Saturday 25 June 2016

திருமண வரமருளும் திருவிடந்தை!


                     
சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில், சுமார் 42 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது நித்திய கல்யாணப் பெருமாள் திருக்கோவில். இது சுமார் 1200 ஆண்டுகள் பழமையானது. கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமங்கை யாழ்வார் திருவிடந்தைப் பெருமாளை போற்றிப் பாசுரங்கள் பாடி யுள்ளார். 108 திவ்ய தேசங்களில் 62-ஆவது திவ்ய தேசமாக இத்தலம் போற்றப்படுகிறது.

இந்த ஊரின் பெயர் நித்யகல்யாணபுரி. கடவுளின் பெயர் நித்யகல் யாணப் பெருமாள். கோயில் விமானமோ கல்யாண விமானம். திருக்குளத்தின் பெயர்- கல்யாணதீர்த்தம்.

ஆதிவராகப் பெருமாளும் அகிலவல்லி நாச்சியாரும் ஏன் கோமளவல்லித் தாயாரும் தினசரி காட்சி தருவதும் கல்யாணக் கோலத்தில் தான். ஆலயத்தின் தலமரமோ, மணவிழாவிற்கு உகந்த புன்னை.

நம் ஊர்க் கல்யாணங்களின்போது மாப்பிள்ளை, பெண்ணுக்குக் கன்னத்தில் திருஷ்டிப்பொட்டு வைப்பார்களே, பார்த்திருக்கிறீர்களா? அதுபோல் இயற்கையாகவே நித்யகல்யாணப் பெருமாளுக்கும், கோமளவல்லித் தாயாருக்கும் திருஷ்டிப் பொட்டு அமைந்திருப்பது இங்கே பேரதிசயம்.!

பெருமாளுக்கு இங்கே தினந்தோறும் கல்யாணம் நடக்கிறது. 108 திவ்ய தேசங்களுள் இத்திவ்ய தேசத்தில் மட்டுமே ஆண்டின் 365 நாட்களிலும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

இங்குள்ள பெருமாளுக்கு நித்ய கல்யாணப் பெருமாள் என்று பெயர் வந்த காரணத்தை தல வரலாறு சுவைபடக் கூறுகிறது.

சரஸ்வதி நதிக்கரையில் வசித்து வந்த காலவ மகரிஷி, தெய்வீக அம்சம் கொண்ட ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.முனிவருக்கு ஒரே வருடத்தில் 360 பெண் குழந்தைகளைப் பெற்றுத் தந்துவிட்டு சொர்க்க லோகம் சென்று விட்டாள் அவரது மனைவி.அத்தனை பெண் குழந்தைகளை வைத்து, காப்பாற்றச் சிரமப்படும் முனிவர், இறுதியில் இந்த திருவிடந்தைக்கு வந்தார். இங்கே அருள்பாலிக்கும் வராகமூர்த்தியை வணங்கினார்.தேவர்களுடன் போரிட்டதால் சாபம் பெற்ற பலி மன்னனுக்குக் காட்சி தந்து ரட்சித்த வராகர், இவர்தான் என்பதால், தன் மகள்களுக்கும் இவரே நல்வாழ்க்கையை அமைத்துத் தருவார் என்று நம்பினார் காலவ மகரிஷி. தன் 360 பெண்களும் பெரிய பிராட்டியாரின் அம்சம் என்பதும் அந்த வராகர்தான் தன் மருமகன் என்பதும் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.தினம் தினம் திருமணம்!

முனிவரின் கவலையைத் தீர்க்க, வராகப் பெருமாள், பிரம்மசாரி உருவெடுத்து பெண் கேட்டு வந்தார்.தினம் ஒரு கன்னிகை வீதம் 360 நாட்களுக்கு ஒவ்வொருவராகத் திருமணம் செய்து கொண்டார் பெருமாள்.கடைசி தினத்தில் 360 மனைவிகளையும் ஒன்றாகச் சேர்த்து அணைத்து ஒரே பெண்ணாக ஆக்கி தன் இடது பக்கத் திருத்தொடையில் வைத்துக்கொண்டு வராகப் பெருமாளாக அனைவருக்கும் காட்சியளித்தார். (இப்போதும் அதே காட்சியை நாம் தரிசிக்கலாம்).

360 கன்னிகள் சேர்ந்து ஒருங்கே உருவானதால், வராகரின் இடபாகத்தில் உள்ள நாச்சியாருக்கு அகில வல்லித் தாயார் என்றும் வருடம் பூராவும் திருமணம் செய்துகொண்டதால், வராகருக்கு, நித்யகல்யாணப் பெருமாள் என்றும், இந்த தலம் "நித்ய கல்யாணபுரி' என்றும் பெயர்கள் ஏற்பட்டன. 360 பெண்களில் மூத்தவளின் பெயர் கோமள வள்ளி என்பதால், இங்கே தனிக் கோயிலில் காட்சி தரும் தாயாருக்கும் கோமளவல்லி என்றே பெயர்.

`திரு' (லட்சுமி)வை தனது இடது பக்கத்தில் பெருமாள் வைத்துக் கொண்டதால், இந்த ஊருக்குத் `திருஇடவெந்தை' என்ற பெயர் ஏற்பட்டது. தேவியைத் தனது இடப்பக்கத்தில் எழுந்தருள வைத்து சரம ஸ்லோகத்தை உலகத்தாருக்கு உபதேசித்து அருளினார்.

(இதுபோல மனைவியை வலது பக்கத்தில் வைத்துக்கொண்டு, வராகர் காட்சி தரும் திருவலவெந்தை என்ற கோயில் மகாபலிபுரத்தில் இருக்கிறது.)கோமளம் என்ற தாயாரின் பெயர் திரிந்தே கோவளம் என்ற பெயரும் ஏற்பட்டது!



தோரணவாயிலின் மேல்மண்டபத்தில், ஸ்ரீஆதிவராக மூர்த்தி தேவியுடன் இருக்கும் சுதை யிலான சிற்பம் எழிலுற அமைக்கப்பட் டுள்ளது. அதை அடுத்துள்ள மண்டபத்தின் கல் தூண்களில் அழகிய புடைப்புச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன. ஸ்ரீ மகாவிஷ்ணு, காளிங்க நர்த்தனர், நரசிம்மர் ஆகியவர்களின் சிற்பங்கள் மிக அற்புதமாக உள்ளன. அதைக் கடந்து சென்றால் இராஜகோபுரம், பலிபீடம், கொடிக் கம்பத்தைக் காணலாம்.

கருவறையில் மூலவரான ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் சுமார் ஆறரை அடி உயரமுள்ள கல் விக்ரகமாக- இடது காலை மடக்கி ஆதிசேஷன் தலைமீது வைத்து, அத்தொடையில் அகிலவல்லித் தாயாரைத் தாங்கி கொண்டு அற்புதமாக வீற்றிருக்கிறார். பெருமாளின் திருவடியின்கீழ் தன் பத்தினியுடன் ஆதிசேடன் உள்ளார்.



உற்சவரான ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி ஆகியோர் பஞ்சலோக விக்ர கங்களாகக் காட்சி தருகின்றனர். 


ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாளின் திருமுகத்தில் திருஷ்டிப் பொட்டு ஒன்று உள்ளது. இது இயற்கையிலேயே அமைந்ததாம். இந்த திருஷ்டிப் பொட்டையும் தனிச்சந்நிதி தாயாரான கோமள வல்லித் தாயாரின் திருமுகத்தில் இருக்கும் திருஷ்டிப் பொட்டை யும் தரிசிப்பவர்களுக்கு திருஷ்டி தோஷம் விலகும் என்கிறார்கள்.

ரங்கநாதர், ரங்கநாயகித் தாயார் சந்நிதியும் சிறப்பாக அமைந்துள்ளது. இவர் களை வழிபட சுக்கிர தோஷம் நீங்கும் என்கிறார்கள்.  ஆழ்வார்கள், தும்பிக்கையாழ்வார், சத்தியன், அச்சுதன், அநிருத்தன், வைஷ்ணவி ஆகியோரும் இந்த ஆலயத்தில் தரிசனம் தருகிறார்கள்.



ஆண்டாளும் எழிற்கோலத் தில் காட்சி தருகிறார்.

வைகானச ஆகம விதிகளின் படி தினமும் நான்கு கால பூஜைகள் நடத்தப் பெறுகின் றன. தல விருட்சமாக புன்னை மரமும்; தல புஷ்பமாக அரளிப் பூவின் வகையைச் சேர்ந்த கஸ்தூரியும் விளங்குகின்றன.

ஆதிசேஷன் தன் பத்தினியுடன் பெருமாளின் காலடியில் சேவை சாதிப்ப தால், ராகு- கேது தோஷ நிவர்த்தி தலமாகவும்; ரங்கநாதப் பெருமாள் பள்ளி கொண்ட கோலத்தில் தேவியருடன் காட்சி யளிப்பதால் சுக்கிர தோஷ நிவர்த்தித் தலமாகவும் இது விளங்குகிறது.

திருமணமாகாத ஆண்களும் பெண்களும் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் நிச்சயம் திருமணம் நடக்கும் என முழு நம்பிக்கையுடன் பக்தர்கள் கூறுகிறார்கள்

விரைவில் திருமணம் நடக்க வேண்டும் ஒன்று விரும்பும் ஆணோ, பெண்ணோ- இங்குள்ள கல்யாண தீர்த்தத்தில் நீராடி விட்டு, மிகவும் பயபக்தியுடன் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு மற்றும் இரண்டு கஸ்தூரி மாலைகளுடன் தன் பெயரில் அர்ச்சனைச் சீட்டு வாங்கி அர்ச் சனை செய்துவிட்டு, அர்ச்சகர் கொடுக்கும் ஒரு மாலையைக் கழுத்தில் அணிந்து கொண்டு கோவிலை ஒன்பது முறை வலம் வர வேண்டும். பிறகு கொடி மரத்தின் அருகில் வணங்கிவிட்டு, அந்த மாலையை வீட்டிற்கு எடுத்துச் சென்று பத்திர மாக சுவரில் மாட்டி வைக்க வேண்டும். திருமணம் முடிந்த பிறகு தம்பதி சகிதமாக பழைய மாலை யுடன் வந்து பெருமாளுக்கு அர்ச்சனை செய்து விட்டுச் செல்ல வேண்டும் என்று கூறுகிறார்கள்.

தினந்தோறும் திருமணம் செய்துகொண்ட பெருமாளை தரிசனம் செய்வதால், இங்கே வரும் பக்தர்களுக்கும் விரைவில் திருமணம் நடைபெற்றுவிடுகிறது. 

இங்கு சித்திரைப் பெருவிழா மிகவும் சிறப்பாக பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. வைகாசி யில் வசந்த உற்சவமும், ஆனி மாதத்தில் கருட சேவையும், ஆடிப் பூரத்தில் சூடிக்கொடுத்த சுடர்க் கொடிக்கு திருக்கல்யாண உற்சவமும், புரட் டாசியில் நவராத்திரி உற்சவமும் விமரிசையாக நடத்தப்படுகின்றன. நவராத்திரியின் ஒன்பது நாட் களிலும் கோமளவல்லித் தாயாருக்கு வெவ்வேறு விதமாக அலங்காரங்கள் செய்யப் படுகின்றன.

பங்குனி மாத உத்திர நட்சத் திரத்தில் பெருமாளுக்கு திருக் கல்யாண உற்சவம் நடைபெறு கிறது.



உற்சவ காலங்களில் ஸ்ரீஆதி வராகர் தேவியுடன் கோவிலுக்கு வெளியே மின்விளக்கு அலங் காரத்தில் சேவை சாதிக்கிறார்.

திருமங்கையாழ்வார், இந்தப் பெருமாளை பத்துப் பாடல்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.அது மட்டுமல்ல, திருப்பதி திருமலைக்கு ஆழ்வார் சென்றபோதுகூட, அவருக்கு இந்த திருவிடந்தை பெருமாளின் நினைவுதான்.திருப்பதி குளக்கரையில் அருள்பாலிக்கும் வராகரைப் பார்த்ததும், `ஏத்துவார்தம் மனத்துளான் இடவெந்தை மேவிய எம்பிரான்' என்று இந்தப் பெருமாள் நினைவாகத்தான் பாடினார் திருமங்கையார்.அதனால், திருவிடந்தை பெரு மாளை தரிசனம் செய்தால் திருப்பதி பெருமாளை தரிசனம் செய்வதற்குச் சமம் என்று கூறலாம்.



108 திருப்பதிகளில் பெருமாள் வராகமூர்த்தியாக தம்பதி சமேதராக ஆதிசேஷன், பெருமாள் திருவடியைத் தாங்கி தரிசனம் தரும் திருப்பதியும் இது மட்டும்தான்.  உற்சவர் பெருமாளுக்கும், தாயாருக்கும் தாடையில் திருஷ் டிப்பொட்டு இயற்கையாகவே அமைந் துள்ளதால் அவர்களை வணங்கினால் இதுநாள் வரை உங்களுக்கு ஏற்பட்ட திருஷ்டிகளும் பறந்துவிடும்.


தினசரி காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை யிலும்; மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

விரைவில் திருமணப் பேறை அருளும் திருவிடந்தை அருள்மிகு நித்திய கல்யாணப் பெருமாள் திருக்கோவிலை நீங்களும் சென்று தரிசியுங்கள்.

சென்னை அடையாரிலிருந்து எண். 588, தியாகராய நகரிலிருந்து எண். 599, ஜி19, பிராட்வே யிலிருந்து எண். பிபி19, கோயம் பேட்டிலிருந்து தடம் எண்கள். 118, 118சி, 188டி, 188கே உள்ளிட்ட பேருந்துகள் திருவிடந்தை செல்கின்றனர்.

மாமல்லபுரம் செல்லும்  வழியில் திருவிடந்தையில்  உள்ள இந்த திருக்கோவிலுக்குச் சென்று  ஆறரை அடி உயரத்தில் பிரமாண்டமாக அருளாட்சி புரியும் நித்யகல்யாணப் பெருமாளை தரிசனம் செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கை பளபளவென ஒளி பொருந்தியதாக மாறும்.

 

 


 

 

Monday 20 June 2016

சிந்தை குளிர வரமளிப்பாள் சித்ரா நித்யா!






திதி நித்யா தேவிகளில் கடைசி தேவியான சித்ரா நித்யா பால சூரியனைப் போன்ற தேக காந்தி கொண்டவள். பிறைச் சந்திரனை தரித்து சர்வ அலங்காரங்களுடனும் சகல லட்சணங்களுடனும் திருவருட்பாலிக்கிறாள். பாசம், அங்குசம், வரதம், அபயமுத்திரை தரித்து பட்டாடை அணிந்து முக்கண்ணியாய் காட்சியருள்கிறாள். கருணையே உருவான இந்த தேவி தாங்க முடியாத வேதனையில் வருந்தும் உயிர்களை அணைத்து ஆதரிப்பவள். நம் உள்ளத்தில் புகும் பயனற்ற தீய குணங்களை நீங்கி ஞான தீபத்தை ஏற்றுபவள். சோதனைகளை வென்று சாதனைகளைச் செய்ய திருவருள்புரிபவள். நம்பினோர்க்கு அபயம் அருளும் சம்பு மோகினி. ஜகன்மாதா.


அழகே வடிவாய் அருளே உருவாய் பிரகாசிக்கும் இந்த சித்ரா நித்யா தேவி சர்வானந்தமயீ. என்றும் நிலையானவள். கனவிலும் நினைவிலும் அடியவர் இதயத்தில் வீற்றிருந்தருள்பவள். அண்டங்கள் அனைத்திலும் தன் மகிமை வெளிப்படத் திகழ்பவள். தனிப்பெரும் பரம்பொருள். நம் எண்ணத்திற்கு எட்டாத வஸ்து அவள். எண்ணிய எண்ணம் கடந்து நின்றாள் என்ற திருமூலர் வாக்குப்படி மனோவாசாம கோசரா என நம் மனதுக்கும் வாக்குக்கும் எட்டாதவள்.  யதோ வாசோ நிவர்த்தந்தே என்கிறது தைத்ரிய உபநிஷத்.  அவள் இப்படிப்பட்டவள்தான் என்று முழுக்க அறிந்தவர் யாருமில்லை.  மனத்தே ஒருவர் விழும்படி அன்று விள்ளும்படி அன்று என்றார் அபிராமி பட்டர்.

 சக்தியைப் பணிந்தால் சர்வமும் நிச்சயம். அன்னையே உன்னைப் போற்றுகிறோம். திருவருள் மழை பொழிக. நலமெல்லாம் அருள்க.

வழிபடு பலன்

தன ஆகர்ஷணம், நிதி லாபங்கள், புதையல் போன்ற திடீர் சம்பத்துக்கள் கிட்டும். சகல நன்மைகளும் மென்மேலும் விருத்தியாகும்.

சித்ரா காயத்ரி

ஓம் விசித்ராயை வித்மஹே மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவி பிரசோதயாத்.

மூல மந்திரம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் அம் ச்கெளம் சித்ராயை நம:

த்யான ஸ்லோகங்கள்

உத்யதாதித்ய ஸங்காஸம் நவரத்ன விபூஷணாம்
நவரத்ன கிரீடம் ச சித்ர பத்மாங்கு ஸோஜ்வலாம்
சதுர்புஜாம் த்ரிநயனாம் ஸுசின் முகஸன்முகீம்
ஸர்வானந்தமயீம் நித்யாம் ஸமஸ்தேப் ஸித தாயினீம்
சதுர்புஜாம் புஜை: பாசமங்குசம் சவராபயே
ததானாம் மங்கலாம் பத்மகர்ணிகாம் நவயெளவனாம்.


ஸுப்ராங்கீம் க்ஞானதாம் நித்யாம் விசித்ராம் குங்குமோஜ்ஜ்வலாம்
வரதாபய ஸோபாட்யாம் நாநா சஸ்த்ர தராம்க்வசித்
பாலார்க்க மண்டலாபாஸாம் சதுர்பா ஹும் த்ரிலோசனாம்
பாசாங்குஸெள ச வரம் சாபம் தாரயந் தீம் ஸிவாம் பஜே.


சித்ராம் ஸந்தத கமலவதனாம் மகுடத ராம் சித்ராம்பராலங்குதாம்
சித்ரூபாம் பரதேவதாம், ஸ்மித முகீம், சிந்தாகுல த்வம்ஸினீம்
அத்வைதாம்ருத வர்ஷிணீம் ஹரிஹர ப்ரம்ஹாதிபிர்வந்திதாம்
ஸத்யாம் ஸாமஜராஜ மந்தகமனாம் ஸர்வேச்வரீம் பாவயே.


ஸுத்தஸ்படிக ஸம்ஹாஸாம் பலாசகு ஸும ப்ரபாம்
நீலமேக ப்ரதீகாராம் சதுர்ஹஸ்தாம் த்ரிலோசனாம்
ஸர்வாலங்கார ஸம்யுக்தாம் புஷ்ப பாணேஷு சாபினீம்
பாசாங்குச மோபேதாம் த்யாயேந் சித்ராம் மஹேஸ்வரீம்.


ஸ்ரீ ஸுக்த நித்யா ஸ்லோகம்

ஸ்ரீ ஸுக்த ஸம்ஸ்துதாம் அம்கார ப்ரக்ருதிக, பூர்ண கலாத்மிகாம்
ஸ்ரீ சித்ரா நித்யா ஸ்வரூபிணீம் ஸர்வாசார பரிபூரக சக்ர ஸ்வாமினீம் அம்ருதாகர்ஷிணீ சக்தி  ஸ்வரூபாம்
ஸ்ரீ புருஷோத்தம  வக்ஷஸ்த கமல வாஸினீம் ஸர்வ மங்கள தேவதாம்
ஆரோக்ய லக்ஷ்மீ ஸ்வரூப சித்ரா நித்யாயை நம:


வழிபட வேண்டிய திதிகள்

ஸுக்ல பக்ஷ பவுர்ணமி ./ க்ருஷ்ண பக்ஷ ப்ரதமை. (பவுர்ணமி திதி ரூப சித்ரா நித்யாயை நம)

நைவேத்தியம் : பாயஸம்.

பூஜைக்கான புஷ்பங்கள் : பல நிற பூக்கள்.

திதி தான பலன் : இந்த அம்பிகைக்கு பாயஸம் நிவேதித்து தானம் செய்தால் பித்ருக்கள் ஆசி கிட்டும்.


பஞ்சோபசார பூஜை

ஓம் சித்ரா நித்யாயை கந்தம் கல்பயாமி நம:
ஓம் சித்ரா நித்யாயை தூபம் கல்பயாமி நம:
ஓம் சித்ரா நித்யாயை தீபம் கல்பயாமி நம:
ஓம் சித்ரா நித்யாயை நைவேத்தியம் கல்பயாமி நம:
ஒம் சித்ரா நித்யாயை கற்பூர நீராஞ்ஜனம் தர்சயாமி நம:


இத்திதியில் பிறந்தோரின் குணநலன்கள்

இத்திதியில் பிறந்தவர்கள் அழகிய உடலமைப்பு கொண்டவர்கள். தேவர்களாலும் அந்தணர்களாலும் கொண்டாடப்படுபவர்கள். போக பாக்கியங்களை சலிக்கச் சலிக்க அனுபவிப்பவர்கள். தன் சுற்றத்தாரை ஆதரிப்பவர்கள். கருணையால் புகழ்பெறும் பேறு பெற்றவர்கள்.

யந்திரம் வரையும் முறை

சந்தனக் குங்கும கலவையால்  ஒன்பது கோணங்கள், வட்டம், எட்டிதழ்கள், பதினாறு இதழ்கள், முப்பத்தியிரண்டு இதழ்கள், நான்கு வாயில்களுடைய இரு சதுரங்கள் வரையவும். கீழ்க்காணும் தேவியின் சக்திகளை தியானித்து பூஜிக்கவும். பத்ரா, பவானீ, பவ்யாக்ஷீ, விஸாலாட்சீ, ஸுசிஷ்மிதா, ககுபா,
கமலாக்ஷீ, கல்பா போன்ற சக்திகளை எட்டிதழ்களிலும், கலா, பூரணி, நித்யா, அம்ருதா, ஜீவிதா, தயா, அஸோக, அமலா, பூர்ணா, புண்யா, பாக்யா, உத்யதா, விவேகா, விபவா, விஸ்வா, வினதா போன்ற சக்திகளை பதினாறிதழ்களிலும் தியானித்து பூஜிக்கவும். முப்பத்தியிரண்டு இதழ்களில் தேவியின் பாதுகாப்பு சக்திகளை தியானம் செய்து பூஜிக்கவும்.

இத்திதிகளில் செய்யத்தக்கவை

வேள்விகள், மங்களகரமான செயல்கள், தேவி உபாசனை, மனை சம்பந்தமான செயல்கள், திருமணத்திற்கான அணிகலன்கள் செய்தல், உடற்பயிற்சி வகுப்புகளில் சேர்தல் முதலியன.

அகத்தியர் அருளிய சுக்லபக்ஷ சித்ரா நித்யா துதி:
 
பெளரணையாய்க் கலைகள் பதினாறு மாகிப்
பார் நிறைந்து மதிவதனப் பால ரூபி
சவரணையாய் உலகனைத்துந் தாங்குஞ் சக்தி
தற்பரத்தி சிற்பரத்தி சராச ரத்தி
நவரத்ன பீடத்தில் நிறைந்து நின்ற
நாற்பத்து முக்கோண நவர சத்தி
சவரணையாய் கனகசபை தன்னில் வாழும்
சோதியே மனோன்மணியே சுழிமுனை வாழ்வே.


அகத்தியர் அருளிய கிருஷ்ணபக்ஷ சித்ரா நித்யா துதி

பவரணையில் பதினாறு கலையுமாகி
பார் நிறைந்த மதிவதன பாலரூபி
நவரத்தின பீடமதாய் வீற்றிருந்த
நாற்பத்தி முக்கோண நவரசத்தி
சவரணையாய் உலகளித்த தாயேஎன் மேல்
தற்பரையே சிற்பரையே சராசரத்தி
சுவரணையாய் பிள்ளை முகம் பார்த்துக்
காப்பாய் சோதியே மனோன்மணியே சுழிமுனை வாழ்வே.


கனல்கோடி ரவிகோடி காந்திகோடி
கண் கொள்ளா இடிகோடி மின்னல் கோடி
அனல்கோடி முகில்கோடி அனந்தம் கோடி
அண்ட யோசனை மூன்று லக்ஷம் கோடி
புனல்கோடி வினைகோடி பரமும் கோடி
புருவமையத்து அடியிலகு சிறு பெண் ஆத்தாள்
முனைகோடியாம் வாலாம்பிகையே தண்ணில்
முடிவணங்கி திருவடியைக் கும்பிட்டேனே.


மாத்ருகா அர்ச்சனை

ஓம் விசித்ராயை நம:
ஓம் சித்ரவஸனாயை நம:
ஓம் சித்ரிண்யை நம:
ஓம் சித்ரபூஷணாயை நம:
ஓம் அனுலோமாயை நம:

ஓம் ஆபஸந்தயே நம:
ஓம் மத்யமாயை நம:
ஓம் அநாமிகாத்மிகாயை நம:
ஓம் தேஜோவத்யை நம:
ஓம் பத்மகர்ப்பாயை நம:

ஓம் மந்தரேகாயை நம:
ஒம் கருணாவத்யை நம:
ஒம் விதூஷ்யை நம:
ஓம் மோலின்யை நம:
ஓம் வ்யக்தாயை நம:

ஓம் ஸுகேஸ்யை நம:
ஓம் ஸோமபாயை நம:
ஓம் ஸோமஸங்காஸாயை நம:
ஓம் வேதால்யை நம:
ஓம் தால சஞ்சிகாயை நம:

ஓம் ஸோமப்ரியாயை நம:
ஓம் ஸோமவத்யை நம:
ஓம் மந்த்ரபூதாயை நம:
ஓம் ணுயஜுக்ரியாய நம:
ஓம் ம்ருணால்யை நம:

ஓம் ருக்ப்ரதாயை நம:
ஓம் ஸக்தயே நம:
ஓம் விந்த்யாத்ரி ஸிகரஸ்திதாயை நம:
ஓம் கதின்யை நம:
ஓம் சக்ரிண்யை நம:

ஓம் பிம்பாயை நம:
ஓம் ரக்தோஷ்ட்யை நம:
ஓம் சாருஹாஸின்யை நம:
ஓம் வாக்பவாயை நம:
ஓம் சாருஜாயை நம:

ஓம் ரக்தாயை நம:
ஓம் ஸுப்ரஸிதாயை நம:
ஓம் ஸுலோசனாயை நம:
ஓம் கெளஸிக்யை நம:
ஓம் ககுத்யை நம:

ஓம் காமலோசனாயை நம:
ஓம் காமோத்ஸவயை நம:
ஓம் காமசாராயை நம:
ஓம் அகாமாயை நம:
ஓம் பூஜிதாயை நம:

ஓம் பராயை நம:
ஓம் நத்வாவலோகாயை நம:
ஓம் பூரஜிதே நம:
ஓம் ராஜ்யை நம:
ஓம் ஸுந்தர்யை நம:










சர்வ மங்களம் அருளும் ஸர்வ மங்களாதேவி!

தங்கநிறம் கொண்ட இத்தேவி தாமரை மலரில் வீற்றருள்பவள். அன்னையின் திருவுடலை செந்நிற ரத்தினக் கற்களும், முத்துகள் பொதிந்த பதக்கங்களும், மாலைகளும் அணிசெய்கின்றன. கைகளில் வளையல்கள், தோள்வளை, முத்துகளும் மாணிக்கங்களும் பதித்த மகுடம் மற்றும் தண்டை ஆகியவற்றை அணிந்து ஸர்வாலங்கார பூஷிதையாக தேவி பொலிந்து அருள்கிறாள்.

இந்த அம்பிகை எப்போதும் அனைத்து மங்களங்களுடனும் இருப்பவள்; அந்த மங்களங்களை தன் பக்தர்களுக்கு அருள்வதிலும் தன்னிகரற்றவள். இத்தேவியின் கடைக்கண் பார்வை அனவரதமும் அன்பர்களைக் காக்கின்றது. தன் நான்கு கரகமலங்களிலும் மாதுளம்பழம், தங்கப் பாத்திரம், அபயவரதம் தரித்துள்ளாள். சிவப்புப் பட்டு உடுத்தியவள். இந்த அம்பிகையைச் சுற்றி 72 சக்திகள் காவலாய் உள்ளதாய் புராணங்கள் பகர்கின்றன.

ஸர்வ மங்களாதேவி திதி நித்யா தேவிகளுக்கு மாறாக ஆயுதங்கள் ஏதுமின்றி சாந்த வடிவினளாக அருட்காட்சியளிக்கிறாள். சௌம்யமான அன்னையின் திருமுகத்தில் நிலவும் அமைதியுடன் கூடிய இளநகை அலாதியானது.



 அம்பாளை பூஜித்தால் என்னவெல்லாம் கிடைக்கும் என்று கேட்டால், கிடைக்காதது ஒன்றுமில்லை என்பதுதான் பதில். சர்வ மங்களா நித்யாவின் திருவடித் தாமரைகளைப் பணிந்து ஸர்வமங்களங்களும் பெறுவோம்.

வழிபடு பலன்:

உலகியல் வாழ்க்கைத் தேவைகள், கல்வி, வேலை, திருமணம், மகப்பேறு, தொழிலில் வெற்றி, செல்வம், செல்வாக்கு, புகழ், கௌரவம், அந்தஸ்து ஆகிய அனைத்தையும் தந்து அன்பர்களை ஆன்மிக நிலையிலும் மேம்படுத்துபவள் இந்த தேவி. பிரயாணங்களின் போது ஆபத்து நேராமல் காப்பவள்.

ஸர்வமங்களா காயத்ரி

ஓம் ஸர்வமங்களாயை வித்மஹே
சந்த்ராத்மிகாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.


மூல மந்த்ரம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஸ்வௌம் ஸர்வமங்களாயை நம:

த்யான ஸ்லோகங்கள்:

பார்ணவேந்து ஸந்நிபானானாம் ப்ரதீப்த குண்டலாம்
ஸர்வலோக பூஜிதாங்க்ரி திவ்ய பங்கஜாம்
சிவாம் ஸர்வலோகநாயகீம் ஸமஸ்த ஸௌபாக்ய தாயகாம்
 ஸர்வமங்களாம் பஜேப்ரஸனன்ன விக்ரஹாம்ஸதா.
ஸுவர்ண வர்ணீம் ருசிராம் முக்தா மாணிக்ய பூஷிதாம்

மாணிக்ய முகுடாம் நேத்ர த்வயப்ரேங்கத்யா பாராம்
த்விபுஜாம் ஸுஹாஸனாம் பத்மம் த்வஷ்ட ஷோடஸத்வயை:
பர்வீண நீபேதேஸ சதுர்த்வார பூஸத்மயக்மகை:
மாதுலிங்க பலம் தக்ஷே ததானாம் கர பங்கஜே

வாமேந நிஜபக்தானாம் ப்ரயச்சந்தீம் தனாதிகம்
ஸ்வ ஸமானாபிஹி ரபித: ஸக்திப்ய: பரிவாரிதாம்.
ஷட் ஸப்ததிபிரந்யாபி ரக்ஷரோத்தாபி ரந்விதாம்
ப்ரயோகேஷ்வந்யதா நித்ய ஸபர்யாசுக்த சக்தியாம்.

ஸுக்ல பக்தாஸனே ரம்யாம் சந்த்ரகுந்த ஸமத்யுதிம்
ஸுப்ரஸன்னாம் ஸஸிமுகீம் நாநாரத்ன விபூஷிதாம்
அனந்த முக்தாபரணாம் ஸ்ராவந்தீ பும்ருத த்ரவம்
வரதாபய வேஷாட்யாம் ஸ்மரேத் ஸௌபாக்ய வர்த்தனீம்.

ரக்தோத்பல சமப்ரக்யாம் மதுபத்ர நிபேஷணாம்
இஷு கார்முக புஷ்பை: சுபாசாங்குஸ ஸமன் விதாம்
ஸுப்ரஸன்னாம் ஸஸிமுகீம் நாநாரத்ன விபூஷிதாம்
ஸுப்ரபதாஸஸ்யாம் தாம் பஜாமி ஸர்வமங்களாம்.


ஸ்ரீஸூக்த நித்யா ஸ்லோகம்:

ஸ்ரீஸுக்த ஸம்ஸ்துதாம் ஓம்கார ப்ரக்ருதிக,
ஸ்ரீ ப்ரீதி கலாத்மிகாம் ஸ்ரீஸர்வமங்களா
நித்யா ஸ்வரூபாம் பீஜாகர்ஷிணீ ஸக்தி ஸ்வரூபாம்,
ஸ்ரீ ஸங்கர்ஷண வக்ஷஸ்தல கமல வாஸினீம்
ஸர்வமங்கள தேவதாம் ஸ்ரீசாந்தி லக்ஷ்மி ஸ்வரூப ஸர்வமங்கள நித்யாயை நம:


வழிபட வேண்டிய திதிகள்:

 ஸுக்ல பக்ஷ த்ரயோதசி / க்ருஷ்ண பக்ஷ த்ரிதியை (த்ரயோதசி திதி ரூப ஸர்வமங்கள நித்யாயை நம:)

திதி தேவதை: ரதி, மன்மதன்

நைவேத்யம் : கடலை சுண்டல்

பூஜைக்கான புஷ்பங்கள்: செந்தாமரைப் பூக்கள்.

திதி தான பலன்:

கடலை சுண்டல் செய்து தேவிக்கு நிவேதித்து தானம் செய்தால் சந்ததி விருத்தியாகும்.

பஞ்சோபசார பூஜை

ஓம் ஸர்வமங்களா நித்யாயை கந்தம் கல்பயாமி நம:
ஓம் ஸர்வமங்களா நித்யாயை தூபம் கல்பயாமி நம:
ஓம் ஸர்வமங்களா நித்யாயை தீபம் கல்பயாமி நம:
ஓம் ஸர்வமங்களா நித்யாயை நைவேத்யம் கல்பயாமி நம:
ஓம் ஸர்வமங்களா நித்யாயை கற்பூர நீராஞ்ஜனம் தர்சயாமி நம:


இத்திதியில் பிறந்தோரின் குணநலன்கள்:

ஆன்மிக நாட்டம் உடையவர்கள். தங்களின் தகுதிக்கு ஏற்ப தானம் செய்பவர்கள். அழகானவர்கள். மிகுந்த காமம் உடையவர்கள். எதிலும் வித்வானாகத் திகழ்பவர்கள். செல்வந்தர்கள்.சஞ்சல குணம் உள்ள புதல்வனை உடையவர்கள். நாட்டியத்தைக் கண்டு மகிழ ஆவல் கொண்டவர்கள். நாற்கால் பிராணிகளிடத்தில் பிரியமுள்ளவர்கள். திட்டமிட்டு செயல்படுபவர்கள்.

யந்திரம் வரையும் முறை:


சந்தன குங்குமக் கலவையால் வட்டம், எட்டிதழ்கள், பதினாறிதழ்கள், முப்பத்தியிரண்டு இதழ்கள், வட்டம் நான்கு வாயில்களுடைய இரு சதுரங்கள் என்று வரையவும். எட்டுத் தளங்களில் பத்ரா, பவானி, பாவ்யா, விசாலாக்ஷி, சுவிஸ்மிதா, கருணா, கமலா, கல்பா ஆகிய சக்திகளையும், 16 தளங்களில் கலா, பூரணி, நித்யா, அம்ருதா, ஜீவிதா, தயா, அசோகா, அமலா, பூர்ணா, புண்யா, பாக்யா, உத்யாதா,  விவேகா, விஸ்வா, விபவா, விநாதா போன்ற சக்திகளையும், 32 தளங்களில் காமினி, கேசரி, சர்வபூரணா, பரமேஸ்வரி, கௌரி, சிவா, அமேயா, விமலா, விஜயா, பரா, பவித்ரா, பத்மினி, திவ்யா, விஸ்வேஸி, சிவவல்லபா, அசேஷரூபா, ஆனந்தா, அம்புஜாக்ஷி, வரதா, வாக்ப்ரதா, வாணி, விவிதா, வேத விக்ரஹா, வித்யா, வாகீஸ்வரி, சந்தியா, சம்யதா, சரஸ்வதி, நிர்மலா, தனரூபா, தனதா, அபயங்கரீ போன்ற சக்திகளையும் பூஜிக்க வேண்டும்.

இத்திதியில் செய்யத் தக்கவைநற்செயல்கள்:

ஸௌபாக்கியத்தைத் தரவல்ல செயல்கள், நாட்டியம் பயிலுதல், கதை, கட்டுரை போன்றவற்றை எழுதுதல், அணிகலன்கள் வாங்குதல் போன்றவை.

அகத்தியர் அருளிய சுக்ல பக்ஷ ஸர்வ மங்களா நித்யா துதி:

திரயோதசியான தொருது இடையின் மையம்
சேர்ந்தாரா தாரமதில் வேரூமூன்றி
புரியாகும் ஆக்கினையைக் கடந்து மேவி
குருவாகிக் குரு பதத்தில் புரிக்கும் அம்மை

அறிவை அறிவால் அறிந்தே அனுபவத்தில்
வரியொடுங்கும் பாதமதை அருளிச் செய்வாய்
துறவுதனை மனமடையத் துணைசெய்தாயே
சோதியே மனோன்மணியே! சுழிமுனை வாழ்வே.


அகத்தியர் அருளிய கிருஷ்ண பக்ஷ ஸர்வமங்களா நித்யா துதி:

வாழ்வான உலகமெல்லாம் நீயேயம்மா
மண்டலங்கள் எங்கெங்கும் வளர்ந்த சோதி
தாழ்வேது உனையடைந்த சித்தர்க்கெல்லாம்
தங்கமயமாய் இருந்த தேவி ரூபி

பாழ்போகா வாக்கு நல்ல சித்தி தந்து
பாக்கியமே அடங்காத அண்டத்தூடே
சூழ்ந்திருந்து மகிழ்ந்தென்னை பெற்ற மாதா
சோதி மனோன்மணித்தாயே சுழிமுனைவாழ்வே.


மாத்ருகா அர்ச்சனை

ஓம் ஸர்வமங்களாயை நம:
ஓம் பவ்யாயை நம:
ஓம் மங்கலாயை நம:
ஓம் மங்கலப்ரபாயை நம:
ஓம் காந்த்யை நம:

ஓம் ஸ்ரியை நம:
ஓம் ப்ரீத்யை நம:
ஓம் சலாயை நம:
ஓம் ஜ்யோத்ஸ்னாயை நம:
ஓம் விலாஸின்யை நம:

ஓம் வரதாயை நம:
ஓம் வாரிஜாயை நம:
ஓம் வ்யாக்ராயை நம:
ஓம் சாரவ்யை நம:
ஓம் வாஸ்து தேவதாயை நம:

ஓம் அனந்த சக்த்யை நம:
ஓம் காமிகாயை நம:
ஓம் ஸக்தயே நம:
ஓம் அதுலாயை நம:
ஓம் ஸர்வஜ்ஞாயை நம:

ஓம் க்ஞான தாயின்யை நம:
ஓம் யுக்தயே நம:
ஓம் ஸுயுக்தயே நம:
ஓம் அன்வீக்ஷிக்யை நம:
ஓம் குக்ஷிபோதாயை நம:

ஓம் மதாலஸாயை நம:
ஓம் ப்ரஹ்ம வித்யாயை நம:
ஓம் ப்ரபாயை நம:
ஒம் வேக்ஷ்யாயை நம:
ஓம் மஹா யந்த்ராயை நம:

ஓம் ப்ரவாஹின்யை நம:
ஓம் த்யானாயை நம:
ஓம் த்யேயாயை நம:
ஓம் த்யானகம்யாயை நம:
ஓம் யோகின்யை நம:

ஓம் யோகஸித்திதாயை நம:
ஓம் அக்ஷராயை நம:
ஓம் ப்ரஹ்மவித்யாயை நம:
ஓம் ப்ரபாயை நம:
ஓம் வேக்ஷ்யாயை நம:

ஓம் மஹாயந்த்ராயை நம:
ஓம் ப்ரவாஹின்யை நம:
ஓம் ஸிவப்ரதாயை நம:
ஓம் பஞ்சப்ரஹ்மாத்மிகாயை நம:
ஓம் த்ரிபுராயை நம:

ஓம் பீஜ தத்வகாயை நம:
ஓம் ஸர்வ பீஜாத்மிகா ஸித்தயே நம:
ஓம் அஜ்ஜானோபாதி காமின்யை நம:
ஓம் கல்பாந்த தனோஜ்வலாயை நம:
ஓம் ஸத்வ்ருத்தயே நம:
ஓம் வ்யாள பூஷணாயை நம:



வேண்டுவன அருளும் சிவதூதி நித்யா!


புஷ்கரம் எனும் தலத்தில் உள்ள அம்பிகைக்கு சிவதூதி எனும் திருநாமம் உண்டு. இந்த அம்பிகை ஈசனாலேயே உபாசிக்கப்பட்டவள். சதுஷ்கூட வித்யையின் வடிவாகப் பொலிபவள். ஒளி பொருந்திய ரத்ன சிம்மாசனத்தில் வீற்றருள்பவள்.





வேனிற்காலத்து பகல் வேளை சூரியனின் ஒளி பொருந்தியவள். வீராசனக் கோலத்தில் பேரழகுப் பெட்டகமாய் காட்சி தருகிறாள். புன்னகை பொலியும் அன்னையின் திருமுகம் சந்திரனைப் பழிப்பது போல் உள்ளது.

முக்கண்ணி, எட்டுத் திருக்கரங்கள். எட்டும் பகையை வெட்டிக்களைபவள்.  தன் திருக்கரங்களில் அங்குசம், பாசம், வாள், கட்கம், கதை, தாமரை, பானபாத்திரம் போன்றவற்றை ஏந்தியருள்பவள். ரத்னாபரணங்கள் தேவியின் அழகுக்கு அழகு செய்கின்றன. பாதங்களைப் பற்றினால் சகல போகங்களும் சித்திக்கும் என சொல்லாமல் சொல்கின்றதோ தேவியின் பாதங்கள். வரம் தரும் அத்திருப்பாதங்களை மனம், மொழி, மெய்களால் துதித்துப் பேரானந்தம் அடைவோம்.

செந்நிற ஆடை பூண்டு, நவரத்ன கிரீடம் அணிந்து கோடை காலத்தில் துலங்கும் மதியநேர சூரியன் போல பூரண ஒளிமிக்கவளாகக் காட்சி தருகிறாள் சிவதூதி நித்யா. இவள் பூண்டிருக்கும் நானாவிதமான ஆபரணங்களின் ஒளியால், இவளது உருவத்தின் ஒளி இன்னும் கூடி தேஜோமயமாக காட்சி தருகிறாள்.

புன்முறுவல் பூத்த முகமும் எட்டு திருக்கரங்களும் கொண்டு விளங்கும் தேவியைச் சுற்றிலும் நின்று மகரிஷிகள் பாடித் துதிக்கிறார்கள். தன் இடக்கைகளில் பாசம், கேடயம், கதை, ரத்னங்கள் நிரம்பிய பாத்திரம் ஆகியவையும், வலக்கைகளில் அங்குசம், கக்தி, கோடரி மற்றும் தாமரையை ஏந்தியபடி காட்சிதரும் சிவதூதி, தீமைகளை அழித்து நன்மை அளிப்பவள்.

சும்ப நிசும்பர்கள் எனும் அசுரர்களால் உலகுக்கு துன்பம் உண்டானபோது, தேவர்கள் அனைவரும் அம்பிகையைத் துதித்தார்கள். அப்போது அம்பிகையிடமிருந்து ஒரு தேவி தோன்றினாள். தீய சக்தி களை அழிப்பதற்காகவே தோன்றி இருந்தாலும், அவர்களும் திருந்த ஒரு சந்தர்ப்பம் கொடுக்க எண்ணினாள் தேவி. பகைவனுக்கும் அருளும் பண்பாடு இவளுக்கு, அதனால் தான் தோன்றக் காரணமான அந்த பரமேஸ்வரனையே அழைத்து சும்ப நிசும்பர்களிடம் தூதாக அனுப்பினாள். இந்த அம்பிகை சிவனை தூதனாகக் கொண்டவள்.

சும்ப, நிசும்பர்களிடம் பராசக்தி யுத்தம் தொடங்கும் முன் அவர்களிடம் ஈசனை தூது அனுப்பிய விவரம் தேவி மஹாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. சிவபெருமானையே தூதாக அனுப்பியதால், இவளுக்கு சிவதூதி என்று பெயர்.இந்த தேவி.

நேர்வழியில் நடப்பவர்களுக்கும், அடுத்தவரைக் கெடுக்க நினைக்காத மனம் கொண்டவர்களுக்கும் அருளைவாரி வழங்குபவள். தன்பக்தன் ஆசைப்படும் எல்லாவற்றையும் அளித்து அவனை சந்தோஷப்படுத்துபவள். அதேசமயம் அவனுக்கு எதிராக உள்ள எல்லாவற்றையும், அவனுக்குத் தீங்கு செய்யும் எந்த சக்தியையும் அழிக்கவும் இவள் தயங்குவதில்லை.தேவரும், முனிவரும் இவள் புகழ் பாடுகின்றனர்.

தன் அடியவர்களின் துன்பங்களை நீக்கி இன்பங்களை வாரி வாரி வழங்குபவள். சகல விதமான மங்களங் களையும் தன் அடியார்களுக்கு அருள்பவள். மனித மனம் விரும்பியவைகளில் நியாயமானவற்றை நிறைவேற்றுபவள். மனதில் நல்ல எண்ணத்துடனும் மன நிறைவுடனும் சிவதூதியை அதற்குரிய வழிமுறையில் ஆராதனைகள் செய்தால், சிறப்பான பலன்கள் உண்டாகும்.

உதாரணமாக, தேங்காயும் வெல்லமும் சேர்த்து ஹோமம் செய்தால் நிறைந்த ஐஸ்வர்யம் உண்டாகும். செங்கழுநீர் பூவை நெய்யில் தோய்த்தும், செந்தாமரைப் பூவை பாலில் தோய்த்தும், செண்பகப் பூவை த்ரிமதுவில் தோய்த்தும் செய்யப்படும் ஹோமத்தால் மனதுக்கினிய கன்னிகையை மனைவியாக அடையலாம்.செவ்வரளியாலோ, வெள்ளை அரளியாலோ இருபத்தியோரு இரவுகள் தொடர்ந்து ஹோமம் செய்தால், அவன் நிறை செல்வவளத்தையும் அடைந்து மகத்தான நிலைக்கு உயர்வான்.

சிவதூதி காயத்ரி:


ஓம் சிவதூத்யை வித்மஹே
சிவங்கர்யை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.



மூல மந்த்ரம்:

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் சிவதூத்யை நம:

த்யான ஸ்லோகங்கள்:


 நிதாக காலே மத்யான்ஹே திவாகர ஸமப்ரபாம்
நவரத்ன க்ரீடம் சத த்ரீக்ஷணாமருணாம்பராம்
நாராபரண ஸம்பின்ன தேஹகாந்தி விராஜிதாம்
ஸூசிஸ்மிதாஷ்டபுஜாம் ஸ்தூயமானாம் மஹர்ஷிபி:


பாசம் கேடயம் ததாரத்ன சக்ஷகம் வாமபாஹுபி:
தக்ஷிணைரங்குஸம் கட்கம் குடாரம் கமலம் ததா
ததானம் ஸாதகாபீஷ்ட தானோத்யம ஸமன் விதாம்
த்யாத்வைனம் பூஜயேத் தேவீம் தூதீம் துரிதம்துர்நீதி நாஸினீம்.

நூர்வாநிபாம் த்ரிநேத்ராம் ச மஹாஸிம்ஹாஸனாம்
ஸங்காரிபாண சாபம் ச ஸ்ருணி பாஸௌ வராபயே
தததீம் சிந்தயேந்நித்யாம் ஸிவதூதீம் பரஸிவாம்.
ஸர்வாதாரம் ஸாமகான ப்ரவீணாம்


ஸூக்ஷ்மாம் சுத்தாம் ஸுர்யஸோமாக்னி நேத்ராம்
ஸ்ரீ சக்ரஸ்தாம் சின்மயீம் சுத்தவித்யாம்
ஆராத்யாம் வந்தே மாதரம் வேத வேத்யாம்.


பாலஸூர்ய ப்ரதீகாஸாம்  பந்தூக ப்ரஸவாருணாம்
விதி விஷ்ணுஸிவஸ்துத்யாம் தேவ கந்தர்வ ஸேவிதாம்
ரக்தாரவிந்த ஸங்காஸாம் ஸர்வாபரண பூஷிதாம்
ஸிவதூதீம் நமஸ்யாமி ரத்னஸிம்ஹாஸனஸ்திதாம்.


ஸ்ரீஸுக்த நித்யா ஸ்லோகம்:


ஸ்ரீஸுக்த ஸம்ஸ்துதாம் ருகார ப்ரக்ருதிக த்ருதி கலாத்மிகாம்
ஸ்ரீசிவதூதி நித்யாஸ்வரூபாம் ஸர்வானந்தமய சக்ரஸ்வாமினீம்
ரஸாகர்ஷிணீ சக்தி ஸ்வரூபிணீம் ஸ்ரீ த்ரிவி
கமல வாஸினீம் ஸர்வமங்கள தேவதாம்
மேதாலக்ஷ்மீ ஸ்வரூப சிவதூதி நித்யாயை நம:


வழிபட வேண்டிய திதிகள்:


சுக்ல பக்ஷ ஸப்தமி/க்ருஷ்ண பக்ஷ நவமி (ஸப்தமி திதி ரூப சிவதூதி நித்யாயை நம:)

நைவேத்யம்: வெல்லம்.

திதிதான பலன்:

வெல்லத்தை நிவேதித்து தானம் செய்தால் மனதிலுள்ள சோகம் அகலும்.

பஞ்சோபசார பூஜை:

ஓம் சிவதூதி நித்யாயை கந்தம் கல்பயாமி நம:
ஓம் சிவதூதி நித்யாயை தூபம் கல்பயாமி நம:   
ஓம் சிவதூதி நித்யாயை தீபம் கல்பயாமி நம:   
ஓம் சிவதூதி நித்யாயை நைவேத்யம் கல்பயாமி நம:   
ஓம் சிவதூதி நித்யாயை கற்பூர நீராஞ்ஜனம் தர்சயாமி நம:

இத்திதியில் பிறந்தோரின் குண நலன்கள்:


சிறந்த அறிவாளிகள், நற்குணம் மிக்கவர்கள், பெருஞ் செல்வந்தர்கள், கருத்த நிற மேனி கொண்டவர்கள், கலைகளில் சிறந்தவர்கள், தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், திறமை மிக்கவர்கள்.


யந்த்ரம் வரையும் முறை:


சந்தன குங்குமக் கலவையால் முக்கோணம், வட்டம், ஆறிதழ், அறுகோணம், எண்கோணம், எட்டிதழ், கிழக்கு மேற்கு வாயில்களுடன் கூடிய இரு சதுரங்கள் கொண்ட யந்திரத்தை வரையவும்.
விஹ்வாலா, கார்ஸனி, லோலா, நித்யா, மதனா, மாலினி, வினோதா, சௌதுகா, புண்யா, புராணா போன்ற சக்திகளை பூபுரத்திலும், எட்டு கோணங்களில் வாகீச, வரதா, விஸ்வா, விபவ, விக்னகாரிணீ, வீரவிக்னஹரா, வித்யா போன்ற சக்திகளையும், எட்டு தளங்களில் சுமுகி, ஸுந்தரீ, ஸாரா, ஸமாரா, ஸரஸ்வதி, ஸமயா, ஸர்வகா, ஸித்தா போன்ற சக்திகளையும் பூஜிக்க வேண்டும். ஆறு தளங்களில் டாகினி, காகினி முதலியோரையும், முக்கோண மூலைகளில் இச்சா, ஞான, க்ரியா சக்திகளையும் பூஜிக்கவும்.

இத்திதிகளில் செய்யத் தக்கவை:


மனை கட்டுதல், உபநயனம், திருமணம், தேவதைகளை பிரதிஷ்டை செய்தல், பயிரிடுதல், அணிகலன்கள் செய்தல் மற்றும் யுத்தத்திற்கு நாள் குறித்தல் போன்ற செயல்களைப் புரியலாம்.


அகத்தியர் அருளிய சுக்ல பக்ஷ ஸப்தமி திதி துதி

ஸப்தமியாம் சபையுள்ளே கடலேழ் சூழ
சப்தரிஷி சப்த கன்னி தணிந்து போற்ற
அந்தரிடப் பாகமதாய் முக்கோணத்துள்
அமர்ந்திருக்கும் பேரின்ப ஆதித்தாயே


இத்தனை நாள் படுதுயரம் காணாதாள் போல்
இருந்துவிட்டால் யார் தீர்ப்பார் எனைக் கண் பாராய்
சுத்தமதி ரவி கலந்துள் ஒளியாய் நின்ற
சோதியே மனோன்மணியே சுழுமுனை வாழியவே


அகத்தியர் அருளிய க்ருஷ்ணபக்ஷ ஸப்தமி திதி துதி:

நீதமுடன் உருவாகி அரூபமாகி நிஷ்களமாய்
நிராமயமாய் நின்ற சூலி
வேதமுடிவாகி நின்ற விமலித் தாயே
விண்ணொளியாய்ப் பரவெளியாய்க் கண்ட சக்தி


பாதமதில் சிலம்புகளில் கலீல் என்றோத
பக்தருக்காகப் பிரசன்னமாகும் ரூபி
சோதனையாய்ச் சோமகலையாக வந்த
சோதி மனோன்மணித் தாயே சுழிமுனை  வாழ்கவே.


மாத்ருகா அர்ச்சனை:

ஓம் சிவதூத்யை நம:
ஓம் ஸுநந்தாயை நம:
ஓம் ஆனந்தின்யை நம:
ஓம் விஷபத்மின்யை நம:
ஓம் பாதாள கண்டமத்யஸ்தாயை நம:

ஓம் ஹ்ருல்லேகாயை நம:
ஓம் வனகேசர்யை நம:
ஓம் கலாயை நம:
ஓம் ஸப்ததஸ்யை நம:
ஓம் ஸுத்தாயை நம:

ஓம் பூர்ண சந்த்ர நிபானனாயை நம:
ஓம் ஆத்ம ஜோதிஷே நம:
ஓம் ஸ்வயம் ஜோதிஷே நம:
ஓம் அக்னி ஜோதிஷே நம:
ஓம் அநாஹதாயை நம:

ஓம் ப்ராணசக்த்யை நம:
ஓம் க்ரியா சக்த்யை நம:
ஓம் இச்சா சக்த்யை நம:
ஓம் ஸுகாவஹாயை நம:
ஓம் ஞானசக்த்யை நம:

ஓம் ஸுகானந்தாயை நம:
ஓம் வேதின்யை நம:
ஓம் மஹிமாயை நம:
ஓம் ப்ரபாயை நம:
ஓம் ருஜவே நம:

ஓம் யக்ஞாயை நம:
ஓம் யக்ஞஸாம்னாயை நம:
ஓம் ஸாமரஸ்ய விநோதின்யை நம:
ஓம் கீத்யை நம:
ஓம் ஸாமத்வன்யை நம:

ஓம் ஸ்ரோதாயை நம:
ஓம் ஹும்க்ருத்யை நம:
ஓம் ஸாமவேதின்யை நம:
ஓம் அத்வாராயை நம:
ஓம் கிரிஜாயை நம:

ஓம் க்ஷூத்ராயை நம:
ஓம் நிக்ரஹாயை நம:
ஓம் அனுக்ரஹாத்மிகாயை நம:
ஓம் புராண்யை நம:
ஓம் சில்பிஜனன்யை நம:

ஓம் இதிகாசாயை நம:
ஓம் அவபோதின்யை நம:
ஓம் வேதிகாயை நம:
ஓம் யக்ஞஜனன்யை நம:
ஓம் மஹாவேத்யை நம:

ஓம் ஸதக்ஷிணாயை நம:
ஓம் ஆன்வீக்ஷிக்யை நம:
ஓம் த்ரய்யை நம:
ஓம் வார்த்தாயை நம:
ஓம் கோரக்ஷகாயை நம:
ஓம் கதிதாயை நம:







பரிபூரண வாழ்வருளும் பகமாலினி!



 பரிபூரணமான ஐஸ்வர்யம், தர்மம், தேஜஸ், ஸ்ரீ, ஞானம், வைராக்யம், வீர்யம், முக்தி போன்றவை, ‘பகம்’ எனும் சொல்லால் குறிக்கப்படுபவை. இவற்றுடன் இந்த அம்பிகை கூடியிருப்பதாலும் ‘பகமாலினி’ என்றானாள். பகத்தோடு கூடிய சகல பொருட்களும் இந்த அம்பிகையின் அம்சங்களே யாதலால் இத்தேவிக்கு பகவதி எனும் பெயரும் உண்டு.

இந்த நித்யா தேவியின் மந்திரத்திலும், பரிவார தேவதைகளின் மந்திரங்களிலும் ‘பக’ எனும் பதம் அடிக்கடி வருவதால் ‘‘பகமாலினி” என இந்த அம்பிகை வழிபடப்படுகிறாள்.

சிவந்த நிறமுள்ளவள் இவள். சிவப்புக் கற்களால் ஆன அணிகலன்களை அணிவதில் பிரியமுள்ளவள். அழகு பொலியும் திருமுகத்தினள். சதா தவழும் புன்முறுவலுடன் திகழும் இவள் முக்கண்களை உடையவள்.

இடது கரங்களில் அல்லிமலர், பாசக்கயிறு, கரும்புவில் போன்றவற்றை ஏந்தியும், வலது கரங்களில் தாமரை, அங்குசம், புஷ்ப பாணங்களை தரித்தும் அழகு திருக்கோலம் காட்டுபவள். அந்த அழகுக்கு அழகு செய்யும் வண்ணம் அணிகலன்களோடு அருளும் இந்த அன்னையின் அருளுக்கு ஈடு இணை ஏது? இந்த அம்பிகையைச் சுற்றிலும் பல்வேறு சக்திக் கூட்டங்கள் சூழ்ந்துள்ளதாக மகான்கள் கூறுகின்றனர்.

செருக்குடன் தோற்றமளிக்கும் இந்த அம்பிகை தைரியத்திற்கு அதிதேவதையாவாள்.தன்னை உபாசனை செய்யும் பக்தர்களுக்கு வாழ்வில் வெற்றியைக் குவிப்பவள். கர்ப்பத்திலுள்ள சிசுவைக் காத்து சுகப்பிரசவம் ஏற்பட திருவருள்புரிபவள்.

பகமாலினி காயத்ரி:

ஓம் பகமாலின்யை வித்மஹே
ஸர்வ வசங்கர்யை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

மூல மந்த்ரம்:

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஆம் ஐம் பக பகே பகினி பகோதரி பகமாலே பகாவஹே பககுஹ்யே பகயோனி பகநிபாதினி ஸர்வபக வஸங்கரி பகரூபே நித்யக்லின்னே பகஸ்வரூபே ஸர்வாணி பகானிமே ஹ்யானய வரதே ரேதே ஸுரேதே

பகக்லின்னே க்லின்னத்ரவே க்லேதய த்ராவய அமோகே பகவிச்சே க்ஷுப க்ஷோபய ஸர்வஸத்வான் பகேஸ்வரீ ஐம் ப்லூம் ஐம் ப்லூம் மேம் ப்லூம் மோம் ப்லூம் ஹேம் ப்லூம் ஹேம் க்லின்னே ஸர்வாணி பகானிமே வஸமானய ஸ்த்ரீம் ஹரப்லேம் ஹ்ரீம் ஆம் பகமாலினி நித்யகலா தேவி ஸ்ரீ பாதுகாம் பூஜயாமி நம:


த்யான ஸ்லோகங்கள் :

பகரூபாம் பகமயாம் துகூலவஸனாம் சிவாம்
சர்வாலங்கார ஸம்யுக்தாம் ஸர்வலோக வசங்கரீம்
பகோதரீம் மஹாதேவீம் ரக்தோபல ஸமப்ரபாம்
காமேஸ்வராங்க நிலயாம் வந்தே ஸ்ரீ பகமாலினிம்.

ருணாம் அருணா கல்பாம் ஸுந்தரீம் ஸுஸ்மி தாநநாம்
த்ரிநேத்ராம் பாஹுபி: ஷட்பி: உபேதாம் கமலா ஸநாம்
கல்ஹார பாச புண்ட்ரேக்ஷு கோதண்டாம் வாம பாஹுபி:
ததாநம் தக்ஷிணை: பத்மம் அங்குசம் புஷ்பஸாயகம்

தாதவிதா பிப்பரித: ஆவ்ருதாம் சக்தி பிராத்மபி:
அக்ஷரோத்தபிரந்யாபி: ஸ்மரோந்மாத மாதாத்மபி:
பகரூபாம் பகமயாம் துகூலவசனாம் சிவாம்
ஸர்வாலங்கார ஸம்யுக்தாம் ஸர்வலோக வசங்கரீம்

பகோதரீம் மஹாதேவீம் ரக்தோபல ஸமப்ரபாம்
காமேஸ்வராங்க நிலயாம் வந்தே ஸ்ரீபகமாலினீம்.
கதம்பவன மத்யஸ்தாம் உத்யத் ஸூர்ய ஸமத்யுதிம்
நானாபூஷண ஸம்பன்னாம் த்ரைலோக்யாகர்ஷண க்ஷமாம்

பாஸாங்குஸௌ புஸ்தகம் ச தௌபிகாகத  லேகினீம்
வரம் சாபயம் சைவ தததீம் விஸ்வமாதரம்
ஏவம் த்யாயேத் மஹாதேவீம் பகமாலாம் விசக்ஷண:
குந்த குட்மல ஸுச்ரோணீ தந்த பங்க்தி விராஜிதம்
கந்தர்ப்ப கோடி லாவண்யாம் வந்தேஹம் பகமாலினீம்.


ஸ்ரீஸுக்த நித்யா ஸ்லோகம் :

ஸ்ரீஸுக்த ஸம்ஸ்திதாம் ஆகார ப்ருக்திக மானதா கலாத்மிகாம் பகமாலினி நித்யா ஸ்வரூபாம் ஸர்வாசாபரிபூரக சக்ரஸ்வாமினீம் புத்யாகர்ஷிணி சக்தி ஸ்வரூபாம் ஸ்ரீ நாராயண வக்ஷஸ்தல கமலவாஸினீம் ஸர்வமங்கள தேவதாம் ஸௌபாக்யலக்ஷ்மி ரூபேண பகமாலினி நித்யாயை நம:

வழிபட வேண்டிய திதிகள்:

சுக்ல பக்ஷ த்வதியை/க்ருஷ்ண பக்ஷ சதுர்த்தசி (த்வதியை திதி ரூபிண்யை பகமாலின்யை நம:)

நைவேத்தியம்:

நாட்டுச் சர்க்கரை.

பூஜைக்கான புஷ்பங்கள்:

மரிக்கொழுந்து, தவனம் போன்ற பச்சை நிற இலைகள், மலர்கள் போன்றவற்றால் இத்தேவியை பூஜிக்க வேண்டும்.

திதி தான பலன்:

நாட்டுச்சர்க்கரையை நிவேதித்து தானம் செய்ய ஆயுள் விருத்தியாகும்.

பஞ்சோபசார பூஜை:

ஓம் பகமாலினி நித்யாயை கந்தம் கல்பயாமி நம:
ஓம் பகமாலினி நித்யாயை தூபம் கல்பயாமி நம:
ஓம் பகமாலினி நித்யாயை தீபம் கல்பயாமி நம:
ஓம் பகமாலினி நித்யாயை நைவேத்யம் கல்பயாமி நம:
ஓம் பகமாலினி நித்யாயை கற்பூர நீராஞ்ஜனம் தர்சயாமி நம:

இத்திதியில் பிறந்தோரின் குணநலன்கள்:

இந்த தேவியின் திதியில் பிறந்தவர்கள் சிவந்த நிறத்தினர்கள். அழகானவர்கள். சிரித்த முகத்தினர். எப்போதும் செல்வம் நிறைந்தவர்களாக வாழ்வர். நுண்கலைகளில் ஈடுபாடு கொண்டவர்கள். மற்றவர்களை வசீகரிக்கும் தன்மை உடையவர்கள். மிகவும் செருக்குடையவர்கள்.

தன்னையொத்த செல்வந்தர்களின் கூட்டத்தால் சூழப்பட்டிருப்பவர்கள். இத்திதியில் பிறந்தோர் ‘பகமாலினி’ தேவியை வழிபட வாழ்வில் வளங்கள் பெருகும். அவர்கள் இத்தேவியின் மூல மந்திரத்தை தினமும் 45 முறை பாராயணம் செய்தால் அனைத்து சங்கடங்களும் சூரியனைக் கண்ட பனி போல் விலகும்.

யந்திரம் வரையும் முறை:

குங்கும சந்தனக் கலவையால் மேற்கில் வாயிலுடன் இரு சதுரஸ்ரம், நடுவே ஐந்திதழக் கமலம், இரு வட்டங்கள் நடுவில் படத்தில் காட்டியபடி பிரித்த சம கோடுகளால் ஆன முக்கோணம் வரைந்து வழிபட வேண்டும்.

இந்த யந்திரத்தில் மதனா, மோகினி, லோலா, ஜம்பினி, உத்யமா, சுபா, ஹ்லாதினி, த்ராவிணி, ப்ரீதி, ரதி, ரக்தா, மனோரமா, சர்வோன்மாதா, சர்வசுகா, அனங்கா, அமிரோத்யாமா, அனல்யா, வியாக்தவிபவா, விவிதா, விக்ரகா, ஷோபா போன்ற சக்திகள் உறைகின்றனர்.

இத்திதிகளில் செய்யத் தக்கவை:

முஞ்சிப்புல்லாலே செய்யக் கூடிய வேலைகள், திருமணம், யாத்திரை, தேவதைகளைப் பிரதிஷ்டை செய்தல், வீடு கட்ட ஆரம்பித்தல் போன்றன.

அகத்தியர் அருளிய சுக்லபக்ஷ த்விதியை நித்யா திதி துதி:

 துதிகை என்றும் உபயம் என்றும் இடைகள் என்றும்
சுவர்க்கமென்றும் நரகம் என்றும் சொல்லக்கேட்டு
திரவியாய உடல் உயிராய் ஆணாய் பெண்ணாய்
வாழ்வாகித் தாழ்வாகி வழங்கும் தாயே!

விதி தொலைந்து வினை தொலைந்து வெட்கம் கெட்டு
வீம்பு பயம் ஆசை துக்கம் விட்டே ஓட சுதன் மு
கம்பார் மதி முகத்தாய் சூட்சா சூட்சிச் சோதியே!
மனோன்மணியே! சுழுமுனை வாழ்வே!

அகத்தியர் அருளிய க்ருஷ்ணபக்ஷ த்விதியை நித்யா திதி துதி :

பிரியமுடன் பதினாலு கலையுமாகி
பேசரிய தீபவொளி பிரம்மமாகி
உரியதொரு தந்திவெளி தீபங்காட்டி
ஓங்கார ரீங்கார சக்தியாகி

சரியென்று மதித்திடவே என்முன் வந்த
சங்கரியே சாம்பவியே சர்வரூபி
துரிய துரியாதீத மமர்ந்து நின்ற
சோதி மனோன்மணித்தாயே சுழிமுனை வாழ்வே.

மாத்ருகா அர்ச்சனை.

ஓம் பகமால்யை நம:
ஓம் பகாயை நம:
ஓம் பாக்யாயை நம:
ஓம் பகின்யை நம:
ஓம் பகோதர்யை நம:

ஓம் குஹ்யாயை நம:
ஓம் தாக்ஷாயண்யை நம:
ஓம் கன்யாயை நம:
ஓம் தக்ஷயக்ஞவிநாஸின்யை நம:
ஓம் ஜயாயை நம:

ஓம் விஜயாயை நம:
ஓம் அஜிதாயை நம:
ஒம் அபராஜிதாயை நம:
ஓம் ஸுதிப்தாயை நம:
ஓம் லேலிஹானாயை நம:

ஓம் கராளாயை நம:
ஓம் ஆகாஸநிலயாயை நம:
ஓம் ப்ராம்ஹ்யை நம:
ஓம் பாலாயை நம:
ஓம் ப்ரஹ்மசாரிண்யை நம:

ஓம் ப்ரஹ்மாஸ்யை நம:
ஓம் ஆஸ்யரதாயை நம:
ஓம் ப்ரஹ்வ்யை நம:
ஓம் ஸாவித்ர்யை நம:
ஓம் ப்ரஹ்மபூஜிதாயை நம:

ஓம் ப்ரஜ்ஞாயை நம:
ஓம் மாத்ரே நம:
ஓம் பராயை நம:
ஓம் புத்தயே நம:
ஓம் விஸ்வமாத்ரே நம:

ஓம் ஸாஸ்வத்யை நம:
ஓம் மைத்ர்யை நம:
ஓம் காத்யாயன்யை நம:
ஓம் துர்க்காயை நம:
ஓம் துர்க்கஸந்தாரிண்யை நம:

ஓம் பராயை நம:
ஓம் மூலப்ருக்ருதயே நம:
ஓம் ஈசானாயை நம:
ஓம் ப்ராதானேஸ்வர்யை நம:
ஓம் ஈஸ்வர்யை நம:
ஓம் ஆப்யாயன்யை நம:

ஓம் பாவன்யை நம:
ஓம் பவித்ராயை நம:
ஓம் மங்கலாயை நம:
ஓம் யமாயை நம:
ஓம் ஜ்யோதிஷ்மத்யை நம:

ஓம் ஸம்ஹாரிண்யை நம:
ஓம் ஸ்ருஷ்ட்யை நம:
ஓம் ஸ்ருஷ்டிஸ்
திதியந்தகாரிண்யை நம:
ஓம் அகோராயை நம:
ஓம் கோரரூபாயை நம:






காலமெல்லாம் காப்பாள் காமேஸ்வரி நித்யா!


அமாவாசை மற்றும் பவுர்ணமியன்று வாராஹி, மாதங்கியுடன் கூடிய மஹாநித்யாவான லலிதா பரமேஸ்வரியை வழிபட வேண்டும். ஒவ்வொரு திதிக்கும் ஒரு தேவதை உண்டு.


அமாவாசைக்கு பித்ருக்கள், பிரதமைக்கு அக்னி, த்விதியைக்கு பிரம்மா, த்ரிதியைக்கு பார்வதி,
 சதுர்த்திக்கு கணபதி, பஞ்சமிக்கு நாகராஜா, சஷ்டிக்கு முருகப்பெருமான், ஸப்தமிக்கு சூரியன், அஷ்டமிக்கு ஈசன், நவமிக்கு அஷ்டவசுக்கள், தசமிக்கு திக்கஜங்கள், ஏகாதசிக்கு யமதர்மராஜன், த்வாதசிக்கு திருமால், த்ரயோதசிக்கு மன்மதன், சதுர்த்தசிக்கு கலிபுருஷன், பௌர்ணமிக்கு சந்திரன் போன்றோர் தேவதைகளாக சொல்லப்பட்டுள்ளனர்.



இந்த அம்பிகை கோடி சூரியப்ரகாசம் போன்று ஜொலிப்பவள். மாணிக்க மகுடம் தரித்தவள். தங்கத்தினாலான அட்டிகை, பதக்கங்கள், ஒளிரும் சங்கிலி,  ஒட்டியாணம், மோதிரம், கால்களில் கொலுசு அணிந்தவள். ரத்னாபரணங்கள் பூண்டு, பட்டாடை உடுத்தியவள். இந்த காமேஸ்வரி நித்யா தேவிக்கு ஆறு  திருக்கரங்கள். முக்கண்கள். தலையில் சந்திரகலை தரித்திருக்கிறாள். புன்முறுவல் பூத்த முகத்தினள். கருணையை வெள்ளமெனப் பாய்ச்சும் கண்களைக்  கொண்டவள். கைகளில் பாசம், அங்குசம், கரும்புவில், மதனா, உன்மனா, தீபனா, மோகனா, ஸோஷனா எனும் ஐந்து தேவதைகளாலான புஷ்பபாணங்கள்,  அமிர்தத்துடன் கூடிய ரத்ன பாத்திரம், வரமுத்திரை தரித்தவள்.

இன்பமானவை  இனிப்பாக இருப்பதை கரும்பு மூலம் தேவி காட்டுகிறாள். ஆனால், காமேஸ்வரியை சரணடைய பேரின்பம் கிட்டும். பஞ்சேந்த்ரியங்களை தன் கையிலுள்ள பஞ்சபுஷ்பபாணங்களினால் கட்டுப்படுத்துகிறாள். பக்தர்களின் இதயக்கமலத்தில் விரும்பி வாசம் செய்யும் அம்பிகை இவள். காமேஸ்வரி என்றால் அழகான வடிவத்துடன் இருப்பவள். அல்லது விரும்பிய  வடிவத்தை எடுக்கக்கூடியவள் என்று பொருள். கேட்கும் வரங்களை வாரி வழங்கும் பரம கருணை வடிவினள் இத்தேவி.

அன்னையின் நெற்றியில் கஸ்தூரி திலகங்கள் ஜொலிக்கின்றன. வழிபடும் அன்பர்களின் மனதில் பரிவோடு நித்யவாஸம் செய்து ஆத்ம சுகத்தையும்  பேரின்பத்தையும் அருள்பவள். ஆத்மானுபவத்தில் திளைப்போர்க்கு பேரொளி வடிவமாகக் காட்சி தருபவள். பாவிகளையும் தாய் போல் காப்பவள். அன்பர்களின்  மனதிற்கு இனியவள். மங்களங்கள் அருள்பவள்.


சௌந்தர்ய ரூபவதி. ஜீவன்களின் பாபமூட்டையைத் தன் கடைக்கண் பார்வையாலேயே சுடுபவள். மனிதர்களை  வருத்தும் பாவங்களும், துன்பங்களும் இந்த தேவியை நினைத்த மாத்திரத்திலேயே மறைந்து விடும்.


வழிபடுபலன்:

இந்த அம்பிகையை வழிபடுவோர் புக்தி, முக்தி இரண்டையும் பெற்று பேரின்பப் பெருவாழ்வை அடைவர் என்பது திண்ணம். வழிபடுபலன் வாழ்வின்  ஆனந்தத்திற்கும், தனவரவு, தனவிருத்திக்கும் இந்த காமேஸ்வரி தேவியின் உபாசனை பேருதவி புரியும். மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கையும் தரும். தீராத  கொடிய நோய்களைப் போக்கி ஆரோக்கியமான வாழ்வை அருளும்.

காமேஸ்வரி காயத்ரி

ஓம் காமேஸ்வர்யை வித்மஹே
நித்யக்லின்னாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.



மூல மந்த்ரம்:

ஓம் ஐம் க்லீம் ஸௌ: காமேஸ்வர்யை நம: காமேஸ்வரி
இச்சா காம பலப்ரதே ஸர்வ ஸத்ய வசங்கரீ ஹும் ஹும்
ஹும் த்ராம் த்ரீம் க்லீம் ப்லூம் ஸ: ஸௌ: க்லீம் ஐம்
காமேஸ்வரி நித்யா தேவ்யை நம:


ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் அம் ஐம் ஸகல ஹ்ரீம் நித்யக்லின்னே
மதத்ரவே ஸௌ: அம் காமேஸ்வர்யை நம:


த்யான ஸ்லோகங்கள்

பாலார்க்க கோடி ஸங்காசம் மாணிக்ய மகுடோஜ்வலாம்
ஹாரக்ரைவேய காஞ்சீபி: ஊர்மிகா நூபுராதிபி:
மண்டிதாம் ரக்தவஸனாம் ரக்தாபரண ஸோபிதாம்
ஷட்புஜாம் த்ரீக்ஷணாமிந்து தலாகலித மௌளிகாம்

பஞ்சாஷ்ட ஷோடசத்வந்த்வ ஷட்கோண சதுரஸ்ரகாம்
மந்தஸ்மிதோல்லஸத் வக்த்ராம் லஜ்ஜா மந்த்ரவீக்ஷணாம்
பாசாங்குசௌ ச புண்ட்ரேக்ஷு சாபம் புஷ்பசிவீமுகம்
ரத்னபாத்ரம் ஸுதாபூர்ணம் வரதம் பிப்ரதீம்கரை:
ஏவம் த்யாத்வார்சயேத் தேவீம் நித்ய பூஜாஸு ஸித்தயே.

ஸ்ரீமானினி ரமண பத்மஜ சங்கராதி
கீர்வாண வந்தித பதாம்போருஹே
புராணி காமாக்ஷி லோகஜனனீ கமனீய காத்ரி
காமேஸ்வரி த்ரிபுரஸுந்தரி மாம் அவத்வம்.

ரக்தாம் ரக்த துகூலாங்க லேபனாம் ரக்த பூஷணாம்
தனுர்பாணான் புஸ்தகம் சாக்ஷமாலிகாம்
வராபீதிம சதததீம் த்ரைலோக்ய வஸகாரிணீம்
ஏவம் காமேஸ்வரீம் த்யாயேத் ஸர்வஸௌ    பாக்ய வாக்ப்ரதா.

தேவீம் த்யாயேத் ஜகத்தாத்ரீம் ஜபாகுஸுமஸந் நிபாம்
பால பானு ப்ரதீகாசாம் சாதகும்ப சமப்ரபாம்
ரக்த வத்ஸரபரிதானம் சம்பதி வித்ய வசங்கரித்
நமாமி வரதாம் தேவீம் காமேஸ்வரீம் அபயப்ரதாம்.

ஸ்ரீஸுக்த நித்யா ஸ்லோகம்:

ஸ்ரீஸுக்த ஸம்ஸ்திதாம் அகார ப்ரக்ருதிக அம்ருத கலாத்மிகாம்
காமேஸ்வரி நித்யா ஸ்வரூபிணீம் ஸர்வ ஸம்மோ ஹன சக்ர
ஸ்வாமினீம் காமாகர்ஷிணீ சக்தி ஸ்வரூபிணீம், ஸ்ரீ கேசவ
வக்ஷஸ்தல கமல வாஸினீம் ஸர்வ மங்கள தேவ தாம்
ஸ்ரீ ஸௌந்தர்ய லக்ஷ்மி ரூபேண காமேஸ்வர்யை நம:


வழிபட வேண்டிய திதிகள் :


சுக்ல பக்ஷ ப்ரதமை/அமாவாசை (ப்ரதிபாத திதி ரூப காமேஸ்வரி நித்யாயை நம:)

நைவேத்யம் : பசு நெய்.

பூஜைக்கான புஷ்பம் : பல வண்ண வாசனையுள்ள மலர்கள்.

திதி தான பலன் :  இந்த தேவிக்கு பசு நெய்யை நிவேதித்து தானம் செய்தால் நோய்கள் விலகியோடும்.

பஞ்சோபசார பூஜை :

ஓம் காமேஸ்வரி நித்யாயை கந்தம் கல்பயாமி நம:
ஓம் காமேஸ்வரி நித்யாயை தூபம் கல்பயாமி நம:
ஓம் காமேஸ்வரி நித்யாயை தீபம் கல்பயாமி நம:
ஓம் காமேஸ்வரி நித்யாயை நைவேத்யம் கல்பயாமி நம:
ஓம் காமேஸ்வரி நித்யாயை கற்பூர நீராஞ்ஜனம் தர்சயாமி நம:


இத்திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள்:


 இத்திதியில் பிறந்தவர்கள் தலைமைப் பொறுப்பு ஏற்பவர்களாக விளங்குவார்கள். அலங்காரப் பிரியர்கள்.  நவரத்தினங்கள், சிவப்பு நிற ஆடைகளை அணிவதில் பிரியம் இருக்கும். தெய்வீகத் தன்மை கொண்டவர்கள். புன்சிரிப்பு முகத்தினர். முக்காலங்களையும் உணரும்  தன்மையுடையவர்கள். அடுத்தவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள். இத்திதியில் பிறந்தவர்கள் காமேஸ்வரி நித்யா தேவியை வணங்கி வழிபட்டால்  வாழ்வு வளம் பெறும்; தினமும் இத்தேவியின் மூலமந்திரத்தை 45 முறை பாராயணம் செய்தால் சகல துன்பங்களும் விலகும்.

இத்தேவியின் யந்திரம் வரையும் முறை:


சந்தன குங்குமக் கலவையால் ஐந்திதழ்க் கமலம், அதற்கு வெளியில் எட்டிதழ்க் கமலம், பதினாறிதழ்க் கமலம்,  ஷட்கோணம் நான்கு வாயில்களுடன் கூடிய சதுரஸ்ரம் கொண்ட பூஜா யந்திரத்தை எழுதி வழிபடவும். எட்டு தளங்களில் அனங்ககுஸுமா, அனங்கமேகலா,  அனங்க மதனா, அனங்க மதனாதுரா, மாதவேகினி, புவனபாலா, சசிரேகா, ககனரேகா போன்ற தேவதைகளை வழிபட வேண்டும். பதினாறு தளங்களில் சிரத்தா,  ப்ரீதி, ரதி, தார்தி, விந்தி, மனோரமா, மனோஹரா, மனோரதா, மதன்னோமதிதி, மோகினி, தீபனி, ஸோஷனி, வசங்கரீ, சிஞ்ஜினி, சுபகா, ப்ரியதர்ஷினி போன்ற  சந்திரனின் அமிர்த கலை வடிவான தேவதைகளை  தியானித்து வழிபட வேண்டும்.

அகத்தியர் அருளிய சுக்ல பக்ஷ அமாவாசை நித்யா தேவி :

துதி அமாவாசி தானான அரூபத்தாயே
அகண்ட பரிபூரணையே அமலை சக்தி
நம்மாலே பாடறியேன் நினது பேரில்
நாவிலே வந்தருள்செய் நாயேனுக்கு


தம்மாலே ஷோடஸ தோத்திரம் விளங்க
தயவு செய்து நின் பதத்தில் அளிப்பாய் தேவி
சும்மா நீ இருக்காதே கண் பார்த்தாள்வாய்
சோதியே! மனோன்மணியே! சுழுமுனை வாழ்வே!


அகத்தியர் அருளிய க்ருஷ்ண பக்ஷ பிரதமை நித்யா தேவி துதி :

பிரதமையிற் பிரவிடையாய்களை வேறாகி
பிங்கலை விட்டிடைக் கலையிற் பிறந்த கன்னி
உறவாக விரவியை விட்டகலா நின்ற
உமையவளே என் பிறவி ஒழியச் செய்வாய்


இறவாத வரத்துடன் வரம் எட்டெட்டுக்கும்
எளிதாக சித்திக்க எனக்குத் தந்து
சுருதியிலே வந்தருள் செய் அடியேனுக்கு
சோதியே! மனோன்மணியே! சுழுமுனை வாழியவே!


பிரவிடை என்றால் பருவம் அடைந்த பருவ மங்கை. ரவி எனும் சூரியமண்டலத்தை விட்டு அகலாதவள்; பானு மண்டல மத்யஸ்தா என்கிறது லலிதா  ஸஹஸ்ரநாமம். தேவியின் திருவருள் சித்தித்தால் புகழ், கல்வி, வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அறிவு, அழகு, பொறுமை, பெருமை,  இளமை, துணிவு, கோபமின்மை ஆகிய பதினாறு பேறுகளும் கிட்டும் என்கிறார் அகத்தியர்.


மாத்ருகா அர்ச்சனை:

ஓம் காமேஸ்வர்யை நம:
ஓம் மஹாமாயாயை நம:
ஓம் வாகீஸ்யை நம:
ஓம் ப்ரஹ்ம ஸஞ்சிதாயை நம:
ஓம் அக்ஷராயை நம:

ஓம் த்ரிமாத்ராயை நம:
ஓம் த்ரிபதாயை நம:
ஓம் த்ரிகுணாத்மிகாயை நம:
ஓம் ஸுரஸித்த கணாத்யக்ஷாயை நம:
ஓம் கணமாத்ரே நம:

ஓம் கணேஸ்வர்யை நம:
ஓம் சண்டிகாயை நம:
ஓம் சண்டமுண்டாயை நம:
ஓம் சாமுண்ட்யை நம:
ஓம் தம்ஷ்ட்ரிண்யை நம:

ஓம் விஸ்வம்பராயை நம:
ஓம் விஸ்வயோன்யை நம:
ஓம் விஸ்வமாத்ரே நம:
ஓம் வஸுப்ரதாயை நம:
ஓம் ஸ்வாஹாயை நம:

ஓம் ஸ்வதாயை நம:
ஓம் துஷ்ட்யை நம:
ஓம் ருத்யை நம:
ஓம் காயத்ர்யை நம:
ஓம் கோணாயை நம:

ஓம் ககாயை நம:
ஓம் வேதமாத்ரே நம:
ஓம் வரிஷ்டாயை நம:
ஓம் ஸுப்ரபாயை நம:
ஓம் ஸித்த வாஹின்யை நம:

ஓம் ஆதித்ய வாஹின்யை நம:
ஓம் சந்த்ராயை நம:
ஓம் சந்த்ரபாவாயை நம:
ஓம் அனுமண்டலாயை நம:
ஓம் ஜ்யோத்ஸ்னாயை நம:

ஓம் ஹிரண்மய்யை நம:
ஓம் பவ்யாயை நம:
ஓம் பவது:க பயாபஹாராயை நம:
ஓம் ஸிவதத்வாயை நம:
ஓம் ஸிவாயை நம:

ஓம் ஸாந்தாயை நம:
ஓம் ஸாந்திதாயை நம:
ஓம் ஸாந்தி ரூபிண்யை நம:
ஓம் ஸௌபாக்யதாயை நம:
ஓம் ஸுபாயை நம:

ஓம் கௌர்யை நம:
ஓம் உமாயை நம:
ஓம் ஹைமவத்யை நம:
ஓம் ப்ரியாயை நம:
ஓம் தக்ஷாயை நம:
ஓம் காமேஸ்வர்யை நம:









நித்தமும் காத்திடும் நித்யக்லின்னா!

சிவந்த நிறம், சிவந்த கரங்கள், புன்முறுவல் பூத்த திருமுகமண்டலம், முக்கண்கள், நெற்றியில் அரும்பும் வியர்வைத் துளிகளுடன் திருமுடியில் பிறைச்சந்திரன் துலங்க அருள்பாலிக்கும் இந்த அன்னைக்கு ‘‘மதாலஸா’’ என்ற பெயரும் உண்டு. தன் நான்கு கரங்களிலும் பாசம், அங்குசம், பானபாத்திரம், அபய முத்திரை தரித்தவள். அணிகலன்கள் அன்னையை அலங்கரிக்கும் பேறு பெற்றன.

சர்வாலங்காரங்களுடன் அழகே உருவாய் திருவருள்புரியும் தேவியிவள். தன்னை வணங்குவோர் வாழ்வில் வளம் சேர்ப்பவள் இந்த அம்பிகை. வழிபடு பலன்குடும்ப ஒற்றுமை ஓங்கும். வீண் தகராறுகள் வராமல் காக்கும்.

நித்யாநித்யக்லின்னா என்றால் எப்போதும் தயையோடு கூடியவள் என்று பொருள். இத்தேவியின் இதயம் என்றும் கருணையால் நனைந்தே உள்ளதாம். இந்த அம்பிகையின் மகிமையைப் பற்றி பெரிய திருவடியான கருட பகவானின் பெருமைகளைக் கூறும் கருட புராணத்தில் ‘நித்யக்லின்னா மதோவக்ஷயே திரிபுரம் புக்திமுக்திதாம் எனக் கூறப்பட்டுள்ளது. இத்தேவியை துதித்து வணங்குவோர் புக்திமுக்தியுடன் வாழ்வர் என அதற்குப்பொருள்.

நித்யக்லின்னா காயத்ரி:
 
ஓம் நித்யக்லின்னாயை வித்மஹே
நித்ய மதத்ரவாய தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

மூல மந்திரம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் நித்யக்லின்னே மதத்ரவே ஸ்வாஹா.

த்யான ஸ்லோகங்கள்

அருணாமருணா கல்பாம் அருணாம் ஸுகதாரிணீம்
அருண் ஸ்ரக்விலேபாம் தாம் சாருஸ்மேர முகாம்புஜாம்
நேத்ர த்ரயோல்லாஸ வக்த்ராம் பாலே கர்மாம்ஸீ மௌக்திகை:
விராஜமானாம் முகுட வஸதர்தேந்து ஸேகராம்

சதுர்பி: பாஹுபி: பாஸமங்குஸம் பான பாத்ரகம்
அபயம் பிப்ரதீம் பத்மம் மந்த்யாஸீனாம் மதாலஸாம்.
பத்மராக மணிப்ப்ரக்யாம் ஹேம தாடங்க பூஷிதாம்
ரக்த வஸ்த்ரதராம் தேவீம் ரக்தமால்யானு லேபனாம்

அஞ்சனாஞ்சித நேத்ராம், பத்ம பத்ர நிபேக்ஷணாம்
நித்யக்லின்னாம் நமஸ்யாமி சதுர்புஜ விராஜிதாம்.
ரக்தாம் ரக்தாங்க வஸனாம் சந்த்ர சூடாம் த்ரிலோசனாம்
ஸ்வித்ய த்வக்த்ராம் மதாகூர்ணலோசனாம் ரத்னமூர்ச்சிதாம்

பாஸாங்குஸௌ கபாலம் ச மஹாபீதிஹரம் ததா
தததீம் ஸம்ஸ்மரேன்னித்யக்லின்னாம் பத்மாஸனஸ்திதாம்
விந்து வக்த்ராம் மத கூர்ணலோசனாம் ரத்னபூஷிதாம்
தததீம் ஸ்ம்ஸ்மரேன்நித்யாம் பத்மாஸன விராஜிதாம்

ஸர்வக்ஞாதிபிராவ்ருதாம் ஸுசரிதாம் ஸௌபாக்ய ஸௌக்யப்ரதாம்
கீர்வாணார்ச்சித பாதபத்மயுகளாம் கௌரீம் கணேசப்ரியாம்
சர்வாணீம் சந்த்ரபிம்பவதனாம் நிர்வாண பீஜாங்குராம்
த்யாயேத் தக்ஷிணகாளஹஸ்தி நிலயாம் திவ்யாங்க ராகோஜ்வலாம்.


ஸ்ரீஸுக்த நித்யா ஸ்லோகம்:

ஸ்ரீஸுக்த ஸம்ஸ்துதாம் இகார ப்ரக்ருதிக பூஷா கலாத்மிகாம்
நித்யக்லின்னா நித்யா ஸ்வரூபாம் ஸர்வ ஸம்பத்பூரண சக்ரஸ்வாமினி
அஹங்காராகர்ஷிணி சக்தி ஸ்வரூபிணீம் ஸ்ரீமாதவ வக்ஷஸ்தல ஸ்வரூபிணீம்
ஸர்வ மங்கள தேவதாம் கீர்த்தி லக்ஷ்மீ ஸ்வரூப நித்யக்லின்னா தேவ்யை நம:


வழிபட வேண்டிய திதிகள்:

சுக்ல பக்ஷ த்ருதியை/க்ருஷ்ண பக்ஷ த்ரயோதசி (த்ருதியை திதி ரூபாயை நித்யக்லின்னாயை நம:)

நைவேத்யம்: பசும்பால்.
 
திதி தான பலன்:

இத்தேவிக்கு தயிர் சாதம் நிவேதனம் செய்து தானம் செய்தால், சகல துன்பங்களிலிருந்தும் நிவாரணம் பெறலாம்.

பஞ்சோபசார பூஜை

ஓம் நித்யக்லின்னா நித்யாயை கந்தம் கல்பயாமி நம:
ஓம் நித்யக்லின்னா நித்யாயை தூபம் கல்பயாமி நம:
ஓம் நித்யக்லின்னா நித்யாயை தீபம் கல்பயாமி நம:
ஓம் நித்யக்லின்னா நித்யாயை நைவேத்யம் கல்பயாமி நம:
ஓம் நித்யக்லின்னா நித்யாயை கற்பூர நீராஞ்ஜனம் தர்சயாமி நம:


இத்திதியில் பிறந்தோரின் குணநலன்கள்

இத்திதியில் பிறந்தவர்கள் சுகவாசிகள். இவர்கள் நெற்றியில் வியர்வை சுரக்கும். செந்தாமரைப் பூவினால் இத்திதியில் பிறந்தவர்கள் இத்தேவியை அர்ச்சித்தால் தடைகள் தவிடுபொடியாகும். இவர்கள் அனைவரையும் அடக்கியாளும் குணம் கொண்டவர்கள். வாழ்வில் வறுமையின் சுவையை இவர்கள் ஒரு நாளும் சுவைக்க மாட்டார்கள். அண்டிச் செல்பவரை அரவணைப்பர். இத்திதியில் பிறந்தோர்க்கு தினமும் இத்தேவியின் மூலமந்திரத்தை தினமும் 48 முறை பாராயணம் செய்தால் அல்லல்கள் அகன்று நன்மைகள் பெருகும்.

யந்திரம் வரையும் முறை

சந்தன குங்குமக் கலவையால் முக்கோணம், வட்டம், எட்டிதழ்கள், கிழக்கு மேற்கு திசைகளில் வாயில்களுள்ள இரு பூபுரங்கள் உடைய யந்திரத்தை வரையவும். முக்கோண மூலையில் ஷோபினி, மோகினி, லீலா போன்ற சக்திகளையும், எட்டு தளங்களில் நித்யா, நிரஞ்சனா, க்லின்னா, க்லேதினி, மதனாதுரா, மதத்வரா, திராவிணி, விதானா போன்ற சக்திகளையும் சதுரத்தில் மாதவிகா, மங்களா, மன்மதார்த்தா, மனஸ்வினி, மோகா, அமோதா, மனோமயி, மாயா, மந்தா, மனோவதி போன்ற சக்திகளையும் தியானித்து பூஜிக்கவும்.

இத்திதிகளில் செய்யத் தக்கவை:

சங்கீதம், இசைக்கருவிகள் கற்றல், ஓவியம் பயிலுதல், வீடு கட்டுதல், புதுமனை புகுதல் முதலியன.

அகத்தியர் செய்த சுக்ல பக்ஷ த்ரிதியை திதி துதி

திரிதிகையில் அசுத்தமற்றுச் சுத்தமாகிச்
சிற்சொரூபந் தனைச் சேர்ந்த தெளிவே கண்டு
உறுதியுடன் உனதுபதம் அகலாச் சிந்தை உறவு
செய்வாய் உம்பரையே உமையே தாயே

அறுதியாய் இகத்தாசை அகன்ற ஞான ஆனந்த
வாசையைத்தா அடியேனுக்குச்
சுருதியிலே மனமிருக்கத் துணைசெய்தாயே
சோதியே மனோன்மணியே சுழிமுனை வாழ்வே.


அகத்தியர் செய்த க்ருஷ்ண பக்ஷ த்ரயோதசி திதி துதி:

பாசவலைதனில் சிக்கி அலையாமல் தான்
பண்புடனே அடியவருக்கருள வேண்டி
நேசமுடன் சதுரகிரி மலையிலேதான்
நித்தியமும் நடனமது புரியும் தேவி

பேசரிய ஞானமதை எனக்களித்த பேரான
சுமங்கலியே பெரியோருக்குத்
தோஷமது வாராமல் காக்கும் தேவி சோதி
மனோன்மணித் தாயே சுழிமுனை வாழ்வே.


மாத்ருகா அர்ச்சனை:

ஓம் நித்யக்லின்னாயை நம:
ஓம் நித்ய மதத்ரவாயை நம:
ஓம் உமாயை நம:
ஓம் விஸ்வரூபிண்யை நம:
ஓம் யோகேஸ்வர்யை நம:

ஓம் யோககம்யாயை நம:
ஓம் யோகமாத்ரே நம:
ஓம் வஸுந்தராயை நம:
ஓம் தன்யாயை நம:
ஓம் தனேஸ்வர்யை நம:

ஓம் தான்யாயை நம:
ஓம் ரத்னதாயை நம:
ஓம் பஸுவர்தின்யை நம:
ஓம் கூஷ்மாண்ட்யை நம:
ஓம் தாருண்யை நம:

ஓம் சண்ட்யை நம:
ஓம் கோராயை நம:
ஓம் கோரஸ்வரூபாயை நம:
ஓம் மாத்ருகாயை நம:
ஓம் மாதவ்யை நம:

ஓம் தஸாயை நம:
ஓம் ஏகாக்ஷராயை நம:
ஓம் விஸ்வமூர்த்தயே நம:
ஓம் விஸ்வாயை நம:
ஓம் விஸ்வேஸ்வர்யை நம:

ஓம் த்ருவாயை நம:
ஓம் ஸர்வாயை நம:
ஓம் க்ஷமாயை நம:
ஓம் ஆத்யாயை நம:
ஓம் பூதாத்மாய நம:

ஓம் பூதிதாயை நம:
ஓம் பூதிவர்தின்யை நம:
ஓம் பூதேஸ்வரப்ரியாயை நம:
ஓம் பூத்யை நம:
ஓம் பூதமாலாயை நம:

ஓம் யௌவன்யை நம:
ஓம் வைதேஹ்யை நம:
ஓம் பூஜிதாயை நம:
ஓம் ஸீதாயை நம:
ஓம் மாயாவ்யை நம
:
ஓம் பவவாஹின்யை நம:
ஓம் ஸத்வஸ்தாயை நம:
ஓம் ஸத்வநிலயாயை நம:
ஓம் ஸத்வாயை நம:
ஓம் ஸத்வசிகீர்ஷணாயை நம:

ஓம் விஸ்வஸ்தாயை நம:
ஓம் விஸ்வநிலயாயை நம:
ஓம் ஸ்ரீபலாயை நம:
ஓம் ஸ்ரீநிகேதனாயை நம:
ஓம் ஸஸாங்கதராயை நம:
ஓம் நந்தாயை நம:



வெற்றிகளைக் குவிக்கும் விஜயா நித்யா!

இந்த அம்பிகை உதய சூரியனைப் போல ஜொலிக்கும் மேனியை உடையவள். ஐந்து முகங்கள். பட்டாடை அணிந்து கண்களைக் கவரும் ஒளி பொருந்திய மகுடமும், நெற்றியில் பிறை நிலவு சூடியும் தோற்றமளிப்பவள். பலவகையான அணிகலன்கள் இந்த அன்னையின் அழகுக்கு மேலும் அழகு செய்கின்றன.



தன் திருக்கரங்களில் சங்கு, சக்கரம், பாசம், அங்குசம், வாள், கேடயம், வில், அம்பு, மாதுளம்கனி, அல்லிமலர்
ஆகியவற்றை ஏந்தி வலது காலை மடித்து இடது காலைத் தொங்கவிட்ட நிலையில் பஞ்ச மகாபாதகங்களை அழிக்கும் தன் பாதத்தை தாமரை மலரில் இருந்திய தோற்றத்துடன் பொலிகிறாள்.

சுகாசனத்தில் வீற்றிருக்கும் இந்த அம்பிகையைப் போரில் வெற்றி பெற தியானம் செய்வது வழக்கம். புலியின் மீது அமர்ந்து கணக்கற்ற சக்திகள் இந்த அன்னையைச் சூழ்ந்து இருப்பர். ஆணவம் கொண்டவர்களை அழிக்கும் ஆதிசக்தியின் அம்சமாக இத்தாய் அருள்கிறாள். வழிபடுவோரின் துன்பங்களை வேரோடு களைபவள். நம்பினோர்க்கு அபயம் அளிப்பவள்.

தேவியின் புன்னகை ததும்பும் திருமுக மண்டலம் மனதைக் குளிர்விக்கிறது எனில் கண்களோ, ‘அஞ்சாதே, நான் இருக்கிறேன்’ எனத் துணிவூட்டுகிறது. கலைகளின் பல்வேறு வடிவாய் அருள்பவள். வெற்றியே வடிவாகத் திகழ்பவள்.


அம்பாளை உபாஸித்தால் கிடைக்காததில்லை. சாஸ்திரங்கள் இதிலே பல பலன்களைக் குறிப்பிட்டுச் சொல்கின்றன. அம்பாளை உபாஸிப்பதால் மிகவும் உத்தமமான வாக்கு சித்திக்கிறது. கவித்வத்தை விசேஷமாக அநுக்ரஹிக்கிறாள். காளிதாஸர் பூர்வத்தில் மிகவும் மந்தமாக இருந்தார் என்றும், உஜ்ஜயினியில் காளி அநுக்கிரஹம் கிடைத்தே அவர் கவி சிரேஷ்டரானார்.

கவித்வம், சங்கீதம் முதலிய கலைகள் எல்லாம் அம்பிகையின் அநுக்கிரஹத்தால் உண்டாகின்றன. பொதுவாக இதற்கெல்லாம் ஸரஸ்வதியை அதிதேவதையாகச் சொல்கிறோம். இப்படிப்பட்ட ஸரஸ்வதி, அம்பாளின் சந்நிதானத்தில் எப்போதும் வீணையோடு கானம் ண்ணிக்கொண்டிருக்கிறாளாம். என்ன பாட்டுக்கள் பாடுகிறாள்? அம்பாளின் பெருமையைப் பற்றியா? இல்லை. மகாபதிவிரதையான அம்பாளுக்கு ஈஸ்வரனைப் பாடினாலே சந்தோஷம். அதன்படி வாணி ஈஸ்வரப் பிரபாவத்தைப் பாடிக்கொண்டிருக்கிறாள்.

அம்பாள் அதை ரொம்பவும் ரஸித்து ஆனந்தப்படுகிறாள். அம்பாள் ரொம்பவும் சந்தோஷப்பட்டுத் தலையை ஆட்டிக்கொண்டு ‘பேஷ் பேஷ்’ என்று வாய் விட்டுச் சொல்லி விடுகிறாள். அவ்வளவுதான். அம்பாளுடைய அந்த வாக்கின் மாதூர்யத்தில் ஸரஸ்வதியின் வீணா நாதம் அத்தனையும் ஒன்றுமில்லை என்றாகிவிடுகிறதாம். இப்படிப்பட்ட மதுரவாக்குக் கொண்டவளுக்கு முன்பா என் வித்தையைக் காட்டினேன் என்று வெட்கப்பட்டு, ஸரஸ்வதி தன் வீணையை உறையில் வைத்து மூடி விடுகிறாளாம்.

வழிபடு பலன்:

அறிவு, பெயர், புகழ், கௌரவம், வெற்றி, அந்தஸ்து போன்றவற்றை அருள்பவள். குடும்ப ஒற்றுமை சிறக்கும். போட்டி, பந்தயங்களிலும் வழக்குகளிலும் வெற்றி கிட்டும்.

விஜயா காயத்ரி:

ஓம் விஜயா தேவ்யை ச வித்மஹே
மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவி: ப்ரசோதயாத்.


மூலமந்த்ரம்:

ஓம் ஐம் ஹ்ரீம் ஓம் ஐம் ப்ம்ர்ய் ஊம் ஐம் விஜயா நித்யாயை நம:

த்யான ஸ்லோகங்கள்:

ஜயப்ரதாம் ஸ்ரீவிஜயாத்ம போத ஸௌக்ய ப்ரதாம்
மோக்ஷ விதாலாதக்ஷாம் ஜயாதி ரூபாம்
விஜயாம ஜேயாம்
ஐகார ரூபாம் ப்ரணமாமி நித்யாம்.

பஞ்ச வக்த்ராம் தஸபுஜாம் ப்ரதிவக்த்ரம் த்ரிலோசனாம்
பாஸ்வன் முகுட வின்யஸ்ய சந்த்ரரேகா விராஜிதாம்
ஸர்வாபரண ஸம்யுக்தாம் பீதாம்ப்ர விராஜிதாம் உத்யத்
பாஸ்வத் விந்து துல்ய தேஹ காந்தி ஸுசிஸ்மிதாம்

ஸங்கம் பாஸம் கேட சாபௌ கல்ஹாரம் வாமபாஸுபி:
சக்ரம் ததா ஸங்க கட்கம் ஸாயகம் மாதுலிங்கதம்
ததானாம் தக்ஷிணை ஹஸ்த: ப்ரயோகே: பீமதர்ஸனாம்
வ்யாக்ராரூடாபித; ஸக்திபி: பரிவாரிதாம் ஸமரே

பூஜனேன்யேஷு ப்ரயோகேஷு ஸுகாஸனாம்
ஸக்தயஸ்ஸாபி பூஜாயாம் ஸுகாஸன  ஸமன்விதா:
ஸர்வ தேவ்ய: ஸமாகாரா: முக பாண்யாபிதான்யபி.
ஏக வக்த்ராம் தஸபுஜாம் ஸர்ப்ப யக்ஞோபவீதினீம்


தம்ஷ்ராகரால வதனாம் நரமாலா விபூஷிதாம்
அஸ்தி ஸர்மாவ ஸேஷாட்யாம் வஹ்னிகூட ஸமப்ரபாம்
வ்யாக்ராம்பராம் மஹாப்ரௌட ஸவாஸன விராஜிதாம்
ரணே ஸ்மரண மாத்ரேண ப்ரக்தேப்யோ விஜயப்ரதம்


ஸூலம் ஸர்பம் சதக்காஸி ஸ்ருணி  கண்டா ஸனித்வயம்
பாஸாமக்னி மபிநீம் சததானாம் விஜயாம்  ஸ்மரேத்.
கஜாஸ்ய ஸ்கந்த ஜனனீம் ஸுஜனார்த்தி விநாஸினீம்
யஜாமஹே ப்ரதிதினம் விஜயாம் விஸ்வ மோஹினீம்.


ஸ்ரீஸுக்த நித்யா ஸ்லோகம்:

ஸ்ரீஸுக்த ஸம்ஸ்துதாம் ஐகார ப்ரக்ருதிக, ஸ்ரீகலா கலாத்மிகாம், ஸ்ரீவிஜயா நித்யா ஸ்வரூபாம் ஸர்வ ஸித்திப்ரத சக்ர ஸ்வாமினீம் நாமாகர்ஷிணீ சக்தி ஸ்வரூபாம், ஸ்ரீதாமோதர வக்ஷஸ்தல கமல வாஸினீம் ஸர்வ மங்கள தேவதாம் ஸ்ரீசக்தி லக்ஷ்மி ரூபேண விஜயா நித்யாயை நம:

வழிபட வேண்டிய திதிகள்:

ஸுக்ல பக்ஷ த்வாதசி / க்ருஷ்ண பக்ஷ சதுர்த்தி

நைவேத்யம்

அவலால் செய்யப்பட்ட பலகாரம் (அ) அவல்.

பூஜைக்கான புஷ்பங்கள்

மஞ்சள் நிறமுள்ள மலர்கள்.


திதி தான பலன்:

அவலால் செய்யப்பட்ட பலகாரங்களை இந்த அன்னைக்கு நிவேதித்து தானமளித்தால் தேவி மகிழ்வாள்.


பஞ்சோபசார பூஜை:

ஓம் விஜயா நித்யாயை கந்தம் கல்பயாமி நமஹ
ஓம் விஜயா நித்யாயை தூபம் கல்பயாமி நமஹ
ஓம் விஜயா நித்யாயை தீபம் கல்பயாமி நமஹ
ஓம் விஜயா நித்யாயை நைவேத்யம் கல்பயாமி நமஹ
ஓம் விஜயா நித்யாயை கற்பூர நீராஞ்ஜனம்தர்ச்யாமி நமஹ



இத்திதியில் பிறந்தவர்களின் குண நலன்கள் :

காமம் மிகுந்தவர்கள். சுற்றத்தாருடன் கூடிய பராக்ரம சாலிகள். செல்வம் மிகுந்தவர்கள். சாந்தகுணம் கொண்டவர்கள். தைரிய சாலிகள். தியாக மனப்பான்மை மிக்கவர்கள். சகல கலைகளும் முயன்றால் இவர்களுக்குக் கிட்டும். எதிலும் வெற்றி பெறும் வரை விடாமுயற்சி செய்வர். சாதனையாளர்கள்.

தங்களைச் சார்ந்துள்ளவர்களைக் காப்பதிலும், அவர்கள் வெற்றிபெறுவதற்கு எல்லாப் பணிகளையும் செய்வதிலும் முனைப்பு உள்ளவர்கள். எதிலும் வெற்றியையே விரும்புவதோடு அதைச் சாதிக்கும் வல்லமையும் படைத்தவர்கள். தேவியின் காயத்ரியை இத்திதியில் பிறந்தவர்கள் தினமும் 45 தடவை பாராயணம் செய்தால் நலங்கள் பெருகி இன்னல்கள் அகலும்.


யந்திரம் வரையும் முறை:

சந்தன குங்குமக் கலவையால் வட்டம், எட்டிதழ்கள், வட்டம், பதினாறு இதழ்கள், எண்கோணம், இரு வட்டங்கள், நான்கு வாயில்களுடன் கூடிய இரு சதுரங்கள் கொண்ட யந்திரத்தை வரைந்து பூஜிக்கவும். புலிக்கூட்டங்களின் மேல் அமர்ந்த தேவியின் சக்திகளாகிய யோகினிகளை த்யானிக்கவும்.

இத்திதிகளில் செய்யத் தக்கவை:

செல்வத்தைப் பெருக்கும் முதலீடுகள், தானியங்களைச் சேர்த்தல், சத்கர்மங்களையும், தர்ம காரியங்களையும் செய்தல் முதலியன.சிரவணம் என்னும் திருவோண நட்சத்திரத்துடன் கூடிய துவாதசி ‘‘ச்ரவணத் துவாதசி” எனப்படும். அந்நாள் உபவாசத்திற்கு மட்டுமே ஏற்றது.


அகத்தியர் அருளிய சுக்ல பக்ஷ துவாதசி விஜயா நித்யா துதி:

துவாதசி யானவிரு மாவும் ஒத்துச் சுணைகடந்து
 அணைகடந்து துவாதசாந்தம்
துவாதசி யொடுங்கிநின்ற மூலஞனம் சுருதி
முடி விடமெனக்குச் சொல்லு மம்மா


துவாதசியால் கேசரத்து ளாடி நின்ற
சுந்தரநற் சௌந்தரியே சொரூபத் தாயே
துவாதசியான பன்னிரண்டு மொன்றாஞ்
சோதியே மனோன்மணியே சுழிமுனை வாழ்வே.



அகத்தியர் அருளிய கிருஷ்ண பக்ஷ துவாதசி விஜயா நித்யா துதி:

மதியான நாலகலையான ரூபி மாதாவே
வரபிரசாதங்கள் தந்து
கதிபெறவே செய்த பூரணியே அம்மா
கிருபையுடன் தவநிலையே காட்டி வைத்தாய்


பதிவான கலை நாலும் பாழ் போகாமல்
பாக்கியங்கள் தந்தருளும் பரையே சித்தர்
துதிதனையே பெரிதென்று நினைக்கும் தேவி
சோதிமனோன் மணித் தாயே சுழிமுனை வாழ்வே.



மாத்ருகா அர்ச்சனை:

ஓம் விஜயாயை நம:
ஓம் ஜயதாயை நம:
ஓம் ஜேத்ர்யை நம:
ஓம் அஜிதாயை நம:
ஓம் வாமலோசனாயை நம:

ஓம் ப்ரதிஷ்டாயை நம:
ஓம் அந்தஸ்திதாயை நம:
ஓம் மாத்ரே நம:
ஓம் ஜினாயை நம:
ஓம் மாயாயை நம:

ஓம் குலோத்பவாயை நம:
ஓம் க்ருஸாங்க்யை நம:
ஓம் வாயவ்யை நம:
ஓம் க்ஷமாயை நம்:
ஓம் க்ஷமா கண்டாயை நம:

ஓம் த்ரிலோசனாயை நம:
ஓம் காமாயை நம:
ஓம் காமேஸ்வர்யை நம:
ஓம் ரமாயை நம:
ஓம் காம்யாயை நம:

ஓம் காமப்ரியாயை நம:
ஓம் காமரயை நம:
ஓம் காமாசார விஹாரிண்யை நம:
ஓம் துச்சங்காயை நம:
ஓம் நிராலஸ்யாயை நம:

ஓம் நிரூஜாயை நம:
ஓம் ருஜநாஸின்யை நம:
ஓம் விஸல்யகரிண்யை நம:
ஓம் ஸ்ரேஷ்டாயை நம:
ஓம் ம்ருத ஸஞ்ஜீவன்யை நம:

ஓம் படாயை நம:
ஓம் ஸந்தின்யை நம:
ஓம் சக்ர நமிதாயை நம:
ஓம் சந்த்ர சேகராயை நம:
ஓம் ஸ்வர்ணாகாயை நம:

ஓம் ரத்ன மாலாயை நம:
ஓம் அக்னி லோகாப்தாயை நம:
ஓம் ஸஸாங்காயை நம:
ஓம் அவயவாம்பிகாயை நம:
ஓம் தாராத்தாயை நம:

ஓம் தாரயந்த்யை நம:
ஓம் மர்யை நம:
ஓம் பூரிப்ரபாயை நம:
ஓம் ஸ்வராயை நம:
ஓம் க்ஷேத்ரஜ்ஜாயை நம:

ஓம் பூரிஸித்தாயை நம:
ஓம் மந்திர ஸுங்காரரூபிண்யை நம:
ஓம் ஜ்யோதிஷே நம:
ஓம் க்ஞானாயை நம:
ஓம் க்ரஹகத்யை நம:
ஓம் ஸர்வப்ராண ப்ருதாம்வாராயை நம:








வளமான வாழ்வருள்வாள் மஹா வஜ்ரேஸ்வரி!

திதி நித்யா தேவிகளில் ஆறாவது தேவியான மஹா வஜ்ரேஸ்வரிக்கு நான்கு திருக்கரங்கள். பாசம், அங்குசம், கரும்பு வில், மாதுளம் கனி போன்றவற்றை தன் திருக்கரங்களில் தாங்கியுள்ளாள். நானாவித ரத்னங்களால் பிரகாசிக்கும் அணிகலன்களை அணிந்தருளும் தேவியிவள்.



நித்யமும் மங்களங்களை அருளும் நித்யா தேவி!

இந்த அம்பிகை எப்போதும் இருப்பவள். அழிவில்லாதவள். காலநித்யா வடிவினள். நித்யா என்ற மந்திர வடிவானவள். முக்கண்ணி. பன்னிரண்டு கரங்கள் கொண்டவள். கணக்கற்ற சக்தி கூட்டங்கள் இவளைச் சுற்றி வட்ட வடிவில் அமர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சர்வாத்மிகா எனும் திருநாமம் கொண்ட இத்தேவி இயங்கும் பொருட்களை இயக்கும் சக்தியாகத் திகழ்கிறாள். டாகினி போன்ற தேவதைகளின் அதிதேவதையாகத் திகழும் இவள் உதயசூரியனின் நிறம் போல பிரகாசிப்பவள். மந்தகாசம் பொங்கும் திருமுகமண்டலம் உடையவள்.



பிரகாசமான மகுடம் தரித்து தன் திருக்கரங்களிலே பாசம், அங்குசம், புஸ்தகம், ஜபமாலை, கரும்புவில், புஷ்பபாணம், கேடயம், வாள், சூலம், கபாலம் ஆகியவற்றைத் தரித்து அபய வரத முத்திரையுடன் காட்சி அளிப்பவள். புவியில் உள்ள சகல ஜீவராசிகளையும் அவரவர் கர்ம வினைக்கேற்ப ஆட்டுவிப்பவள்.

ஆத்மானந்த சுகம் அருள்பவள். நமது துன்பங்களை நீக்கி இன்பம் தருவதற்காக இன்முகத்தோடு வீற்றுள்ளாள். இவளைப் போற்றி வணங்கினால் மாயையை நீக்கி ஆத்ம ஞானத்தை அருள்வாள். இந்த அம்பிகையின் புனிதமான திருவடிகளைப் பற்றினால் சகலவிதமான தொல்லைகளும் தானே விலகும். தடைகள் விடைபெறும். தடங்கல்கள் தவிடுபொடியாகும். தோஷங்கள் தொலையும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் இஷ்டமுடன் நம்மை வந்தடையும். ஸௌந்தர்ய ரூபவதியான இத்தேவி பக்தர்களின் மனதைக் கவரும் பச்சைப்பசும்கிளி. மங்களமே வடிவான இவள் தன்னை அண்டியவர்க்கு மங்களங்களைத் தருபவள். தன் திருவடியைப் பற்றியவரின் துன்பங்களைத் தொலைப்பவள். பெருங்கருணையும், பேராற்றலும் கொண்டவள்.

‘ப்ரகல்பா’  என்றொரு நாமம் அம்பிகைக்கு உண்டு. பிரகல்பா எனில் துணிச்சல் நிறைந்தவள் என்று பொருள். பற்றற்றவர்களிடம் இயல்பாகவே துணிச்சல் நிறைந்திருக்கும். “துறவிக்கு வேந்தனும் துரும்பு” என்று கருதும் துணிச்சல் நிறைந்திருக்கும். முத்தொழில்களை மிகுந்த துணிச்சலுடன் ஏற்று எளிதில் நடத்துபவள். அசுர சக்திகளை ஊதித் தள்ளும் அற்புதத் துணிச்சல் உள்ளவள். கிராமதேவதைகளாக இருந்து, எவரும் நடமாட அஞ்சும் நள்ளிரவில் துணிச்சலுடன் காவல் புரிபவள் அம்பிகை. அம்பிகைக்கு ஏது அச்சம்? எல்லாமே துச்சம்! அவள் துணிவில் உச்சம்!

பரம பாகவதரான குசேலர் மிக வறுமையான நிலையில் இருந்தபோது, மனைவி சுசீலையின் வேண்டுகோளை ஏற்று பால்ய நண்பரான கிருஷ்ணனை தரிசிக்க துவாரகை சென்றார். சிந்தனை முழுவதும் கண்ணனின் நாமத்தையே கொண்டு கால்நடையாகவே துவாரகை வருகிறார். கண்ணன் குசேலரைப் பார்த்ததும் ஆனந்தம் கொண்டு கட்டி அணைத்து தன் அருகே அமர்த்தி உபசரிக்கிறார். மகாலட்சுமியான ருக்மணி தேவியும் உடனிருந்து குசேலருக்கு அர்க்யம், பாத்யம் கொடுத்து விசிறிவிடுகிறாள். குசேலர் பிரமித்துப்போய் பேச முடியாமல் பரவசமாகி, லட்சுமிதேவியோடு கூடிய கிருஷ்ணனைக் கண்டு மெய்மறந்த நிலையை அடைந்தார்.

கிருஷ்ணன் குசேலருடைய வறுமையை நீக்கி அவருக்கு ஐஸ்வர்யங்களை அருள திருவுள்ளம் கொண்டாலும், அந்த சக்தி தேவிக்குதான் உண்டென்பதால் லட்சுமி கடாட்சம் குசேலருக்குக் கிடைக்க வேண்டுமென்று நினைத்தார் பரந்தாமன். அடுத்த வினாடி தேவி கண்ணனைப் பார்த்து, “சுவாமி! இவர் எந்த திக்கிலிருந்து வருகிறார்?” என்று வினவுகிறாள். கண்ணபிரானும் இதுவே தருணமென்று, “இதோபார் தேவி! இந்த திக்கிலிருந்துதான் வருகிறார்” என்றவுடன், கருணாசாகரியான மகாலட்சுமி அந்த திசையில் தன் அருட்பார்வையை வீசுகிறாள். அந்த நிமிடமே அஷ்ட ஐஸ்வர்யங்களும் ஓடிப்போய் குசேலருடைய இல்லத்தை நிரப்புகின்றன.

பொதுவாக நம் இல்லத்திற்கு யாரேனும் வந்தால் “இவருக்கு எந்த ஊர்?” என்றுதானே கேட்போம். மகாலட்சுமியை திசை என்று கேட்க வைத்து, தேவியின் அருள் குசேலருக்குக் கிடைக்க வைத்தார் மாதவன். நாம் அம்பிகையிடம் பிரார்த்திக்கும்போது, “எனக்கு அதைக்கொடு, இதைக்கொடு” என்று யாசிக்கவே கூடாது. நாம் கேட்காமலேயே கடாக்ஷித்து விடுவாள் அம்பிகை. நாம் தேவியிடத்தில் பரிபூரணமான பிரேமையை மட்டும் வைத்தால் போதும்.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தால் அத்தனை பேரும் அவதிப்பட்டார்கள். ஸ்ரீபரமேஸ்வரன் எல்லாரையும் ரட்சிக்கும் பொருட்டு அந்த விஷத்தை அருந்தி நீலகண்டன் என்ற திருநாமம் பெற்றார் என்பது யாவரும் அறிந்ததே. சங்கரனார் விஷத்தை கையில் ஏந்தியபொழுது அம்பிகையான பார்வதிதேவி தன் கடாக்ஷத்தினாலேயே நஞ்சை அமிர்தம் ஆக்கிவிட்டாள். அந்த அம்பிகை அமிர்தேஸ்வரி என்ற திருநாமம் கொண்டு அருள்பாலித்து வருகிறாள்.

வடமொழியில் அக்ஷி என்றால் கண்களைக் குறிக்கும். இதனாலேயே பராசக்தியான அன்னை காமாக்ஷி, மீனாக்ஷி, விசாலாக்ஷி என்றெல்லாம் நாமம் கொண்டு பார்வை ஒன்றினாலேயே உலகத்தை ரட்சித்து வருகிறாள். காமாட்சி அன்னைக்கு கண்களை வைத்தே அந்த நாமம் ஏற்பட்டது.

சீர்காழியில் சிவபாத ஹ்ருதயருடைய குழந்தையின் அழுகுரலைக் கேட்டு ஓடோடி வந்து ஞானப்பாலை ஊட்டி ஞானசம்பந்தராக ஆக்கிவிடுகிறாள் அம்பிகை. பரமேஸ்வரனும் கருணாமூர்த்திதான். இருந்தாலும் ஈசன் அன்னை உருக்கொண்டு, தானே தாயாக வந்து ரத்னாவளி என்ற கர்ப்பிணிப் பெண்ணிற்கு பிரசவம் பார்த்து தாயுமானவர், மாத்ருபூதேஸ்வரராக அருள்புரிந்தார்.

யுகம் யுகமாக துர்வாசர், தௌம்யர், தத்தாத்ரேயர், சுகர் போன்ற ஞானிகள் அம்பிகையை ஆராதனை செய்து ஆத்மானுபவத்தைப் பெற்றார்கள். ஆதிசங்கரரும் அம்பிகை மீது எண்ணற்ற பாடல்களைப் பாடி மகிழ்ந்தார். அவற்றுள் ஸ்தோத்திர சிகரமாகத் திகழும் சௌந்தர்யலஹரிதுதியில் தேவியின் கடாக்ஷ வைபவத்தைப் பற்றி பல பாடல்களில் வர்ணிக்கிறார்.

சோழ நாட்டில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய அபிராமி பட்டர் என்ற தேவி பக்தர் அம்பிகையைக் குறித்து “அபிராமி அந்தாதி” என்ற நூறு பாடல்களைப் பாடி அன்னையின் கடாக்ஷம் பெற்றார். அன்னையின் கடைக்கண்களைப் பற்றி, “தனம் தரும் கல்வி தரும்” என்று பாடிப் போற்றுகிறார். அந்தாதியின்  “விழிக்கே அருள் உண்டு” என்ற பாடலைப் பாடி முடித்தவுடனே அபிராமியம்மை அவருக்கு காட்சியளித்து அருளினாள்.

நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு கண் அருளிய காமலோசனி, அருட்பிரகாச வள்ளலாருக்கு அன்னையாக வந்து அன்னமிட்ட அற்புதங்கள்... “கருணைக் கொடியே, ஞான சிவகாமி அருளுகவே” என்று பாடி உருகுவதைக் காண்கிறோம்.ஸ்ரீரங்கம் தலத்தில் பெருமாளுக்கு நடக்கும் உற்சவத்தில் ஒருநாள் தாயாருக்கு அலங்காரம் செய்வார்கள். பெருமாளை தாயாரைப்போலவே மிகவும் நேர்த்தியாக அலங்கரித்திருப்பார்கள். இதை அனுபவித்த ஆழ்வார், “பெருமாளே! நீ என்னதான் தாயார் வேடம் பூண்டாலும், தாயாருடைய நயனங்களில் உள்ள கருணையைக் காணமுடிய வில்லையே” என்று பாடினார்.

அம்பிகையின் கடைக்கண் கருணை கிடைத்தாலே நாம் உயர்ந்து உன்னதமாக இருப்போம். அம்பிகையின் கருணையைப் பெற நாமும் தகுதியுடன் இருக்க வேண்டாமா? தூய்மையான உள்ளத்தோடு அன்னையை வணங்கி, மகான்கள் அருளிய பாடல்களைப் பாடி அவள் அருளைப் பெறுவோம். அம்பாள்தான் பிரம்மத்தின் சக்தி. அம்பாள் தன் இயற்கையான கருணையைப் பொழிந்து, அவளை உபாசிப்பவர்களது ஆத்மா பரமாத்மாவிலேயே கரைந்திருக்குமாறு அருளுகிறாள். திருவடிகளைப் பணிந்து அனைத்து வளங்களும் பெறுவோம்.

வழிபடு பலன்:


சிவானந்தம் அடைய, பெரியோர் ஆசி கிட்ட, இந்த அம்பிகை அருள்வாள். சரீர பலம் தந்து ஆன்மிக மேம்பாட்டையும் முயல்பவர்களுக்கு அஷ்டமாஸித்திகளையும் அருள்பவள்.

நித்யா நித்யா காயத்ரி

ஓம் நித்யா பைரவ்யை வித்மஹே
நித்யா நித்யாயை தீமஹி
தன்னோ யோகினி ப்ரசோதயாத்.

மூல மந்த்ரம்:

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹஸகரலடைம் ஹஸகரலடீம்
ஹஸகரலடௌ:

த்யான ஸ்லோகங்கள்:

உத்யத் பாஸ்கர பிம்பாபாம் மாணிக்ய மகுடோஜ்வலாம்
பத்மராக க்ருதா கல்பாம் அருணாம் ஸுகதாரிணீம்
சாருஸ்மித லஸத் வக்த்ராம் ஷட்ஸரோஜ விராஜிதாம்

ப்ரதிவக்த்ரம் த்ரிநயனாம் புஜைத்வாத ஸாபிர்யுதாம்
பாஸாங்குச புண்ட்ரேக்ஷு சாப கேட த்ரிஸூலகாம்
வரம் வாமேததானாம் சாப்யங்குஸம் புஸ்தகம் ததா
புஷ்பேஷு மண்டலாக்ரம்ச கபாலமபயம் ததா

ததானாம் தக்ஷிணை ஹஸ்தை: த்யாயேத் தேவீமனன்யதீ:
லோஹிதாம் லோஹிதாகார சக்தி வ்ருந்பிநிஷேவிதாம்
லோஹிதாம் சுகபூஷாஸ்ரர் லேபநாம் ஷண்முகாம்புஜாம்.

த்யாயேத் தேவீம் மஹேஸானீம் கதம்ப வனமத்யகாம்
ரத்ன மண்டப மத்யேது மஹாகல்ப வனாந்தரே
முக்தாபத்ர சாயாயாம் ரத்ன ஸிம்ஹாஸனேஸ்திதாம்
அனர்க்க ரத்ன கடித முகுடாம் ரத்ன குண்டலாம்
ஹாரக்ரைவேய ஸத்ரத்ன சித்ரிதாம் கங்கணோஜ்ஜ்வலாம்

க்ஷீர முக்தா லஸத்பூஷாம் ஸுக்ல க்ஷௌம விராஜிதாம்
ஹீரமஞ்ஜீர ஸுபகரக்தோத்பல பதாம்புஜாம்
ஸுப்ராங்கராக ஸுபகாம் கற்பூர ஸகலோஜ்வலாம்
புஸ்தகம் சாபமபயம் வாமே தக்ஷிணேக்ஷ மாலிகாம்
வரதான ரதாம் நித்யாம் மஹாஸாரஸ்வத ப்ரதாம்
ஸுப்ரவஸ்த்ராபனாம் ரம்யாம் சந்த்ரகுந்த ஸமுத்யுதிம்

ஸுப்ரஸன்னாம் ஸஸிமுகீம் நாநாரத்ன விபூஷிதாம்
அனந்த முக்தாபரணம் ஸ்ரவந்தீ மம்ருதத்ரவம்
வரதாபய ஸோபநாட்யாம் ஸ்மரேந்நீல பதாகினீம்.

பாலாதீதாம் பானு கோடி ப்ரகாசாம்
மூலாதாரம்போருஹஸ்தாம் மஹேசீம்
பாலாம் பந்தூக ப்ரபாம் பங்கஜாக்ஷீம்
தேவீம் நித்யாம் ஸந்ததம் பாவயாமி.
உத்யந்பரயோதநநிபாம் ஜபாகுஸுமஸந்நிபாம்

ஹரிசந்தன லிப்தாங்கீம் ரக்தமால்ய விபூஷிதாம்
ரத்னாபரண பூஷாங்கீம் ரக்த வஸ்த்ர ஸுஸோபிதாம்
ஜகதம்பாம் நமஸ்யாமி நித்யாம் ஸ்ரீபரமேஸ்வரீம்.

ஸ்ரீஸுக்த நித்யா நித்யா ஸ்லோகம்
ஸ்ரீஸுக்த ஸமஸ்துதாம் ல்ரூகார ப்ருக்ருதிக, சாந்தி
கலாத்மிகாம் ஸ்ரீநித்யா நித்யா ஸ்வரூபாம் ஸர்வஸித்தி
ப்ரத சக்ர ஸ்வாமினீம் தைர்யாகர்ஷிணீ சக்தி ஸ்வரூபிணீம்

ஸ்ரீ ஹ்ருஷீகேச வக்ஷஸ்தலகமல வாஸினீம் ஸர்வ
மங்கள தேவதாம் ஸ்ரீபுஷ்டிலக்ஷ்மி ஸ்வரூப
ஸ்ரீ நித்யா நித்யா தேவ்யை நம:

வழிபடவேண்டிய திதிகள்:

சுக்ல பக்ஷ தசமி/ க்ருஷ்ணபக்ஷ சஷ்டி (தசமி திதி ரூப நித்யா நித்யாயை நம:)

நைவேத்யம்

கருப்பு எள்ளினால் செய்யப்பட்ட உணவுவகைகள்.

பூஜைக்கான புஷ்பங்கள்:
பல வண்ணப் பூக்கள்.

திதி தான பலன்:
கருப்பு எள்ளால் செய்யப்பட்ட உணவு வகைகளை தேவிக்கு நிவேதனம் செய்து தானமளித்தால் யம பயம் அகலும்.

பஞ்சோபசார பூஜை:
ஓம் நித்யா நித்யா தேவ்யை கந்தம் கல்பயாமி நம:
ஓம் நித்யா நித்யா தேவ்யை தூபம் கல்பயாமி நம:
ஓம் நித்யா நித்யா தேவ்யை தீபம் கல்பயாமி நம:
ஓம் நித்யா நித்யா தேவ்யை நைவேத்யம் கல்பயாமி நம:
ஓம் நித்யா நித்யா தேவ்யை கற்பூர நீராஞ்ஜனம் தர்சயாமி நம:

இத்திதியில் பிறந்தோரின் குண நலன்கள் :

தர்மவான்கள்,  செல்வந்தர்கள், மனைவி மக்கள், நண்பர்களுடன் கூடியவர்கள், நீதிமான்கள், அறிவாளிகள். பெரும்பாலும் உண்மையையே பேசுபவர்கள். இத்திதியில் பிறந்தோர் தேவியின் காயத்ரி மந்திரத்தை தினமும் 44 முறை பாராயணம் செய்து வந்தால் அல்லல்கள் அகன்று வாழ்வு வளம் பெறும்.

யந்திரம் வரையும் முறை

சந்தன குங்குமக் கலவையால் அறுகோணம், வட்டம், அறுகோணத்தின் வெளியில் பதினாறு இதழ்களுள்ள முப்பத்தாறு கமலங்கள் அல்லது 32 இதழ்களுள்ள பதினெட்டு கமலங்களை உள்ளேயும் வெளியேயும் வரையவும். தேவியின் ஆயுதங்கள், சப்தமாதர்கள், மாத்ருகா சக்திகள் போன்றோரை தியானம் செய்து பூஜிக்கவும்.

இத்திதிகளில் செய்யத் தகுந்தவை:


 மங்களகரமான செயல்கள், உடற்பயிற்சி, பிரயாணம், புதுமனை புகுதல், குறிப்பிட்ட நபரைக் காணச் செல்லுதல், நீர் சம்பந்தமான செயல்கள் போன்றவை.

அகத்தியர் அருளிய சுக்ல பக்ஷ தசமி திதி துதி:

தசமியெனும் சாக்கிரத்துக் கப்பாலேறிச்
சிலம்பொலியும் நினது திருத்தாளுங்கண்டு
நிசமான தூல சூக்குமதோடொன்றி
நிஷ்களத்தில் உன்னுடன் நான் ஒன்றேயாகி
அசையாத ஆனந்த மயமாய் நிற்க
அருள்புரிவாய் வரமருளானந்த ரூபி
சுசிகரமாய்ப் பிள்ளைமுகம் பார்த்தாட்கொள்வாய்
சோதியே மனோன்மணியே சுழிமுன வாழ்வே!

அகத்தியர் அருளிய க்ருஷ்ணபக்ஷ தசமி திதி துதி:

உன்னுடைய கிருபை வைத்துத் தவத்தைப் பெற்றே
ஒன்றாகி இரண்டாகி ஆறுமாகி
தன்னுடைய தீக்ஷை வைத்து ஞானம் தந்த
சங்கரியே சாம்பவியே சாகாக் காலே
கன்னிகையே மதுரசமான தேவி
கற்பகமே கனகப்ரகாசமான
தன்னுதிரு சுழிமுனையிலாடுந் தேவி
சோதி மனோன்மணித்தாயே சுழிமுனைவாழ்வே!

மாத்ருகா அர்ச்சனை:

ஓம் நித்யாயை நம:
ஓம் பைரவ்யை நம:
ஓம் ஸூக்ஷ்மாயை நம:
ஓம் ப்ரசண்டாயை நம:
ஓம் ஸத்கதிப்ரதாயை நம:

ஓம் ப்ரியாயை நம:
ஓம் ருத்தாயை நம:
ஓம் ஸூக்ஷ்காயை நம:
ஓம் ரக்தாங்காயை நம:
ஓம் ரக்தலோசனாயை நம:

ஓம் கட்வாங்கதாரிண்யை நம:
ஓம் ஸங்காயை நம:
ஓம் கங்காலாயை நம:
ஓம் காலவர்ஷிண்யை நம:
ஓம் ஹிமக்னநயனாயை நம:

ஓம் வ்ருத்தாயை நம:
ஓம் பூதநாதாயை நம:
ஓம் பூதபவ்யாயை நம:
ஓம் துர்வ்ருத்த ஜன ஸம்மதாயை நம:
ஓம் புஷ்போத்ஸவாயை நம:

ஓம் புண்யகந்தாயை நம:
ஓம் புண்யபாபவிவேகின்யை நம:
ஓம் திக்வாஸக்ஷௌமவாஸாயை நம:
ஓம் ஏகவங்ஸத்ரஜடாதராயை நம:
ஓம் ஜ்வாலாமாலின்யை நம:

ஓம் கண்டாதராயை நம:
ஓம் தனுர்தராயை நம:
ஓம் டங்கஹஸ்தாசலாக்ராஹ்யை நம:
ஓம் ஹாகின்யை நம:
ஓம் ஸாகின்யை நம:

ஓம் ரமாயை நம:
ஓம் ப்ரஹ்மாண்டபாலிதமுகாயை நம:
ஓம் விஷ்ணுமாயா சதுர்புஜாயை நம:
ஓம் அஷ்டதஸபுஜாபீமாயை நம:
ஓம் விசித்ர சித்ர ரூபிண்யை நம:

ஓம் பத்மாஸன பத்மவஹாயை நம:
ஓம் ஸ்புரத்காந்தி ஸுபாவஹாயை நம:
ஓம் மோஹின்யை நம:
ஓம் மௌலின்யை நம:
ஓம் மான்யாயை நம:

ஓம் மானதாமானவாதின்யை நம:
ஓம் ஜகத்ப்ரியாயை நம:
ஓம் விஷ்ணுகர்ப்பாயை நம:
ஓம் மங்களாமங்களப்ரியாயை நம:
ஓம் பூதிர்பூதிகாயை நம:

ஓம் பாக்யாயை நம:
ஓம் போகீந்த்ரஸயனாமிதாயை நம:
ஓம் தப்தசாமிகரிக்ருதாயை நம:
ஓம் ஆர்யவம்ஸவிமர்தின்யை நம:
ஓம் அதௌகவர்ஷணீஸவாயை நம:
ஓம் க்ருதாந்தாயை நம:



பேரானந்தம் அளிப்பாள் பேருண்டா நித்யா!



அனைத்து அண்டங்களிலும் நிறைந்துள்ள தேவி, அகிலத்துக்கே ஆதி காரணியாய்த் துலங்குபவள். அநேக கோடி அண்டங்களைப் படைத்தவள். அவற்றை உண்டு பண்ணியதால் இந்த அம்பிகை ‘‘அநேக கோடி ப்ரமாண்ட ஜனனீ’’ எனவும் அழைக்கப்படுகிறாள்.

உருக்கி வார்த்த தங்கம் போன்ற மேனியில் பட்டாடை உடுத்தி, குண்டலங்கள், பொன் ஆபரணங்கள், முத்துமாலை, ஒட்டியாணம் மோதிரங்கள் போன்றவற்றை தரித்து அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியாகத் திகழும் இந்த அன்னை முக்கண்ணி. புன்முறுவல் பூத்த முகத்தினள்.

மார்பகங்களின் பாரத்தைச் சுமக்க முடியாமல் சற்றே துவளும் இடை கொண்டவள். இத்தேவியின் கண்களில் பொங்கும் கருணை அளப்பற்கரியது.உருக்கிய தங்கத்திற்கு ஒப்பான ஒளிபெற்ற தேககாந்தியுடையவள். 

மந்தஸ்மித புன்னகை சிந்தும் அருள்வடிவினள். மிகச் சிறந்த மேன்மையான ஆபரணங்கள் தேவியின் அழகுக்கு அழகு செய்கின்றன. காதோலை, கழுத்துச்சங்கிலி, கை வளையல்கள், ஒட்டியாணம், பாதசரங்கள், மோதிரம், ரத்ன மயமான வஸ்திரம் தரித்து சோபையும் எழிலும் கொண்டு அழகே உருவாய் பொலிபவள்.

தன் திருக்கரங்களில் பாசம், அங்குசம், கேடயம், கட்கம், கதை, வஜ்ராயுதம், வில், அம்பு ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். தன்னைப்போன்ற சக்தி கூட்டங்களால் சூழப்பட்டவள். பூஜா காலங்களில் அமர்ந்தும் மற்ற காலங்களில் நின்றும் அருள்பவள். இந்த அம்பிகையை சிரித்த முகத்துடனேயே உபாஸனை செய்ய வேண்டும் என்பது விதி. அம்பிகையின் பெருமையைப் பற்றி ‘தெய்வத்தின் குரலி’ல் மகாபெரியவர் அருளியுள்ளதைப் பார்ப்போம்:

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் ‘ஸௌந்தரிய லஹரி’ஸ்லோகம்
ஒன்றில், த்வயா ஹ்ருத்வா வாமம் என்று சொல்கிறார்:

‘‘அம்பிகே! நிர்குணப் பிரம்மம் தனக்கென்று எந்த வர்ணமும் இல்லாத ஸ்படிக ஈஸ்வரனாக இருக்கிறது. அதில் இடப்பக்கத்தை நீ திருடிக் கொண்டாயாம். அப்படிப் பார்த்தாலும் உனக்கு ஒரு பாதி உடம்புதானே இருக்க வேண்டும்? ஆனால், பதியின் பாதி சரீரத்தைத் திருடிக் கொண்டதிலும் உனக்குத் திருப்தி உண்டாவில்லை.

பாக்கி பாதி தேகத்தையும் நீயே ஆக்கிரமித்துக் கொண்டு விட்டதாகக் காண்கிறது. அதனால்தான் பூரண ஸ்வரூபமாகச் செக்கச் செவேலென்று காமேசுவரியாக இருக்கிறாய். பரமேசுவரனுக்கு உரிய நெற்றிக்கண், சந்திர கலை எல்லாவற்றையும் நீயே ஸ்வீகாரம் செய்து கொண்டு விட்டாய்!’’

‘கதாஸ்தே மஞ்சத்வம்’ என்று ஆரம்பமாகும் ஸ்லோகத்தில், அம்பாள் ஐந்தொழிலும் செய்வதாகச் சொல்லும்போது, ‘‘பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் (மாயைக்கு அதிபதியான) ஈஸ்வரன் இவர்களைக் கட்டில் கால்களாகக் கொண்ட மஞ்சத்தின் மீது நீ பிரம்ம ஸ்வரூபமான காமேசுவரனோடு அநுக்கிரஹ ரூபிணியாக, காமேசுவரியாக விளங்குகிறாய். ஆனாலும் அந்தக் காமேசுவரன் ஒருத்தன் தனியாக இருப்பதே தெரியவில்லை. உன்னுடைய ஜோதிச் சிவப்பு அவனுடைய ஸ்படிக நிறத்திலும் பளீரென்று வீசி, அவனையும் ஒரே சிவப்பாக்கி சிருங்கார ரஸத்தின் வடிவமாக்கிவிட்டது’’
முதலில் சொன்ன ஸ்லோகப்படி அம்பாளுக்கும் முக்கண் உண்டு; சிரஸில் சந்திரகலை உண்டு;

நெற்றிக் கண் அக்னி வடிவானது; வலக்கண் சூரிய வடிவம்; இடக்கண் சந்திர வடிவம். உலகத்தை வாழ்விக்கிற மூன்று ஜோதிகளும் பராசக்தியிடமிருந்து வந்தவை. இதை, கவித்வ அழகோடு ஸௌந்தரிய லஹரியின் இன்னோரு சுலோகம் சொல்கிறது. அது, ‘உன் வலது கண் பகலைப் படைக்கிறது. இடது கண் இரவைப் படைக்கிறது. இரண்டுக்கும் நடுவே உள்ள நெற்றிக் கண் சந்தியா காலத்தைப் படைக்கிறது. அதனால்தான் அது சிவந்து அம்பாளைப் பிரகிருதி, மாயை என்று சொன்னதோடு நிற்கவில்லை. புருஷன் அல்லது மாயையின் சக்தியும் இதே தேவிதான். அவனோடு அபேதமாக, அபின்னமாக இருக்கப்பட்ட வஸ்து இவள். இருவரும் ஒன்றே; அத்வைதமாக இருக்கிறார்கள்.

வேதங்களின் பரம தாத்பரியம் அத்வைதம். அந்த அத்வைதத்தின் ரூபமாகவே காஞ்சிபுரத்தில் காமாக்ஷி பிரகாசிக்கிறாளாம்! ‘ஐதம்பரியம் சகாஸ்தி நிகமானாம்’ என்கிறார் மூகர்.
மாதா ஸ்வரூபம் என்று அருகில் போகிறோம். பார்த்தால் பிதாவுக்கு உண்டான நெற்றிக்கண், சந்திரக்கலை எல்லாமும் இங்கே இருக்கின்றன. சிறந்த பதிவிரதையாக இருந்து, அந்தப் பதிவிரத்தியத்தாலேயே ஈஸ்வரனின் பாதி சரீரத்தை இவள் பெற்றதாகச் சொன்னாலும், இப்போது பார்க்கும் போது, இவள் சிவஸ்ரூபத்தை கொஞ்சம் கொஞ்சமாகத் திருடி, முழுவதும் தானே ஆகிவிட்டாள் என்று, ஸௌந்தரிய லஹரி சொல்கிறது.

பக்தியின் ஸ்வாதீனமும், கவித்த கல்பனா சுதந்திரமும் கொண்டு இப்படியெல்லாம் ஆசார்யாள், மூகர் போன்றவர்கள் துதிக்கிறார்கள். மொத்தத்தில் தாத்பரியம் அவள் பூரண பிரம்மசக்தி, அவளுக்கும் பரமாத்மாவான பரமேசுவரனுக்கும் லவலேசம்கூட பேதம் இல்லை என்பதே.பரமேசுவரனின் சரீரத்தை இவள் திருடியதாக ஆசார்யார் சொல்கிறார் என்றால், அப்பைய தீக்ஷிதர் வம்சத்தில் வந்த மகனான நீலகண்ட தீக்ஷிதரோ அம்பாளுடைய கீர்த்தியைத்தான் ஈஸ்வரன் தஸ்கரம் செய்து கொண்டுவிட்டான் (திருடிவிட்டான்) என்று குற்றப் பத்திரிகை படிக்கிறார்!

பரமேசுவரன், ‘காமனைக் கண்ணால் எரித்தவராம்; காலனைக் காலால் உதைத்தவராம்’என்று லோகம் முழுக்கப் பிரக்யாதி பெற்றுவிட்டார். ‘‘ஆனால், அம்மா, காமனை எரித்த நெற்றிக் கண்ணில் பாதி உன்னுடையதல்லவா? அதுவாவது போகட்டும். இந்த வெற்றியில் பாதி சிவனுக்குச் சேரும். ஆனால் காலனைக் காலால் உதைத்து வதைத்த புகழ் அவரை அடியோடு சேரவேக் கூடாது. ஏனென்றால் இடது காலல்லவா அவனை உதைத்தது. அது முழுக்க உன்னுடையது தானே! காமாக்ஷியின் கடாக்ஷம் துளி விழுந்துவிட்டால் நாம் காமத்தை வென்று விடலாம்.
காலத்தையும் வென்று அமர நிலையை அடைந்து விடலாம் என்று அர்த்தம்.

அவளுடைய பெருமை நம் புத்திக்கும் வாக்குக்கும் எட்டாதது. அசலமான சிவத்தையே சலனம் செய்விக்கிற சக்தி அது. அவளுடைய க்ஷணநேரப் புருவ அசைப்பை ஆக்ஞையாகக்கொண்டு பிரம்மாவும், விஷ்ணுவும், ருத்தினும், ஈசுவரனும், ஸதாசிவனும் பஞ்சகிருத்தியங்களைச் செய்கிறார்கள் என்கிறது ‘‘ஸௌந்தரிய லஹரி’’ (ஜகத் ஸுதேதாதா). பிரம்ம, விஷ்ணு, ருத்திரர்கள்தான் சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் செய்பவர்கள் என்று உங்களுக்குத் தெரியும்.

இந்த முத்தொழிலோடு மாயை என்கிற மறைப்பைப் போக்குகிற ஞானம் என்ற அநுக்கிரகம் இவற்றைச் சேர்த்துக் கொண்டு பஞ்சகிருத்யம் என்னும்போது, மறைப்பான திரோதாரனத்தைச் செய்கிறவன் ஈஸ்வரன்; அநுக்கிரகம் செய்பவன் ஸதாசிவன். இந்த தொழில்கள் எல்லாமே பராசக்தியின் ஏவலின்படி நடக்கிறவைதான். இந்த ஐந்து மூர்த்திகளை ஐந்து ஆபீஸர்களாக வைத்துக் காரியம் நடத்தும் எஜமானி, அம்பாள்தான். அவர்கள் தங்கள் இஷ்டப்படி தொழிலாற்ற முடியாது.

அவர்களுடைய சக்தி எல்லாமும் பராசக்தியான இவளிடமிருந்து பெற்றது தான். ‘‘உன் பாதத்தில் அர்ச்சித்து விட்டால் போதும். அதுவே மும்மூர்த்திகளின் சிரசிலும் அர்ச்சனை செய்ததாகும்; ஏனென்றால் திரிமூர்த்திகளின் சிரஸ்கள் எப்போதும் உன் பாதத்திலேயே வணங்கிக் கிடக்கின்றன’’ என்கிறது ஸௌந்தரிய லஹரியில் இன்னொரு ஸ்லோகம்: ‘த்ரயாணாம் தேவானாம்'. மும்மூர்த்திகளும் அந்த சரணார விந்தங்களில் தங்கள் தலையை வைத்து, தலை மீது கைகளை மொட்டுகள் மாதிரி குவித்து அஞ்சலி செய்கிறார்கள்.

நாம் புஷ்பம் போடுவது அம்பாளின் பாதமலர்களிலிருந்து மட்டுமல்லாமல் திரிமூர்த்திகளின் கரங்களான மொட்டுகளுக்கும் அர்ச்சனை ஆகிறது. சகல தேவ சக்திகளையும் பிறப்பித்த பராசக்தி ஒருத்திக்குச் செய்கிற ஆராதனையே, எல்லா தெய்வங்களுக்கும் செய்ததாகிறது என்கிறது உட்பொருள். காலஸ்வரூபிணி அவளே என்பது இதன் தாத்பரியம்.வழிபடு பலன்விஷ ஆபத்துகளிலிருந்து காப்பவள் இந்த அம்பிகை. இவளை வழிபட அபிசாரம், பில்லி சூன்யம் போன்றவை நீங்கும்.

பேருண்டா காயத்ரி
ஓம் பேருண்டாயை வித்மஹே விஷஹராயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

மூலமந்த்ரம்
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் க்ரோம் ப்ரௌம் க்ரௌம்
ஜ்ரௌம்ச்ரௌம் ஜ்ரௌம் ஸ்வாஹா.
த்யான ஸ்லோகங்கள்

நித்யானந்தாம், நிர்மலாம், நிஷ்கலங்காம்
ஸத்யாம், ஸ்ரீசக்ரஸ்திதாம் ஸர்வ பௌமாம்
வேதாதீதாம் விச்வ வந்த்யாபிராமாம்
தேவீம் பேருண்டாம் பஜே திவ்யரூபாம்.

தப்தகாஞ்சன ஸங்காஸதேஹாம் நேத்ரத்ரயாந்  விதாம்
சாருஸ்மிதாஞ்சித முகம் திவ்யாலங்கார பூஷிதாம்
தாடங்கஹார கேயூர ரத்நஸ்தவக மண்டிதாம்
ரசநா நூபுரோர்ம்யாதி, பூஷணைரதி ஸுந்தரீம்
பாஸாங்குஸௌ சர்ம கட்கௌ கதாவஜ்ரதநுஸ்
ஸரான்

கரைர் ததாநாமாஸீநாம் பூஜாயாமந்யதாஸ்திதாம்
ஸக்தீஸ்ச தத்ஸமாகார தேஜோஹேதிபிரந்விதா:
பூஜயேத் தத் வதபித: ஸ்மித ஸௌம்ய முகாம்
ஸதா.

சந்த்ரகோடி ப்ரதீகாஸாம் ஸ்ரவந்தீ மம்ருதத்ரவம்
நீலகண்டாம் த்ரிநேத்ராம் ச நானாபரணபூஷிதாம்
இந்த்ர நீல ஸ்பரத்காந்தி ஸிகிவாஹன சோபிதாம்
பாசாங்குசௌ கபாலம் ச சூரிகாம் வரதாபயே
தததீம் சிந்தயேத் தேவீம் பேருண்டாம் விஷநாஸினீம்

பிப்ரதீம் ஹேம ஸம்பத்த காருண்டாங்கத  ஸோபிதாம்.
ஸுத்தஸ்படிக ஸங்காஸாம் பத்மபத்ரஸமப்ரபாம்
மத்யாஹ்நாதித்ய ஸங்காஸாம் ஸுப்ரவஸ்த்ர ஸமந்விதாம்
ஸ்வேத சந்தன லிப்தாங்கீம் ஸுப்ரமால்யாவிபூ ஷிதாம்
பிப்ரதீம் சிந்மயாம் முத்ராமக்ஷமாலாம் ச புஸ்தகம்
ஸஹஸ்ரபத்ரகமலே ஸமாஸீநாம் ஸுசிஸ்மிதாம்
ஸர்வவித்யாப்ரதாம் தேவீம் பேருண்டாம் ப்ரண மாம்யஹம்.

ஸ்ரீஸுக்த நித்யா ஸ்லோகம்!

ஸ்ரீஸுக்த ஸம்ஸ்துதாம் ஈகார ப்ரக்ருதிக, துஷ்டி
கலாத்மிகாம் பேருண்டா நித்யா ஸ்வரூபாம்
ஸர்வ மந்த்ரமயி
சக்ர ஸ்வாமினீம் சப்தாகர்ஷிணி சக்தி

ஸ்வரூபிணீம்
ஸ்ரீ கோவிந்த வக்ஷஸ்தல கமலவாஸினீம்
ஸர்வமங்கள தேவதாம்
வீரலக்ஷ்மி ஸ்வரூபாம் பேருண்டா நித்யாயை நம:

வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பக்ஷ சதுர்த்தி/க்ருஷ்ண பக்ஷ துவாதசி

 (சதுர்த்தி திதி: ரூப பேருண்டா நித்யாயை நம:)

நைவேத்தியம்: நெய் அப்பம்.
பூஜைக்கான புஷ்பம்: செவ்வரளிப் பூ.

திதி தான பலன்

தேவிக்கு கொழுக்கட்டை, நெய் அப்பம், பால் போன்றவற்றை நிவேதித்து தானம் செய்ய செல்வ வளம் பெருகும்.

பஞ்சோபசார பூஜை
ஓம் பேருண்டா நித்யாயை கந்தம் கல்பயாமி நம:
ஓம் பேருண்டா நித்யாயை தூபம் கல்பயாமி நம:
ஓம் பேருண்டா நித்யாயை தீபம் கல்பயாமி நம:

ஓம் பேருண்டா நித்யாயை நைவேத்யம் கல்பயாமி
நம: ஓம் பேருண்டா நித்யாயை கற்பூர நீராஞ்ஜனம் தர்சயாமி நம:

இத்திதியில் பிறந்தவர்களின் குண நலன்கள்

சிரித்த முகத்துடன் கலகலப்பாக பழகும் தன்மை உடையவர்கள். வண்ண வண்ண ஆடைகளை விரும்பி அணிவர். தைரியம், புத்தி கூர்மை போன்றவற்றால் அனைவரையும் கவர்வர். உடல் ஆரோக்கியம் மிக்கவர்கள். தலைமைப் பதவி இவர்களைத் தேடி வந்தடையும். இவர்களுக்கு எக்காரணத்தை முன்னிட்டும் விஷத்தால் மரணம் சம்பவிக்காது. உடலும் உள்ளமும் எப்போதுமே நலத்துடன் இருக்கும்.

யந்திரம் வரையும் முறைசந்தன குங்குமம் கலவையால் முக்கோண வட்ட, அறுகோண, எண்கோண வட்ட, எட்டிதழ்கமலம், நான்கு வாயில்களுள்ள இரு சதுரங்களை வரையவும். அதில் அருட்பாலிக்கும் சக்திகளான விஜயா, விமலா, சுபா, விஸ்வா, விபூதி, வினதா, விவிதா, விராதா, கமலா, காமினி, கிரீடா, திருதி, குட்டானி, குலஸுந்தரி, கல்யாணி, காலகோலா போன்றவர்களை தியானித்து பூஜிக்கவும். இத்திதியில் பிறந்தவர்கள் இந்த அம்பிகையின் மூல மந்திரத்தை தினமும் 45 முறை பாராயணம் செய்தால் அனைத்து நலன்களும் பெறலாம்.

இத்திதிகளில் செய்யத்தக்கவைஎதிரிகளைக் கட்டுப்படுத்துதல், ஆயுதப்பயிற்சி, விஷப்பிரயோகம், எரியூட்டுதல். இத்திதியில் மங்கள நிகழ்வுகள் செய்யப்படுவதில்லை.

அகஸ்தியர் அருளிய சுக்ல பக்ஷ சதுர்த்தி நித்யா துதி!

சதுர்த்தியிலே நாடவிடை வாம பூஜை
தரவேணும் தயவாக அடியேன் செய்ய
மதித்தபடி வரம் தா வா அம்மா!

வான் வெளியே வாசியே மௌனத்தாளே
பதித்து முன்றன் பதத்திலென்றன் சென்னி
தன்னைப்பருதிமதி அகன்றாலும் அகலாமற்றான்
துதித்தபடி நின் சரணம் எனக்கிங்கீத்து
சோதியே! மனோன்மணியே! சுழுமுனை வாழ்கவே!

வாலை பாலாம்பிகை. வான்வெளிஞானவெளி. மௌனத்தாள்
 மூகாம்பிகை.

அகஸ்தியர் அருளிய க்ருஷ்ணபக்ஷ சதுர்த்தி நித்யா துதி

சொல்லவொண்ணாச் சோதிமயமான தாயே
சுந்தரியே உன்பாதம் கொடுப்பாய் அம்மா
நல்லதொரு திருநடனமாடுந்தேவி
நாதர்கள் பணிகின்ற வாமரூபி

வல்லசித்தர் மனதிலுறை மகிமைத் தாயே
வாலை திரிபுரை எனக்கு வாக்கு தந்து
தொல்லுலகத் தாசைதனை மறக்கச் செய்வாய்
சோதிமனோன்மணித் தாயே சுழிமுனை வாழ்வே.
மாத்ருகா அர்ச்சனை

ஓம் பேருண்டாயை நம:
ஓம் பைரவ்யை நம:
ஓம் ஸாத்வ்யை நம:
ஓம் நதாக்யாயை நம:
ஓம் அனந்த ஸம்பவாயை நம:
ஓம் த்ரிகுண்யை நம:
ஓம் கோஷிண்யை நம:

ஓம் லக்ஷ்ம்யை நம:
ஓம் புஷ்டாயை நம:
ஓம் ஸுபாலயாயை நம:
ஓம் தர்மோதயாயை நம:
ஓம் தர்மபுத்தயே நம:

ஓம் தர்மாதர்மபுடத்வயாயை நம:
ஓம் ஜ்யேஷ்டாயை நம:
ஓம் யமஸ்ய பகின்யை நம:
ஓம் ஏலாயை நம:
ஓம் கௌஸேயவாஸின்யை நம:
ஓம் ப்ராம்மணாயை நம:

ஓம் ப்ராமிண்யை நம:
ஓம் ப்ராம்யாயை நம:
ஓம் ப்ராமாயை நம:
ஓம் ஜ்ஞானாபஹாரிண்யை நம:
ஓம் மஹேந்த்ர்யை நம:

ஓம் வாருண்யை நம:
ஓம் ஸௌம்யாயை நம:
ஓம் கௌபேர்யை நம:
ஓம் ஹவ்யவாஹின்யை நம:
ஓம் வாயவ்யை நம:
ஓம் நைர்ருத்யை நம:
ஓம் ஈசான்யை நம:

ஓம் லோகபாலாயை நம:
ஓம் ஏகரூபிண்யை நம:
ஓம் மோஹின்யை நம:
ஓம் மோஹஜனன்யை நம:
ஓம் ஸ்ம்ருத்யை நம:

ஓம் வ்ருத்தாத போதின்யை நம:
ஓம் யக்ஷஜனன்யை நம:
ஓம் யக்ஷ்யை நம:
ஓம் ஸித்யை நம:
ஓம் வைஸ்ரவணாலயாயை நம:
ஓம் மேதாயை நம:
ஓம் ஸ்ரத்தாயை நம:

ஓம் த்ருத்யை நம:
ஓம் ப்ரக்ஜாயை நம:
ஓம் ஸர்வதேவ நமஸ்க்ருதாயை நம:
ஓம் ஆசாயை நம:
ஓம் வாஞ்சாயை நம:

ஓம் நிரீஹாயை நம:
ஓம் இச்சாயை நம:
ஓம் பூதானுவர்தின்யை நம: