Monday 30 November 2015

அர்த சக்தி பீடம் - சப்தஷ்ரிங்கி தேவி!

 
 
 
Widஇந்த சப்தஷ்ரிங்கி தேவியின் கோயில் நாசிக்கில் கடல் மட்டத்தில் இருந்து 4,800 அடி உயரமுள்ள ஷாயத்ரி மலை மீது அமைந்திருப்பதுதான் இதன் விசேஷமாகும்.


கோயிலின் ஒரு பக்கத்தில் மிகப்பெரிய பள்ளமும், அதற்கு நேர் புறத்தில் மிக உயர்ந்த மலையும் அமைந்திருக்கின்றன. இந்த கோயிலை மட்டும் அல்ல அதை ஒட்டி அமைந்திருக்கும் இயற்கை எழில் மிக்க பகுதிகளையும் காண கண் கோடி வேண்டும் என்கின்றனர் இப்பகுதிக்கு வருபவர்கள்.
 


மஹிசாசுரனின் தொல்லைகள் தாங்க முடியாத தெய்வங்கள் அனைவரும் தங்களை காப்பாற்றுமாறு தேவி மாவை வணங்கியபோது அவர் சப்தஷ்ரிங்கி தேவி ரூபத்தில் அருள் பாலித்துள்ளார். அதை குறிக்கும் வகையில் 108 சக்தி பீடங்கள் உலகம் முழுவதும் அமைக்கப்பட்டன.
 
 
அதில் மூன்றரை சக்தி பீடங்கள் மஹாராஷ்டிராவிலேயே அமைந்துள்ளது. அதில் அரை சக்தி பீடம்தான் (அர்த சக்தி பீடம்) இந்த சப்தஷ்ரிங்கி தேவி கோயிலாகும். இந்தியாவிலேயே வேறு எங்கும் அர்த் சக்தி பீடக் கோயில் இல்லை என்பதும் மேலும் ஒரு சிறப்பாகும்.
 


மஹாகாளி, மஹாலஷ்மி, மஹாசரஸ்வதி என்று பல ரூபங்களில் சப்தஷ்ரிங்கி தேவி வணங்கப்படுகிறார். ராமாயணக் காலத்தில் ராமரும், சீதா பிராட்டியும், லஷ்மணும் கானகம் சென்றபோது நாசிக்கில் உள்ள இந்த இடத்திற்கு வந்து சென்றதாகக் கூறப்படுகிறது.
 


இந்த கோயிலில் அமைந்திருக்கும் சப்தஷ்ரிங்கி தேவியின் திருவுருவச் சிலை 8 அடி உயரமுடையது, 18 கைகளையும், அதில் 18 வகையான ஆயுதங்களையும் தாங்கி நிற்கிறது. மஹிஷாசுரனை அழிக்க பல்வேறு ஆயுதங்களுடன் தேவி காட்சி அளித்ததாகக் கூறப்படுகிறது.
 


சிவனின் திரிசூலம், விஷ்ணுவின் சக்கரம், சங்கு, அக்னியின் எரியும் சக்தி, வாயுவின் வில் மற்றும் அம்பு, இந்திரனின் வஜ்ராயுதம், யமனின் கயிறு, தக்ஷபிரபதியின் ஸ்படிகமாலை, பிரம்மனின் கமண்டலம், சூரியனின் கதிர்கள், காலஸ்வரூபியின் ஆயுதம் என ஒவ்வொரு கைகளிலும் ஒவ்வொரு கடவுளின் ஆயுதங்களை ஏந்தி நிற்கிறார் சப்தஷ்ரிங்கி தேவி.
 


இந்தக் கோயிலை அடைய 472 படிகளை ஏறி செல்ல வேண்டும். சித்திரை மாதம் மற்றும் ஆவணி மாத நவராத்திரியும் இங்கு விசேஷமாக இருக்கும்.

 
சித்திரை மாதத்தில் சிரித்துக் கொண்டிருக்கும் சப்தஷ்ரிங்கி தேவி, ஆவணி மாத நவராத்திரியின் போது ஆக்ரோஷமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் கோயிலைச் சுற்றி 108 புனித கிணறுகள் அமைந்துள்ளது, கோயிலின் இயற்கை எழிலை மேலும் மெருகூட்டுவதாக அமைந்துள்ளது.
 

எப்படிச் செல்வது

விமான மார்கம் - மும்பை அல்லது புனே விமான நிலையங்கள் அருகில் அமைந்துள்ளது. அங்கிருந்து பேருந்து அல்லது வாடகைக்கு வாகனம் அமர்த்திக் கொண்டு போகலாம்.

ரயில் மார்கம் - நாசிக்கிற்கு எல்லா பகுதிகளில் இருந்தும் ரயில்கள் செல்கின்றன. இங்கு வர ரயில் மார்கம் சிறந்ததாக அமையும்.

பேருந்து மார்கம் - நாசிக்கில் இருந்து 65 கி.மீ. தூரத்தில்தான் சப்தஷ்ரிங்கி தேவி ஆலயம் உள்ளது. மஹாராஷ்டிராவில் இருந்து பேருந்துகள் நிறைய உள்ளன.
 
 
 
 
 
 
 
 

பதினாறு செல்வங்களும் அருளும் புவனேஸ்வரி!

 
புவனவெளிகளை பூத்து மலரச் செய்தவள் புவனேஸ்வரியே. புவனேஸ்வரி பீஜமான ஹ்ரீம் இல்லாத மந்திரமே இல்லை எனலாம்.     தேவி புவனேஸ்வரி வசிக்கும் இடம் மணித்வீபம் எனப்படுகிறது.  நவரத்தினங்களால் ஆன பதினெட்டு பிராகாரங்களைக் கொண்டது இந்த த்வீபம். மூவுலகிலும் இதற்கு ஈடான அழகு வாய்ந்த நகரம் கிடையாது. அமுதமயமான கடலின் நடுவில் உள்ள இத்தீவில் சங்கநிதி, பத்மநிதி இரண்டிற்கும் நடுவில் தேவி புவனேஸ்வரரின் மடியில் அமர்ந்து அருள்கிறாள்.

ஸ்ரீசக்ரதாடங்கங்களை அணிந்து தாமரை போன்ற முகத்துடன், சந்திரப் பிரபை, சூரியபிரபையைத் தலையில் சூடி அருட்காட்சியளிக்கிறாள். சந்தனக்குழம்பு, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ போன்ற வாசனைத் திரவியங்கள் பூசிய ஸ்தனங்கள், சங்கு போன்ற கழுத்து, மாதுளை முத்துகள் போன்ற பற்கள், ரத்தினங்கள் இழைத்த கிரீடங்கள், கங்கையின் சுழல் போன்ற நாபிக் கமலம், மாணிக்கக் கற்களால் ஆன மோதிரம், தாமரை தளம் போன்ற முக்கண்கள், இச்சா, க்ரியா, ஞான சக்திகள் துலங்கத் திகழ்கிறாள்.

  லஜ்ஜை, துஷ்டி, புஷ்டி, கீர்த்தி, காந்தி, க்ஷமை, தயை, புத்தி, மேதை, ஸ்ம்ருதி, லக்ஷ்மி போன்ற பணிப்பெண்கள் தேவிக்கு பணிவிடை செய்கிறார்கள். விஜயா, அஜிதா, அபராஜிதா, நித்யா, விலாஸினி, தோக்த்ரீ, அகோரா, மங்களா, நவா ஆகிய பீட சக்திகள் தேவியை சேவிக்கிறார்கள். ரக்தா, சாமுண்டா, பத்ரா, மஹாமாயா போன்றோர் புவனேஸ்வரியின் நாற்புறங்களிலும் இசைக் கருவிகளை இசைக்கிறார்கள்.

ஹ்ரீங்காரம் என்ற கூட்டை அழகுபடுத்தும் பெண் கிளியாகவும் கோடிக்கணக்கான பிரமாண்டங்களை காப்பாற்றும் திறனுடையவளாகவும் சதாசிவமயமான பீடத்தில் அமர்ந்தருள்பவளுமானவள் புவனேஸ்வரி. ஹ்ரீங்காரம் எனும் மஹா மந்திரம் வர்ணிக்கும் பெருமையுடையவள். துர்க்கா, ராதா, லட்சுமி, சரஸ்வதி, சாவித்திரி ஆகிய பஞ்ச சக்திகளின் ஜனனீ. ஹ்ரீம் மந்திரத்தால் புகழப்படுபவள்.

 புவனேஸ்வரரின் பத்தினி. பாசம், அங்குசம், வரதம், அபயம் இவற்றால் ஜ்வலிக்கும் கர கமலங்கள் உடையவள். பிறரைக் கட்டுப்படுத்தும் பாசத்தை நான் கட்டுப்படுத்தி  வைத்துள்ளேன் என்பதைக் குறிக்கவும் கட்டுண்டு கிடக்கும் ஜீவன்களை விடுவித்து முக்தியளிக்கத் தன்னால் முடியும் என்பதைக் குறிக்கவும் அன்னை புவனேஸ்வரி பாசம் ஏந்திய கரத்தினளாய் துலங்குகிறாள்.

அங்குசம் பக்தர்களின் அகந்தையை அடக்கிவிடுகிறது.  வரத முத்திரை ‘என் பாதாரவிந்தமே என்றும் கதி என இரு’ என்பதைக் கூறாமல் கூறுகிறது.  ஜீவராசிகள் வேண்டியதை அளிக்கச் சித்தமாயுள்ளாள் என்பதை வரத முத்திரை குறிக்கிறது. பயம் வந்தால் அதைப்போக்க நான் அபயம் அளிக்கக் காத்திருக்கிறேன் என்பதை அபய முத்திரையால் அறிவிக்கிறாள்.

 உதிக்கும் ஆயிரம் சூரியனுக்குச் சமமான செந்நிற ஒளியுடையவள். பக்தர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் கடார்க்களம் எனும் யந்திரத்தின் மீது தன் செந்தாமரைப் பாதங்களைப் பதித்தருள்பவள். பிறைச் சந்திரனின் கிரணங்களால், அழகிய மணிகளால் ஆக்கப்பட்ட கிரீடத்தைத் தரித்தவள். லலித ரூபத்துடன் பிரகாசிப்பவள். ஜகஜ்ஜனனியான புவனேஸ்வரியின் சக்தியால்தான் இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. சக்தியின்றி உலகம் படைக்கப்படவில்லை.

ஸ்ரீமாதாவான தேவி ஹரிஹரபிரம்மாதி தேவர்கள் முதல் பிரமாண்டத்தில் உள்ள அனைத்தையுமே படைத்துக் காத்து ரட்சித்து வருபவள். இதை லலிதா ஸஹஸ்ரநாமம் ஆப்ரஹ்மகிரீடஜனனீ என்று போற்றுகிறது. மேலும், கருணையில் கடல் வடிவானவள் என்பதை கருணார ஸாகரா எனும் நாமம் உணர்த்துகிறது. மனிதர்கள் செய்யும் மாபெரும் மன்னிக்க முடியாத கொடிய தவறுகளையும் மறந்து மன்னித்து தடுத்தாட்கொண்டு ரட்சிக்கும் கருணை இந்த புவனமாதாவான புவனேஸ்வரி தேவிக்கு உண்டு. சகல அண்டங்களில் உள்ள சக்திகளுக்குக் காரணமாகவும் ஆதார சக்தியாகவும் இருப்பவள் இந்த புவனேஸ்வரி.

  சகல புவனங்களையும் நியமித்து நடத்தும் புவனேஸ்வரி தசமகாவித்யா தேவிகளுள் நான்காவது வடிவம் கொண்டவள். இவள் பரம்பொருளின் ஞான சக்தி. அனைத்திற்கும் ஆதாரமான ஆகாசதத்துவமே இவள் திருவுருவம்.

திருமூலர் தன் திருமந்திரத்தில்,
‘‘ஓங்காரி என்பாள் அவள் ஒரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தையுடையவள்
ஆங்காரியாகி ஐவரைப் பெற்றிட்டு
ஹ்ரீங்காரத்துள்ளே இனிதிருந்தாளே!’’ என்கிறார்.

  புவனேஸ்வரி என்ற உடனேயே சகல ஐஸ்வர்யங்களையும் பக்தர்களுக்கு வாரி வாரி வழங்கி பின் கேட்கும் வரங்களுக்கு கொடுக்க ஒன்றுமில்லாமல் பக்தர்களிடம் கடனாளியாகிவிடுவாள், புவனேஸ்வரி! அவ்வளவு கருணை கொண்டவள் என்கிறார், வியாசராஜர். ஹ்ரீம் பீஜத்தில் விரும்பி உறைபவள் புவனேஸ்வரி.

புவனேஸ்வரியின் உபாசனையால் உலகங்களை ஜெயிக்கும் ஆற்றலை சாதகன் அடைகிறான். அளவில்லா செல்வமும் வாழ்க்கை வளமும் பதவி உயர்வும் நிச்சயமாகப் பெறுகிறான். நோய்நொடியற்றவனாய் கருணையுடன் கூடியவனாய், த்ரிகால ஞானியாகவும் விளங்குவான். ராஜவசியம், தன வசியம் கிட்டும். உபாதைகள் நீங்கும். மன்னர்களாலும் வணங்கப்படுவான். உலகங்கள் எல்லாம் தன் ஆத்மாவே என்ற ஸர்வாத்மபாவம் (எங்கும் நானே உளன் என்கிற ஞானத்தை) நிச்சயம் பெறுவான். நிலவுலகில் புவனேஸ்வரியை உபாசித்து வழிபட்டவர்கள் தன்
 
 

திருவருள் புரியும் திரிபுரசுந்தரி!



லலிதா பரமேஸ்வரி, ராஜ ராஜேஸ்வரி, திரிபுரசுந்தரி என்றெல்லாம் அழைக்கப்பட்டு வணங்கப்படுபவள் இந்த அம்பிகை. ஸ்ரீசக்ர வழிபாட்டின் நாயகியே இவள்தான். இவளின் இருப்பிடம் வானுலகில் ஸ்ரீநகரம்; பூவுலகில் ஸ்ரீசக்ரம். இந்த ஸ்ரீசக்ரத்தில் ஒன்பது பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு ஆவரணம் என்று அழைக்கப்படும். அந்த ஒன்பது ஆவரணங்களிலும் திரிபுரா, திரிபுரேசி, திரிபுரசுந்தரி, திரிபுரவாசினி, திரிபுராஸ்ரீ, திரிபுரமாலினி, திரிபுராஸித்தா, திரிபுராம்பிகா எனும் சக்ரேஸ்வரிகள் அந்தந்த பிரிவின் தலைவிகளாக அருள்கின்றனர்.

திரிகோணத்தின் மூன்று மூலைகளிலும் காமேஸ்வரி, வஜ்ரேஸ்வரி, பகமாலினி எனும் தேவிகள் வீற்றிருக்க அதன் நடுவில் பிந்து எனப்படும் மையத்தில் திரிபுரசுந்தரி படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அனுக்ரஹித்தல் என்ற ஐந்தொழில்களையும் காமேஸ்வரனோடு கூடிய காமேஸ்வரியாக  இந்த உலகை பரிபாலனம் செய்து கொண்டு  திருவருள்பாலிக்கிறாள். இவள் அமர்ந்திருக்கும் ரத்னமயமான கட்டிலின் கால்களாக ருத்ரன், ஈசன், நான்முகன், திருமால் எனும் நால்வரும் துலங்க சதாசிவனே அந்த மஞ்சத்தின் பலகையாக இருக்க அவன் மேல் அமர்ந்து அருளும் திருக்கோலம் கொண்டவள் இவள். பரப்ரம்ம மஹிஷியான இவளே அன்பின் சக்தியாகவும் கொண்டாடப்படுகிறாள். இத்தேவிக்கு மாத்ருகாவர்ணரூபிணி என்றும் பெயர் உண்டு. ஆளும் தன்மை, கீர்த்தி, செல்வம், வைராக்கியம், மோக்ஷம், ஐஸ்வர்யம் எனும் ஆறு பகங்களுக்கு இவளே அதிபதி எனவே இவள் பகவதி என்றும் வணங்கப்படுகிறாள்.

அழகே உருவானவள் இந்த அம்பிகை.  இவளே அரசிகளுக்கு எல்லாம் அரசி. அன்பின் திருவுரு. நளினத்தின் உறைவிடமான லலிதா. மூவுலகங்களுக்கும் தலைவியான திரிபுரா. தசமகாவித்யா தேவிகளுள் மூவுலகங்களிலும் இவளே பேரழகி என்று பொருள்படும் திரிபுரசுந்தரி எனப் போற்றப்படுகிறாள். திரிபுரசுந்தரிக்கு வெளிப்படையான அர்த்தம் இது.  ஸ்தூலம், சூஷ்மம், காரணம் எனும் மூன்று சரீரத்திலும் ஆத்மாவாகப் பிரகாசிப்பவள். ஒன்பது வாயில் உள்ள ஒரு தேக பட்டணத்தில் ஆத்மா வசிக்கிறது என்பதை கீதையும் உபநிஷதங்களும் கூறுகின்றன. இம்மூன்று சரீரங்களையும் ஜீவ களையுடன் அழகாக இருக்கச் செய்வதாலும் அம்பிகை திரிபுரசுந்தரி என வணங்கப்படுகிறாள். பரஞ்ஜோதி முனிவர் தன் திருவிளையாடற் புராணத்தில் ஈசனை கற்பூர சுந்தரன், பூங்கடம்பவன சுந்தரன், மகுட சுந்தரன், சோமசுந்தரன் என பல்வேறாக போற்றியுள்ளார். சுந்தரனின் மனைவி சுந்தரிதானே?

சாருரூபா, மஹாலாவண்ய சேவதி, கோமளாகாரா, காந்திமதி, சோபனா, திவ்யவிக்ரஹா, கோமளாங்கீ போன்ற நாமங்கள் தேவியின் தோற்றப் பொலிவை எடுத்துக் கூறுகின்றன. கோமளாகாரா எனில் பேரழகே வடிவெடுத்தவள் என்று பொருள்.

சோபனா என்றால் சௌந்தர்யமே வடிவெடுத்தவள் என்று பொருள். மங்களங்களோடு கூடிய அழகு இது. மங்களமான அழகிற்கு மனதை உயர் நிலைக்கு எடுத்துச் செல்லும் சக்தி உண்டு. சர்வ வர்ணோபஸோபிதா என்றால் எல்லாவிதமான நிறங்களையும் எடுத்து மிளிர்பவள் என்று பொருள். 

இந்த மகாதிரிபுர சுந்தரி அம்பிகை உதிக்கின்ற செங்கதிர் போல் ஆயிரம் மடங்கு ஒளியுடன் பிரகாசிப்பவள். மூன்று கண்கள், நான்கு திருக்கரங்கள் கொண்டவள். இவள் திருக்கரங்கள் தாங்கியுள்ள பாசத்திலிருந்து அஷ்வாரூடா தேவியும் அங்குசத்திலிருந்து ஸம்பத்கரி தேவியும் கரும்பு வில்லிலிருந்து ராஜமாதங்கியும் கமலம், கைரவம், சிவந்த கல்ஹாரம், இந்தீவரம், சஹகாரம் எனும் ஐந்து வகை மலர்களால் ஆன புஷ்பபாணங்களிலிருந்து வாராஹியும் தோன்றியதாக லலிதோபாக்யானம் கூறுகிறது.

பாசம் இச்சா சக்தியாகவும் அங்குசம் ஞான சக்தியாகவும் கரும்புவில்-புஷ்பபாணங்கள் க்ரியா சக்தியாகவும் செயல்படுகின்றன. சந்திரன், குபேரன், லோபாமுத்திரை, மன்மதன், அகஸ்தியர், நந்தி, சூரியன், திருமால், ஸ்கந்தன், சிவன், துர்வாசர், போன்றோர் இந்த அம்பிகையை உபாசித்தவர்களில் அதிமுக்கியமானவர்கள். அம்பிகையின் கைகளில் அபயவரதமும் ஸ்படிகமாலையும் புத்தகமும் இருக்கும்படி தியானிப்பதற்கு வாக்சித்தி தந்த்ரம் என்றும் அம்பிகையையும் வசினி முதலிய எண்கோண சக்திகளையும் அங்குசம், கரும்பு வில், புஷ்ப பாணங்கள், அபயம், வரதம், புத்தகம், ஸ்படிகமாலை போன்றவற்றுடன் தியானிப்பதற்கு சக்திகூட தந்திரம் என்றும் செந்நிறமாக அம்பிகையை ஐந்து கோசங்களினால் ஆன நம் உடலில் இருந்தி தியானிப்பதற்கு சமரிகூடதந்திரம் என்றும் பெயர்.

இடையில் ஒட்டியாணம் அணிந்துள்ளாள். இரு செவிகளிலும் எழிலோங்கிப் பொலியும் தாடங்கங்களின் ஒளி கன்னத்தில் வீசுகிறது. நிறைமதி முகத்தினள். மன்மதனின் வில் போன்ற புருவங்கள் கொண்டவள். சம்பக மலர் போல் நாசி. கருணை மழை பொழியும் கண்கள். தேவி தன் நெற்றியில் கஸ்தூரி திலகம் அணிந்துள்ளாள். முத்துகளும் வைரங்களும் பதிக்கப்பெற்ற கீரிடம் அங்கு உறையும்படி பெற்ற பேறுதான் என்னவோ! திங்கட்பிறை அங்கே ஒளிர்ந்து துலங்குகிறது. அம்பிகைக்கு சர்வாபரணபூஷிதா என்று ஒரு திருநாமம் உண்டு. நவமணிமகுடம் முதல் மாணிக்கப்பாதுகைகள் வரை 26 வகையான ஆபரணங்களை தேவி சூட்டிக்கொண்டிருப்பதாக கல்பசூத்ரம் எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒரு தத்துவத்தைக் குறிக்கும். முத்து மாலை வெண்ணிறம். இது ஞானப்பிரகாசத்தைக் குறிக்கும். குருவிந்தமணி எனும் பத்மராகங்கள் இழைக்கப்பட்ட கிரீடத்தை தியானித்தாலே மங்களம், விஷ்ணு பக்தி போன்றவை அதிகரிக்கும். சூரிய, சந்திரனே தாடங்கங்களாய்ப் பொலிகின்றன. பெண்களுக்கு காதணிகள் முக்கியமானவை. ‘தேவி உன் தாடங்க மகிமையால்தான் ஈசன் ஆலகால விஷத்தை அருந்தியும் உயிரோடிருக்கிறார்’ என்கிறார், ஆதிசங்கரர்; தன் ஆனந்தலஹரியில். மேலும் அபிராமி பட்டருக்காக அமாவாசையை பௌர்ணமியாக்கியதும் தேவியின் தாடங்கம்தானே! 

கணபதியும் கந்தனும் தன் தெய்வ நிலையை விட்டு அன்னையின் பிள்ளைகள் என்ற நிலையில் தேவியை வணங்கும் அழகுதான் என்ன! இந்த திரிபுரசுந்தரியே ஸ்ரீசக்ர ரதத்தில் ஏறி பண்டாசுரனை அழித்தவள். காஞ்சி காமாட்சி லலிதா திரிபுரசுந்தரியின் வடிவமே. ஸ்ரீசக்ரத்தின் படம் வீட்டில் இருப்பதே ஒரு ரட்சை போன்றது. தினமும் அதற்கு பூக்களைப் போட்டு நைவேத்யம் செய்து வணங்கி வரவேண்டும். முக்கோணத்தின் ஒரு முனை கீழ் நோக்கி இருக்கும்படி வைக்க வேண்டும்.  ஸிம்மாஸனேஸ்வரி, லலிதா, மகாராக்ஞீ, வராங்குசா, சாபிநீ, திரிபுரா, மகாதிரிபுரசுந்தரி, சுந்தரி, சக்ரநாதா, ஸம்ராக்ஞீ, சக்ரிணி, சக்ரேஸ்வரி, மகாதேவி, காமேசி, ராஜப்பிரியா, காமகோடிகா, சக்ரவர்த்தினி, மகாவித்யா, ஸர்வபாடலா, குலநாதா, ஆம்னாய நாதா, ஸர்வாம்நாய நிவாஸினி, சிருங்கார நாயிகா எனும் திவ்யநாமாக்களால் அம்பிகையை அர்ச்சிக்க வேண்டும். தூப, தீப, நைவேத்தியங்களோடு நலம் பல அருளும் நவராத்திரி நாயகியை நாமணக்க, மெய்சிலிர்க்க வணங்கி வாழ்வில் வளம் பெறுவோம்.
 
 

அன்னபூரணி தேவி!

Anmega palan 
magazine, Anmega palan monthly magazine, Tamil 
Magazine Anmega palan, Tamil magazine, Tamil Monthly magazine, Monthly 
magazine
 
                 அன்னபூரணி என்றவுடன் நம் நினைவுக்கு முதலில் வருவது மகாபவித்ரமான காசி மாநகரம். மற்றொன்று ஆதிசங்கரர் அருளிய அன்னபூர்ணா ஸ்தோத்திரம். 

கந்தமகா புராணத்தில் உள்ள அருணாச்சல மகாத்மியத்திலும் மார்க்கண்டேய புராணத்தின் துணை நூலான காமாட்சி விலாசத்திலும் அன்னபூரணியின் வரலாறு கூறப்பட்டுள்ளது.

தேவரும் முனிவரும் எப்போதும் தியானிக்கும் கயிலைவாசன், ஏகாந்தமாக தவத்தில் ஆழ்ந்திருந்த சமயம் பார்வதி தேவி விளையாட்டாக அவர் கண்களைப் பொத்தினாள். சூரிய, சந்திரர்களை வலது, இடது கண்களாகவும், அக்கினியையே நெற்றிக் கண்ணாகவும் கொண்டவர் சிவபெருமான். தேவி அவர் கண்களைப் பொத்தியதால் சூரிய, சந்திரர்கள் தம் ஒளியிழந்தனர். அதனால் உலகம் இருண்டது. அனைத்து உயிர்களும் பரமேஸ்வரனை சரணடைந்தனர். அவர் தன் அக்கினிமயமான நெற்றிக்கண்ணைத் திறந்து உலகிற்கு ஒளியைத் தந்தார். இவை அனைத்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்ததால் பார்வதி தேவி பயந்து உடனே தன் கைகளை ஈசனின் கண்களிலிருந்து எடுத்தாள். கூடவே மனம் கலங்கி அவரிடம் ‘‘நான் விளையாட்டாக தங்கள் கண்களை பொத்தியதால் ஏற்பட்ட பாவம் நீங்க என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டும்?’’ எனக் கேட்டாள்.

 
 
‘‘நமக்கு இது கண்ணிமைக்கும் நேரமே என்றாலும் உலக உயிர்களுக்கு அது எவ்வளவு காலம் என்று உனக்குத் தெரியாதா தேவி? ஏன் இந்த குறும்புத்தனம்? ஆனாலும் நீ உலகிற்கெல்லாம் அன்னை. ஆகவே உன்னை ஒரு பாவமும் அணுகாது’’ என்றார் ஈசன். அந்த வார்த்தைகளால் சமாதானமடையாத அம்பிகை பூவுலகில் தவம் செய்து தன் மீது ஏற்பட்ட பாவத்திற்கு பிராயச்சித்தம் தேட முயன்றாள். ஈசனின் அனுமதி பெற்று தென்திசை நோக்கி புறப்பட்டாள்.

அந்த சமயம் காசி திருத்தலம் மழையின்மை காரணமாக கடும் பஞ்சத்தில் ஆழ்ந்திருந்தது. மக்கள் பசியினால் துடித்தார்கள். தேவி காசியை அடைந்து அங்கு அற்புதமான ஒரு திருக்கோயிலை எழுப்பி அன்னபூரணி எனும் பெயரில் நிலைகொண்டாள். அவள் திருக்கரத்தில் என்றுமே
வற்றாத அட்சய பாத்திரம் எனும் அமுதசுரபியும் பொன்னாலான கரண்டியும் இருந்தன. அவள் உயிர்களுக்கு உணவு வழங்க ஆரம்பித்தாள். அதனால் மக்களின் பசிப்பிணி நீங்கியது. மக்கள் அன்னபூரணியை போற்றிப் புகழ்ந்தனர். அதனால் அவள் புகழ் திக்கெட்டும் பரவியது.

காசியில் கடும்பஞ்சம் நிலவும் வேளையில் அன்னபூரணி தேவி அனைவருக்கும் உணவளிக்கும் செய்தியை அறிந்த மன்னன், தேவியைச் சோதனை செய்ய எண்ணினான். தன் வீரர்களை அவளிடம் அனுப்பி சிறிதளவு தானியம் கடனாகப் பெற்று வர பணித்தான். அதன்படி அம்பிகையிடம் வந்த வீரர்கள் மன்னனின் ஆணையைத் தெரிவித்தார்கள். அதற்கு தேவி, ‘‘நான் தானியங்களைத் தர மாட்டேன். வேண்டுமென்றால் உங்கள் மன்னன் எப்போது வேண்டுமானாலும் இங்கு வந்து உணவருந்திச் செல்லலாம்’’ என்றாள். விவரம் தெரிந்து கொண்ட மன்னனும் அவன் அமைச்சரும் மாறுவேடம் பூண்டு அன்னபூரணி எழுந்தருளியிருந்த திருமாளிகைக்குச் சென்றனர்.

அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர். மன்னனும் அமைச்சரும் மக்களோடு மக்களாய் அமர்ந்து உணவருந்தினார்கள். தேவியின் திருக்கரத்தில் உள்ள தங்கபாத்திரத்திலிருந்து அள்ள அள்ளக் குறையாத உணவு வந்து கொண்டிருந்ததைக் கண்ட மன்னன், அவள் சாட்சாத் பராசக்தியே என்பதனை உணர்ந்தான். தேவியின் திருவடிகளைப் பணிந்தான். ‘‘தாயே என் அரண்மனைக்கு எழுந்தருளி அடியேனை ஆட்கொள்ளவேண்டும்’’ என்று கண்ணீர் மல்கக் கதறினான்.

அவன் பக்திக்கு மெச்சிய தேவி தன் சுய உருவத்தை அவனுக்குக் காட்டினாள். ‘‘நான் இங்கு தங்கிய காரணத்தால் இனி காசியில் பஞ்சமே ஏற்படாது; அப்படி ஏற்பட்டாலும் நான் உடனே வந்து பஞ்சத்தைத் தீர்ப்பேன். அதோடு நான் தவம் செய்யும் பொருட்டு தென் திசை போக வேண்டும். நீ மக்களைக் கண்ணும் கருத்துமாய் காப்பாயாக’’ என்றாள்.

‘‘அம்மா! தங்கள் சாந்நித்யம் எப்போதும் இங்கு நிலைத்தருள வேண்டும்’’ என்று வேண்டிக் கொண்டான் காசி மன்னன். அதன்படி தேவி தன் சாந்நித்யத்தை அங்கு நிறுவி தன் பக்தர்களைக் காத்து அருள்புரிந்து வருகிறாள். இதுவே தேவி அங்கு நிலைகொண்டதற்கான ஆதி காரணமாகக் கூறப்படுகிறது.

கார்த்யாயன மகரிஷி, அம்பிகையே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டி கடுந்தவம் புரிந்தார். அவர் தவத்தில் மகிழ்ந்த லலிதாதேவி அவருக்கு மகளாகப் பிறந்தாள். அந்தக் குழந்தைக்கு கார்த்யாயினி என பெயரிட்டு பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தார், மகரிஷி. ஒரு முறை காசியில் பஞ்சம் ஏற்பட்ட போது கார்த்யாயினி காசிக்குச் சென்று அன்னபூரணியாக மாறி, காசியின் பஞ்சத்தை நீக்கி பின் காஞ்சியில் காமாட்சியம்மன் சந்நதியின் பின்புறம் நிலைகொண்டதாகவும் ஒரு வரலாறு உள்ளது. இந்த அன்னபூரணி தேவியை லலிதையின் உபாங்க தேவதை என சாக்த உபாசகர்கள் வழிபடுகின்றனர்.



ஆதிசங்கரர் ஒரு முறை அன்னபூரணியிடம், தம் பசி போக்குமாறு துதி செய்தார். நித்யானந்தகரீ எனத் தொடங்கும் அந்த துதியின் ஒவ்வொரு ஸ்லோகத்தின் முடிவிலும் ‘பிக்ஷாம்தேஹி க்ருபாவலம்பனகரி மாதான்னபூர்ணேஸ்வரி’ என முடித்திருப்பார். கருணையின் வடிவாக இருக்கும் அன்னபூரணி தேவியே, எனக்கு பிட்சையிடுவாயாக என்பது அதன் பொருள். அந்த அன்னபூர்ணாஷ்டகத்தின் கடைசி ஸ்லோகத்தில் ஞானம், வைராக்யம் இரண்டையும் பிட்சையாக அருள்வாயாக என்று கேட்டு அன்னபூரணியைப் பிரார்த்தித்துள்ளார்.
 
மேலும், ‘மாதா ச பார்வதீ தேவீ பிதா தேவோ மஹேஸ்வர: பாந்தவா: சிவபக்தாச்ச ஸ்வதேசோ புவனத்ரயம்’ என்றும் கூறியுள்ளார். தன் பசிக்கான உணவை குழந்தை முதலில் தாயிடமே கேட்கும். அம்மாவிடம் கேட்க இயலாத சூழ்நிலையில் அப்பாவிடம் கேட்கும். ஆதிசங்கரரும் அவ்வழியையே பின்பற்றி எனக்கு பார்வதியான நீயே அம்மா, ஈசனே அப்பா, சிவபக்தர்கள் எல்லாம் உறவினர்கள், மூவுலகங்களும் எனது வீடு என்ற பொருளில் இத்துதியை பாடியுள்ளார்.


காசியில் அருளும் அன்னபூரணா தேவி தன் திருக்கரங்களில் ஒரு கையில்  உள்ள தங்கப் பாத்திரத்தில் பால் சோற்றை ஏந்தியுள்ளாள். உலகிலுள்ள ஜீவன்களின் பசியாற அவள் தன் மறுகையில் உள்ள தங்கக்கரண்டியால் அள்ளி அள்ளி அந்த பால்சோற்றை அனைவருக்கும் அளிக்கிறாள். அந்த பால் சோற்றோடு ஞானத்தையும் சேர்த்தளித்து நம் வயிற்றுக்கு மட்டுமல்லாமல், ஆத்மாவிற்கும் உணவிடுபவளாகத் துலங்குகிறாள்.
 
காசியில் தங்க அன்னபூரணி தரிசனம் தீபாவளிப் பண்டிகையை ஒட்டிய மூன்று நாட்கள் மட்டுமே கிட்டும். இருபுறமும் ஸ்ரீதேவி-பூதேவியர் வீற்றிருக்க பிட்சாண்டிக் கோலத்தில் விஸ்வநாதப் பெருமான் தேவியிடம் பிட்சை கேட்கும் அற்புதத் திருக்கோலத்தைக் காண இரு கண்கள் போதாது. அங்கே தீபாவளி சமயத்தில் இந்த அன்னபூரணி தேவி லட்டுத் தேரில் பவனி வந்து அந்த லட்டை பக்தர்களுக்கு பிரசாதமாகத் தரும் வைபவம் மிகவும் விமரிசையாக நடக்கிறது.

தலையில் ரத்தின மகுடம், உடலெங்கும் மணிகளாலான பல்வேறு ஆபரணங்கள், நவரத்தினங்களும் வைர, வைடூரிய, மரகத, பவழ, கோமேதக, புஷ்பராக, மாணிக்கங்கள் ஜொலிக்கும் பொன் நகைகளோடு தேவி அருள்பாலிக்கிறாள். இந்த அன்னபூரணி சந்நதிக்கு எதிரில் ஆதிசங்கரரால் பதிக்கப்பட்ட ஸ்ரீசக்ர மேரு உள்ளது. பூஜைகள், லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை போன்றவை இந்த மேருவிற்கும் செய்யப்படுகின்றன.

கேரள மாநிலத்தில் உள்ள செருக்குன்னம் எனும் ஊரில் புகழ்பெற்ற அன்னபூரணி ஆலயம் அமைந்துள்ளது. அங்கு அன்னையை தரிசிக்க வரும் பக்தர்கள் அனைவருக்கும் சாப்பாடு அளிப்பார்கள். இரவு வேளையில் ஆலயத்தின் அருகில் உள்ள மரத்தில் ஒரு சோற்று மூட்டையை கட்டி விடுவார்கள். திருடர்களும் சமூக விரோதிகளும் அங்கே நடமாடினால் அவர்களும் பசியாற வேண்டும் என்பது தேவியின் விருப்பம்! அப்படி நல்லோர் அல்லாதவர்களுக்குக் கூட அருளும் பரம கருணாமூர்த்தி, அன்னபூரணி.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலய பிராகாரத்திலும் காயத்ரி மண்டபத்திற்குச் செல்லும் வழியிலும் தேவி அன்னபூரணி அருள்கிறாள். ஐப்பசி மாதம் இந்த அன்னைக்கு அன்னாபிஷேகம் நடக்கும். இவள் சந்நதியில் தர்ம துவாரம், பிக்ஷத்துவாரம் எனும் இரு துவாரங்கள் உள்ளது விசேஷம். இந்த அன்னபூரணியை வணங்கி பிக்ஷத்துவாரத்தின் வழியாக ‘பவதி பிக்ஷாம்தேஹி’ என கையேந்தி பிச்சை கேட்டால் தேவி நம்மை எவ்வித கஷ்டமும் இல்லாமல் உணவளித்துக் காப்பாள். இது முக்காலும் சத்தியம்.  இந்த தேவியை வணங்கி பிறருக்கு நல்லதை மட்டுமே நினைத்து வாழ்ந்து வந்தால் உலகில் பஞ்சம் எனும் சொல்லிற்கே இடமில்லை.

ஆரம்பத்தில் நான்முகனுக்கு ஐந்து தலைகள் இருந்தன. அதனால் கர்வம் கொண்டு அலைந்தான் அயன். ஈசன் அவனுடைய ஐந்தாவது தலையைக் கிள்ளி அவன் கர்வத்தை அழித்தார். ஆனால் நான்முகனின் ஐந்தாவது தலை பிரம்ம கபாலமாக ஈசனின் கரத்தில் ஒட்டிக் கொண்டது. அந்த தோஷத்திலிருந்து நிவர்த்தி பெற உலகெங்கும் அலைந்து திரிந்து, இறுதியில் காசி அன்னபூரணியிடம் அன்னத்தை தானம் வாங்கியபிறகுதான் அவர் சாபம் தொலைந்தது என்று காசி காண்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

த்யானம்

அர்காபாமருணாம் பராவ்ருததநூமாநந்த பூர்ணாநநாம்
முக்தாஹார விபூஷிதாம் குசபராநம்ராம் ஸகாஞ்சீகுணாம்
தேவீம் திவ்யரஸாந்ந பூர்ணகர காம்போஜ தர்வீகராம்
த்யாயேச் சங்கர வல்லபாம் த்ரிநயநாமம்பாம் ப்ரவலம்பாலகாம்

பொருள்:
அன்னபூரணி அம்பிகை உதய சூரியனைப் பழிக்கும் செந்நிறத்தோடு மந்தஹாஸம் ததும்பும் பூரண சந்திரனைப் போன்ற திருமுகத்தோடு முக்தாபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறாள். அன்னையின் கைகளில் அம்ருதம் போன்ற அன்னபாத்திரம் பிரகாசிக்கின்றது.

மந்திரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஓம் நமோ பகவத்யன்னபூர்ணே
மமாபிலிக்ஷித மன்னம் தேஹி ஸ்வாஹா!

  மேலே குறிப்பிட்ட அன்னபூர்ணா மந்திரத்தை குருமூலம் உபதேசம் பெற்று சொல்லி வந்தால், குறைவற்ற அன்னம், ஆரோக்கியம், நீண்ட ஆயுள் போன்றவற்றோடு தேவியின் திருவருளையும் பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை.
 
 

ஐஸ்வர்யம் அருளும் லக்ஷ்மி கடாக்க்ஷம்!

 
 
ஹிர’ண்யவர்ணாம் ஹரி’ணீம் ஸுவர்ண’ரஜதஸ்ர’ஜாம் |
சந்த்ராம்ஹிரண்ம’யீம்லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||
 
ஸ்ரீமகாலட்சுமி பொன் நிறம் கொண்டவள். மஞ்சள் நிறம் ஸ்வர்ணம், வெள்ளி இவற்றாலான மாலைகளை அணிந்திருப்பாள். சந்திரன் போன்று இருப்பவர்கள் இவளுடைய திருவருளால்தான் பொன், பசுக்கள், குதிரைகள், பணியாட்கள் இவைகளை நிறையப் பெற முடியும்.

ரத, கஜ, துரகம் முதலியவற்றையும் அளிப்பவள். மந்த ஹாஸ முகமுடையவள். சுவர்ண பிரகாரங்களைக் கொண்டது. இவள் பவனம் கருணையுடையவள். வஸ்திரம், ஆபரணம், அழகு இவற்றால் மிகவும் பிரகாசிப்பவள். அனைத்தும் தன்னிடம் நிரம்பியிருப்பதால்  பக்தர்களையும் திருப்திப்படுத்துபவள்.

தாமரை மலரில் அமர்ந்திருப்பவள். தேவர்களால் சேவிக்கத் தகுந்தவள் மிக்க உதாரகுணமுடையவள். இவள் "ஈம்'' என் பீஜாசரத்தை உடையவள். இவள் பக்தர்கள் சரணடையத் தகுந்தவள்.

மகாலட்சுமி சூரியன் போன்று பிரகாசிப்பாள். இவளுடைய தவத்திற்காகவே வில்வமரம் தோன்றியது. இவளை உபாசனை செய்ய குபேரனும் அவன் கஜானா அதிபதியான மணிபத்ரனும், சிந்தாமணி ரத்னத்துடன் வீடு தேடி வந்தடைவர். இவள் வருவதற்கு வழியாகின்றது சுகந்தம்.

இவள் செழிப்பைத் தருபவள். கோமயத்தில் (பசு மூத்திரம்) வாசம் செய்பவள். சர்வ தேவதைகளுக்கும் இவளே ஈச்வரி. ஆசையயை நிறைவேற்றி, வாக்குச் சத்தியத்தை அளித்து, ரூபமளித்து, உண்ணும் பொருட்களுக்கு ருசியையும் அளிப்பவள்.

மகாலட்சுமியின் குமாரர் கர்தமர். சிக்லீதர் என்பவரும் இவள் அன்புக்குமாரரே. இவள் கையில் பிரம்பு வைத்திருப்பாள். செங்கோல் செலுத்தும் ராஜலட்சுமி இவள்.



பதினான்கு மன்வந்திரங்களிலும் லட்சுமி பதினான்கு விதமாக அவதாரம் எடுத்திருக்கிறாள்.



1. ஸ்வாயம்பு மன்வந்திரத்தில் பிருகுவின் மகள் பார்கவியாக அவள் அவதரித்தாள்.
2. ஸ்வாரோசிஷ மன்வந்திரத்தில் நெருப்பிலும்,
3. ஒளலத்தம மன்வந்திரத்தில் நீரிலும்,
4. தாமச மன்வந்திரத்தில் நீரிலும்,
5. சாட்சூச மன்வந்திரத்தில் தாமரையிலும்,
6. ரைவத மன்வந்திரத்தில் வில்வமரத்திலும்,
7. வைவஸ்த மன்வந்திரத்தில் பாற்கடலிலும் தோன்றியவள் லட்சுமி.
இப்போது நடப்பது வைவஸ்த மன்வந்திரம். 
 
இந்த பெருமைகளையெல்லாம் பெற்ற ஸ்ரீமகாலட்சுமி நம்மை விட்டு அகலாதிருக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கப்படுகின்றாள்.

 ஸ்ரீசுக்தத்தை தினமும் 16 முறை ஐபம் செய்ய மகாலட்சுமியின் பேரரருள் முழுமையாகக் கிடைக்கும். 
 
 

நீரின்றி அமையாது உலகு!

ஞ்சபூதங்களில் நீர் பிரதான இடத்தை வகிக்கிறது. ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது பெரியோர்கள் வாக்கு. நீரானது அகம் – புறம் இரண்டையும் சுத்தப் படுத்துகிறது. அதுமட்டுமல்ல, நம் (முன்வினை) கர்மாவை குறைப்பதிலும் நீருக்கு நிகரானது வேறெதுவும் இல்லை.

நம் உடம்பிலும் நீரே அதிகளவில் இடம்பெற்றுள்ளது. இன்றைக்கும் சில பிரச்னைகளுக்கு பரிகாரம் சொல்கிறவர்கள் சமுத்திர ஸ்நானம், புஷ்கரணி தீர்த்த ஸ்நானம், நதி ஸ்நானம் செய்யச் சொல்கிறார்கள். காரணம், இங்கெல்லாம் இந்த புண்ணிய நீர்நிலைகளில் குளிப்பதால் நம் கர்மா குறையும் என்பது நம்பிக்கை. பொதுவாக எல்லோரும் தினமும் குளிக்கும்போது,

கங்கேச யமுனேசைவ கோதாவரி சரஸ்வதீ!
நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதிம் குரு!!

என்று சொல்லிவிட்டு குளித்தால், சப்த நதிகளும் நமது நீராடும் பாத்திரத்தில் எழுந்தருளிவிடும் என்பது நம்பிக்கை.

அதேபோல், பெண் குழந்தைகளை (எண்ணெய் தேய்த்து) குளிக்க வைக்கும்போது, நடுவிரலால் ஐந்து சொட்டு எண்ணெய் எடுத்து, பொட்டு வைப்பதுபோல் குழந்தையின் இடது தொடையில் வைப்பார்கள். ஆண் குழந்தைகளுக்கு வலது தொடையில் இதே முறையில் வைப்பார்கள்.

குழந்தைகள் வளர்ந்த பிறகு நெற்றி, இரு புஜங்கள், கைகள் என ஐந்து இடங்களில் எண்ணெயை தொட்டு வைப்பார்கள். எண்ணெய் தேய்க்கும்போது நாடியெல்லாம் சுறுசுறுப்பாகும். நாடிகள் சட்டென்று வேகம் அடைந்துவிடாமல், எண்ணெய் தேய்ப்பதனால் உண்டாகும் உத்வேகத்தை நிதானமாக ஏற்கும் வகையில், ‘ஏ… நாடிகளே! எண்ணெய் வைக்கப் போறேன்’னு மனத்தளவில் தயார் ஆவதற்காகவே, இந்த சம்பிரதாயம்.

அப்போது ஆண் பிள்ளைகளுக்கு, அஸ்வத்தமான், பரசுராமன், மார்க்கண்டேயன், ஹனுமன், விபீஷணன், மகாபலி சக்ரவர்த்தி, வியாசர் ஆகிய சிரஞ்ஜீவிகள் ஏழுபேரின் திருப்பெயர்களை உச்சரித்து வணங்கியும்,
 
பெண் பிள்ளைகள் எனில் அகல்யா, திரௌபதி, சீதா, தாரா, மண்டோதரி ஆகிய பதிவிரதையர் ஐவரின் திருப்பெயர்களைச் சொல்லி வணங்கியும் குளிக்கச் செய்வர். இந்த சிரஞ்சீவிகளையும், பதிவிரதைகளையும் ஸ்மரணிக்கும்போது நல்ல பலன்கள் கிடைக்கும், கர்மவினைகளும் படிப்படியாக குறையும்.
 
 

மகாலட்சுமி அருள் மாலை!

தாமரை திகழும் திருக்கரமும் தளிர்நகை பொழியும் ஒளிமுகமும்
க்ஷேமம் அளிக்கும் நல்லருளும் சேவிப் பார்க்கு நிறைவரமும்
மூவர் போற்றும் பெருமையுடன் முன்னே சங்க பதும நிதி
காவல் செய்ய, காட்சிதரும் கமல மாதே! வணங்கு கிறேன்!



தாமரை வடிவாய்த் திருக்கண்கள்! தாமரை மென்மை தளிர்க்கைகள்!
தூய மங்கல வெண்மை உடை! துலங்கு சந்தனம்! மணிமாலை!
ஞானம், சத்தி, பலம் செல்வம் நயத்தகு வீரம், பொலி வென்னும்
ஆறும் பெற்று மூவுலகும் ஆட்சி புரிபவளே! அருள்க!


இயற்கை, செயற்கை இயற்றுவிப்பாய்! எல்லா உயிர்க்கும் நலஞ்செய்வாய்!
அனைத்துக் கலைக்கும் அடிப்படையாய்! அரிய செல்வத் திருப்பிடமாய்
நினைத்த தளிக்கும் சுரபியென நிலவும் மேலாம் வடிவம் நீ!
விளங்கும் தெய்வ இலக்குமியே! விஷ்ணுவின் இதய இலச்சினையே!


செந்தாமரைதான் உன் வீடு! திகழும் தூய்மை உன் ஏடு!
அமுதம் தோற்க இனிப்பவள்நீ! அனைத்திலும் அணுவாய் அமைந்தவள்நீ!
அக்கினி பத்தினி ஸ்வாஹா நீ! அரிய ஸ்வதாவும் ஆனவள் நீ!
எங்கும் எதிலும் எந்நாளும் இலங்கிச் சிறப்பவளே சரணம்!


அரிய வடிவும் நற் குணமும் அற்புதப் புகழும் பெற்றவளே!
அசுர மாதா துதியைத்தன் அதிகா ரத்தில் கொண்டவளே!
அமுதப் பாற்கடல் ஈன்றவளே! அறிவே உருவம் ஆனவள் நீ!
அருளைப் பொழியும் வானவள் நீ! சிறிதும் குற்றம் அற்றவள் நீ!


ஸ்ரீநா ராயணர் சிந்தை நீ! உலகின் துயர இருள் நீக்கும்
ஒளியே! பகவான் உட்கொள்ளும் அமுதே! உன்றன் கடைக்கண்ணால்
அடியேன் இடுக்கண் போக்கிடுக! தருமம் அனைத்தும் ஒன்றான
தாயே! உன்னைப் போற்றுகிறேன்! இருப்பிடம் உனக்குப் பங்கயம்தான்!


இருப்பதும் கையில் கமலம்தான்! இருவிழி அதுவும் தாமரைதான்!
இலங்கும் அழகும் அம்மலர்தான்! கருணை வடிவே! காசினியைக்
காக்கும் தாயே! வணங்குகிறேன்! மலரில் தோன்றிய மலர்முகமே!
மகிழ்வாய் முகுந்தன் அரவணைக்கும் அலைமகளே! இவ் வகிலத்தில்


ஆனந்தத்தின் அடிப்படை நீ! பூவிற் சிறந்த கமலத்தில்
பொலியும் மாலை அணிந்தபடி பூவையர் விரும்பக் காட்சிதரும்
தேவதையே! உனைத் துதிகின்றேன்! வந்திப் பவர்க்கு வாழ்வளிக்கும்
வாசம் நிறைந்த வரலக்ஷ்மி!
சந்திப்பவர்க்கு மகிழ்வுதர
 

தருணம் பார்த்தே இருப்பவளே சந்திர னோடு நீ பிறந்தாய்!
சந்திர வதனம் நீ பெற்றாய்! செங்கதி ரோடு ஒளி போன்றே
திருமா லோடு திகழ்பவள் நீ!
புயங்கள் நான்கு கொண்டவளே!
புதிய நிலவின் வடிவினளே! பயன்படு செல்வம் தருபவளே!
 

பக்தர்க் கருளைப் பொழிபவளே! நயந்த அன்பர் வாழ்வினிலே!
நல் இன்பத்தைத் தருபவளே!
வியக்கும் மங்கள வடிவம் நீ!
வித்தகியே! உனைப் பணிகின்றேன்! தூயவளே! நீ உலகன்னை!
துலங்க சக்தியின் முதற் பண்ணை! மாயச் செய் என் வறுமையினை!10
 

மலர்ப் பொய்கையிலே வாழ்பவளே!
ஆய்ந்த வெண்மணி ஆடையுடன்
அமைதி துலங்க விளங்குகிறாய்! தோய்ந்த அன்பில் துதிப்போர்க்குச்
சுடரும் பொன்முடி சூட்டுகிறாய்! விளங்கும் வெளிச்ச உருவோடு
வில்வக் காட்டில் விளையாடி இலங்கும் திருமால் மார்பினிலே

இடமும் பெற்ற இலக்குமியே!
நலமார் செல்வக் களஞ்சியமே!
நல்ல வாழ்வின் இலக்கியமே! நலமார் செல்வக் களஞ்சியமே!
நல்ல வாழ்வின் இலக்கியமே! கலங்கும் பாவ வினை போக்கி
கனக மழையைப் பெய்விப்பாய்! அன்னை வடிவே! உன்னாலே
 

அரிய தனமும் தானியமும் நன்மை பலவும் வருவனவே!
நங்கையர்க்குள்ளே சிறந்தவளே! பொன்னின் அரண்மனைப் பொலிவினிலே
புண்ணிய வடிவாய் நிறைந்தவளே! தன்னை பூஜை செய்வோர்க்கு
சகல வரம்தரும் சந்நிதி நீ! திருப்பாற் கடலில் உதித்தவளே!

திருமால் மார்பிடை பதித்தவளே! விருப்போ டணுகும் பக்தர்க்கே
வெற்றியை வாழ்வில் தருபவளே! செறித்த கனகச் சூழலுடன்
சுடரும் மகிழ்ச்சி மண்டபத்தில் பொருத்த முடனே பொலிகின்ற
பூவே! உன்னைப் போற்றுகிறேன்! தேசம் போற்றும் உத்தமியே!
 

ஸ்ரீமகா விஷ்ணுவின் பத்தினியே!
பூசை மலராய்ப் பொலிகண்கள்!
பொன்னைப் பொழியும் திருக்கைகள்! மோசம் செய்யும் வறுமையினை
முற்றும் அழிக்கும் அருட்பார்வை! ஆசை யாவும் நிறைவேற்றும்
அன்னை உன்னைப் புவிபோற்றும்! நவ துர்க்கைக்கும் மலரென நீ
 

நாயகியே நீ விளங்குகிறாய்! சிவன் அயன் திருமால் மூவருமே
சேர்ந்த சங்கம வடிவம் நீ! அவரவர் தொழிற்கும் நீ மூலம்!
அன்னை நீயே முக்காலம்! அவனி சுழன்றிடக் காரணமே!
அனைத்தும் நிறைந்த பூரணமே! தேவ மாதர் பணி செய்ய
 

திகழும் தலைவி! வையத்தின்
மேவும் சுடர் நீ! மேன்மை நீ!
மேலாம் பாற்கடல் உதித்தவள் நீ! மூவர் போற்றும் முதல்வி நீ!
ஆவ தனைத்தும் உன்னாலே! ஆசி அளிப்பாய் கண்ணாலே! நாரா
யணரின் நெஞ்சமெனும் நற்றா மரப்பூ நடுவினிலே
 

சீராய் அமர்ந்த திருமகளே! திசைகள் எட்டும் உன் புகழே!
ஆரா திப்பர் இல்லத்தை அரண்மனை ஆக்கும்
பொன்மகளே!
பூரணக் கருணை பொழிந்திடுவாய்! மலர்மகளே! உன் அடி சரணம்!
 
 

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் தரும் யோகங்கள்!

நீங்கள் சிம்ம லக்னத்தில் பிறந்தவரா? உங்களின் வாழ்வை மேம்படுத்தவே இந்தப் பகுதி!

‘ஸ்திர லக்னம்’ என்று அழைக்கப்படுவதில் மிகவும் வலிமை வாய்ந்தது சிம்மமே ஆகும். அள்ளிக் கொடுக்கும் குணம் கொண்ட சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு, மனசாட்சிக்கு மாறாக பேசத் தெரியாது. ஏழை - பணக்காரர், படிக்காதவர் - மேதை என்று வித்தியாசம் பார்க்கத் தெரியாது. சிம்ம ராசிக்காரர்கள் கொஞ்சம் ஆர்ப்பாட்டம், அலங்காரமான பேச்சு என்று வளைய வருவார்கள். உணர்ச்சிவசப்பட்டு உளறாமல், வெற்றியையும் தோல்வியையும் சரிசமமாக எடுத்துக் கொள்வார்கள். சிம்ம லக்னத்தில் பிறந்தால் அதிர்ஷ்டத்தோடு வாழும் பாக்கியம் கிடைக்கும்.

இவர்களுக்கு எப்போது ஒருவரைப் பிடிக்கும், எப்போது பிடிக்காமல் போகும் என்று ஒருவராலும் சொல்ல முடியாது. என்னதான் எதிரியாகவே இருந்தாலும் அவர்களை நேசிக்கவும் செய்வார்கள். எல்லோரும் இவர்களிடம் தங்கள் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புவார்கள். எவ்வளவு பெரிய பதவியில் அமர்ந்தாலும் கர்வம் கொள்ள மாட்டார்கள். தன்னை யாராவது ஏமாற்றுகிறார்கள் என்றால் காட்டுச் சிங்கம் போல கர்ஜிப்பார்கள். இவர்களிடத்தில் ஆத்ம பலம் அதிகம் உண்டு.

உதிப்பதும் அஸ்தமனமும் சூரியனுக்கு இயல்பு போல, இவர்கள் பல இடங்களில் புத்திசாலியாகத் தோன்றுவார்கள்; சில இடங்களில் இவர்களின் பேச்சு குழந்தைத்தனமாக இருக்கும். இவர்கள் வாழ்வில் மேன்மை பெற, தந்தையை இழந்த குழந்தைக்கு எல்லாவிதங்களிலும் உதவ வேண்டும். பார்வை இழந்தவருக்கு தேடிப்போய் அவர்களுக்கு என்ன மாதிரியான உதவி செய்ய முடியும் என்று பார்க்க வேண்டும். ஆறிப் போன உணவுகளைத் தவிர்க்கப் பார்க்கவும். உணவில் சூரிய காந்தி எண்ணெயை அதிகம் உபயோகப்படுத்தலாம்.

இவர்களுக்கு சூரியனுக்கு இணையாக செவ்வாய் அதிகமாக உதவப் போகிறார். கேந்திர ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான திரிகோணத்திற்கும் அதிபதியாக செவ்வாய் வருகிறார். செவ்வாய் நன்றாக இருந்தால் பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பாற்றுவார்கள். நான்காம் இடம் என்பது சுக ஸ்தானத்தைக் குறிப்பதால் ஆடம்பரமான பங்களாக்கள் கட்டிக்கொண்டு வாழ்வார்கள். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் பரம்பரைச் சொத்து உள்ளவர்களாகவே இருப்பார்கள்.

தலைமை தாங்கி நடத்திச் செல்வதில் ஈடு இணையற்றவர்களாக இவர்களை சூரியன் விளங்க வைப்பார். பொதுவாக சனியை அதிபதியாகக் கொண்ட நட்சத்திரங்களில் சூரியன் அமரக் கூடாது. சனியின் பார்வையோ அல்லது சேர்க்கையோ பெற்றிருந்தால் எல்லா விஷயங்களிலும் காலதாமதமாக பலன்கள் கிடைக்கும். சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜாதகத்தில் எந்தெந்த இடங்களில் லக்னாதிபதியான சூரியன் அமர்ந்திருந்தால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என இனி பார்க்கலாம்...

ஒன்றாம் இடத்தில் லக்னாதிபதியான சூரியன் அமர்ந்திருந்தால் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் எல்லோருக்கும் ஒரு ரோல் மாடலாகவும் விளங்குவார்கள். அறச்செயல்களுக்கு முன்னுரிமை கொடுத்து ஈடுபடுவார்கள். அபாரமான நிர்வாகத் திறன் இருக்கும். நாலு பேரை வைத்து வேலை வாங்கும் நிலையில்தான் இருப்பார்கள். இவர்கள் பிறந்ததிலிருந்தே ஒரு நல்ல சூழ்நிலையில் வளர்வார்கள். இவர்கள் எதில் ஆர்வத்தோடு ஈடுபட்டாலும் முன்னுக்கு வருவார்கள். பார்ப்பதற்கே கம்பீரமாக இருப்பார்கள்.

இவர்களின் வெளித்தோற்றத்தை பார்க்கும்போதே மரியாதை உணர்வு ஏற்படும். தங்களின் வாழ்க்கை அனுபவங்களை மிக அழகாக வெளிப்படுத்துவார்கள். எதையுமே மிகவும் நுட்பமாக வெளிப்படுத்தும் தன்மை இருக்கும். கண்களில் கூர்மை இருக்கும். சூரியன் இரண்டாம் இடமான கன்னியில் இருந்தால், தேவையில்லாமல் நிறைய பேசுவார்கள். முன்கோபம் உள்ளவர்களாக இருப்பார்கள். பணத்தைத் தண்ணீராக செலவழிப்பார்கள். இந்த இடத்தில் தனித்த சூரியன் இருந்தாலே அலைச்சல் நிறைய இருக்கும்.

இவர்களுக்கு ஆரம்பக் கல்வி சுமாராக இருக்கும். மேல்நிலைக் கல்வி நன்றாக வரும். ‘அடங்க மறு’ என்பதுதான் இவர்களுக்கு தாரக மந்திரமாக இருக்கும். ஒரு அமைப்பு அல்லது நிர்வாகத்துக்குக் கட்டுப்படாத, விதிமுறைகளுக்கு முரண்படுகிற நபராகவே இருப்பார்கள். எதை, எங்கு, எப்படிப் பேசுவது எனும் கலையை நிச்சயம் அனுபவத்தில் கற்காவிட்டால் தொல்லைகள் இருந்துகொண்டே இருக்கும்.

மூன்றாம் இடமான துலாம் ராசியில் சூரியன் நீசமாகிறார். இதனால் எல்லாவற்றிற்கும் பயந்தபடி இருப்பார்கள். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இளைய சகோதர வகையில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தபடி இருக்கும். ‘பணம் கொடுத்து பாசத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறதே’ என்று வருந்துவார்கள். இவர்களுக்குக் கீழே வேலை செய்யும் வேலையாட்களோடு ஏதேனும் பிரச்னை இருந்துகொண்டே இருக்கும். போக விஷயங்களில் மிகுந்த ஈடுபாடு காட்டுவார்கள். எதிர்பார்த்த நேரத்தில் எதிர்பார்த்த நபரிடத்தில் உதவிகள் கிடைக்காது அவஸ்தைப்படுவார்கள்.

விருச்சிக ராசியான நான்காம் இடத்தில் சூரியன் அமர்ந்திருந்தால் அது தனியான விசேஷ பலன்களை அளிக்கும். அறிவுக் கூர்மை, ஆளுமைத் திறன், பெரிய நிறுவனங்களை உருவாக்குதல், உயர் ரக வாகனத்தை உருவாக்குதல் என்றிருப்பார்கள். தாய்வழிச் சொத்து கிடைக்கும் வாய்ப்பு அதிகம். எந்த வேலையை எடுத்தாலும் அதை முடித்துவிட்டுத்தான் அடுத்த வேலைக்கு நகர்வார்கள். கல்லூரியில் பயிலும் காலத்தில் பெருமளவு சாதிப்பார்கள்.  இருப்பதிலேயே விருச்சிகத்தில் தனித்து நிற்கும் சூரியன்தான் நல்ல பலன்களை அளிப்பார். சிறிய பதவியிலிருந்து பெரும் பதவி வரை மேலே மேலே நகர்ந்து கொண்டிருப்பார்கள்.

ஐந்தாம் இடமான தனுசுக்குள் சூரியன் அமர்ந்தால் எமோஷனலாக இருக்கக் கூடாது. ‘ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால்’ என்றிருப்பார்கள். சொத்து சம்பந்தப்பட்ட விஷயமாக அடிக்கடி நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும். எதிலுமே ஒரு தடுமாற்றம் இருந்துகொண்டே இருக்கும். உறவினர்களோடு அடிக்கடி பகை மூளும். அவர்களால் ஏமாற்றப்படுவார்கள். குழந்தை பாக்கியமே காலதாமதமாகத்தான் இருக்கும்.

அல்லது பெண்களாக இருப்பின் கருப்பை பிரச்னை இருக்கும். ஆறாம் இடமான மகரத்தில் சூரியன் நின்றிருந்தால் அதுவும் நன்மையைத்தான் தரும். தலைமை தாங்கும் பண்பு மிகுந்திருக்கும். கடன் என்றாலே காத தூரம் ஓடுவார்கள். உடம்பை பாதுகாப்பதில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். எதிரிகள் இருந்தால்தான் இவர்கள் சுவாரசியமாக வேலை பார்ப்பார்கள். சனி பகவானின் வீடான கும்பத்தில் சூரியன் இருந்தால் நிச்சயம் திருமணத் தடை இருந்து விலகும்.

அதிகமாக பேசும், சண்டை போட்டுக்கொண்டே இருக்கும் வாழ்க்கைத்துணை அமையும். இவர்கள் அடிக்கடி சமநிலையை இழப்பார்கள். யாரிடம் என்ன பேசவேண்டும் என்று தெரிந்து கொள்ளாமல் இருப்பார்கள். இவர்களில் சிலர் வெளிதேசம் சென்றால் கொஞ்சம் நிதானமாக இருப்பார்கள். கூட்டுத் தொழிலை தப்பித் தவறியும் செய்யவே கூடாது. 

மீனத்தில் சூரியன் அமர்வதால் அலைச்சலிலேயே பாதி வாழ்க்கை போகும். அடுத்தடுத்து பயணப்படும் வேலையில் அமர்வார்கள். சிலர் வெளிநாட்டு வாழ் உரிமை பெற்று அங்கேயும் இருப்பார்கள். எல்லா சேமிப்புகளையும் திடீரென்று கரைப்பார்கள். இவர்கள் இரவில் பயணம் செய்யும்போது நிச்சயமாக உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சிறிய பிரச்னைக்குக் கூட நிலைகுலைந்து போவார்கள். கண்ணில் ஏதேனும் தொந்தரவு வந்து போகும். பல இடங்களில் கடனை வாங்கிவிட்டு அவஸ்தைப்படுவார்கள்.

மேஷத்தில் சூரியன் தனித்து நின்றால் தந்தைக்கும் பிள்ளைக்குமிடையே ஏதோஒரு பனிப்போர் இருந்துகொண்டே இருக்கும். தந்தையாரை எப்போதும் ஜெயிக்க வேண்டும் என்கிற எண்ணம் அதிகமிருக்கும். மேலும், தந்தையின் சொத்துகள் விரயமாவதற்கும் நிறைய வாய்ப்புகள் உண்டு. தந்தையார் மிகுந்த செல்வாக்கு உள்ளவராக இருப்பார். இவர்களில் பலர் ஆன்மிகத்தில் ஈடுபட்டு யாரிடமேனும் மந்திர உபதேசம் பெறுவார்கள். தர்ம நியாயத்திற்கு கட்டுப்படுவார்கள். தன்னால் இயன்ற அளவு ஏதேனும் டிரஸ்ட் தொடங்கி அதன்மூலம் நிறைய பேரை வாழ வைப்பார்கள்.

ரிஷபத்தில் சூரியன் தனித்து நின்றால் மருத்துவத் துறையில் பணியாற்றுவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. கெமிக்கல் எஞ்சினியர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்று வருவார்கள். மருந்து நிறுவனங்களில் உயர் பதவியில் அமர்வார்கள். மிதுன ராசியில் அமர்ந்திருந்தால் மூத்த சகோதரர்களால் எந்த பிரச்னையும் இருக்காது. இவர்களில் பெரும்பாலும் தந்தையின் வேலையையோ தொழிலையோ எடுத்துச் செய்வார்கள். மிதுன புதன் இந்த இடத்திற்கு அதிபதியாக இருப்பதால் பலபேருக்கு இவர்களின் ஆலோசனையும் தேவைப்படும். தேவைக்கு அதிகமாக எதையுமே சேர்த்து வைத்துக் கொள்ள மாட்டார்கள்.

தனக்கு எது கிடைத்தாலும் அதை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுப்பார்கள். இவர்கள் ஷேர் மார்க்கெட்டில் புகுந்து விளையாடலாம். பன்னிரெண்டாம் வீடான கடகத்தில் சூரியன் பகையாகச் சென்று மறைவதால் தூக்கம் எப்போதுமே சரியாக இருக்காது. பலர் சூட்சும சக்திகளோடு தொடர்பு வைத்திருப்பார்கள். பன்னிரெண்டாம் வீட்டிற்குரியவராக சந்திரன் வருவதால் ஜிலுஜிலுவென்றும், குளுமையாகவும் காற்று வீசினால் கண்கள் சொருகும். அயன சயன ஸ்தானம் எனப்படும் இந்த இடத்திற்கு சந்திரன் அதிபதியாக வருவதால், சில பல உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்படுவார்கள். பழைய கோயில்களைத் தேடித் தேடி ஓடுவார்கள்.

அதேபோல பழைய நூல்களையும் பதிப்பிப்பார்கள். இவர்கள் மிக நிச்சயமாக கடன் வாங்குவதை நிறுத்த வேண்டும். சூரியன் சிவகோத்திரத்தைச் சேர்ந்தவர். சூரியன் ஒரு நெருப்புக் குழம்பாக கொதிக்கும் கிரகம். இவ்வாறு பூலோகத்தில் சூரியனுக்கு நிகர்த்ததாக ஒரு தலத்தை சொல்ல வேண்டுமெனில் அது திருவண்ணாமலையே ஆகும். நெருப்புப் பந்து சூரியன் எனில், பூமியில் அதற்கு இணையான நெருப்புப் பந்தாகவும், நெருப்பு தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலையே ஆகும்.

அருணன் என்பதற்கு சூரியன் என்ற பொருளும் உண்டு. அருணாசலம் என்பதற்கு ‘அசையாத ஞான சூரியன்’ என்றும் பொருள் கொள்ளலாம். சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் எப்போதும் வணங்கவேண்டிய தலம் திருவண்ணாமலை. இவர்களுக்கு யோகங்களை அள்ளித் தரக் காத்திருக்கிறார் அருணாசல சிவன். 
 
 

வெல்ல பாகு நெல்லிக்காய்!

ஒரு கிலோ நெல்லிக்காயை சுத்தமா கழுவி, இட்லி தட்டுகளில் துணி போட்டு, அதுல பரத்தி வைங்க. வேக வைக்க தேவையான தண்ணீருடன், இரண்டு கரண்டி பாலையும், இட்லி பானையில் ஊத்தி அடுப்புல ஏத்தணும்.


பால் கலந்த தண்ணி சூடானதும், நெல்லிக்காய் பரப்புன இட்லி தட்டுகளை வைத்து, பானையை மூடி அவிச்சு எடுங்க.அரைக்கிலோ வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி (அரைக்கிலோ வெல்லம்னா சுமாரா ஒரு உருண்டை.


இது இனிப்பு குறைவா சேர்க்கிறவங்களுக்கு. இனிப்பு அதிகம் வேணும்னா ஒரு கிலோ வெல்லம் போடலாம்.) தேவையான தண்ணீர் ஊற்றி கரைத்து, அழுக்கு போக வடிகட்டி அடுப்புல வைச்சு பாகு காச்சுங்க.


ரொம்ப காய்ச்சணும்னு இல்ல. பிசுபிசுன்னு வந்தவுடன் இறக்கிடலாம்.


இதுல வெந்த நெல்லிக்காயைப் போட்டு, ஃபிரிட்ஜுல வச்சுடுங்க. ஊற ஊற, தினமும் ஒன்னு எடுத்து சாப்பிடுங்க.


நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இரும்புச் சத்து, இன்னும் பல சத்துக்கள் கிடைக்கும் நெல்லிக்காய் எல்லாம் தீர்ந்தப்பிறகு, மீதமிருக்கிற நீர்ப்பாகை, ஜூஸ் மாதிரி குடிச்சிருங்க.


நெல்லிக்காயின் சத்துகள் அதில் இறங்கியிருப்பதால் அதை வேஸ்ட் பண்ண வேண்டாமே.
 
 

திருப்பட்டூர் அற்புதங்கள்!

1. சிவ பக்தியுடன் வாழ்ந்து வந்த வியாக்ரபாதர், சிவனாரை நோக்கி இந்த தலத்தில் தவம் செய்தார்.


2. இத்தலத்தில் உள்ள தீர்த்தக்குளத்து நீரை, எவர் கையில் எடுத்தாலும் அவர்களுக்கு கங்கையில் நீராடிய பலனும் கிடைக்கும்.

3. இத்தலத்தில் 3001 அந்தனர்கள் வேதங்களை அனுதினமும் பாராயணம் செய்ததால் அதில் உண்டான அதிர்வலைகள் அங்கிங்கெனாதபடி எங்குமாக பரவிக் கிடப்பதால் திருப்பிடவூர் எனப்பெயர்பெற்றது. திருப்பிடவூர் என்பதே காலப்போக்கில் திருப்பட்டூராக மாறியது.


4. இது காசிக்கு நிகரான தலம் மட்டுமல்ல. திருக்கைலாயத்திற்கு நிகரான தலமும் ஆகும். இத்தலத்தில் ஸ்ரீமந் நாராயணரை வணங்கி தொழுததால் ஆதிசேஷன் அடுத்த கணம் பதஞ்சலி முனிவராக மாறினார்.

5. கர்வத்தை ஒழிப்பவர்கள் மனதில் இறைவன் உறைவதும், அவனே இறைவனாக மாறிப்போவதும் இத்தலத்தில் நிகழும்.


6. திருக்கயிலாய ஞான உலா எனும் நூல் இத்தலத்தில் அரங்கேறியது.


7. சிவ பெருமான், தன் அடியவர்கள் பலரையும் இந்த தலத்திற்கு அழைத்து வந்து திருவிளையாடலை நிகழ்த்தி இருக்கிறார்.


8. சேர மன்னன் நாயானாரும், சுந்தரரும் நெகிழ்ந்து வணங்கிப் பேறு பெற்ற அற்புதமான இடம் இதுவாகும். மாசாத்தனார் ஓலை நறுக்குகளுடன் காட்சி தரும் விக்கிரகத் திருமேனியை கோவிலின் மூலமூர்த்தமாக இன்றைக்கும் இங்கு தரிசிக்கலாம்.


9. சிவபெருமான் பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எறிந்த தலம் திருவையாறு அருகில் உள்ள திருக்கண்டியூர் தலத்திலாகும். அந்த பிரம்மன் பரிகாரம் தேடி கொண்டது திருப்பட்டூராகும்.


10. பிரம்மன் உருவாக்கிய பிரம்ம தீர்த்தக் குளம், சிவலிங்கச் சந்நிதிகளும் இங்கு அமைந்துள்ளன. இங்கு வழிபட்டால் 12 சிவாலயங்களுக்கு சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.


11. பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மாதாவாக பிரம்ம சம்பத்கவுரி கனிவு ததும்ப கருணை பொங்கக் காட்சி தருகிறாள். இவளுக்கு செவ்வாய், வெள்ளி கிழமைகளில் புடவை சார்த்தி வேண்டிக் கொண்டால் தடைப்பட்ட திருமணம் இனிதே நடைபெறும்.


12. பிரதோஷ நாளில் இங்கு ஒரே நேரத்தில் நந்திக்குச் செய்யப்படுகிற பூஜையையும், நரசிம்ம மூர்த்தியையும் தரிசிக்கலாம்.


13. ஏழேழு ஜென்ம பாவங்களை நீக்கி பஞ்சபூதங்களாக உறைந்து இத்தலத்து ஈசன் நம்மை காக்கிறார்.
14. பிரம்மாவை வணங்கும் போதே குரு தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.


15. குரு பகவானுக்கு அதி தேவதை யான பிரம்மா தனி சந்நிதியுடன் திகழும் தலம் இதுவாகும்.
16. இத்தலத்திற்கு திருப்படையூர் என்ற பெயரும் வழக்கத்தில் இருந்தது.


17. சுப்ரமணிய சுவாமிக்கு வஸ்திரம் சார்த்தி, சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்தால் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.


18. தலை எழுத்தையே மாற்றி அருளும் திருப்பட்டூரில் குடி கொண்டிருக்கும் சுப்ரமணியரை வணங்கினால் மோட்சம் நிச்சயம் கிடைக்கும்.


19. தேய்பிறை அஷ்டமி யில், ராகு கால வேளையில் காலபைரவரைத் தரிசித்து அவரின் வலது காதில் நம் பிரச்சினைகளைச் சொல்லி வணங்கு வதற்காகத்தான் இத்தலத்தில் கால பைரவரின் வலது காது வித்தியாசமாக உள்ளது.


20. இத்தலத்தில் கால பைரவருக்கு நேர் எதிரில் இருக்கும் கஜலட்சுமியை வணங்கினால் ஐஸ்வர்யம் கிடைக்கும்.


21. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருச்சி, முசிறி மற்றும் துறையூர் என சுற்று வட்டார ஊர்களைச் சேர்ந்தவர்களுக்குக்கூட திருப்பட்டூர் என்கிற ஊரே தெரியாமல் இருந்தது. ஆனால் இன்றைக்கு இத்தலம் தமிழகத்தையும் கடந்த பெங்களூரு, ஆந்திரா முதலான மாநிலங்களையும் தாண்டி பிரபலமாகியுள்ளது.

22. இத்தலத்திற்கு வந்து காசி விஸ்வநாதரையும், பிரம்மபுரீஸ்வரரையும் கண்ணாரத் தரிசித்து
வணங்குபவர்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். புதிய சக்தியுடன் சிவத்தொண்டு புரிவர்.


23. திருப்பட்டூர் திருத்தலம் ஒரு காலத்தில் மிகச் செழிப்பாக இருந்தது. எப்போதும் வேத கோஷங்கள் காற்றில் நிரம்பி புண்ணிய பூமியாக திகழ்ந்தது.


24. பூணூல் கல்யாணம் எனும் சடங்கை இத்தலத்தில் செய்வது விசேஷம் ஆகும்.


25. திருபட்டூர் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் இங்கு வந்து அம்பாளின் திருவடியில் விதை நெல்லை வைத்து வணங்கி விட்டு, பிறகு அதை ஊர்வலமாக எடுத்துச்சென்று தங்களின் வயல்களில் விதைத்தால், தானியங்கள் செழிப்பாக வளர்ந்து லாபம் கொழிக்கும் என்கிறார்கள்.


26. இத்தலத்துக்கு வந்து பிரம்மாவின் திருச்சந்நிதியில் ஜாதகத்தை வைத்து மனதாரப் பிரார்த்திக்கும் பக்தர்கள், பிரார்த்தனை நிறைவேறியதும் வஸ்திரம் சார்த்தி நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.


27. 11 வியாழக்கிழமை தவறாமல் இங்கு வந்து தியானம் செய்தால் மன அமைதி கிடைக்கும் என்கிறார் இங்கு வரும் பக்தர் ஒருவர்.


28. வெள்ளைத் தாமரை சார்த்தி பிரம்மாவை வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும் அதே போல் நீங்கள் பிறந்த நட்சத்திர நாளில் இத்தலத்தில் வழிபட்டால் புண்ணியம் நிச்சயம் சேரும்.


29. ஆடி சுவாதி நட்சத்திர நாளில், திருப்பட்டூர் வந்து மூன்று கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்யுங்கள். அப்படி தரிசித்த பலனை, அடுத்தடுத்த நாளிலேயே உணர்வீர்கள்.


30. ஒரேயரு முறை திருப்பட்டூர் தலத்தில் காலடி எடுத்து வையுங்கள். மனதின் அத்தனை துக்கங்களும் பறந்து, மனம், புத்தி, செயல், சிந்தனை யாவற்றிலும் ஓர் ஒழுங்கை, நேர்த்தியை, தெளிவை உணர்வீர்கள்.
 
 

செல்வம் பெருக்கும் மயில் இறகு!

 மயில் இறகு என்று கேட்டதும், சிறு வயதில் மயில் இறகை புத்தகத்தினுள் வைத்து, அது குட்டி போடும் என்று நம்பி பலர் வைத்திருந்தது ஞாபகத்திற்கு வரும்.

மேலும், மயில் கடவுள் முருகனின் வாகனம் என்பதால், அதன் இறகை புனிதமானதாக கருதி, பலரும் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்திருப்போம்.

செல்வம் தரும் குபேர முத்திரை!

குபேரன் செல்வத்தின் அதிபதி. அவருடைய திசை வடக்கு. நமது உடலில் வடக்கு திசை சிரசைக் குறிக்கும். எண்சாண் உடம்புக்கும் சிரசே பிரதானம். இறைவன் குடியிருக்கும் இடம் சிரசு. குபேர முத்திரையின் மூலம் சிரசின் சக்கரங்கள் இயக்கப்படுகின்றன. எனவே, இந்த முத்திரையின் மூலம் நமது வேண்டுதல்களை இறைவனிடம் நேரடியாகச் சமர்ப்பிப்பதாகவே கொள்ளலாம்.

எப்படிச் செய்வது?: இந்த முத்திரையை அதிகாலையில் செய்வது சிறப்பு. சப்பணம் இட்டு நிமிர்ந்த நிலையில் அமர்ந்து, கண்களை மூடி, ஆள்காட்டி விரல் நுனி, நடு விரல் நுனி மற்றும் கட்டை விரல் நுனி ஆகியவற்றை சேர்த்துவைக்கவும்.

மோதிர விரல் மற்றும் சுண்டு விரல் நுனிகளை மடக்கி உள்ளங்கை பகுதியில் அழுத்தி வைத்துக்கொள்ளவும். இந்த நிலையில் உள்ளங்கை மேல்நோக்கி இருக்கவேண்டும். முதலில் செய்ய சிரமமாக இருக்கும். பழகப் பழக எளிதாகிவிடும்.

முத்திரையின்போது எதை மனதில் நிறுத்தலாம்?

உங்களது குறிக்கோளை மூன்று சொற்கள் அடங்கிய  வாக்கியமாக மாற்றிக் கொள்ளுங்கள். கண்களை மூடி அந்த வாக்கியத்தைச் சொல்லத் தொடங்கலாம். அதிலிருந்து ஒரு காட்சி விரியும்.

உங்கள் மனதுக்கு இனிமையும், மகிழ்ச்சியும் ஏற்படுத்தும் அக் காட்சியை ஓர் அசையாத சித்திரமாக மனக்கண்ணில் நிறுத்துங்கள். உதாரணத்துக்கு, ‘சகல சௌபாக்கியங்களோடு, மங்களகரமான மனைவியும், குழந்தைகளும் உள்ள ஒரு வீட்டின் சித்திரம்’. இதை மனதில் நிறுத்தியவுடன் கைகளில் முத்திரையை வைக்க லாம். பின்னர் இதே நிலையில் 5 முதல் 20 நிமிடங்கள் வரை அமர்ந்திருக்கவும். கவனத்தைக்கலைக்காமல்,
  உங்களால் எவ்வளவு நேரம் இயலுமோ அவ்வளவு நேரம் இந்த முத்திரையைச் செய்யலாம்.

பயன்கள்: இம்முத்திரையைச் செய்து வரும் போது, உடலில் மண் மற்றும் நீர் பூதம் குறைக்கப்படுவதால், ஆழ் மனதில் தேவையற்ற எதிர்மறை எண்ணங்கள் அழிக்கப்படுகின்றன.

செல்வம் மட்டுமல்ல, நமது உயர்ந்த குறிக்கோள் எதுவாயினும் அதை அடைய உதவும் முத்திரை இது. எந்தவொரு பெரிய செயலைத் துவங்குவதாக இருந்தாலும் அதற்குமுன் இந்த முத்திரையைச் செய்வது நன்கு பலனளிக்கும்.

 தீ, காற்று மற்றும் ஆகாய பூதங்கள் சமநிலையில் இயக்கப்படுவதால், விசுத்தி மற்றும் ஆக்ஞா சக்கரங்கள் இயங்கத் தொடங்கும். எனவே பிட்யூட்டரி, பீனியல் சுரப்பிகள் மற்றும் மூளை பிரகாசமாகச் செயல்பட்டு ஆழ்மன அமைதி கிட்டும்.

பார்வை குறைபாடு, காதில் இரைச்சல், வலி, தலையில் நீர் கோத்தல், மூக்கடைப்பு ஆகியவை நீங்கும். இந்த முத்திரையை ஒரு மண்டலம்  (48 நாட்கள்) செய்து வர, மனதில் உள்ள குழப்பங்கள், அழுத்தம் தரும் எண்ணங்கள் நீங்கித் தெளிவு கிடைக்கும். மருக்கள், கருமை நீங்கி முகம் பொலிவடையும்.

இந்த முத்திரை ஆல்பா தியான நிலைக்கு நம்மை எடுத்துச் செல்கிறது. அதாவது ஆழ்மனதின் கதவுகள் திறக்கப்படுகின்றன. எனவே தொலைந்த பொருளைத் தேடவும், பொருள் வைத்த  இடத்தை ஞாபகப்படுத்தி எடுக்கவும், விரும்பிய நிறமுள்ள ஆடைகள், அணிகலன்கள் நம்மைச் சேரவும், ஆசைப்பட்ட பொருளை வாங்கவும், இம்முத்திரையைச் செய்து பயனடையலாம்.

குபேர பூஜையோ, மகாலட்சுமி யாகமோ செய்ய இயலாத நிலையில் உள்ளவர்களும் குபேர முத்திரையை செய்து வந்தால், சகல ஐஸ்வர்யங் களும் பெற்று நிறைவாக வாழலாம்.
 
 

Kamalaathmika sthothram!

 
1. ஓம் கார ரூபிணீ தேவி விசுத்த சத்வ ரூபிணீ
தேவானாம் ஜனனீ த்வம் ஹி ப்ரஸன்னா பவ சுந்தரீ
 
Aum kaara roopinee Devi visuktha sathva roopinee
Devaanaam jananee thvam he prasnanna bava Sundharee
2. தன்மாத்ரஞ்சைவ பூதானி தவ வக்ஷ: சதலம் ஸ்ம்ருதம்
த்வமேவ வேத கம்யா து ப்ரஸன்னா பவ சுந்தரீ
 
Dhan maathranchai va bhoothaane thava vaksha sadhalam smrutham
thava may va vedha gamyaa thu prasnanna bava Sundharee


 3. தேவ தானவ கந்தர்வ யக்ஷ ராக்ஷச கின்னரை:
ஸ்தூயஸே த்வம் சதா லக்ஷ்மீ ப்ரஸன்னா பவ சுந்தரீ
 
Deva dhaanava gandharva yaksha raakshasa kin na rai
sthu ya say thvam sadhaa laxmee prasnanna bava Sundharee


 4. லோகா தீதா த்வைதா தீதா சமஸ்தா தூ வேஷ்டிதா
வித்வஜ் ஜன கீர்த்திதா ச ப்ரஸன்னா பவ சுந்தரீ
 
Logaa dheedhaa dhvaithaa dheethaa samasthaa thu wayshti thaa
vidhvath jana keerthithaa cha prasnanna bava Sundharee

5. பரிபூர்ணா சதா லக்ஷ்மீ த்ராத்ரீ து சரணார்த்திஷு
விச்வாத்யா விச்வ கர்த்ரீ ச ப்ரஸன்னா பவ சுந்தரீ
 
Pari poornaa cadhaa Laxmee dhaathree thu charaarth shu
Viswaathyaa viswa garthree cha prasnanna bava Sundharee
6. ப்ரஹ்ம ரூபா ச ஸாவித்ரீ த்வத்தீப்த்யா பாஸதே ஜகத்
விச்வரூபா வரேண்யா ச ப்ரஸன்னா பவ சுந்தரீ
 
Bhrama roopaa cha Saavithree thvath dheepth yaa baasa they jagath
Viswaroopaa varayn yaa cha prasnanna bava Sundharee
7. க்ஷித் யப்தேஜோ மருத் வ்யோம பஞ்சபூத ஸ்வரூபிணீ
பந்தாதே: காரணம் த்வம் ஹி ப்ரஸன்னா பவ சுந்தரீ
 
kshith yap theyjo maruth vyoma pancha bhootha swaroopinee
panthaa dhey kaaranam thvam he prasnanna bava Sundharee
8. மஹேசே த்வம் ஹேமவதீ கமலா கேசவே அபி ச
ப்ரஹ்மண: ப்ரேயஸீ த்வம் ஹி ப்ரஸன்னா பவ சுந்தரீ
 
Mahay say thvam Hemavathee Kamalaa Kaysa way abi cha
bhramana pray ya see thvam he prasnanna bava Sundharee
9. சண்டீ துர்கா காளிகா ச கெளசிகீ ஸித்தி ரூபிணீ
யோகினீ யோக கம்யா ச ப்ரஸன்னா பவ சுந்தரீ
 
Chandi Durgaa Kalaikaa cha Kowsikee sidhi roopini
Yogini yoga gamyaa cha prasnanna bava Sundharee
10. பால்யே ச பாலிகா த்வம் ஹி யெளவனே யுவவதீ ச
ஸ்தவிரே வ்ருத்த ரூபா ச ப்ரஸன்னா பவ சுந்தரீ
 
Baal ye cha baalikaa thvam he yow vanay yuva vathi cha
sthavi ray vrutha roopaa cha prasannaa bava Sundharee
11. குணமயீ குணாதீதா ஆத்யா வித்யா சனாதனீ
மஹத் தத்வாதி சம்யுக்தா ப்ரஸன்னா பவ சுந்தரீ
 
Guna mayee gunaa dheethaa aadhyaa vidhyaa sanaa dha nee
mahath thathvaadhi Samyukthaa prasannaa bava Sundharee
12. தபஸ்வினீ தப: ஸித்தி ஸ்வர்க்க ஸித்திஸ்ததர்த்திஷு
சின்மயீ ப்ரக்ருதி ஸ்த்வம் து ப்ரஸன்னா பவ சுந்தரீ
 
Thapasvinee thapa: sidhi swarga sidhis tha tharthi shu
Chinmayee prakruthi sthvam thu prasannaa bava Sundharee
13. த்வ மாதிர் ஜகதாம் தேவி த்வமேவ ஸ்திதி காரணம்
த்வமந்தே நிதனஸ் தானம் ஸ்வேச்சாரா த்வமேவ ஹி
 
thva maadhir jagadhaam Devi thva may va sthithi kaaranam
thva manthey nidhanas thaanam swaycchaaraa thva may va he
14. சரா சராணாம் பூதானாம் வஹிரந்தஸ் த்வமேவ ஹி
வ்யாப் யவ்யா பக ரூபேண த்வ பாஸி பக்த வத்ஸலே
 
Charaa charaa naam bhoothaanaam vahi ranthas thva may va he
vyaap yavyaa baga roopay na thva paasi baktha vatsalay
15. த்வந் மாயயா ஹ்ருதக் ஞானா நஷ்டாத்மானோ விசேதஸ:
கதா கதம் ப்ரபத் யந்தே பாப புண்ய வசாத் ஸதா
 
thvan maaya yaa hrudhak gnaanaa nashtaath maano vi chey dhasa
kadhaa katham prabath yanthe paapa punya vasaath sadhaa
 
 
16. தாவன் சத்யம் ஜகத்பாதி சுக்திகார ஜதம் யதா
 யாவன்ன க்ஞாயதே க்ஞானம் சேதஸா நான்வ காமினீ
 
thaa van sathyam jagath paathi sukthi kaara jadham yadhaa
yaa vanna gnaayathey gnaanam chedhasaa naan va kaaminee
17. த்வஜ்ஞானாத்து சதா யுக்த: புத்ர தார க்ருஹாதிஷு
ரமந்தே விஷயான் ஸர்வானந்தே து:க ப்ரதான் த்ருவம்
 
thva gnaa naathu sadhaa yuktha puthra thaara gruhaadhi shu
ramanthe vishayaan sarvaanandhe thu ka pradhaan dhruvam
18. த்வதாக் ஞயா து தேவேசி ககனே சூர்ய மண்டலம்
சந்த்ரச்ச ப்ரமதே நித்யம் ப்ரஸன்னா பவ சுந்தரீ
 
thva thaak gnayaa thu dhe way see kaga nay Soorya mandalay
chandracha pramade nithyam prasannaa bava Sundharee
19. ப்ரஹ்மேச விஷ்ணு ஜனனீ ப்ரஹ்மாக்யா ப்ரஹ்ம சம்ஸ்ரயா
வ்யக்தாவ் யக்தா ச தேவேசி ப்ரஸன்னா பவ சுந்தரீ
 
Bhramaycha Vishnu jananee bhramaakyaa bhrama samsrayaa
vyakth thaav yakthaa cha Dhe way see prasannaa bava Sundharee
20. லசலா ஸர்வகா த்வம் ஹி மாயா தீதா மஹேஸ்வரீ
சிவாத்மா சாச்வதா நித்யா ப்ரஸன்னா பவ சுந்தரீ
 
lachalaa sarvagaa thvam he maayaa dheethaa Maheshwaree
Shivaathmikaa saasvathaa Nithyaa prasannaa bava Sundharee
21. சர்வ காய நியந்த்ரீ ச ஸர்வ பூதேஸ்வரேஸ்வரீ
அனந்தா நிஷ்கலா த்வம் ஹி ப்ரஸன்னா பவ சுந்தரீ
 
Sarva kaaya niyanthri cha sarva bhootheshwaree
anandhaa nishkalaa thvam he prasannaa bava Sundharee
22. சர்வேஸ்வரீ சர்வ வந்த்யா அசிந்த்யா பரமாத்மிகா
பூர்க்த முக்தி ப்ரதா த்வம் ஹி ப்ரஸன்னா பவ சுந்தரீ
 
Sarveshwaree sarva vanthyaa achinthyaa paramaathmikaa
poorktha mukthy pradhaa thvam he prasannaa bava Sundharee
23. ப்ரஹ்மாணீ ப்ரஹம லோகே த்வம் வைகுண்டே சர்வ மங்கலா
இந்த்ராணீ அமராவத்யா அம்பிகா வருணாலயே
 
Bhramaanee bhrama lokay thvam Vaikunday sarva mangalaa
Indhraanee amaraavadhyaa ambikaa varunaalayaa
24. யமாலயே கால ரூபா குபேர பவனே சுபா
மஹா நந்தாக்னி கோணீ ச ப்ரஸன்னா பவ சுந்தரீ
 
Yamaalaye kaala roopaa Kubayra bavanay subhaa
mahaa nandhaagni koni cha prasannaa bava Sundharee
25. நைர்ருத்யாம் ரக்த தந்தா த்வம் வாயவ்யாம் ம்ருக வாஹினீ
பாதாளே வைஷ்ணவி ரூபா ப்ரஸன்னா பவ சுந்தரீ
 
Nairuthyaam raktha dhandhaa thvam vaa yav yaam mruga vaahe nee
baadhaa lay Vaishnavi roopaa prasannaa bava Sundharee
26. சுரஸா த்வம் மணித்வீதே ஐசான்யாம் சூல தாரிணீ
பத்ரகாளீ ச லங்காயாம் ப்ரஸன்னா பவ சுந்தரீ
 
Surasaa thvam manith vee they ai saan yaam soola dhaarinee
badrakaali cha lankaayaam prasannaa bava Sundharee
27. ராமேச்வரீ சேதுபந்தே சிங்கலே தேவ மோஹினீ
விமலா த்வம் ச ஸ்ரீக்ஷேத்ரே ப்ரஸன்னா பவ சுந்தரீ
 
Rameshwaree Sethu bandhe singalay deva mohinee
vimalaa thvam cha Sri kshetray prasannaa bava Sundharee
28. காளிகா த்வம் காளி கட்டே காமாக்யா நீலபர்வதே
விரஜா ஓட்ர தேசே த்வம் ப்ரஸன்னா பவ சுந்தரீ
 
Kaalikaa thvam Kaali gat tay Kaamgyaa neela parvathe
virajaa Otra desay thvam prasannaa bava Sundharee
29. வாராணஸ்யா அன்னபூர்ணா அயோத்யாயாம் மஹேஸ்வரீ
கயாஸுரீ கயா தாம்னி ப்ரஸன்னா பவ சுந்தரீ
 
Vaaraanasyaa Annapoornaa Ayodhyaa yaam Mageshwaree
Gayaa suree Gayaa dhaamni prasannaa bava Sundharee
30. பத்ரகாளீ குருக்ஷேத்ரே த்வஞ்ச காத்யாயனீ வ்ரஜே
மஹாமாயா த்வாரகாயாம் ப்ரஸன்னா பவ சுந்தரீ
 
Badrakaalee Gurushetray thvanjcha Kaathyaayanee vra jay
mahaa maayaa Dwaarakaa yaam prasannaa bava Sundharee
31. க்ஷுதா த்வம் சர்வ ஜீவானாம் வேலா ச சாகரஸ்ய ஹி
மஹேஸ்வரீ மதுராயாம் ப்ரஸன்னா பவ சுந்தரீ
 
kshudhaa thvam sarva jeevaanaam way laa cha saagarasya he
Maheshwaree Mathuraa yaam prasannaa bava Sundharee
32. ராமஸ்ய ஜானகீ த்வஞ்ச சிவஸ்ய மனமோஹினீ
தக்ஷஸ்ய துஹிதா சைவ ப்ரஸன்னா பவ சுந்தரீ
 
Raamasya Jaankee thvanjcha Sivasya mana mohinee
Dakshasya dhuhethaa chaiva prasannaa bava Sundharee
33. விஷ்ணு பக்தி ப்ரதா த்வம் ச கம்ஸாசுர வினாசினீ
ராவண நாசினீ சைவ ப்ரஸன்னா பவ சுந்தரீ
 
Vishnu bakthy pradhaa thvam cha kamsaa sura vinaasinee
Raavana naasinee chaiva prasannaa bava Sundharee
34. லக்ஷ்மீ ஸ்தோத்ரம் இதம் புண்யம் ய: படேத் பக்தி சம்யுத:
சர்வ ஜ்வர பயம் நச்யேத் சர்வ வ்யாதி நிவாரணம்
 
Lakshmee sthothram edham punyam ya padayth bakthy samyutha
sarva jwara bayam nachyeth sarva vyaadhi nivaaranam
35. இதம் ஸ்தோத்ரம் மஹா புண்யமா பதுத்தார காரணம்
த்ரி சந்த்ய மேக சந்த்யம் வா ய: படேத் சதத: நர:
 
edham sthothram mahaa punyamaa padhuth thaara kaaranam
three sandhya mega sandhyam vaa ya padayth sadha tha nara
36. முச்யதே சர்வ பாபேப்யோ ததா து சர்வ சங்கடாத்
முச்யதே நாத்ர சந்தேஹோ புனி ஸவர்கே ரஸாதலே
 
Muchya dhe sarva paa bayp yp dha dhaa thu sarva sangadaath
muchya dhe naathra sandhe ho buni savar gay rasaa dha lay
37. சமஸ்தம் ச ததா சைகம் ய: படேத் பக்தி தத்பர:
ஸ சர்வ துஷ்கரம் தீர்த்வா லபதே பரமாம் கதிம்
 
Samastham cha tha dhaa saigam ya padayth bakthy thath para
sa sarva dhushkaram Theerthvaa lapa they paramaam gadhim
38. சுகதம் மோக்ஷதம் ஸ்தோத்ரம் ய: படேத் பக்தி சம்யுத:
ஸ து கோடி தீர்த்த பலம் ப்ராப்னோதி நாத்ர சம்ஸய:
 
Suga dham mokshadham sthothram ya padayth bakthy samyudha
sa thu kottee theertha balam praap no dhee naathra samsaya
39. ஏகா தேவீ து கமலா யஸ்மிஸ் துஷ்டா பவேத் ஸதா
தஸ்யா அஸாத்யம் து தேவேசி நாஸ்தி கிந்சிஜ் ஜகத்ரயே
 
Yekaa Devee thu Kamalaa yas mis dhishtaa ba wayth sadhaa
dhasyaa asaathyaam thu Dhe way see naasthi kin sij jagath ra ye
40. படனாதி ஸ்தோத்ரஸ்ய கிம் ந ஸித் த்யதி பூதலே
தஸ்மாத் ஸ்தோத்ர வரம் ப்ரோக்தம் சத்யம் சத்யம் ஹி பார்வதி
 
Padanaadhi sthothrasya kim na sidh dyathi bootha lay
thas maath sthothra varam proktham sathyam sathyam he parvathi!
 
 

யோகம் தரும் திதிகள்!

 சுபநாள் பார்க்க பஞ்ச அங்கம் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

ஜோதிடம் அறிந்தவரோ அறியாதவரோ எவரானாலும் தினமும் காலையில்
அன்றைய தின பஞ்ச அங்கங்களைத் தெரிந்து கொள்வது அவசியமாகும். நவக்கிரகங்களின் செயல்களுக்கு, அன்றாடதிதி, வார, நட்சத்திர, யோக, கரணங்களே ஆதாரமாக உள்ளன.
இந்த பஞ்ச அங்கங்களை அறிந்து கொள்பவர்களுக்கு எல்லாவிதமான நற் குணங்களும் உண்டாகும்.
 விரோதிகள் வலுவிழப்பார்கள். துர்ஸ்வப்னம் (கெட்டகனவு) மூலம் ஏற்படும் தோஷங்கள் விலகும். கங்காஸ்நான பலன் ஸித்திக்கும்.
கோதானத்தினால் உண்டாகும் பலன்களுக்கு இணையான சுபபலன்கள் உண்டாகும்.
நீண்டஆயுளும், எல்லா விதமான வாழ்க்கை வசதிகளும், செல்வச் சேர்க்கையும் உண்டாகும்.

தர்மசாஸ்திரப்படி தினந்தோறும் காலையில்ப ஞ்சாங்கத்தை எடுத்துப் பார்த்து,
அன்றைய திதியைச் சொல்வதால் செல்வம்  கிடைக்கும்.
வாரத்தை (கிழமை) சொல்வதால் ஆயுள் விருத்தியாகும்.
நட்சத்திரத்தைச் சொல்வதால் பாபம் விலகும்.
யோகத்தைச் சொல்வதால் நோய் நீங்கும்.
கரணத்தைச் சொல்வதால் காரியம் நிறைவேறும்.
பஞ்ச அங்கங்களைச் சொல்லிவிட்டு (தெரிந்து கொண்டு) பின்னர் ஸ்நானம் செய்து விட்டு நித்திய கர்மாக்களை அனுசரிப்பதுநல்லது.

அமாவாசைக்கு பித்ருக்கள்,
பிரதமைக்கு அக்னி,
த்விதியைக்கு பிரம்மா,
த்ரிதியைக்கு பார்வதி,  
சதுர்த்திக்கு கணபதி,
பஞ்சமிக்கு நாகராஜா,
சஷ்டிக்கு முருகப்பெருமான்,
ஸப்தமிக்கு சூரியன்,
அஷ்டமிக்கு ஈசன்,
நவமிக்கு அஷ்டவசுக்கள்,
தசமிக்கு திக்கஜங்கள்,
ஏகாதசிக்கு யமதர்மராஜன்,
த்வாதசிக்கு திருமால்,
த்ரயோதசிக்கு மன்மதன்,
சதுர்த்தசிக்கு கலிபுருஷன்,
பௌர்ணமிக்கு சந்திரன் போன்றோர் தேவதைகளாக சொல்லப்பட்டுள்ளனர்.

திதிகளில் வளர்பிறை துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகியவை விசேஷமானவை. தேய்பிறையில் துவிதியை, திருதியை, பஞ்சமி மூன்றும் சிறப்பான சுபதிதிகள் ஆகும். சுப காரியங்களில் ஈடுபடலாம்.