Monday 18 January 2016

ஆனந்தம் அருளும் ஆனந்த நிலையம்!

 
பெயருக்கு ஏற்ப… வாழ்வில் ஒரே ஒருமுறையேனும் கண்டடைய மாட்டோமா என்று திருமால் அடியவர்கள் ஏங்கித் தவிப்பதும், அவர் களுக்கு சில விநாடிப் பொழுதுகளில் பலகோடி புண்ணியம் தரும் பேரானந்த தரிசனம் வாய்ப்பதும் இங்குதான். தங்கத் தகடுகளால் வேயப்பட்டு, காணக்கிடைக்காத பேரழகுடன் திகழ்கிறது, ஆனந்த நிலையம்.
 
திருமலை திருப்பதி  இந்த க்ஷேத்திரத்துக்கு இணையான வேறு க்ஷேத்திரம் இல்லை; திருமலை திருவேங்கடவனுக்கு இணையான வேறு தெய்வம் இல்லை.

உண்மைதான்!
 
ஏழுமலையானைக் கண்கண்ட தெய்வமாக ஏற்றுக்கொண்ட அவன் அடியார்களுக்கு, அவனுடைய திருநாமமே உயிர் உந்தும் மந்திரம்; அவன் கோயில்கொண்டிருக்கும் திருமலையே உலகம். இன்றைக்கும்…
 
வழக்கமான நாட்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் லட்சோபலட்சம் பக்தர்களும் திருமலையில் குவிகிறார்கள் என்றால், திருவேங்கடவனின் அருட்கருணையே அதற்குக் காரணம்!
 
வருடத்தின் 365 நாட்களில் 450 திருவிழாக்களும், உற்சவங்களும் இவருக்கன்றி வேறு எந்த தெய்வத்துக்கும் நடைபெறுவதில்லை. அதனால்தான் என்னவோ திருப்பதியை, ‘பூலோக வைகுண்டம்’ என்றே சிறப்பித்திருக்கிறார்கள்.
 
சீமாந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது திருப்பதி. இந்த நகரத்தை ஒட்டியுள்ள திருவேங்கட மலையின் மீதுதான் ஏழுமலையான் கோயில்கொண்டிருக் கிறான்.
 
சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழுமலைகளுக்கும் அதிபதி என்பதால் பெருமாளுக்கு ‘ஏழுமலையான்’ என்றொரு திருநாமம்.
 
திருவேங்கடமும், பத்மாவதி தாயார் குடியிருக்கும் திருப்பதியும் இரு நகரங்களாக விளங்கினாலும், பொதுவில் திருப்பதி என்று ஒரே பெயரிலேயே அழைக்கப்படுகிறது. மலைக்கு மேலுள்ளதை மேல் திருப்பதி என்றும், மற்றதை கீழ் திருப்பதி என்றும் அழைக்கிறார்கள்.
 
தமிழ் இலக்கியங்களான சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இந்தத் தலத்தை திருவேங்கடம் என்றே குறிப்பிடுகின்றன. திருப்பதியை திரு பதி எனப் பிரித்தால், திருமகளின் நாயகன் என்றும் பொருள் வரும். ஆமாம்! திருமகள் பரிபூரணமாக வசிக்கும் திருத்தலம் அது. அதுமட்டுமா? வைணவ திவ்ய தேசங்களில் திருவரங்கத்துக்கு அடுத்ததான தலம் இது. ஆழ்வார்களில் பத்து பேரின் பாசுரங்களைப் பெற்ற க்ஷேத்திரம்!
 
திருப்பதியின் தல வரலாற்றுக் கதை, தேவ லோகத்தில் பிருகு முனிவரிடமிருந்து துவங்குகிறது.
ஒரு முறை, துயரங்கள் அநீதிகள் எல்லாம் அகன்று, உலகில் சகல நன்மைகளும் பெருகவேண்டும் என்பதற்காகப் பெரும் யாகம் நடத்தத் தீர்மானித் தார்கள் முனிவர்கள். யாகத்தின் பலனை மும்மூர்த்திகளில் ஒருவருக்கு அளிப்பது என்று முடிவானது. மூவரிலும் தகுதியானவர் யார் என்பதை அறியும் பொறுப்பு, பிருகு முனிவரிடம் விடப்பட்டது. பிருகு முனிவருக்குப் பாதத்தில் ஞானக் கண் உண்டு. எதிர்காலத்தை உணரும் சக்தியும் உண்டு. இதைப் பயன்படுத்தி மற்றவர்களை மட்டம் தட்டுவதில் அவருக்கு அலாதி இன்பம்! இதனால் உண்டான அவரது கர்வத்தை பங்கம் செய்ய பரம்பொருளும் தருணம் எதிர்பார்த்திருந்தது.
 
பிருகு முனிவர் முதலில் சத்தியலோகம் சென்றார். அங்கு சரஸ்வதியும் பிரம்மனும் தனித்திருந்தனர். பிருகு, அனுமதி பெறாமல் உள்ளே நுழைந்துவிட்டார். பிரம்மா இதைக் கண்டித்தார். இதனால் கோபம் கொண்ட பிருகு, ‘பக்தனை வரவேற்காத பிரம்மனுக்கு உலகில் பூஜையே நடக்காது’ எனச் சபித்துவிட்டு, திருக்கயிலாயத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.
 
அங்கே, சிவ பார்வதியர் தனித்திருந்தனர். அங்கும் தடைகளைப் பொருட்படுத்தாது உள்ளே நுழைந்தார். சிவனாரும் கோபத்துடன் அவரைக் கண்டித்தார். பக்தர்களை எதிர்கொள்ளும் பக்குவம் இல்லையே என்று கருதி, ஈசனுக்கும் சாபம் தந்தார் பிருகு. ‘பூலோகத்தில் உமக்கு இனி லிங்க ரூபமே கிடைக்கும். அதற்கே பூஜை நடக்கும்’ என்று சபித்தவர், அடுத்து வைகுண்டத்துக்கு சென்றார்.
 
அங்கே சயனத்தில் இருந்த திருமால், முனிவரின் வருகையை அறிந்தும் அறியாதவராக அரிதுயில் கொண்டிருந்தார். மிகுந்த கோபம் கொண்ட பிருகு, பகவானின் மார்பில் எட்டி உதைத்தார். ஆனால் எம்பெருமானோ கோபம் கொள்ளவில்லை. குழந்தை மார்பில் உதைத்தால், தந்தைக்கு சினம் எழுமா என்ன? அதேநேரம், குழந்தையின் துடுக்குத்தனத்தை களைய வேண்டாமா?
 
 பிருகுவின் பாதம் நோகுமே என்று பிருகுவின் பாதத்தைப் பிடித்துவிடுபவர்போல் அதிலிருந்த ஞானக் கண்ணையும் பிடுங்கி எறிந்து விட்டார் பகவான். பிருகு முனிவர் பகவானின் சாந்தத்தைக் கண்டு, அவரே யாக பலனை ஏற்கத் தகுதியான மூர்த்தி என்று முடிவு செய்தார். ஆனால், தான் வசிக்கும் எம்பெருமானின் திருமார்பை முனிவர் எட்டி உதைக்கிறார், அவரை தன் நாயகன் கண்டிக்கவில்லையே என்ற கோபம் திருமகளுக்கு. எனவே, பெருமாளைவிட்டுப் பிரிந்தாள். பூலோகத்தில் ஆகாசராஜனின் மகளாக அவதரித்தாள்.
 
மாலவனால் மலர்மகளைப் பிரிந்திருக்க முடியுமா? அவளைத் தேடி, அவர் பூலோகத்துக்கு இறங்கியதும், அவரை வகுளாதேவி மகனாக ஏற்றதும், பின்னர் அவர் வேடனாக வந்து பத்மாவதியை சந்தித்ததும், அவளை மணந்துகொள்ள ஆசைப்பட்டதும், வகுளாதேவியின் முயற்சியால் ஆகாசராஜனின் அனுமதி பெற்று பத்மாவதியை பெருமாள் மணம் புரிந்ததும், கல்யாணத்வகுளாதேவி மகனாக ஏற்றதும், பின்னர் அவர் வேடனாக வந்து பத்மாவதியை சந்தித்ததும், அவளை மணந்துகொள்ள ஆசைப்பட்டதும், வகுளாதேவியின் முயற்சியால் ஆகாசராஜனின் அனுமதி பெற்று பத்மாவதியை பெருமாள் மணம் புரிந்ததும், கல்யாணத் துக்காக குபேரனிடம் கடன்பட்டு, அந்தக் கடனை இன்றுவரையிலும் அவர் செலுத்திக்கொண்டிருக்கும் கதையும் எல்லோரும் அறிந்ததுதானே!
 
ஏழுமலையானுக்கு இங்கு கோயில் எழுப்பியது ஆகாசராஜனின் தம்பியான தொண்டைமான் என்கிறது தல வரலாறு. ஸ்வாமியைத் தரிசிக்க முப்பத்துமுக்கோடி தேவர்களும் இங்கு கூடினர். பெருமாளுக்கு பெருவிழா நிகழ்த்த அனுமதி வேண்டினான் பிரம்மன். பரம்பொருளும் இசைந்தது. அதுமுதல் துவங்கியது திருமலையின் பிரம்மோற்ஸவம். 
 
பண்டைய தமிழ் இலக்கியங்கள் இவருக்குச் சூட்டிய பெயர் என்ன தெரியுமா?
 
வெறுங்கை வேடன்!
 
திருப்பதி மலைமேல் உறையும் மூலவரை ஏழுமலையான், திருவேங்கடமுடையான், திருவேங்கடநாதன், வேங்கடேசன், வேங்கடேசுவரன், சீனிவாசன், பாலாஜி என்றெல்லாம் போற்றுவர்.
 
வைகாசி திருவோணம்!
 
திருமலை திருவேங்கடவனுக்கு உகந்த தினம்.
 
நாமும் பெறுவோம் அவனருள் தினமும்.
 
 

வியாழனன்று விழி திறக்கும் வேங்கடவன்!

அதிக அலங்காரம் இல்லாத, முக்கால் விழிகளைத் திறந்து பார்த்தபடி தரிசனமளிக்கும் பெருமாளை ஒவ்வொரு வியாழக் கிழமையும் கண்குளிர காணலாம். இதற்கு ‘நேத்ர தரிசனம்’ என்று பெயர்.

பெருமாள் நம்மை நேரடியாகப் பார்க்கவில்லையே என்ற  ஆதங்கம் மறைந்து அவர் விழிகளில் நாம் நிறைந்திருக்கும் அனுபவத்தால் மெய் சிலிர்ப்பது உண்மை. அலங்காரமும் கவசங்களும் இல்லாமல்  கிட்டத்தட்ட அவரது முழு உருவத்தையுமே நம்மால் தரிசிக்க முடியும். எப்பேர்பட்ட பாக்கியம் இது!

பெருமாளை கொஞ்சம் கிட்டத்தில் சென்று தரிசிக்கும்போது ஒரு படி குறுக்கிடும். விஷயம் தெரிந்தவர்கள் இந்தப் படியை மிதிக்காமல் தாண்டிச்  செல்வார்கள். ஆனால் இந்தப் படிமீது ஏறி நின்றால் பெருமாளை இன்னும் வசதியாகக் காண முடியும் என்பதும் உண்மைதான். இந்தப் படிக்கு  குலசேகரன் படி என்று பெயர். ‘திருச்சந்நதியில் படியாய் அமைந்து உன் பவள வாய் காண்பேனே’ என்று அவர் வேண்டிக் கொண்டதற்கிணங்க,  அங்கே அவர் படியாய் அமைந்திருக்கிறார் என்பது ஐதீகம். இந்தப்  படி, பொன் தகடால் மூடப்பட்டிருக்கிறது.

‘ஜர்கண்டி’ விரட்டலினூடே பெருமாளை ஓரிரு விநாடிகள் தரிசித்து விட்டு, வெளியே வந்தால் மடப்பள்ளி அருகே தீர்த்த பிரசாதம் கொடுக்கிறார்கள்.  சிலசமயம் துளசி தளங்கள் வழங்கி, சடாரியும் சாத்துகிறார்கள். இந்த மடப்பள்ளிக்குள் சென்றால் சமையலை மேற்பார்வையிட்டு, உரிய  ஆணைகளைப் பிறப்பிக்கும் வகுளமாலிகையை தரிசிக்கலாம்.

பிரதட்சணத்தைத் தொடர்ந்தால் உறுதியாக வேலி அமைக்கப்பட்டிருக்கும் நீண்ட மண்டபத்தினுள், பெருமாளுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட  பணம் எண்ணப்பட்டு தொகுக்கப்படுகிறது. இந்தப் பணிக்கு தரிசனத்துக்காக வரும் பக்தர்கள் சிலரையும் மக்கள் பிரதிநிதியாக சேர்த்துக் கொள்கிறார்கள். இவ்வாறு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவது அவரவர் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது; பெருமாளின் கருணையைப் பொறுத்தது.

அடுத்து வலம் திரும்பி வடக்கு பிராகாரத்தை அடைந்தால், அங்கே பலர் மண்டபத்தின் மேலேறி வானோக்கிப் பார்ப்பார்கள். அவர்கள் தரிசனம் காண்பது, விமான வெங்கடேஸ்வரரை. பெருமாளின் ஆனந்த நிலைய விமானத்தில் வைகுண்டவாசனாகக் காட்சியளிக்கும் இந்த  வெங்கடேஸ்வரரைப் பார்த்து, கருவறையில் நிறைவேறாத ஏக்கத்தை இங்கே தீர்த்துக் கொள்ளலாம். இவருக்கு வெள்ளியாலான திருவாசி  அமைத்து அடையாளம் காட்டியிருக்கிறார்கள். அம்புக்குறி வழிகாட்டலும் உண்டு.

அடுத்து, மிக நீண்டதாக பக்தர் வரிசை. ஏழுமலையானுக்கு காணிக்கை செலுத்தும் உண்டியல் காவலர் பாதுகாப்போடு காட்சி தருகிறது. துணியால்  மறைக்கப்பட்ட உண்டியல். மேலே நான்கு புறங்களிலும், கையை உயர்த்தி, விரல்களை மட்டும் விட்டு, காணிக்கைகளைப் போடக்கூடிய அளவுக்கு  சிறு சிறு துவாரங்கள். உண்டியலை வலம் வந்து, பலிபீடம், கொடிமரம் அருகே வந்து, கீழே விழுந்து நமஸ்கரிக்கலாம்.

9ம் நூற்றாண்டில் ஸ்தாபிக்கப்பட்ட ஊஞ்சல், 1139 ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட, உபதேச கோலத்தில் காட்சி தரும் ராமானுஜரின் சிலா வடிவம்,  மூலவரின் கர்ப்பகிரகத்திலேயே இருக்கும் ராமர்சீதைலட்சுமணர், விநய ஆஞ்சநேயர், கையில் வெண்ணெயுடன் நர்த்தனமாடும் கண்ணன்  ஆகியோரை நேரடியாக தரிசிக்க இயலாவிட்டாலும், அவர்கள் அங்கிருப்பதாகிய தகவலால் மனசுக்குள் தரிசித்துக்கொள்ளலாம்!

பங்காரு வாசல்  வழியாக வெளியே வருமுன், சின்னம்மா தேவி திருமலா தேவி சமேதராக கிருஷ்ண தேவராயரை நின்ற கோலத்தில் தரிசிக்கலாம். 1517ம் ஆண் டு, தான் போரில் வெற்றி பெற்றதன் நன்றியைத் தெரிவிக்கும் வகையில் இந்த மன்னர் ஆனந்த விமான நிலையத்திற்கு தங்க முலாம்  பூசுவதற்காக 30,000 வராஹன்களைக் காணிக்கையாக செலுத்தியிருக்கிறார். இவருக்கு மரியாதை செய்யும் வகையில், வருடந்தோறும் ஒருநாள்,  பெருமாள் உற்சவராக, இவர் இருப்பிடம் எழுந்தருளுகிறார்.

கோயில் மதில் சுவர்களிலும் பிற பகுதிகளிலும் காணப்படும் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகளில் தமிழ் மொழியே பிரதான அங்கம் வகிக்கிறது.  தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம், கம்பராமாயணம் என்று பல்வேறு தமிழ் நூல்களிலும் திருவேங்கடமுடையான் சிறப்பி க்கப்பட்டிருக்கிறான். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், திருப்பா ணாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள் என்று வைணவப் பெருமக்கள், மொத்தம் 204 பாடல்களால் திருமலையை, மலையப்பனைப் போற்றி வணங்கியிருக்கிறார்கள்.

ராமானுஜர் முறைப்படுத்திய ஒழுகுமுறைகள் இந்தக் கோயிலில் இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகின்றன. வைகானச ஆகமப்படி, தினமும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. அவை: சுப்ரபாத சேவை, பிரதான அர்ச்சனை, நண்பகல் வழிபாடு, தோமால சேவை, திருவீசம், ஏகந்த  சேவை.

பொதுவான இந்த ஆறு சேவைகளின் உட்பிரிவுகளாக கொலு பஞ்சாங்க ச்ராவணம், சஹஸ்ரநாமார்ச்சனை, கல்யாணோற்சவம், டோலோற்சவம்,  ஸஹஸ்ர தீப அலங்கார சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், ஆர்ஜித வசந்தோற்சவம், திங்கட்கிழமைகளில் விசேஷ பூஜை, எட்டு இதழ் தாமரைத்  திருவடி பூஜை (செவ்வாய்கிழமை), ஹஸ்ர கலசாபிஷேகம் (புதன்கிழமை), திருப்பாவாடை, பூலங்கி சேவைகள் (வியாழக்கிழமை), அபிஷேகம்,  நிஜபாத தரிசனம் (வெள்ளிக்கிழமை) என்று பல்வேறு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வழிபாடுகளில் முன்கூட்டியே குறிப்பிட்ட  கட்டணம் கட்டியிருக்கும் பக்தர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இந்தப் பட்டியல் தவிர வேறு பல சேவைகளும் உள்ளன.

திருமலை சென்று வேங்கடவனை தரிசிக்கும்வரை கீழ்காணும் வேங்கடேச தியான ஸ்லோகத்தைச் சொல்லிக் கொண்டிருக்கலாம்:

ஸ்ரீ சேஷா சலமூர்த்தி வேங்கடபதி: ஸர்வார்த்தத: ப்ராங்முக:
தீர்த்தம் ஸ்வாமி ஸரோ, விமாநமதுலந்த் வானந்த தாமேதிச
ஸ்ரீ வைகுண்ட மபாஸ்ய தத்ர ரஸிகே: பத்மோபரிஸ் தாக்யயா,
நாயக்யாஸ ஹமோத தேத்ரி ஜகதாம் பூத்யை ப்ரஸந்ந: பர:
ஸ்ரீ விஷ்ணு ஸ்தலாதர்சம்

பொதுப் பொருள்: திருமலை என்று பெயர்பெற்ற திருவேங்கடம் எனும் திவ்ய தேசத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் திருவேங்கடநாதனே  நமஸ்காரம்.

அலர்மேல் மங்கைத் தாயாருடன், ஆனந்த நிலைய விமான நிழலில், ஸ்வாமி தீர்த்தக் கரையில், கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில்  காட்சி தரும் வேங்கடவனே நமஸ்காரம்.

தொண்டைமான் சக்கரவர்த்திக்கு காட்சி கொடுத்து அருளியவரே, ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து தன்  தேவியுடன், மூவுலகையும் காப்பதற்காக அவதரித்த பெருமாளே நமஸ்காரம்.

சென்னை சின்னக்கடை ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி!


 
 சென்னையில் சௌகார்பேட்டை என்ற இடத்தில் மின்ட் சாலையும் என். எஸ். ஜி. போஸே சாலையும் இடிக்கும் இடத்தின் அருகில் உள்ள அந்த ஆலயம்  தோன்றியது இருநூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கூறுகிறார்கள். அந்த ஆலயத்தைக் கட்டியவர்கள் யார், அது அங்கு எப்படி வந்தது என்ற என்ற விவரம்  எவருக்கும் தெரியவில்லை. கூறப்படுவது அனைத்துமே வழி வழியாகக் கூறப்படும் கதையே. 
 
அந்த ஆலயத்தின் தேவி மிகவும் சக்தி வாய்ந்தவளாக இருக்கின்றாளாம் . அதற்குக் காரணம் ஆலயத்தின் கற்பக்கிரகத்தில் சீதளாதேவி என்ற பெயரில் முழு உருவை கொண்டும், ரேணுகாதேவி என்ற பெயரில் தன்னுடைய தலையை மட்டும் பூமிக்கு மேல் வைத்துள்ள நிலையிலும்  அம்மன் காட்சி தருகிறாள்.
 
 அந்த ஆலயத்தில் சென்று எலுமிச்சை பழ மாலையுடன் மிளகாயை சேர்த்துக் கட்டி தேவிகளை பூஜிக்க பூர்வ ஜென்ம வினை, தோஷங்கள் மற்றும் தீய ஆவிகள் இருந்தால் அவை அனைத்தும் ஓடி ஒளியுமாம்.
 
 
 
அங்குள்ள ரேணுகா தேவி மற்றும் மாரியம்மன் என்பது யார்?

முன்னர் ஒரு காலத்தில் தருகா என்றொரு அசுரன் பிரும்மாவிடம் இருந்து பெற்ற வரத்தினால் தேவர்களை துன்புறுத்தினான். அவனை அழிக்க சிவ பெருமான் காளியைப் படைத்தார். அவள் அந்த அசுரனைக் கொன்றதும் தருகாவின் மனைவியான மண்டோதரி என்பவள் தனக்கு வாழ்வதற்கு ஏதாவது வழி காட்டுமாறு சிவனை வேண்டி தவம் இருக்க சிவன் அவளுக்கு தன்னுடைய உடம்பில் இருந்து வியர்வைத் துளிகளைக் கொடுத்தாராம். அதை அவள் எவர் மீது தூவுவாளோ அவர்களுக்கு அம்மை நோய் வரும். அதை குணப்படுத்த அவர்கள் அவளையே வணங்கி அவளுக்கு பூஜைகள் செய்வார்கள்.  அதனால் அவளுக்கும்  ஒரு அந்தஸ்து கிடைக்கும். அது முதல் மண்டோதரியே அம்மை நோயின் அதிபதியானாள். அவள் பூமியில் அவதரிக்க சில நியதிகள்இருந்தன.
 

ஆகவே  அவளே பார்வதியின் அவதாரமான ரேணுகா தேவியாக அவதரித்து ஜமதக்னியின் மனைவியானாள். அவள் கற்பில் சந்தேகம் அடைந்த முனிவர் அவள் தலையை சீவி எறியுமாறு பரசுராமரிடம் கூற அதை செய்ய பரசுராமர் அவளிடம் செல்ல அவள் பல உருவங்களாகக் காட்சி தந்தாள். ஆகவே யார் ரேணுகா எனப் புரியாமல் பரசுராமர் அனைவரையும் வெட்டி விடுகிறார். அதன் பின் பரசுராமரின் வேண்டுகோளை ஏற்று ஜமதக்கினி முனிவர் ரேணுகாவை உயிர் பிழைக்க வைக்க வெட்டப்பட்ட அனைவரும் உயிர் பெற்று எழுந்து சகோதரிகள் ஆக ஒருவள் தேவலோகத்திலும் மற்றவர்கள் பூமியில் பல இடங்களில் சென்று குடி கொண்டனர் .
 
அவர்களை அடையாளம் கண்டு கொண்ட இடங்களில் அவர்களுக்கு ஆலயங்கள் தோன்றின. அவர்கள் சீதல் மாதா மற்றும் ரேணுகா அல்லது எல்லம்மா அல்லது மாரியம்மா எனப் பல பெயர்கள் பெற்று அம்மை நோயின் அதிபதிகளாக மாறினார்கள். ஆனால் தம்மை வேண்டி  வணங்குபவர்களை அவர்கள் காத்து அருளுகிறார்கள். நோய் நொடிகளை ஆண்ட விடுவதில்லையாம்.
 
அந்த அவதாரங்களில் ஒன்றுதான் சின்னக் கடை மாரியம்மனும். ஆகவேதான் அங்கு சகோதரிகளான ரேணுகாவும் மாரியம்மனும் இருக்கிறார்கள் . அவர்கள் அங்கு விளக்கின் ஒளியாக அருள் பாலிக்கிறார்கள்.
 
அந்த ஆலயத்தில் அவர்களைப் படைத்த சிவபெருமானும் காசி விஸ்வனாதராக பார்வதியுடன் இருக்கின்றாராம்.  ஆகவே ரேணுகா, மாரியம்மன், சீதல் மாதா மற்றும் எல்லம்மாள் போன்ற அனைவருமே ஏதாவது ஒரு வகையில் சக்தியின் அவதாரங்களே.  
 
 

அட்சதை மகிமை!



இந்து மத அமைப்பினர் அனைவரும் பாரம்பரியமாக, வாழ்த்துக்களை தெரிவிக்க மணமக்களுக்கு, தமது குழந்தைகளுக்கு மற்றும் புதிதாக தொழில் துவங்கும் தமது வாரிசுகளுக்கு " அட்சதை " பயன் படுத்துகின்றனர் இதனால் என்ன பயன் ?

முனை முறியாத அரிசி தான் அட்சதை , நன் மங்களங்களை நல்குவது மஞ்சள் . அது சென்றடைய ஒரு ஊடகம் தேவை. அதுவே அரிசி இந்த இரண்டையும் இணைக்கும் இணைப்பான் பசு நெய்; இது கோமாதாவின் திரவியம் .

பூமிக்கு மேல் விளையும் பொருள் அரிசி, பூமிக்கு கிழ் விளை பொருள் மஞ்சள், இந்த இரண்டையும் இணைக்க தூய பசு நெய் தேவை.

சற்றே யோசித்தால் இயற்கையில் , மணமக்களை வாழ்த்தும் பொழுது மணமக்கள் இரு மாண்பினர்; வெவ்வேறு குணநலன்கள் கொண்டவர்கள்; ஒருமித்து வாழத்தக்கவர்கள்; அரிசியும் மஞ்சளுமான மணமக்களை இணைக்கும் பசு நெய்யாகப் பாசமிகு உற்றார் உறவினர்கள் உள்ளனர் இதுவே தத்துவம்.

ஆகவே உற்றார் உறவினர்கள், பெரியோர், நண்பர்கள் என அனைவரும் மணமக்களை வாழ்த்தும் பொழுது, மணமேடைக்கு அருகே வந்து ஒருவர் பின் ஒருவராக மணமக்களை அட்சதை தூவி ஆசி வழங்குவதே சரியான முறையாகும்.
 
மொத்தமாக மாங்கல்ய தானம் செய்யும் பொழுது தூவி வாழ்த்துவது நன்மையான பலன்களை, அதிகம் வழங்குவது இல்லை என்பது சாஸ்திர உண்மை .

மேலும் தமது வாரிசுகள் புதிதாக தொழில் துவங்கும் பொழுதும் சந்திரன் சக்தி அதிகம் அமைந்த அரிசியும் குருபகவானின் சக்தி அதிகம் அமைந்த மஞ்சளும் , மஹா லக்ஷ்மி பரிபூரண சக்தி கொண்ட நெய்யினை கலந்து,

உற்றார் உறவினர்கள், பெரியோர், நண்பர்கள் என அனைவரும் அவர்களை ஆசி வழங்கும் பொழுது அந்த புதியதாக துவங்கப்பட்ட தொழில் வாழையடி வாழையாக அவர்களுக்கு அதிர்ஷ்டத்துடன் கூடிய முன்னேற்றத்தை வாரி வழங்கும் என்பது சாஸ்திர உண்மை.

இந்த அமைப்பில் அமையும் திருமணம் மற்றும் தொழில்கள், சுபகாரியங்கள் அனைத்தும் வெற்றிமேல் வெற்றி பெற்று , சகல நலன்களையும் அடையும் என்பது உறுதி .
 

குரு பகவானே சரணம்!


குரு ப்ரஹ்மா குரு விஷ்ணு குருதேவோ மஹேஸ்வர:|
குருசாக்ஷாத் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம:||
குரவே சர்வலோகாநாம் பிஷஜே பவரோகினாம்
நிதயே சர்வவித்யானாம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தயே நம:||




 


 
 
 

ஆண் குழந்தை பிறக்க,முன்னோர் சொன்ன வழிகள்!

ஆண்குழந்தை பிறக்க முன்னோர்கள் சொன்னதுன்னு ஒரு பெரியவர் சொன்னார்..அதை அப்படியே சொல்றேன்...நம்பிக்கை இருக்கிறவங்க கடைபிடிக்கலாம்...

 
பெண்கள் மாதவிலக்கு ஆகத்தொடங்கிய நாள் முதல் எண்ணி வரும் 12 முதல் 16 நாட்கள்....இந்த ஐந்து நாட்கள் மட்டுமே கரு பிடிக்கும் நாட்கள்..இநாட்களில் ஆண் நட்சத்திரம் வரும் நாளில்,உங்கள் பெட்ரூமின் தென்மேற்கு மூலையில் படுக்கையை அமைத்துக்கொள்ளவும்....

 
மாலையில் இருவரும் குளித்து விட்டு,7 மணிக்கே சாப்பிட்டு விட்டு,டிவி பார்க்க வேண்டாம்...கொஞ்ச நேரம் தனிமையில் பேசிக் கொண்டிருங்கள்..அதாவது காதல் செய்யுங்கள் ....

 
வேலி பருத்தி என்னும் செடி வேலிகளில் இருக்கும் அதை எடுத்து சாறு பிழிந்து ஆண்கள் தங்கள் காதில் 3 சொட்டு விட்டுக்கொண்டால் இன்னும் நல்லது...வீரியத்தையும் அதிகப்படுத்துவதோடு, விந்தணுவில் ஆண் தன்மையை அதிகப்படுத்துமாம்.. (இதை உண்மையாக கடை பிடித்திருக்கிறார்கள்)
 
படுக்கையில் ஆண் இடது கையை தலைக்கு கொடுத்து அதாவது இடது புறம் பார்த்து படுக்க வேண்டும்....பெண் வலது புறம் பார்த்து படுக்க வேண்டும்...இப்படி அரை மணி நேரம் ஒருவரை ஒருவர் பார்த்தவறு பேசிக்கொண்டிருங்கள்!
 
இப்போது ஆணுக்கு வலது பக்கம் மூச்சுக்காற்று வந்து கொண்டிருக்கும்...இப்போது தாம்பத்தியம் கொண்டால் நிச்சயம் ஆண் குழந்தை பிறக்கும்...

 
இந்த நாட்களில்,அமாவாசை,பவுர்ணமி,சஷ்டி,சனிக்கிழமை ஆகாது.

 
படுக்கையறையில் தென்மேற்கு மூலையில்,மேற்கு தலை வைத்து,படுக்க வேண்டும்...
 
பெண்ணின் முதல் மாதவிலக்கு நாளில் இருந்து,ஒற்றைப்படை நாளில் சேரக்கூடாது..இரட்டைப்படை நளில் சேர்ந்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும் சொல்வார்கள்.
 
தாம்பத்தியத்துக்கு முன்..காதல் செய்வது சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பதும்...வீரியத்தை அதிகப்படுத்தும்.......

அதிக இனிப்புகளை ஆண் சாப்பிட்டு வந்தால் விந்தணு அதிகம் சுரக்கும் என்றும்..அதிக விந்தணு பெண்ணின் யோனியில் சேர்ந்தால்தான் ஆண் குழந்தை...குறைந்த விந்தணு திரவம் சேர்ந்தால் பெண் குழந்தை என்றும் சொல்வார்கள்!!
 
கர்ப்பிணி பெண்கள் உணவில் உட்கொண்டு வந்தால் ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு உள்ளது.
 
 
கர்ப்பிணி பெண்கள் 5 மாதத்திற்கு பின் குழந்தையின் அசைவுகளை உணர முடியும். குங்குமப்பூவை 5 மாதங்களுக்கு பின், பால் அல்லது உணவுடன் எடுத்து கொள்ளும் போது எளிதாக குழந்தையின் அசைவை உணர முடியும். இது உடல் சூட்டினை அதிகரிக்கும் தன்மையை கொண்டதால், அதிக அளவில் எடுத்துக் கொள்ள கூடாது என்று அறிவுறுத்தப்படுகின்றது. மேலும் இது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.

பெண்களின் ரத்த கொதிப்பு மற்றும் மனநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த 3 முதல் 4 சிட்டிகை குங்குமப்பூ எடுத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. பல நோய்களை குணப்படுத்தும் தன்மையை கொண்ட இது தசை தளர்வடைய உதவும். அதிக அளவில் பயன்படுத்தும் போது கருப்பை ஊக்கியாகவும் செயல்படுகின்றது

 
வாழைப்பழம் வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், அதனை உட்கொண்டு வந்தால் ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் பொட்டாசியமானது கருப்பையினுள் செல்லும் விந்தணுவானது ஆண் குழந்தையை உருவாக்க உதவியாக இருக்கும். எனவே ஆண் குழந்தை வேண்டுமென்பவர்கள், ஒரு நாளைக்கு 2 வாழைப்பழத்தை உட்கொண்டு வருவது நல்லது.

காலை உணவாக செரில் ஆண் சிசு உருவாக அதிக அளவு ஊட்டச்சத்தானது தேவைப்படுவதால், ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த செரிலை காலை உணவாக எடுத்து வந்தால், ஆண் குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
காளான் நல்ல ஆரோக்கியமான விந்தணுக்களுக்கு வைட்டமின் டி மிகவும் இன்றியமையாத ஊட்டச்சத்தாகும். அத்தகைய வைட்டமின் டி மற்றும் பொட்டாசியமான அதிக அளவில் காளானில் இருப்பதால், இதனை தம்பதிகள் உணவில் சேர்த்து வந்தால், ஆண் குழந்தை பிறப்பதற்கு உதவியாக இருக்கும்.
சிட்ரஸ் பழங்கள் சிட்ரஸ் பழங்களில் தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி-யைக் கொண்டுள்ளது. மேலும் ஆண் சிசுவானது நல்ல ஆரோக்கியமான உடலும், ஊட்டச்சத்தும் நிறைந்துள்ளவர்களுக்குத் தான் பிறக்கும்.

ஸ்டார்ச் நிறைந்த உணவுகள் குளுக்கோஸ் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்து வந்தால், ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே சாதம் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றை உணவில் சேர்த்து வந்தால், உடலில் கலோரிகள் மற்றும் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கும்.

கடல் உணவுகள் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்க ஜிங்க் நிறைந்த உணவுகள் பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் ஆண்களின் விந்தணுக்களானது எவ்வளவு அதிகமாக கருப்பையினுள் நுழைகிறதோ அதைப் பொறுத்து தான் ஆண் குழந்தை பிறப்பது உள்ளது. எனவே ஜிங்க் நிறைந்த கடல் உணவுகளான கடல் சிப்பியை ஆண்கள் அதிகம் எடுத்து வருவது நல்லது.

உப்புள்ள உணவுகள் சோடியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்த உணவுகள் கூட ஆண் குழந்தை பிறப்பதற்கு உதவியாக இருக்கும். எனவே கருத்தரிக்கும் முன் சோடியம் நிறைந்த உப்புள்ள உணவுகளை அதிகம் எடுத்து வாருங்கள். முக்கியமாக கருத்தரித்துவிட்டால், உப்புள்ள உணவுகள் எடுத்து வருவதை நிறுத்திவிட வேண்டும். 

தக்காளி தக்காளியிலும் சோடியம் மற்றும் பொட்டாசியம் சரியான அளவில் நிறைந்துள்ளது. மேலும் அத்துடன் வைட்டமின் சி-யும் நிறைந்துள்ளது. இதனால் அவை உடலில் உள்ள pH-இன் அளவை சீராக பராமரித்து, ஆண் குழந்தை பிறப்பதற்கு உதவியாக இருக்கும்
 
 
 

பண வரவை அதிகரிக்கும் எண் யந்திரம் !!!




கீழே உள்ள யந்திரத்தை  நல்லநாளில் வெள்ளை விரிப்பு விரித்து அதில் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து  சிகப்பு மையால் எழுதவும்.பின்,அதற்கு பஞ்சோபசார பூஜை செய்யவும்.

பஞ்சோபசார பூஜை முறை :-

1.யந்திரத்திற்குச் சந்தனம்,குங்குமம் வைக்கவும்.
2.யந்திரத்திற்குச் செந்தாமரை இதழ்கள் அல்லது மல்லிகை அல்லது பிச்சிப் பூவால் அர்ச்சனை செய்யவும்..
3.ஊதுவத்தி காண்பிக்கவும்.
4.கற்பூரம் காண்பிக்கவும்.
5.வெற்றிலை பாக்கு,பழம்,கற்கண்டு,தேங்காய் ,பால் நைவேத்யம் செய்யவும்.

பின்னர் யந்திரத்தை லேமினேட் செய்து கல்லாவில் வைத்துக்கொள்ளவும். பெரிய கம்பெனியாக இருந்தால் கேஷ் பாக்ஸ் அல்லது லாக்கரில் வைத்துக் கொள்ளப் பணம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் அளவிற்கு நிறைவாக வந்து கொண்டே இருக்கும்.

தொழில் செய்யும் இடத்தில் அதிர்ஷ்டமான படங்கள் சின்னங்கள் !!!

மேச லக்னத்துக்கு அனுமனை அதிர்ஷ்ட சின்னமாக வைக்கலாம் ..

ரிசப லக்னம் ,கோயில் கோபுரம் அதிர்ஷ்ட சின்னம்...

மிதுன லக்னத்துக்கு மகான்கள் படங்கள் ,ஸ்ரீரங்கம் ரங்கநாதர்,

கடக லக்னத்துக்கு பழனி முருகன்,

சிம்ம லக்னத்துக்கு கழுகு படம் வைக்கலாம்

கன்னி லக்னத்தார் இரட்டை குதிரை ,இரட்டை தேவதைகள் படம் வைக்கலாம்..

துலாம் லக்னத்தார் திருச்செந்தூர் முருகன் படம் வைக்கலாம் ...அல்லது பெரிய மகான்கள் அல்லது தங்கள் குருவின் படம் வைக்கலாம் ..

விருச்சிகம் லக்னத்தார் சிங்கத்தின் மீது அமர்ந்த அம்பாள் படம் வைக்கலாம் ..அல்லது சிங்கம் படத்தை வைக்கலாம் . .

தனுசு லக்னத்தார் ....குருவாயூரப்பன் படம்  க்கலாம்..பாலாம்பிகா படம் வைக்கலாம் ..கன்னியாகுமரி அம்மன் படம் வைக்கலாம் ..

மகரம் லக்னத்தார்,நின்ற கோலத்து பெருமாள் படம் வைக்கலாம் ..

கும்பம் லக்னத்தார் ,ஆற்றின் கரையோரம் இருக்கும் முருகன் படம் வைக்கலாம்...

மீனம் லக்னத்தார் ,திருப்பதி தங்ககோபுரம் படம் வைக்கலாம் ஆனந்த நிலையம் படம்...
.
10 ஆம் இடத்தில் எந்த கிரகம் பலமாக இருக்கிரதோ அதர் குறிய சின்னத்தை பயன்படுத்தினால் லாபம்  உண்டாகும்.
 
 

மங்கலச் சின்னம் ஸ்வஸ்திகா!



நாம் மேற்கொள்ளும் எந்த ஒரு செயலிலும் இடையூறுகள் ஏதும் வரக்கூடாது என்பதுதான். நம் எல்லோருடைய ப்ராத்தனையாகவும் இருக்க முடியும். இடையூறுகள் இல்லாத தன்மையே "ஸ்வஸ்தி" என்ற வார்த்தையால் குறிக்கிறோம்.

யஜுர் வேதத்தில் வரும் ஒரு ப்ரார்த்தனை....

ஸ்வஸ்தி ந இந்த்ரோ வ்ருத்தச்ரவா;
ஸ்வஸ்தி ந பூஷா விச்வவேதா:|
ஸ்வஸ்தி ந ஸ்தாசஷ்யோர் அரிஷ்டநேமி:
ஸ்வஸ்தி நோ ப்ருஹஸ்பதிர் ததாத ||

எல்லா வளங்களும் நிறைந்த நல்வாழ்வை அருள வேண்டி இந்திரன், பூஷன்,கருடன், ப்ருஹஸ்பதி முதலான தேவர்களைக் குறித்தும் செய்யும் பிரார்த்தனை இது.

இதில் வரும் 'ஸ்வஸ்தி' என்ற வார்த்தை "தடையற்ற நல்வாழ்வு" என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனவேதான் இந்த ஸ்வஸ்தியைக் குறிக்கிற சின்னமாக ஸ்வஸ்திகா பயன்படுத்தப்படுகிறது.

பகவான் விஷ்ணுவின் கரத்தில் உள்ள சுதர்சன சக்கரம் ஸ்வஸ்திகா வடிவிலேயே அமைந்துள்ளதாக சிலர் கூறுவர்.

செங்கோன வடிவில் மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும், ஒன்றுக்கு ஒன்று குறுக்கில் செல்லும் கோடுகள் தாம் ஸ்வஸ்திகா.

பிரணவத்தின் வடிவமான\போலவே சின்னமும் புனிதமானது. இல்லங்களில் முகப்பிலும், பூஜை அறையின் சுவர்களிலும் வரைவது வழக்கம். இதில் உள்ள எட்டு கோடுகளும் எட்டு திக்குகளைக் குறிப்பதாகக் கொள்வர். எட்டு திக்குகளிலுமிருந்து நாம் தொடங்கும் செயலுக்கு எந்த விக்னமும் வரக்கூடாது என்பதே இப்படி வரைவதன் தாத்பர்யம் ஆகும்.

மங்கலச் சின்னம் ஸ்வஸ்திகா. இது ஸூர்யனின் வடிவத்தைக் குறிப்பதாகவும் சிலர் கூறுவர்.

 
 

அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக!




திரு விளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக!
குலம் விளங்க எங்கள் வீட்டில் கொலுவிருக்க வருக!
அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக!
அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக!
(திருவிளக்கை)

வாசலிலே மாக்கோலம் வீட்டினிலே லக்ஷ்மிகரம்
நெற்றியிலே ஸ்ரீசூர்ணம் நெஞ்சினிலே லக்ஷ்மிகரம்
அம்மா நீ ஆதரித்தால் அகிலமெல்லாம் இன்பமயம்
அஷ்டமா சித்தியுடன் லோகமெல்லாம் க்ஷேம மயம்
(அலைமகளே வருக)


மாவிலையும் தோரணமும் மங்களத்தின் அடையாளம்
ஊதுவத்தி எரிவதினால் உள்ளத்திலும் ஓரு வாசம்
அம்மா நீ அருள் புரிந்தால் அகிலமெல்லாம் அலங்காரம்
அன்றாடம் பாடிடுவோம் அஷ்டலக்ஷ்மி திருநாமம்!

சங்கு சக்ரதாரி நமஸ்காரம்!
சகலவரம் தருவாய் நமஸ்காரம்!
பத்ம பீட தேவி நமஸ்காரம்!
பக்தர் தமைக் காப்பாய் நமஸ்காரம்!!!
 
 

லட்சுமி கடாட்சம்!


செல்வத்தின் அதிபதியாம் மகா லட்சுமியை வழிபடுவதன் மூலமும் சுக்ர பகவானின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற முடியும்.

அவ்வகையில் ஸ்ரீசூக்தம், லட்சுமி பஞ்சகம், கனகதாரா ஸ்தோத்திரம் முதலான துதிநூல்களைப் பாராயணம் செய்து, திருமகளை ஆராதிக்கலாம். 

தமிழில், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய திருமகள் அந்தாதி எனும் நூல் உன்னதமானது. 

‘திருமகளே’ எனத் துவங்கி ‘திருமகளே’ என்றே முடியும் அந்த நூலில் 103 பாடல்கள் உண்டு. 

அவற்றில் கீழ்க்காணும் பாடலைப் பாடி வழிபடுவதால், நம் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் நீங்காது இருக்கும்.


திருமகளே!
திருப்பாற்கடல் 
ஊடன்று தேவர்தொழ வருமகளே!
உலகெல்லாமும் 
என்றென்றும் வாழவைக்கும் ஒருமகளே!
நெடுமால் உரத்தே 
உற்று உரம் பெரிது தருமகளே !
தமியேன் தலைமீது 
நின்தாள் வையே!

(திருமகள் அந்தாதி )

 
 

தித்திக்கும் வாழ்வளிப்பாள் திருமகள்!


சர்வ மங்களங்களையும் அளிக்கும் அந்தத் திருமகள் அவர வர் வீட்டில் திருவடி பதிக்கும் தினமாகவே பாவித்து பூஜிக்கப்படும் நாள் வரலட்சுமி விரத தினம்.

அன்புடன் அன்னை மகாலட்சுமியை வரலட்சுமி வடிவாக வரவேற்று பூஜிப்பதுதான் இந்த நோன்பின் நோக்கம்.
அப்படிச் செய்வதால், கனகமகள் கருணை யால், கஷ்டங்கள் யாவும் மறைந்து இஷ்டங்கள் ஈடேறும் என்பது நிச்சயம். அந்தத் தங்கமகள் உங்கள் வீட்டுக்கு வரும்போது பாமாலை ஒன்றைச் சூட்டி னாலே போதும், அலர் மகள் அகம் மகிழ்ந்து ஆசியளிப்பாள்.

புரந்தரதாசர் இயற்றிய இந்தப் புனிதத் துதி எளிய தமிழ் விளக்கத்துடன்!


 பல்லவி - ஸ்ரீராகம்
பாக்யாதா லக்ஷ்மி பாரம்மா நம்மம்ம நீ ஸௌ
பாக்யாதா லக்ஷ்மி பாரம்மா
சௌபாக்ய லக்ஷ்மியே வருவாய். நல்ல
பாக்யங்களை அருளுபவளே உனக்கு நல்வரவு.

 
சரணம்

கெஜ்ஜய காலு கிலு கிலு யெனுத
ஹெஜ்ஜய மயாலே ஹெஜ்ஜய நிக்குத
ஸஜ்ஜன ஸாது பூஜய வேளகே
மஜ்ஜிகே யொளகின பெண்ணே யந்தே (பா)

 
காலில் சலங்கை கிலுகிலு என்று ஒலிக்க அடிமேலடி எடுத்து வைத்து, ஒவ்வொரு அசைவிலும் மனதை ஈர்க்கும் விதமாய், நல்ல சாது ஜனங்கள்பூஜைசெய்யும் வேளையில், மோரிலிருந்து வெண்ணெய் எடுப்பதுபோல் திரண்ட ஒளியுடன் வருவாய்.

 
கனக வ்ருஷ்டி கரவுத பாரே
மன காமனெய ஸித்தி ஸிதோரே
தினகர கோடி தேஜவு ஹொளெயுத
ஜனகராயன குமாரி பாரே... (பா)

 
எங்கள் ஆசைகளையெல்லாம் சித்திக்கச் செய்ய கனக மழையைப் பொழியும் வகையில் கோடி சூர்ய பிரகாசமான ஒளியுடன் வருவாயாக. ஜனகராஜனின் குமாரியான எம் தாயே, வருக வருகவே!




சங்கேயில்லாத பாக்யவ கொட்டு
 
 
 
கங்கண கைய்ய திருகுத பாரே
குங்குமாங்கிதே! பங்கஜ லோசனே!
வெங்கட்ரமணன பட்டத ராணி

 
கஷ்டமே வராதபடியான குறைவில்லாத பாக்யத்தைக் கொடு; கங்கணம் போட்ட கை யால் அபயமளித்து வாம்மா. குங்குமக்காரியே! தாமரைக் கண்ணாளே! (குங்குமத்தை நிகர்த்த சிவப்பு நிற தாமரை போன்ற கண்களை உடையவளே) வெங்கடரமணனின் பட்டத்து ராணியே வாம்மா. (வரலட்சுமியை வீட்டினுள் வரவேற்றுச் சொல்வது)

 
அத்தித் தொலவித பக்தா மனயெஸி
நித்ய மஹோத்ஸவ நித்ய ஸுமங்கள
ஸத்யவு தோருதஸ மனதலி
சித்ததிஹொளயுவ புத்ததி பொம்பே.

 
பக்தர்கள் எங்கள் வீட்டில் எப்பொழுதும் நீ வந்து நிலைத்து நின்று நித்ய மகோத்சவமாக நடக்க வருகவே! சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் சாதுக்களின் மனதில் எப்பொழுதும் சித்தி கிடைக்க அருள்பவள் நீயே.

 
ஸக்கர துப்பவ காலிவிஹரிஸு
ஸுக்ர வாரத பூஜய வேளகே
அக்கரெயுள்ள அளகிரிராயன
சொக்கு புரந்தல விடலனப்ரியே. (பா)

 
புரந்தர விட்டலனின் பிரியமான பாக்யத்தை அருளும் சௌபாக்யலக்ஷ்மியே வாம்மா. வெள்ளிக்கிழமைகளில் செய்யும் பூஜையின்போது சர்க்கரை, நெய் ஆகியவற்றைக் கொண்டு நான் செய்யும் நைவேத்யத்தை ஏற்று அருள்க. உன் வரவு நல்வரவு ஆகுக. சௌபாக்யம் அருள என் அம்மாவே வாம்மா!

வரலட்சுமியை வரவேற்றுவிட்டால் மட்டும் போதுமா?

உங்கள் வீடு வரும் மகாலட்சுமியை மனதாரப் பணிந்து பாக்யங்களைப் பெற சொல்லவேண்டிய துதி இதோ...

ஸ்ரீமஹாலக்ஷ்மி ஸ்துதி!

ஆதிலக்ஷ்மி நமஸ்தே அஸ்து பரப்ரஹ்ம ஸ்வரூபிணி |
யசோதேஹி தனம் தேஹி ஸர்வ காமாம் ச தேஹிமே||

பரப்ரம்ம சொரூபமான ஆதிலக்ஷ்மியே உனக்கு நமஸ்காரம். புகழ், தனம் ஆகியவற்றைக் கொடு. என் நியாயமான தேவைகளை நிறைவேற்று.

ஸந்தானலக்ஷ்மி நமஸ்தே அஸ்து புத்ர பௌத்ர ப்ரதாயினி|
புத்ரான் தேஹி தனம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே||

பிள்ளைகள், பேரன்களை அளிக்கும் சந்தான லக்ஷ்மியே உனக்கு நமஸ்காரம். என் சந்ததியருக்கு வாரிசை கொடு. செல்வத்தைக் கொண்டு நிறைவேறும் ஆசைகளை ஈடேற அருள்வாய்.

வித்யாலக்ஷ்மி நமஸ்தேஸ்து ப்ரம்ம வித்யா ஸ்வரூபிணி|
வித்யாம் தேஹி கலாம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே||

பிரம்ம வித்யா சொரூபிணியான வித்யா லக்ஷ்மியே உனக்கு நமஸ்காரம். வித்தைகளைக் கொடு. கலைகளைக் கொடு. எல்லா ஆசைகளையும் நிறைவேற்று.

தனலக்ஷ்மி நமஸ்தே அஸ்து. ஸர்வ தாரித்ரிய நாசினி|
தனம்தேஹி ச்ரியம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே||

ஏழ்மையை அழிக்கும் தனலட்சுமியே தனத்தைக் கொடு. திருவைக்கொடு. எல்லா விருப்பங்களுக்கும் பூர்த்தியைக் கொடு.

தான்யலக்ஷ்மி நமஸ்தே அஸ்து ஸர்வாபரண பூஷிதே|
தான்யம் தேஹி தனம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே||

சர்வாபரண பூஷிதையான தான்யலக்ஷ்மியே உனக்கு நமஸ்காரம். தான்யத்தைக் கொடு. தனத்தைக் கொடு. இஷ்டங்களை நிறைவேற்று.

மேதாலக்ஷ்மி நமஸ்தே அஸ்து கலிகல்மஷ நாசினி |
ப்ரஜ்ஞாம் தேஹி ச்ரியம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே ||

வினைப்பயனைத் தீர்க்கும் மேதாலக்ஷ்மியே உனக்கு நமஸ்காரம். எனக்கு ஞானத்தைக் கொடு. லக்ஷ்மிகரத்தைக் கொடு. ஆசைகளை நிறைவேற்று.

கஜலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸர்வதேவ ஸ்வரூ பிணி |
அச்வாம்ச்ச கோகுலம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே ||

எல்லா தேவர்களின் அம்சங்களும் உள்ளவனே, உனக்கு நமஸ்காரம். ஆநிரை, குதிரைகள், அபீஷ்டங்களைக் கொடு.

வீரலக்ஷ்மி நமஸ்தேஸ்து பராசக்தி ஸ்வரூபிணி|
வீர்யம் தேஹி பலம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே ||

பராசக்தி சொரூபமான வீரலக்ஷ்மியே உனக்கு நமஸ்காரம். எனக்கு வீர்யத்தைக் கொடு. பலத்தைக் கொடு. பலிக்கக்கூடிய இஷ்டங்களைக் கொடு.

ஜயலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸர்வ கார்ய ஜயப்ரதே |
ஜயம் தேஹி சுபம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே ||

அனைத்துச் செயல்களிலும் வெற்றியைத் தரும் ஜயலக்ஷ்மியே, உனக்கு நமஸ்காரம். வெற்றியைக் கொடு. சுபத்தைக் கொடு. சர்வா பீஷ்டத்தையும் கொடு.

பாக்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸௌ மாங்கல்ய விவர்தினி |
பாக்யம் தேஹி ச்ரியம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே ||

சௌமாங்கல்யத்தை அருளும் பாக்ய லக்ஷ்மியே, உனக்கு நமஸ்காரம். பாக்யத்தைக் கொடு. திருவருளைக் கொடு. எல்லா இஷ்டங் களையும் நிறைவேற்று.

கீர்த்திலக்ஷ்மி நமஸ்தேஸ்து விஷ்ணு வக்ஷஸ்ஸ்தலஸ்திதே |
கீர்த்திம் தேஹி ச்ரியம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே ||

பகவான் மகாவிஷ்ணுவின் திருமார்பில் வசிக்கும் கீர்த்திலட்சுமியே, உனக்கு நமஸ்காரம்.  நீங்காப் புகழ் பெற உன் திருவருளை எனக்குக் கொடு. சர்வாபீஷ்டத்தைக் கொடு.

ஆரோக்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸர்வரோக நிவாரணி |
ஆயுர்தேஹி ச்ரியம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே ||

எல்லா நோய்களையும் தீர்க்கக்கூடிய ஆரோக்யலட்சுமியே, உனக்கு நமஸ்காரம். நீண்ட ஆயுளையும் லட்சுமிகரத்தையும் கொடு. சர்வா பீஷ்டமும் நிறைவேற அருள் செய்.

ஸித்தலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸர்வ ஸித்திப்ரதாயினி |
ஸித்திம்தேஹி ச்ரியம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே||

எல்லா சித்திகளையும் அளிக்கும் சித்த லட்சுமியே உனக்கு நமஸ்காரம். சித்தியைக் கொடு. திருவருளைக் கொடு. எனது எல்லா ஆசைகளையும் நிறைவேற்று.

சௌந்தர்ய லக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸர்வாலங்கார சோபிதே |
ரூபம் தேஹி ச்ரியம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே ||

சர்வாலங்காரங்களுடன் விளங்கும் சௌந் தர்ய லட்சுமியே உனக்கு நமஸ்காரம். நல்ல வடிவம் கொடு. லட்சுமிகரத்தைக் கொடு. சர்வா பீஷ்டமும் நிறைவேற அருள்செய்.

ஸாம்ராஜ்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து பக்தி முக்தி ப்ரதாயினி|
மோக்ஷம் தேஹி ச்ரியம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே ||

பக்தி முக்தி என்று இரண்டையும் அளிக்க வல்ல சாம்ராஜ்ய லட்சுமியே, எனக்கு மோக்ஷத்தைக் கொடு. திருவருளைக்கொடு. எல்லா ஆசைகளையும் நிறைவேற்று.

மங்களே மங்களாதார மாங்கல்ய மங்கள
ப்ரதே |

மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹிமே ஸதா ||

மாங்கல்யத்தை அருளக்கூடிய மங்களேஸ் வரியே மங்களத்தைப்பெற, மங்கள மயமான மாங்கல்யத்தை எனக்குக் கொடு.

ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே |
சரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி
நமோஸ்துதே ||

எல்லா மங்களங்களும் அருளும் மாங்கல்ய தேவியே, கே்ஷமத்தைக் கொடுப்பவளே, எல்லாவற் றையும் சாதிக்கக் கூடியவளே, த்ரயம்பகே, நாராயணியே, உன்னைச் சரணடைந்தவர்களை ரக்ஷிப்பவளே உனக்கு நமஸ்காரம்.

சுபம் பவது கல்யாணி! ஆயுராரோக்ய ஸம்பதாம் |
மம சத்ரு விநாசாய தீப ஜோதி
நமோஸ்துதே ||

அன்னை கல்யாணியே, சுபம் நடக்கட்டும். ஆயுள், ஆரோக்யம், சம்பத்துக்காகவும், என் எதிரிகளின் நாசத்துக்காகவும் தீப ஜோதியான உனக்கு நமஸ்காரம் செய்கிறேன்.