓம் ஹும்கும்க் லௌம் ஹரித்ரா கணபதயே
வர வரத ஸர்வஜன ஹ்ருதயம் ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா


வக்ரதுண்ட கணபதி : " வக்ர துண்டாய ஹும் "


நிதி கணபதி :
ராயஸ்பேஷஸ்ய ததி தா நிதி தோ ரத்னதா துமான்:
ர÷க்ஷõஹணோ பலக ஹநோ வக்ரதுண்டாய ஹும் !!


புஷ்டி கணபதி :
" ஓம் கம் கைம் கணபதயே விக்னவிநாசினே ஸ்வாஹா "

பால கணபதி : 
 " ஓம் கம் கணபதயே நமஸ் ஸித் தி தாய ஸ்வாஹா "

சக்தி கணபதி : " ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹ்ரீம் "


ஸர்வ சக்தி கணபதி : 
 " ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் மஹாகணபதயே ஸ்வாஹா "

க்ஷிப்ர பிரஸாத கணபதி : 
 " ஓம் கம் க்ஷிப்ர ப்ரஸாதனாய நம: "

குக்ஷி கணபதி :
ஓம் ஹும் க்லௌம் டட ராஜ
ஸர்வஜன கதிமதி க்ரோத ஜிஹ்வா
ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா


சந்தான லக்ஷ்மி கணபதி : 
" ஓம் நமோ லக்ஷ்மி கணேசாய மஹ்யம் புத்ரம் ப்ரயச்ச ஸ்வாஹா "

சுவர்ண கணபதி :
ஓம் க்ஷ்ம்ரியூம் க்ஷிப்ர கணபதயே ஸுவர்ணகே ஹே
வ்யவஸ்திதாய ஸ்வர்ணப்ரதாய க்லீம் வஷட்ஸ்வாஹா

ஹேரம்ப கணபதி : " ஓம் கூம் நம: "

விஜய கணபதி :
ஓம் க்லௌம் ஸ்ரீம் ஸர்வவிக்ன ஹந்த்ரே
பக்தானுக்ரஹ கர்த்ரே விஜயகணபதயே ஸ்வாஹா


அர்க்க கணபதி :
ஓம் கம் கணபதி அர்க்க கணபதி வரவரத
ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா


உச்சிஷ்ட கணபதி :
ஓம் நமோ பகவதே ஏக தம்ஷ்ட்ராய ஹஸ்திமுகாய
லம்போதராய உச்சிஷ்ட மகாத்மனே
ஆம் க்ரோம் ஹ்ரீம் கம் கே கே ஸ்வாஹா


 விரிவிரி கணபதி : 

 " ஓம் ஹ்ரீம் விரிவிரி கணபதி ஸர்வம்மே வசமானய ஸ்வாஹா "

வீர கணபதி :
ஓம் ஹ்ரீம் க்லீம் வீரவர கணபதயே வ : வ :
இதம் விச்வம் மம வசமானய ஓம் ஹ்ரீம் பட்


ஸங்கடஹர கணபதி :
ஓம் நமோ ஹேரம்ப மத மோதி த மம ஸர்வஸங்கடம்
நிவாராய நிவாராய ஹும்பட் ஸ்வாஹா

விக்னராஜ கணபதி : 
 " ஓம் கீம் கூம் கணபதயே நம: ஸ்வாஹா "

ராஜ கணபதி

ஓம் நமோ ராஜகணபதே மஹாவீர தசபுஜ மதன கால
விநாசன ம்ருத்யும் ஹந ஹந, யம யம, மத மத
காலம் ஸம்ஹர ஸம்ஹர த்ரை லோக்யம் மோஹய மோஹய
ப்ரும்ம விஷ்ணுருத்ரான் மோஹய மோஹய, அசிந்த்ய
பல பராக்ரம ஸர்வ வ்யாதீன் விநாசய, விநாசய
ஸர்வக்ரஹான் சூர்ணய சூர்ணய, நாகான் மூட ய
மூட ய, த்ரிபுவனேச்வர ஸர்வதோ முக ஹும்பட் ஸ்வாஹா


துர்க்கா கணபதி :
ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் தும் துர்கா புத்ராய சக்தி ஹஸ்தாய
மாத்ரு வத்ஸலாய மஹா கணபதயே நம:


யோக கணபதி :
ஓம் ஹம் ஸம் கம் பகவதே நித்யயோக யுக்தாய
ஸச்சிதானந்த ரூபிணே விநாயகாய நம:


நிருத்த கணபதி :
ஓம் க்லௌம் ஜம் ஜம் ஜம் நம் நர்த்தனப்ரியாய
சிதம்பரானந்த தாண்டவாய கஜானனாய நம:


ஸித்தி கணபதி :
ஓம் நம: ஸித்திவிநாயகாய ஸர்வகார்ய கர்த்ரே
ஸர்வ விக்ன ப்ரசமனாய ஸர்வராஜ்ய
வச்யகரணாய, ஸர்வஜன ஸர்வ ஸ்த்ரீ புருஷ
ஆகர்ஷணாய ஸ்ரீம் ஓம் ஸ்வாஹா


புத்தி கணபதி : " ஓம் ஐம் வாக் கணபதயே ஸ்வாஹா "

மோதக கணபதி :
ஓம் மம் மஹாகணபதயே ஏகதந்தாய ஹேரம்பாய
மோதக ஹஸ்தாய நாளிகேர ப்ரியாய ஸர்வாபீஷ்ட
ப்ரதாயினே ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸர்வ ஜனம் மே
வசமானய ஸ்வாஹா


மோஹன கணபதி :
ஓம் ஆம் க்லீம் ஸர்வசக்தி கணாதீச மாம் ரக்ஷரக்ஷ
மம சான்னித்யம் குருகுரு, அஷ்டைச் வர்யாதி பூதி
ஸம்ருத்திம் குருகுரு, ஸர்வதுக்கம் நாசய நாசய
ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா ஆனய
மோஹனோத்தம விநாயகாய ஹும்பட் ஸ்வாஹா


குரு கணபதி :
ஓம் கம் கணபதயே ஸர்வ விக்ன ஹராய ஸர்வாய
ஸர்வ குரவே லம்போதராய ஹ்ரீம் கம் நம:


தூர்வா கணபதி : 

 " ஓம் ஹ்ரீம் கலாம் ஸ்ரீம் தும் துரித ஹராய தூர்வா கணேசாய ஹும்பட் "

அபீஷ்ட வரத கணபதி :
ஓம் ஸ்ரீம்ஸ்ரீம் கணாதி பதயே ஏகதந்தாய லம்போதராய
ஹேரம்பாய நாளிகேரப்ரியாய மோதக பக்ஷணாய மம
அபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நச்யது அனுகூலம் மே
வசமானய ஸ்வாஹா


ரத்ன கர்ப்ப கணபதி

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
ஓம் நமோ பகவதே ரத்னகர்ப கணபதயே
கஏ ஈலஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்லூம்
ப்லூம் ப்லூம் ப்லூம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஹஸகஹலஹ்ரீம் வரவரத ஸர்வஸித்திப்ரதாய
ஸகல ஹ்ரீம் ஸர்வைச் வர்யப்ரதாய
ஹஸகல ஹஸகஹல ஸர்வாபீஷ்ட ஸித்திம்
குருகுரு ரத்னம் தேஹிம் ரத்னம் தேஹிம்
தா பய தா பய தா பய ஸ்வாஹா ஸகல ஹ்ரீம்


வாஞ்சா கல்பலதா கணபதி (குமார சம்ஹிதை)

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஐம்
க ஏ ஈல ஹ்ரீம் தத்ஸவிதுர் வரேண்யம் கணபதயே
க்லீம் ஹஸகஹல ஹரீம் பர்கோ தேவஸ்ய தீமஹி
வர வரத ஸெள: ஸகல ஹ்ரீம் தீயோ யோ ந:
ப்ரசோதயாத் ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா


கணபதி உபநிஷத்

நமோ வ்ராதாபதயே நமோ கணபதயே நம: ப்ரமதபதயே
நமஸ்தே அஸ்து, லம்போதராய ஏகதந்தாய
விக்னவிநாசினே சிவஸுதாய ஸ்ரீவரத மூர்த்தயே நம:


கணேசர் மாலா மந்திரம்

ஓம் நமோ மஹாகணபதயே, மஹாவீராய, தசபுஜாய, மதனகால விநாசன, ம்ருத்யும் ஹநஹந, யமயம, மத மத, காலம் ஸம்ஹர ஸம்ஹர, ஸர்வக் ரஹான், சூர்ணய, சூர்ணய, நாகான் மூடய மூடய, ருத்ரரூப, த்ரிபுவனேச்வர ஸர்வதோமுக ஹும்பட் ஸ்வாஹா

ஓம் நமோ கணபதயே, ச்வேதார்க்க கணபதயே ச்வேதார்க்கமூல நிவாஸாய, வாஸுதேவப்ரியாய, தக்ஷப்ரஜாபதி ரக்ஷகாய, ஸுர்ய வரதாய, குமாரகுரவே, ப்ரஹ்மாதி ஸுராஸுர வந்திதாய ஸர்வபூஷணாய, சசாங்க சேகராய, ஸர்வ மால அலங்க்ருதாய, தர்மத்வஜாய, தர்ம வாஹனாய, த்ராஹி, த்ராஹி, தேஹிதேஹி, அவதர அவதர, கம்கணபதயே, வக்ரதுண்டகணபதயே, வரவரத ஸர்வபுருஷ வசங்கர, ஸர்வதுஷ்டம்ருக வசங்கர, ஸர்வஸ்வ வசங்கர, வசீகுரு, வசீகுரு, ஸர்வதோஷான் பந்தய பந்தய ஸர்வ வ்யாதீன் நிக்ருந்தய நிக்ருந்தய ஸர்வ விஷானி ஸம்ஹர ஸம்ஹர, ஸர்வதாரித்ரியம், மோசய மோசய, ஸர்வ விக்னான் சிந்தி சிந்தி, ஸர்வவஜ்ராணி ஸ்போடய ஸ்போடய ஸர்வ சத்ரூன் உச்சாடய உச்சாடய, ஸர்வஸித்திம் குரு குரு, ஸர்வ கார்யாணி ஸாதய ஸாதய, காம் கீம் கூம் கைம் கௌம் கம் கணபதயே ஹும்பட் ஸ்வாஹா

ஓம் நமோ பகவதே ஸ்ரீரீம் ஹ்ரீம் மஹா கணபதயே ஸ்ரீரீம் ஹ்ரீம் கம் கணபதயே கஜானனாய மஹாபுஜாய மஹா மஹேச்வர ஸுதாய மஹாபாசாங்குச தராய யக்ஷக்ரஹாந் ராக்ஷஸ க்ரஹாந் பூதக்ரஹாந் ப்ரேத க்ரஹாந் பிஸாச க்ரஹாந் அந்யாஸ்ச க்ரஹாந் தஹதஹ சேதய சேதய சிரஸ்ஸுல கடிஸ்ஸுல லிங்கசூல பக்ஷசூல ஸர்வசூலான் த்ராசய த்ராஸய ஸர்வோப தர வாந் நாசய நாசய ஸர்வ ஜ்வராந் நாசயநாசய ஹ்ராம்ஹ்ரீம் ஹ்ரூம் ஹும்பட் ஸ்வாஹா

ஓம் நமோ பகவதே ஸ்ரீ மஹா கணபதயே கஜானனாய மஹாரூபாய மஹா மூஷிக வாஹநாய மகாவிக்நராஜாய மகாலம்போதராய மகாபூதவசங் கராய மகாசர்வக்ரஹ நிவாரணாய ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சர்வஜ்வரான் சோதய ஸர்வாரிஷ்டப்ரமசன கஜானந நமோஸ்துதே

ஓம் ஜயஜய விஜயவிஜய அநந்தோபராஜித மகா பராக்ம ப்ரதிஹத விச்வரூப விரூபாக்ஷ விக்நேச்வர அஷ்டகுல நாகானாம் விஷம் சிந்தி சிந்தி பிந்தி பிந்தி சேதய சேதய ஆக்ஞாபய ஆக்ஞாபய ஆகர்ஷய ஆகர்ஷய ஸ்தம்பய ஸ்தம்பய மோஹய மோஹய பீஷய பீஷய நமோஸ்துதே

ஓம் ஜயஜய மஹாரூபாய மஹா பாசாங்குச தராய மஹாசக்திரூபாய மஹா மஹேச்வரசுதாய யக்ஷக்ரஹான் ராக்ஷஸக்ரஹான் பூதக்ரஹான் ப்ரேதக்ரஹான் கூஷ்மாண்டக்ரஹான் ஏதான் அந்யாஸ்சக்ரஹான் ஹநஹந தஹதஹ சேதய சேதய சிரஸ்ஸுல ஸர்வசூலான் த்ராஸய த்ராஸய மஹாஜ்வரான் கேதய கேதய பரந்த்ரான த்ராஸய த்ராஸய ஆத்மமந்த்ரான் ப்ரபோதய ப்ரபோதய மம ஸர்வ கார்யாணி ஸாதய ஸாதய ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹும்பட் ஸ்வாஹா

ஓம் நமோ பகவதே ஸ்ரீமஹா கணாதி பதயே ஸ்மரணமாத்ர ஸந்துஷ்டாய ஸர்வ வித்யாப்ரதா ய மஹாக்ஞானப்ரதாய சிதானந்தாத்மனே கௌரீ நந்தனாய மஹாயோகினே சிவப்ரியாய ஸர்வானந்த வர்தனாய ஸர்வ வித்யா ப்ரகாசாய ஸர்வகாமப்ரதாய ஓம் மோக்ஷப்ரதாய ஐம் வாக்ப் ரதாய ஸ்ரீம் மஹாஸம்பத்ப்ரதாய க்லீம் ஜகத்ரய வசீகரணாய ஹ்ரீம் ஸர்வ பூதிப்பரதாயே க்லௌம் பூமண்டலாதிபத்ய வ்ரதாய ஆம் ஸாத்ய பந்தனாய க்ரோம் ஸாத்யாகர்ஷணாய ஸெளம் ஸர்வ மன : ÷க்ஷõபனாய த்ராம் சிரஞ்ஜீவினே ப்லூம் ஸம் மோஹநாய வெளஷட் மம வசீகரணம் குரு ருரு மம வசீகுரு வசீகுருவெளஷட் ஆகர்ஷய ஆகர்ஷய ஹும் வித்வேஷய வித்வேஷய ப்ரோம் உச்சாடய உச்சாடய மம ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா போஷய போஷய நம : ஸம்பன்னய ஸம்பன்னய கேம் கேம் மாரய மாரய பரமந்த்ர பரதந்த்ர பரயந்த்ரான் சிந்தி சிந்தி கம் க்ரஹான் நிவாரய நிவாரய ஹம் வ்யாதீன் நாசய நாசய தஹத ஹ து:கம் ஹநஹந ஸ்வர்க பல மோக்ஷபல ஸ்வரூபாய ஸ்ரீ மஹாகணபத யே ஸ்வாஹா.


ச்வேதார்க் கணபதி மாலாமந்த்ர :

ஓம் நமோ பகவதே ச்வேதார்க் கணபதயே
ச்வேதார்க மூலநிவாஸாய வாஸுதேவ ப்ரியாய
தக்ஷப்ரஜாபதி ரக்ஷகாய ஸூர்யவரதாய குமார
குரவே ப்ருமமாதி ஸுராஸுவந்திதாய ஸர்வ பூஷணாய
சசாங்கசேகராய ஸர்ப மாலாங்கிருததேஹாய
தர்மத்வஜாய தர்மவாஹானய த்ராஹி த்ராஹி
தேஹி தேஹி அவதர அவதர கம் கணபதயே
வக்ரதுண்ட கணபதயே வர வரத ஸர்வ புருஷ
வசங்கர ஸர்வதுஷ்ட க்ரஹ வசங்கர ஸர்வ
துஷ்ட ம்ருகவசங்கர ஸர்வஸ்வ வசங்கர வசீகுரு
வசீகுரு ஸர்வதோஷான் பந்தய பந்தய ஸர்வ
வ்யாதீன் நிக்ருந்தய நிக்ருந்தாய ஸர்வ விஷாணி
ஸம்ஹர ஸம்ஹர ஸர்வதாரித்ர்யம் மோசய மோசய
ஸர்வவிக்னான் சிந்தி சிந்தி ஸர்வ வஜ்ரான் ஸ்போடய
ஸ்போடய ஸர்வ சத்ருன் உச்சாடய உச்சாடய
ஸர்வ ஸம்ருத்திம் குரு குரு ஸர்வகார்யாணி ஸாதய
ஸாதய ஓம் காம் கீம் கூம் கைம் கௌம் கம்
கணபதயே ஹும் பட் ஸ்வாஹா


போக கணபதி

அஸ்யஸ்ரீ போக கணபதிமஹா மந்த்ரஸ்ய

கணக ரிஷ: காயத்ரீ சந்த: போக கணேசோ தேவதோ

கராங்கந்யாஸ:

ஓம் ஹ்ரீம் கம் வசமானாய ஸ்வாஹா இதி கராங்கந்யாஸ :
ஸ்வாஹா

 ஓம் ஹ்ரீம் கம் வசமானய ஸ்வாஹா

தியானம்

பந்தூகாபம் த்ரிணேத்ரம் சசிதர மகுடம் போகலோலம் கணேசம் நாகாஸ்யம் தாரயந்தம் குணஸ்ருணி வரதாநிக்ஷúதண்டம் கராக்ரை: கண்டாஸம் ஸ்ப்ருஷ்ட யோஷா மதன க்ரஹ்மமும் ச்யாமலாங்க்யாதயாபி

ச்லிஷ்டம் லிங்க ஸ்ப்ருசாதம் வித்ருத கமலயா பாவயேத் தேவ வந்த்யம்:

லமித்யாதி பூஜா மந்த்ரா :

ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் வசமானயஸ்வாஹா
ஹ்ருதயாதி ந்யாஸ : திக்விமோக :
தியானம் லமித்யாதி பூஜா
ஸமர்பணம்


கணேசாங்க நிவாஸிநீ ஸித்த லக்ஷ்மீ மந்த்ர :

அஸ்யஸ்ரீ ஸித்த லக்ஷ்மீ மஹாமந்த்ரஸ்ய கணகரிஷி : நிச்ருத் காயத்ரீ சந்:

ஸ்ரீ கணேசாங்க நிவாஸிநீ மஹா லக்ஷ்மீர் தேவதா
ஸ்ரீம் பீஜம் ஹ்ரீம் சக்தி: ஸ்வாஹா கீலகம்
ஸ்ரீ ஸித்த லக்ஷ்மீ ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே விநியோக:

கராங்கந்யாஸ:

ஓம் ச்ராம்
ச்ரீம் ச்ரீம்
ஹ்ரீம் ச்ரூம் இதி கராங்கந்யாஸ :
க்லீம் ச்ரைம்
க்லௌம் ச்ரௌம்
கம் ச்ர:

தியானம்

முக்நாபாம் திவ்ய வஸ்த்ராம் ம்ருகமத திலகாம் புல்ல கல்ஹார மாலாம் கேயூரைர்மேகலாத்யை: நவமணி கசிதை : பூசணைர் பாஸமானாம்

கர்பூராமோத வக்த்ராம் அபரிமித க்ருபா பூர்ண நேத்ரார விந்தாம்
ஸ்ரீ லக்ஷ்மீம் பத்மஹஸ்தாம் ஜிதபதி ஹ்ருதயாம் விச்வ பூத்யை நமாமி!

லமித்யாதி பூஜா மந்த்ர:

ஓம் ச்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஓம் நமோ பகவதி மஹாலக்ஷ்மி வர வரதே ஸ்ரீம் விபூதயே ஸ்வாஹா ஹருதயாதிந்யாஸ: திக்யிமோக: தியானம் லமித்யாதி பூஜா
ஸமர்ப்பணம்.


குமார கணபதி (மாலா மந்த்ர:)

ஓம் நமோ பகவதே சூரமத்மாநாச காரணாய ஸர்வசக்தி தராய ஸர்ய யக்ஞோபதவீதனாய மஹா ப்ரசண்ட க்ரோதாய ப்ருஹத் குக்ஷிதராய அஸுர கோடி ஸம்ஹார காரணாய அகண்ட மண்டல தேவாத்யர்ச்சித பாத பத்மாய சாகினீ ராகினீ லாகினீ ஹுகினீ டாகினீ ஸாகினீ கூச்மாண்ட பூத வேதாள பைசாச ப்ரும்மராக்ஷஸ துஷ்டக்ரஹான் நாசய நாசய பாரத லிகித லேகினீகராய அபஸ்மார க்ரஹம் நிவாரய நிவாரய மர்தய மர்தய குஹாக்ரஜாய கஜவதனாய கஜாஸுரஸம்ஹரணாய கர்ஜித பூத்காராய ஸகல பூதப்ரேத பிசாச பிரும்ராக்ஷஸான் சூலேன ஆக்ருந்தய ஆக்ருந்தய சேதய சேதய மாரய மாரய மஹா கணபதயே உமா குமாராய ஹும் பட் பந்த பந்த டம் க்லாம் க்லௌம் கம் கணபதயே நம:


ப்ரயோக கணபதி (மாலா மந்த்ர)

ஆம் த்ரீம் க்ரௌம் கம் ஓம் நமோ பகவதே மஹா கணபதயே ஸ்மணரமாத்ர ஸந்துஷ்டாய ஸர்வ வித்யா ப்ரகாசகாய ஸர்வ காம ப்ரதாய பவ பந்த விமோசனாய ஹ்ரீம் ஸர்வபூதபந்தனாய க்ரோம் ஸாத்யாகர்ஷணாய க்லீம் ஜகத்ராய வசீகரணாய ஸெள: ஸர்வமன÷க்ஷõலபணாய ஸ்ரீம் மஹாஸம்பத் ப்ரதாய க்லௌம் பூமண்டலாதிபத்ய ப்ரதாய மஹாயக்ஞாத்மனே கௌரீந்தனாய மஷா யோகினே சிவப்ரியாய ஸர்வாநந்த வர்த்தனாய ஸர்வவித்யா ப்ரகாசனப்ரதாய த்ராம் சிரஞ்ஜீவினே ப்லூம் ஸம் மோஹனாய ஓம் மோக்ஷ ப்ரதாய பட் வசீகுரு வசீகுரு வெளஷட் ஆகர்ஷணாய ஹும் வித்வேஷணாய வித்வேஷய பட் உச்சாடய உச்சாடய ட: ட: ஸ்தம்பய ஸ்தம்பய கேம் கேம் மாரய மாரய சோஷய சோஷய பர மந்த்ர யந்த்ர தந்த்ராணிசேதய சேதய துஷ்டக்ரஹான் நிவாரய நிவாரய துக்கம்ஹர ஹர வ்யாதிம் நாசய நாசய நம: ஸம்பன்னாய ஸம்பன்னாய ஸ்வாஹா ஸர்வபல்லவஸ்ரூபாய மஹாவித்யாய கம் கணபதயே ஸ்வாஹா :


தருண கணபதி

பாசாங்குசாபூப கபித்த ஜம்பூ
ஸ்வதந்தசாலீ க்ஷúமபி ஸ்வஹஸ்தை:
தத்தே ஸதா யஸ்தருணாருணாப:
பாயாத் ஸ யுஷ்மான் தருணோ கணேச:

மந்த்ர : ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் கம் நமோ பகவதே நித்ய யௌவனாய புவதிஜன ஸமாச்லிஷ்டாய கணபதயே நம:


ஆபத்ஸஹாய கணபதி

ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸுக ஸம்பதாம்
க்ஷிப்ர ப்ரஸாதனம் தேவம் பூயோ பூயோ நமாம்யஹம்:


நவநீத கணபதி : " ஐம் ஹ்ரீம் ச்ரீம் ஓம் க்லௌம் நவநீத கணபதயே நம: "

மேதா கணபதி : " மேதோல்காய ஸ்வாஹா: "

வாமன கணபதி ; " ஓம் வம் யம் ஸெளபாக்யம் குரு குரு ஸ்வாஹா: "


சிவாவதார கணபதி
ஓம் ஸ்ரீம் த்ரீம் க்லீம் க்லௌம் கம் ஓம் நமோ கணபதயே ஓம் சிம் வர வரத ஓம் வாம் ஸர்வ ஜனம் மே ஓம் யம் வசமானய ஸ்வாஹா:


ரக்த கணபதி
ஓம் ஹஸ்தி முகாய லம்போதராய ரக்த மஹாத்மனே ஆம் க்ரோம் ஹ்ரீம் ஹும் ஹும் ஹும் கே கே ரக்த களேபராய தயாபராய ஸ்வாஹா :


ப்ரம்மணஸ்பதி

ஹ்ரீம் ச்ரீம் க்லீம் நமோ கணேச்வராய ப்ரும்ம ரூபாய சாரவே
ஸர்வஸித்தி ப்ரதேயாய ப்ரம்மணஸ்பதயே நம:

நமோ கணபதயே துப்யம் ஹேரம்பாயைக தந்தினே ஸ்வானந்த
வாஸினே துப்யம் ப்ரம்மணஸ்பதயே நம:


த்வநி மந்திரம்

ஓம் ஸ்ரீம் விக்நேச்வர ஆஹுவாஹனாய சிவசிவ லம்போதராய வக்ரதுண்டாய ஸுர்ப்ப கர்ணாய ஸித்தி விநாயகாய ஸ்ரீம் மஹா கணபதயே க்லீம் ஸ்ரீம் ஸெளம் ஐம் ஹ்ராம் ஹ்ரீம்


சதாசிவ கணபதி

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கலௌம் ஈம் நம் ஆம் ஹம் ஸம்பன்னுவஸ்ச ஸதாசிவ கணபதயே வரவரத ஸர்வ ஜகம் மே வசமானய ஸகலைச் வர்யம் ப்ரயச்ச ஸ்வாஹா



முழுமுதற்க் கடவுளான ஸ்ரீ விநாயகர் அனைவருக்கும் மங்களத்தைத் தந்தருள்க.

கர்வா சௌத் பண்டிகை!




கார்த்திகை மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தி மிகவும் மங்களகரமானது.

தசரா முடிவுற்று பத்து நாட்கள் கடந்தும் தீபாவளிக்குப் பத்து நாட்களுக்கு முன்பும் கொண்டாடப்படுவது இப்பண்டிகையே. கர்வா என்பது நீர் நிரம்பிய சிறு மண்பான்மையைக் குறிக்கும். சௌத் என்பது கார்த்திகை மாத கிருஷ்ணபட்சத்தின் நான்காவது தினத்தைக் குறிக்கும்.



தாலி பாக்கியம் நிலைக்கவும் கணவனின் நல்வாழ்வுக்காகவும் தாங்கள் அவன் மேல் வைத்துள்ள அன்பு ஈடுபாட்டுக்கு எடுத்துக்காட்டாகவும் பெண்கள் அனுசரிக்கும் இவ்விரதம் உத்திரபிரதேஷ்  பஞ்சாப் ராஜஸ்தான் குஜராத் உள்ளிட்ட மானிலங்களில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஒரு விதத்தில் நம் காரடையான்  நோம்பு காமாட்சி பூஜை மாதிரிதான்.



முதல் நாள் இரவு கணவனை முன்னிருத்தி உதய சந்திரனை தரிசித்துவிட்டு விரதமேற்பார்கள். விரதமேற்குமுன் மருமகள் சாப்பிடுவதற்கு மாமியார் பிரத்யேகமாகச் சிற்றுண்டி தயாரிப்பார். பூந்தி லட்டு பாயசம் பிறைச்சந்திரன் வடிவிலும் மத்தியில் துளையுடன் நிலவைப் பார்க்கும் விதத்திலும் என பல வடிவங்களில் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகள் உலர்ந்த பழங்கள் இதில் இடம்பெறும். புடவை  நகை போன்றவையும் தனியாக உண்டு. இதற்கு ‘செர்ஜி’ எனப் பெயர்.

சதுர்த்தி அன்று காலை சூரியன் உதிக்கும் முன்பே மாமியார் தயாரித்த உணவைச் சாப்பிட்டுவிட்டால் மறுபடியும் அன்றிரவு நிலவைப் பார்க்கும் வரை முழுப்பட்டினி தான். ஆனால் இதற்கும் ஒரு விதி விலக்கு உண்டு. கர்ப்பிணி பெண்கள் பட்டினியாக இருக்கக்கூடாது என்பதால் அவர்கள் தேனீர் சர்பத் போன்றவற்றை அருந்தலாம்.

images (6)

திருமணத்துக்குப் பின் வரும் முதல் விரதம் என்றால் பெண் வீட்டிலிருந்து மாமியாருக்கு சம்பந்தி மரியாதையாக உப்பு இனிப்பு பணியாரங்கள் உலர்ந்த பழ வகைகள் துணிமணிகள் என வந்து சேரும். கூடவே பெண்ணுக்கு மங்கலப் பொருட்களுடன் புடவை நகைகல் முளைப்பாரி  15 மண் கெண்டிகள் சல்லடை முதலியன முறைப்படி வந்துவிடும். வசதியுள்ளோர் ஆண்டு தோறும் கூட அளிப்பது தொடரும். இதற்கு பாயா எனப் பெயர்.

images (1)

பகல் பொழுதில் வினாயகர் சிவ பார்வதி கார்த்திக் ஆராதனையும் தேவி மகாத்மியம் உபன்யாசமும் நடைபெறும். கௌரி மாதாவின் பீடத்தின் முன்பு வாயகன்ற மூடியுடன் கூடிய பெரிய மண்பானையில் மாவிலைக் கொத்தைச் செருகி அதனுள் வீட்டிலேயே தயாரித்த அவல் போட்டு நீர் நிரப்பி வைப்பார்கள். அதன்மேல் இருக்கும் தட்டில் பூஜை சாமான்கள் பரிசுப் பொருட்கள் மற்றும் மங்கல திரவியங்களை வைத்து இந்தக் கர்வாவையே வினாயகராகப் பாவித்து ஆராதிப்பார்கள்.

அன்று விரதம் மேற்கொள்ளும் பெண்கள்  உடுத்தும் புடவைக்கும் கட்டுப்பாடு உண்டு. செயற்கைப்பட்டு கூடாது. கருப்பு  நீல நிறம் ஆகாது. இளஞ்சிவப்பு சிவப்பு அல்லது பச்சை நிற நூல் சேலையே அனுமதிக்கப்படும். அந்தி வேளையில் பெண்கள் கை கால்களில் மெஹந்தி இட்டவாறு சர்வாலங்கார பூஷிதையாக விளங்குவார்கள்.

images (3)

அன்றைய தினம் கணவன்மார்களுக்கும் சில கட்டுப்பாடுகள் உண்டு. ஊசியில் நூல் கோக்கக் கூடாது. துணி தைக்கக் கூடாது. கூரிய ஆய்தங்களையும் தீங்கு விளைவிக்கு உபகரணங்களையும் கையாளக் கூடாது. எந்த வித ஆபத்தும் அவர்களை அண்டக்கூடாது என்பதே இதன் நோக்கம்.

மாலையில்  சந்திரன் உதயமவதற்கு ஒரு மணி நேரம் முன்பு திறந்தவெளி முற்றத்தில் பெண்கள் பிரம்புத் தட்டில் வைத்து பூஜிக்கப்பட்ட சாமான்களுடன் வட்டமாக நின்றுகொள்வர். ஒருவர் தட்டை மற்றவரிடம் ‘ சுகாசினி தேவி உன் கர்வா தட்டை என்னிடம் கொடு. என்னுடையதை வாங்கிக்கொள். விரதத்துக்கு உறுதுணையாக நம் கணவர்கள் இருக்கிறார்கள். கௌரி மாதா தீர்க்க சுமங்கலியாய் இருக்க வரம் அருள்வாய்” என்று பாடியவாறு அவர்களது தட்டு அவர்களிடம் வரும் வரை ஆறு முறை வட்டமிடுவர்.

வீரு குடியே கர்வாடா என்ற இப்பாடல் மிக இனிமையானது. ஏழாவது சுற்றில் பாடலைச் சற்று மாற்றி இத்துடன் கட்டுப்பாடுகள் அகலுகின்றன விரதத்தை முடித்து வைக்க கணவர்கள் வரட்டும் என்று பாடப்பட்டு தட்டுக்களைப் பரிமாறிக்கொள்வர். பிறகு உதயமாகும் நிலவைக் காண கூடுவர்.
கணவர்களும் அங்கு வந்துவிடுவர்.
நிலவு எழுந்தவுடன் நீர் நிறைந்த தட்டில் விழும் சந்திர பிம்பத்தையோ துப்பட்டா முந்தானை அல்லது சல்லடை வழியாகவோ நிலவை தரிசிப்பார்கள். பின்ன்ர் வேறு யாரையும் பார்க்காமல் கண்களை மூடியபடியே வந்து தங்கள்  முன் நிற்கும் கணவன் முகத்தில் விழிப்பார்கள். அப்படி செய்தால் நீண்ட சௌபாக்கியவதியாகத் திகழலாம் என்பது நம்பிக்கை.

பிறகு இடது கையில்  அகல் விளக்கு ஏந்தி வலக் கையால் சந்திரனை நோக்கி ஐந்து முறை அர்க்யம் தந்து தலைதாழ்த்தி வணங்கி இருந்த இடத்திலேயே பிரதட்ணம் செய்து ஆராதிப்பர். கணவன் தரும் துளசி தீர்த்தத்தை அருந்தி அவன் கையினால் பிரசாதம் உண்டு விரதத்தை முடிப்பர்.

இதற்கு பிண்ணனியாக ஒரு முக்கிய கதை உண்டு. கர்வா என்ற பெண்ணும் அவளது கணவனும் ஆதர்ச தம்பதிகள். கர்வா பதிவிரதா தர்மத்தை வழுவாது கடைபிடித்து வந்தாள் ஒரு நால் நதியில் நீராடும்போது கணவனை முதலி ஒன்று கவ்விக்கொண்டது. அதனிடமிருந்து மீள முடியாமல் அவன் உயிரழந்தான். அதைப் பொறுக்கமுடியாமல் துணியைக் கொண்டு முதலையை மரத்தில் கட்டினாள். அபராதி முதலையை தண்டித்து கணவனை உயிர்ப்பிக்கும்படி கடின விரதமிருந்து யமனை வேண்டினாள். அவன் முதலில் மறுத்தான்  ஒரு பதிவிரதையின் சாபத்துக்கு பயந்து முதலையைக் கொன்று அவள் கணவனை உயிர்த்தெழ வைத்தது இந்தச் சங்கட சதுர்த்தி நாளில்தான். அன்றிலிருந்து அவர்கள் வாழ்க்கை எந்தவிதத் தடங்கலுமின்றி சென்றதாம். அதனால் இவ்விரதத்துக்கு அவளது பெயரே நிலைத்துவிட்டது.

ஆணோ, பெண்ணோ ஒருவரிடம் இருக்கவேண்டிய எட்டு செல்வங்கள் அஷ்டதனம் எனப்படும். அவை:

1. ரூபம் அல்லது அழகு
2. சம்பத்து (சொத்து முதலானவை)
3. வித்தை (பெற்றுள்ள திறமைகள்)
 4. விவேகம் (அறிவுத்திறனும் பண்பும்)
5. குணம் (நற்குணம்)
6. தனம் (பொன், பொருள்)
7. குலம்
8. வயது (ஆயுள்).

அன்னப்பாவாடை மகோற்சவம்!


  அன்னப்பாவாடை என்பது அன்னத்தால் படையல் செய்வது.
 
இதில் சாதம், சர்க்கரைபொங்கல், புளியோதரை, தயிர்சாதம், வடை, பாயசம், பருப்பு, பழவகைகள், இளநீர் ஆகியவற்றை படையல் செய்வது ஆகும்.

இதில் சர்க்கரை பொங்கலின் மீது குளம் மாதிரி செய்து அதில் நல்ல சுத்தமான நெய்யை காய்ச்சி ஊற்றி நெய்க்குளம் செய்வார்கள். இதில் அம்மனது திருவுருவம் காட்சியளிக்கும்.

இந்த அன்னப்பாவாடை அல்லது திருப்பாவாடை என்னும் மகா நைவேத்தியத்தில் அம்மனை தரிசிப்பது லலிதா சகஸ்ர நாம பாராயணம் செய்த பலனை தரும்.
 
அன்னம் சுத்தமானால் எண்ணம் சுத்தமாகும் என்பது பழமொழி. 
 
 
 அரிசி என்பதில் அரியும் சிவனும் இருப்பதாக கூறுவார்கள். அரிசியின் வடிவமும் லிங்க ஸ்வரூபம் தான். மற்றொருவகையில் சாளக்கிரம வடிவமாகவும் நோக்கினால் விஷ்ணு அரிசியில் உறைகிறார். அரிசியை இறைக்கக் கூடாது என்பார்கள்.
 
அன்னம் பரப்ரம்ம சொரூபம் என்பார்கள்.



ஐப்பசி பவுர்ணமியில் ஈசனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது.
 
உலகத்து உயிர்கள் அனைத்திற்கும்  அன்னம் என்பது உணவு. இந்த உணவை தரும் அன்னபூரணி வடிவினள் அன்னை. அத்தகைய அன்னைக்கு நன்றிக்கடனாக அன்னப்பாவாடை என்னும் படையல் செய்து வழிபடுவது நம் மரபு.
 
ஜீவராசிகளுக்கு படியளக்கும் பரப்பிரம்ம சொரூபிணியான அன்னைக்கு ஆண்டில் ஒரு நாள் இப்படி அன்னப்பாவாடை என்னும் படையல் வழிபாடு செய்து போற்றுதல் தொன்று தொட்டுவரும் செயலாக அமைந்துள்ளது.


இந்த அருமையான படையல் நிவேதனம் தென்னகத்தில் பேரளம் அருகே உள்ள திருமீயச்சூர் லலிதாம்பிகை சன்னதியில் மட்டும் ஆண்டு தோறும் சித்திரை பூர்ணிமா  அன்று நடப்பது வழக்கம்.
 
அன்னப்பாவாடை என்னும் இந்த நைவேத்தியத்தில் 50 கிலோ சர்க்கரை பொங்கல், 50 கிலோ புளியோதரை மற்றும் 50 கிலோ தயிர்சாதம் படைக்கப்படும் மற்றும் பஞ்ச பட்சணங்களான அதிரசம், முறுக்கு, லட்டு, வடை, பாயாசம் போன்றவையுடன் இளநீர், பழங்கள் படைக்கப்படும்.

 சர்க்கரை பொங்கலில் நெய் ஊற்றி நெய்க்குளம் உருவாக்கி அதில் அம்பாளின் பிம்பத்தை விழ வைத்து தரிசனம் செய்து வைக்கப்படும். இந்த காட்சியை காண பல்லாயிரக் கணக்கான மக்கள் காத்திருந்து கண்டு களித்து மீண்டும் மீண்டும் தரிசித்து இன்புறுவர்.

பக்தர்கள் தரிசனத்திற்கு பின் அந்த படையல் கலைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
 
இந்த சிறப்பான நிகழ்ச்சியில் பங்கு கொண்டு அம்மனின் அருள் பெறுவோமாக!

அமர்நாத் பனி லிங்கம்!




















 

தஞ்சாவூர் சொர்ண காமாட்சி!


தஞ்சாவூர்  - பங்காரு காமாட்சி

சொர்ண மயமான தங்க காமாட்சியை பிரம்மா செய்தார். ஆனந்த அழுகையோடு தொழுதார்.
  சலிப்பூட்டாத அவளின் வழிபாட்டை தொடர்ந்தவர் பங்குனி மாதம் காஞ்சி ஏகாம்பரத்தில் தவமிருக்கும் ஏகாம்பரேஸ்வரருக்கு சாஸ்திர பூர்வமாக விவாகம் செய்வித்தார். திருக்கல்யாணம் முடிந்தவுடன் சுவர்ண காமாட்சியை த்ருவம் எனும் அசையா மூர்த்தமாக பிரதிஷ்டை செய்தார். அபிஷேக ஆராதனைகள் முரிந்தவுடன் ஒரு தாமரை மலரை ஆகாசத்தில் வீசி எறிந்தார். வானம் தொட்ட தாமரையினின்று ஆகாச பூபதி என்றொருவன் வெளிப்பட்டான். ஆண்டுதோறும் அன்னையின் திருக்கல்யாணத்தை நிகழ்த்து என அன்பாணையிட்டார். மெல்ல நகர்ந்து சத்திய லோகம் ஏகினார். சொர்ணகாமாட்சி வரலாற்றுப் பேரேடுகளில் சில பக்கங்களை எல்லோரையும் புரட்டும்படி செய்யும் காலம் நெருங்கியது. பதினெட்டாம் நூற்றாண்டின் உச்சிக் காலம்.

அந்நியதேசப் படையெடுப்பாலும்,
  வேற்று மதத்தினராலும் வட இந்தியாவும், தென் இந்தியாவும் ரணகளப்பட்டுக் கொண்டிருந்தது. திருக்கோயில்களின் விக்ரஹத்தில் ஏதுமில்லை அதை தூக்கியெறியுங்கள். உங்களின் வேத நூல்களை தீயிலிட்டு பொசுக்குங்கள் என இந்து மதத்தின்மீது கோரத் தாண்டவமாடினர், அந்நிய நாட்டினர். கோயிலுக்குச் சொந்தமான தங்க விக்ரஹங்களையும், வைர கிரீடங்களையும் கொள்ளை யடித்தனர். மக்கள் துடிதுடித்துப்போயினர். காஞ்சிக் கோயிலுக்கும் அந்தகதி வந்து விடுமோ என்று அஞ்சினர். மஞ்சள் ரூபிணியான சொர்ண காமாட்சியை விஜயநகர மன்னர்கள் தெலுங்கில் பங்காரு காமாட்சி என்று அழைத்தனர். அவளும் அவர்களுக்கருகே செல்லலாம் திருவுள்ளம் பூண்டாள். ஆதிகாமாட்சியும் ஆஹா... என்றாள். சோழதேசத்தின் நெல் வயல்கள் தங்கமுலாம் பூசியதுபோன்று செழித்துக் கிடந்தது. தங்க பங்காரு காமாட்சியும் அங்கேயே சென்று தங்கலாம் என்று உறுதி பூண்டாள்.

 தஞ்சை மராட்டிய மன்னனான ஏகோஜியின் ஆட்சியில் இருந்தது. 1737ம் ஆண்டு வாரிசு இல்லாது ஏகோஜி உயிர் நீத்தான். 1739ம் வருடம் பிரதாப சிம்மன் அரியணை ஏறினான். அப்போதைய காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் (கி.பி. 1746 - 1783) மகிழ்ச்சியுற்றார். பிரம்மனால் பிரதிஷ்டை செய்ததாயிற்றே என கண்கலங்கினார். நிலவறையில் சொக்கத் தங்க காமாட்சியை பத்திரமாக பாதுகாத்தனர். ஒரு குழு பீடாதிபதியுடன் கோயில் ஸ்தானிகர்கள் சொர்ண காமாட்சியை கையில் பத்திரமாக சுற்றி எடுத்துக்கொண்டு கண்களில் நீர் கொப்புளிக்க காஞ்சியைவிட்டு வெளியேறினர். சில ஆண்டுகள் செஞ்சியிலும், உடையார்பாளையம் ஜமீன்தாரர்களின் பேரன்பும், ஆதரவாலும் சுவர்ண காமாட்சியோடு ஸ்தானிகர்கள் நிம்மதியோடு பூஜித்தனர். தஞ்சை மன்னரின் நெருங்கிய நண்பரும் அனக்கடி மிராசுதாரரும் சங்கராச்சாரியாரை வரவேற்று சில காலம் தங்க வைத்தார்.

பிரதாபசிம்மன் சுவர்ண காமாட்சி வருகிறாள் என்றவுடன் அகமகிழ்ந்தான். ஓரிடத்தில் பிரம்மன் நிறுத்திய த்ருவம் எனும் சொர்ண காமாட்சி இப்போது எல்லா துருவங்களுக்கும் பயணித்து அருளை இரைத்துக் கொண்டே நாகூர், சிக்கல், திருவாரூர் விஜயபுரம் வழியாக தஞ்சையில் தன் பூப்பாதம் பதித்தாள். தஞ்சை பெருவுடையார் அருவமாக பரவசப்பட்டார். ஆதிமாதாவானவள் இவ்வளவு அருகிலா என்று பிரதாபசிம்மன் நெக்குருகினான். ஓடிச்சென்று ‘‘நா பங்காரு.... நா பங்காரு...’’ என்று தெலுங்கில் ஆனந்தக்கண்ணீர் பொங்கி கதறித் தீர்த்தான். அவளும் மென்மையாக சிரித்தாள். காஞ்சியில் எல்லோரும் கவலை மறந்தனர். தஞ்சை விழாக்கோலம் பூண்டது. கி.பி. 1746 முதல் 1887ம் ஆண்டு வரை எல்லா மன்னர்களாலும் கோயில் கட்டி முடிக்கப்பட்டது.

கருவறை, விமானம், திருமதில், மண்டபம், கோபுரம் எல்லாமுமே வெவ்வேறு காலங்களில் பல்வேறு மன்னர்களால் கட்டி முடிக்கப்பட்டது. புராண காலத்தில் உதித்த பங்காரு காமாட்சி இன்று தஞ்சைவரை யாத்திரை செய்து நிலைபெற்றதென்பது அவளுடைய சங்கல்பம் தானே வேறு எதுவுமன்று. அந்த மகானின் திருநாமம் சியாமா சாஸ்திரிகள் என்பதாகும். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான அவரின் இயற்பெயர் வேங்கடசுப்ரமணியம். சியாமா சாஸ்திரிகள் சொர்ண காமாட்சி
  சிலகாலம் திருவாரூரில் இருக்கும்போதே மெய்மறந்து அவளின் திருவழகில் லயித்திருப்பார். இப்போது தஞ்சையில் குடியேறியபோது அம்மனின் அழகை வெகு அருகே நின்று ஆராதித்தார். கலையையும், ஞானத்தையும் அருள்வதில் இணையிலா நாயகியாக விளங்கும் காமாட்சி சியாமா சாஸ்திரிகளுக்கு அநாயாசமாக அள்ளித் தந்தாள். ஞானத்தை பதிலுக்கு ஏராளமான கீர்த்தனைகளை அவளின் திவ்ய பாதங்களில் சமர்பித்துப் பாடிக் களித்தார்.

அவர் பார்த்துக் களித்த பங்காரு காமாட்சியை நாமும் தரிசிப்போமா. கோயில் சிறிய ராஜகோபுரத்தோடு அழகுற அமைந்துள்ளது. கோயில் எளிமையாக இருந்தாலும், சிறியதாக இருந்தாலும் உள்ளிருக்கும் மூர்த்தினி புராணப் பெருமையுற்றவள். கோயிலின் வாயிலுக்கும், கருவறைக்கும் இடையே ஒரு மண்டபம் உள்ளது. துவார பாலகிகளின் அனுமதியோடு கருவறையை நெருங்கும்போது குங்குமத்தின் மணம் மண்டபத்தையே நிறைக்கிறது. விளக்குச் சுடரொளியில் பங்காரு காமாட்சி சுடர்விட்டுப் பிரகாசிக்கிறாள். ஸ்ரீபுரத்தில் அமர்ந்து ஆட்சி செய்யும் லலிதையே இப்படித்தான் இருப்பாள் என்பது போல அவளின் பிரகாசம் கருவறையை நிறைக்கிறது.

கிளியை தாங்கி நிற்கும் கைகளும், சற்றே இடுப்பை ஒடித்து நளினமாக காட்சி தரும் த்ரிபங்கதாரியின் ஒயிலும், அவள் ஏன் இங்கு வந்து அமர்ந்தாள் எனும் புரியாத வியப்பும் நம்மை பிரமிக்கச் செய்திருக்கின்றன. ஏதோ சற்றுநேரம் முன்னர்தான் பிரம்மனால் வடிக்கப்பட்டவள்போல பேரழகியாக காட்சி தருகிறாள். பிரார்த்தனைகூட செய்ய வேண்டாம். ஏனெனில் பசியறிந்து பிள்ளைக்கு உணவளிக்கும் தாயாயிற்றே இந்த தேவி. காஞ்சி மடமும்,
  இந்து அறநிலையத்துறையினரும் இணைந்து இக்கோயிலை நிர்வகிக்கின்றனர். பூஜைக்கான உரிமையை காஞ்சி முதல் தஞ்சை வரை பங்காரு காமாட்சியுடன் பயணித்து பிரதிஷ்டை செய்து உதவிய மூன்று கோத்திரக்காரகளான ஸ்தானிக பரம்பரையினர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

காஞ்சி மடத்தில் எந்த ஒரு விழாவானாலும் முதல் பிரசாதம் பங்காரு காமாட்சியிடமிருந்து பெற்றுக் கொள்வர். ஆறுகால வழிபாடுகள் நாள்தோறும் நடைபெறுகின்றன. சிவசக்தி ஐக்கியமாக இவள் இருப்பதால் இவளுக்கு பூணூல் உண்டு. காமாட்சியம்மனுக்கு ஆண்டுதோறும் பதினொன்று அபிஷேகங்கள் மட்டும்தான் நிகழ்த்தப்படுகின்றன. பங்காரு காமாட்சியம்மன் மூல ஸ்தானத்தை விட்டு வெளியில் வருவதில்லை. காமகோடி அம்மன் எனும் உற்சவ மூர்த்திக்கும் கனுப் பொங்கல் அன்று முழுத் தேங்காயை, உடைக்காமல் நிவேதனம் செய்யும் சம்பிரதாயம் இங்கு மட்டும்தான் உண்டு. பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாணம் நடைபெறும் நாளில் தஞ்சை அரச குடும்பத்தினர் அம்மனுக்கு திருமாங்கல்யம் அளிப்பர்.

வெற்றிகளை அருளும் விநாயகி!


கஜமுகம் கொண்ட இப்பெண் தேவதையை, விநாயகி என்ற பெயரை மாத்திரம் இலிங்க புராணம் (02-27-215) கூறுகிறது. 

ஸ்காந்த புராணம் இவளை கஜானனை என்று அழைக்கிறது. 

விஷ்ணு தர்மோத்ர புராணம் (1-226-6) மாத்ரு கணங்களில் கணேசினியும் ஒருவள் என்கிறது. 


அந்தகாசூரனின் குருதியைப் பருக, சிவனால் படைக்கப்பட்ட தேவதையே இவள் என்கிறது மத்ஸ்ய புராணம் (179-18). 

பெண் தெய்வ நாமாக்களை கூறும் வன துர்கோபநிஷத் எனும் கிரந்தத்தில் இவள் நாமம் கணேஸ்வரி என்று கூறப்பட்டுள்ளது.

கஜானனி, கஜானனை, கணேசினி, கணேஸ்வரி, விக்நேஸ்வரி, விநாயகி, லம்போதரி, ஐங்கிணி, வைய நாயகி  என்ற பெயர்களும் உண்டு. 



 லலிதாம்பிக்கைக்கு 64 கோடி யோகினிகள், பரிவார தேவதைகளாகக் கருதப்படுகிறார்கள் என்று லலிதா ஸகஸ்ர நாமம் கூறுகிறது. 

பெண் உருவம் கொண்ட விநாயகி, இந்த யோகினிகளில் ஒருவர் என்று வட மாநிலத்தார் கருதுகின்றனர். 



வடமொழியில் ஸ்கந்த புராணத்தில் காசிக் காண்டத்தில் யோகினி களின் பட்டியலில் விநாயகி, கஜானனா எனும் பெயர்கள் காணப் படுகின்றன. அறுபத்தி நான்கு யோகினிகளின் பட்டிலில் விநாயகியும் காணப்படுகிறாள். 

யோகினி என்பவர்கள், அன்னை பார்வதி அசுரர்களை எதிர்த்துப் போரிடக் காளியாகச் சென்றபோது, அன்னையைச் சூழ்ந்து நின்று காளிக்கு உதவி யாக அசுரர்களை எதிர்த் தவர்கள். 


தென்னாட்டிலோ அவளை ‘ஸ்ரீவாஞ்சா கல்ப லதா ஸ்ரீவித்யா கணபதி’ என்று சக்தி ரூபமாக பாவித்து ஸ்ரீவித்யா உபாசகர்கள் அவளை வழிபடுகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் ஒரு தூணில் விநாயகி யின் சிற்பமுள்ளது. இது கி.பி.17-ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும். 

அமர்ந்த கோலத்தில் வலக்காலை மடித்து இடக்காலைத் தொங்கவிட்ட நிலையில் உள்ளது. தலையில் வேலைப் பாடுடன் கூடிய அழ கிய மகுடம் விளங்கு கிறது. மேற்கைகளில் அங்குச- பாசம் உள்ளன. கீழ்க்கைகள் அபய- வரத ஹஸ்தங் களாக விளங்குகின் றன. கழுத்திற்குக்கீழ் பெண்ணுருவம். கழுத்தணியும் பூணூ லும் அழகு செய்கின் றன. கால்களில் சிலம் புகள். அழகாகக் கட்டப்பட்ட ஆடை யும் மேகலையும் அழகூட்டுகின்றன. இடப்புறம் திரும்பி பாதத்தைத் தொடுமளவு துதிக்கை நீண்டு விளங்குகிறது.


குறிப்பிடத்தக்க மற்றுமொரு சிற்பம் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில், சுவாமி சந்நிதியின் நுழைவாயிலில் வடபுறமுள்ள தூணில் காணப்படுகிறது.

இது நின்ற கோலம். தலையில் மகுடம்; சற்றே வலப்பக்கம் சாய்ந்து காணப்படுகிறது. 

இதனைப் போன்ற மற்றொரு உருவத்தை சிதம்பரத்திலும் காணலாம். 

நின்ற கோலம்தான். வலக்கையில் பூங்கொத்து. இடக்கை தூக்கிய நிலை. கழுத்திற்குக் கீழ் கச்சையற்ற இரு நகில்கள். இடுப்பிற்குக்கீழ் புலியின் இடுப்பும் இரு கால்களும் உள்ளன. தூக்கிய வால். இத்தகைய யானைத் தலை, பெண் மார்பு- கை, புலியின் கால்பாகம் உடைய சிற்பங்களை சிற்ப நூலார் வியாக்ரபாத விநாயகி என்பார்கள். 



சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயிலில் செதுக்கப்பட்ட புடைப்பு சிற்பங்கள்  ஏராளமாக உள்ளன.

இதில் ஒன்று விநாயகர் பெண் வடிவத்தில் இருக்கின்ற சிற்பமாகும். விக்னேஸ்வரி என்ற பெயரில் பக்தர்கள் வழிபடுகின்றனர்.

இவற்றைத் தவிர, திருச்செந்தூர், பவானி, திருக்குறுங்குடி ஆகிய இடங்களிலும், திருநெல்வேலித் தேரிலும்  சிற்ப வடிவில் சிரித்துக்கொண்டிருக்கும் விநாயகி வடிவங்களும், ஒருகாலத்தில், அவள் வழிபாடு மிகப்புகழ் பெற்றதாக இருந்திருக்கவேண்டும் என்பதற்கு கட்டியம் கூறி நிற்கின்றன .
 
 

சுபமங்களம் தரும் ஸ்ரீ ஆத்யந்த பிரபு!

ஆதி - ஸ்ருதி - பூர்ணம் - கணபதி 
அந்தம் - ஸ்ம்ருதி - ஸம்பூர்ணம் - மாருதி
ஸ்ரீ ஆத்யந்தப்ரபு - ஸர்வத்ர சம்பூர்ணம்!
எந்த ஒருசெயல் துவங்கினாலும், விக்கினங்கள் -தடைகள் இன்றி செவ்வனே நடைபெற விநாயகரை வணங்கிச் செய்வது வழக்கம்.
எந்த ஒரு சுப  நிகழ்ச்சியும் விநாயகரை வணங்கியே தொடங்கப்படுவது போல் ராமதூதனான அனுமனை வணங்கி அந்த நிகழ்ச்சியை நிறைவு பெறச் செய்ய வேண்டும் என்பது ஐதிகம். 
விநாயகரும், அனுமனும் இணைந்த வடிவத்தை “ஆத்யந்த பிரபு’ என்பர். ஆதி+அந்தம் என்பதையே ஆத்யந்த பிரபு’ என்று சொல்கிறார்கள்.
“ஆதி’ என்றால் “முதலாவது’. முதல் கடவுள் விநாயகர். “அந்தம்’ என்றால் “முடிவு’. விநாயகரை வணங்கி ஒரு செயலைத் துவங்கினால், அனுமன் அதை வெற்றிகரமாக முடித்து வைப்பார்.
ஒருபுறம் விநாயகரின் தும்பிக்கையும், மறுபுறம் வானர முகமும் கொண்டது ஆத்யந்த பிரபு வடிவம்.
அனுமன், சிவனின் அம்சம். விநாயகர் சக்தியிடமிருந்து (பார்வதி) உருவானவர். 
சென்னை தரமணி அருகிலுள்ள மத்திய கைலாஷ் கோயிலில் ஆத்யந்த பிரபுவுக்கு சந்நிதி உள்ளது.
பிள்ளையார் பிடித்து குரங்கில் முடிந்தது’ என்பார்கள்.
அதற்கு ‘மஞ்சளில் பிள்ளையார் பிடித்து ஆரம்பித்து, மாருதிக்கு மங்களம் பாடித் துதித்து மங்களகரமாய் நிறைவடைந்தது’ என்று பொருள்.
ஒரு செயலைத் துவங்கினால் அதை நல்லபடியாக முடிக்க வேண்டும். இதற்கு நல்ல திட்டமும் மனஉறுதியும் தெய்வ பலமும் வேண்டும்.
 “கம்” என்பது  கணபதியின் பீஜாக்ஷரமந்திரம் 
“ஹம்” என்பது ஆஞ்சநேயரின் பீஜாக்ஷர (உயிர்ப்பெழுத்து) மந்திரம்.
கம் கணபதயே என்று க-வில் துவங்கி ஸ்வாஹா என்று ஹ-வில் முடிப்பது மரபு.
கணபதி  ,அனுமன் இருவருமே பிரம்மச்சாரிகள்! விலங்கின ரூபம் கொண்டவர்கள்!
ஞானச் செருக்கு இல்லாத சமநிலை மூர்த்திகள் ! 
 நமக்கு அருளும் போது மட்டும், நிமிர்ந்து நின்று, வேண்டியது வேண்டிய வண்ணம் அருளும் அனுக்ரஹ மூர்த்திகள்!
இருவருமே எளியவர்க்கு எளியவர்கள்! 
இருவருக்குமே சூரியன் தான் குரு…

இது தான் இடம், இது தான் பூசை என்றில்லை!
கணபதிக்கு  ஆற்றங்கரை கூட இடம் தான்! அனுமனுக்கோ தூண் கூட இடம் தான்! 
 வடநாட்டில் சிந்தூரம் பூசுவது பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருக்குமே!
நவக்கிரகங்கள் என்னும் கோள் ஆளுமைக்கு அனைத்து தேவதைகளும் உட்பட்டவர்கள்! பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவரைத் தவிர!
கீதையில் காட்டிய விஸ்வரூபத்திலே பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே உண்டு!
இருவருக்குமே ஐந்து முகங்கள் உண்டு! 
பஞ்சமுக கணபதி, பஞ்சமுக ஆஞ்சநேயர் !
மத்திய கைலாஷ் கோயிலில் அருளும் ஸ்ரீ ஆத்யந்தப்ரபுவை வணங்கி அருள் பெறுவோம்! 



51 விநாயகர் வடிவங்களும் பலன்களும்!



51 விநாயகர் வடிவங்களும்,
அந்த வடிவங்களை வணங்குவதால் நாம்அடையும் பலன்களும்!

1. ஏகாக்ஷர கணபதி: பரிபூரண சித்தி.
2.
மகா.கணபதி: கணபதி அருள் கிடைக்கும்
3.
த்ரைலோக்ய. மோஹன  கணபதி: ஸர்வ ரக்ஷாப்ரதம்.
4.
லக்ஷ்மி கணபதி: தன அபிவிருத்தி
5.
ருணஹர கணபதி: கடன் நிவர்த்தி.
6.
மகா வித்யா கணபதி: தேவ அனுக்ரகம்.
7.
ஹரித்ரா கணபதி: உலக வசியம்.
8.
வக்ரதுண்ட கணபதி: அதிர்ஷ்ட லாபம்.
9.
நிதி கணபதி: நிதி ப்ராப்தி.
10.
புஷ்ப கணபதி: தானிய விருத்தி.
11.
பால கணபதி: மகிழ்ச்சி, மன நிறைவு.
12.
சக்தி கணபதி: சர்வ காரியசித்தி.
13.
சர்வ சக்தி கணபதி: சர்வ ரக்ஷாப்ரதம்.
14.
க்ஷிப்ர ப்ரஸாத கணபதி: துரித பலன்.
15.
குக்ஷி கணபதி: ரோக நிவர்த்தி.
16.
ஸ்ரீ சந்தான லட்சுமி கணபதி: மக்கட்செல்வம்.
17.
ஸ்ரீ ஸ்வர்ண கணபதி: ஸ்வர்ண பிராப்தி.
18.
ஹேரம்ப கணபதி: மனச்சாந்தி.
19.
விஜய கணபதி: வெற்றி.
20.
அர்க கணபதி: தோஷ நிவர்த்தி.
21.
ச்வேதார்க்க கணபதி: மாலா மந்திரம்.
22.
உச்சிஷ்ட கணபதி: திரிகால தரிசனம்.
23.
போக கணபதி: சகலலோக ப்ராப்தி.
24.
விரிவிரி கணபதி: விசால புத்தி.
25.
வீரகணபதி- தைரியம்.
26.
சங்கடஹர கணபதி: சங்கட நிவர்த்தி.
27.
கணேசாங்க நிவாரணி: லட்சுமி மந்திர சித்தி.
28.
விக்னராஜ கணபதி: ராஜயோகம்.
29.
குமார கணபதி: மாலா மந்திரம்.
30.
ராஜ கணபதி: மாலா மந்திரம்.
31.
ப்ரயோக கணபதி: மாலா மந்திரம்.
32.
தருண கணபதி: தியானயோக ப்ராப்தி.
33.
துர்கா கணபதி: துக்க நிவாரணம்.
34.
யோக கணபதி: தியானம்.
35.
நிருத்த கணபதி: கலா பிவிருத்தி.
36.
ஆபத்சகாய கணபதி: ஆபத்துகள் நீங்குதல்.
37.
புத்தி கணபதி: வித்யா ப்ராப்தி.
38.
நவநீத கணபதி: மனோவசியம்.
39.
மோதக கணபதி: சம்பூர்ண பலன்.
40.
மேதா கணபதி: மேதா பிவிருத்தி.
41.
மோஹன கணபதி: ரக்ஷாப்ரதம்.
42.
குரு கணபதி: குருவருள்.
43.
வாமன கணபதி: விஷ்ணு பக்தி.
44.
சிவாவதார கணபதி: சிவபக்தி.
45.
துர்வாக கணபதி: தாப நிவர்த்தி.
46.
ரக்த கணபதி: வசிய விருத்தி.
47.
அபிஷ்டவரத கணபதி: நினைத்ததை அடைதல்.
48.
ப்ரம்மண கணபதி: ப்ரம்ம ஞானம்.
50.
மகா கணபதி: ப்ரணவமூலம்.
51.
வித்யா கணபதி: ஸ்ரீ வித்தை