Wednesday, 29 March 2017

சாதனைகள் புரிய அருளும் த்வரிதா நித்யா!

திதி நித்யா மண்டலத்தின் நடு நாயகியாய்த் திகழ்பவள் இத்தேவி. சுக்ல பட்சத்திலிருந்து எட்டாவது நித்யா, கிருஷ்ண பட்சத்திலிருந்தும் எட்டாவது நித்யாவாகத் திகழும் பெருமை பெற்றவள் இவள். இந்த நித்யாவிற்கு தோதலாதேவி என்ற திருப்பெயரும் உண்டு. பக்தர்களுக்கு சீக்கிரம் அருள்வதால் ‘‘த்வரிதா’’ என்று அழைக்கப்படு கிறாள். தழைகளை ஆடையாக அணிந்தவள். எட்டு நாகங்களை தேவி தன் உடலில் அணிகலன்களாக சூடியருள்கிறாள்.  


கருநீல வண்ண உடல் நிறத்தைக் கொண்டவள் இவள். முக்கண்களுடனும், நான்கு திருக்கரங்களுடனும் புன்முறுவல் பூத்த திருமுகத்துடன் பொலிகிறாள். கால்களில் கொஞ்சும் சதங்கை யும், இடையில் மேகலையும், மேனியில் மின்னும் ரத்னாபரணங்கள் துலங்க அருள்கிறாள். தன் சிரசில் மயிற்பீலிகளைச் சூடிக் கொண்டு அலங்கார தரிசனம் அளிக்கிறாள். தேவியின் வரத அபய கரங்கள் பக்தர்களைக் காக்க நான் இருக்கிறேன் என்பதைக் கூறாமல் கூறுவது போல் உள்ளது. இத்தேவியைத் துணை கொள்வோர்க்கு அணிமாதி ஸித்திகளும், ஞானமும் கை கூடும் என்பர். 

அரை நொடியேனும் அன்னையை மனதில் நினைப்போர்க்குத் துன்பமும் உண்டோ? கருணை வடிவான இந்த அம்பிகை தாங்க முடியாத வேதனையில் வருந்தும் உயிர்களை அணைத்து 
ஆதரிப்பவள். சாதனைகளைச் செய்ய அருள்பவள். நம்பினோர்க்கு அபயம் தருபவள். அழகுப் பெட்டகமாய் அருளும் பேரரசி. எந்த ஒரு குழந்தையும் தன் தாயாரைப் போல பேரழகி உண்டா எனத்தான் கூறும். 

ஸர்வாங்க சுந்தரியான இந்த ஜகஜ்ஜனனியின் பேரழகையோ ஆதிசங்கரரே கூறுவது போல நான்முகனான பிரம்மனாலோ, ஐந்து முகனான பரமேஸ்வரனாலோ, ஆறுமுகனான ஷண்முகனாலோ, ஆயிரம் தலைகளை உடைய ஆதிசேஷனாலோ கூட வர்ணிக்க இயலாதது. மற்றவர்களின் கதியென்ன? இருப்பினும் வாக் தேவதைகள் தேவியின் அருளால் தேவியின் அழகினை அடுத்து வர்ணிக்கின்றனர்.

ஜிதேந்திரியராக காமனையே கண்ணால் பொசுக்கிய காமேஸ்வரரே மயங்கும் அழகுடைய அன்னையின் அழகை அவளது தாயன்பை முக்கியமாகக் கூறியதை இங்கு பார்க்கலாம்.

இயற்கையிலேயே தேவியின் கூந்தலுக்கு நறுமணம் உண்டு என்பதை நிலைநாட்ட அந்தப் பரமேஸ்வரனே நக்கீரருடன் வாதிட்டாரல்லவா? அந்த கூந்தலில் செண்பகம், அசோகம், புன்னாகம், ஸௌகந்திகம் என்ற நறுமணம் மிக்க மலர்களைச் சூடிக்கொண்டிருக்கிறாளாம் அன்னை. 

அதன் மேல் பத்மராக மணிகள் வரிசையாகப் பதிக்கப்பட்ட ஒளிவீசும் அழகிய கிரீடத்தை அணிந்திருக்கிறாளாம். அஷ்டமி தின சந்திரன் போல இந்த அஷ்டமி தின தேவதையான த்வரிதாவின் நெற்றி அழகுற விளங்குகிறதாம். சந்திரன் எனக் கூறும் போதே அதிலுள்ள களங்கமும் நினைவில் வருகிறதல்லவா? அந்தக் களங்கம் போல் அம்பிகையின் கஸ்தூரிப் பொட்டு விளங்குகிறதாம்.

அழகின் உருவம் மன்மதன் வசிக்கும் மங்கள வீடாக அம்பிகையின் முகமண்டலம் விளங்குவதால் அதன் வாயில் தோரணம் போல் அவளது புருவங்கள் விளங்குகின்றனவாம். அந்த முகத்தின் அழகு வெள்ளத்தில் நீந்தும் மீன்களைப் போல அவளது கண்கள் விளங்குகின்றனவாம். காது வளர நீண்டிருக்கும் அந்தக் கண்களால் எந்த திக்கிலும் இருக்கும் தனது குழந்தைகளை ஒரு தாய் மீன் தனது பார்வையாலேயே குஞ்சுகளைக் காப்பது போல இந்த தேவியும் காக்கின்றாளாம். 

அன்றலர்ந்த செண்பக மலர் போல அவளது மூக்கு விளங்குகின்றதாம். அதில் நக்ஷத்திரத்தினும் ஒளி மிகுந்த மூக்குத்தியை அணிந்திருக்கிறாளாம் இந்தத் தாய்.  மனோஹரமான கதம்ப மலரை செவிப்பூவாக அணிந்திருக்கிறாளாம். சந்திர  சூர்யர்களை செவிகளில் தாடங்கங்களாக அணிந்திருக்கிறாளாம் அன்னை. இந்த தாடங்கங்களின் மஹிமையாலன்றோ ஆலகால விஷத்தை அருந்திய போதிலும் அவளது கணவரான காமேஸ்வரர் பிரளயங்களையும் தாண்டி கவலையற்று அன்னை ஒருத்தி மட்டுமே காண ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருக்கிறார்!

பத்மராகக் கல்லினாலான கண்ணாடியை விடவும் பிரகாசமாக அன்னையின் கன்னங்கள் மின்னுகின்றனவாம். அவற்றில் பிரதிபலிக்கும் தாடங்கங்களால் நான்கு சக்கரங்களை உடைய மன்மதனின் தேர் போல அவளது முகம் விளங்குகின்றதாம். புதிய பவழத்தை விட, கோவைப்பழத்தை விட ஒளி பொருந்தியவையாக அவளது உதடுகள் விளங்குகின்றனவாம். க்ஷோடஸாக்ஷரி (16)போன்று இரு வரிசைப் பற்கள் விளங்குகின்றனவாம். 

அவள் தரித்திருக்கும் ஏலக்காய், லவங்கம், பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, கேஸரி, ஜாதிக்காய், ஜாதிபத்திரி முதலியவை கலந்த கற்பூர வீடிகா எனும் நறுமணம் மிக்க தாம்பூலம் எத்திக்கிலுள்ளோரையும் கவர்ந்து இழுக்கின்றதாம். இந்த தாம்பூலச் சாறேயல்லவா பிறவி ஊமையையும் மூகஸங்கரராக மாற்றியது! முப்புரம் ஜெயித்த பரமேஸ்வரனது கீர்த்தியை அன்னை முன் பாட ஆரம்பித்து தனது கச்சபி எனும் வீணையை ஸ்ருதி சேர்த்த ஸரஸ்வதியும் வெட்கித் தனது வீணையை மறுபடி உறையிலிட்டு வைக்குமாறு செய்த வீணையைப் பழித்த இனிய குரலை உடையவளாதலால் அன்னையின் ஓர் “ஆஹா’’காரம் கூட வீணையின் நாதத்தைவிட இனியதாக இருக்கின்றதாம்,  காமேஸ்வரரையே சொக்கி மூழ்கும்படி அன்னையின் புன்சிரிப்பு பிரவஹிக்கிறதாம். 

அவளது முகவாயோ உவமையற்றதாக விளங்குகிறதாம்.  காமேஸ்வரர் கட்டிய மங்கல நாணுடன் அவளது கழுத்து பிரகாசிக்கின்றதாம். பொன் தோள்வளைகளும், ரத்தினப் பதக்கத்துடன் கூடிய முத்து அட்டிகையும் அன்னை தரித்திருக்கிறாள். ரத்ன கலசம் போன்ற தனது ஸ்தனங்களைக் கொடுத்து காமேஸ்வரரது, பிரேமையை விலைக்கு வாங்கி விட்டவளாக விளங்குகிறாளாம் அன்னை. இந்த ஸ்தனங்களன்றோ விநாயகரை கணேஸராகவும், முருகனை தேவ ஸேனாதி பதியாகவும், திருஞானஸம்பந்தர், ஆதிசங்கரர் போன்ற திராவிட சிசுக் களை மஹான்களாகவும், மஹா
கவிகளாகவும் தனது பாலால் மாற்றியது! 

அவளது குழந்தைகளான நாம் அடுத்து மற்ற தெய்வங்களால் கைகளாலும் தரமுடியாத அளவுக்கு தனது கால்களாலேயே தரும்  அன்னை யின் கால்களுக்குத் தாவுவோம். தன் பாதங்களில் வணங்குவோரின் அகத்திலுள்ள இருளைத் தனது நகங்களின் காந்தியினால் அன்னை போக்கி விடுகிறாளாம்.

தாமரையினும் அழகுவாய்ந்த பாதங்களில் ஒலிக்கும் ரத்தினப் பரல்கள் கொண்ட சிலம்புகளணிந்து மெல்லிய தனது நடையினால் ஹம்ஸங்களுக்கும் நடைபழகக் கற்றுக் கொடுக்கிறாளாம் அன்னை. 

இவ்வளவு பேரெழிலொடு இன்பமான அமைதி தரும் தேவியின் திருவடித் தாமரைகளை தியானித்து வணங்க, அறிவு தெளிவு பெறும். ஆற்றலோடு சிவனருளும் ஜீவன் முக்தியும் கிட்டும். வழிபடு பலன் சகலவித பயங்களும் இத்தேவியை நினைத்த மாத்திரத்திலேயே நாசமடையும். கலைகளில் தேர்ச்சி பெறவும், பூரண ஆயுளுடன் திகழவும் அருள்பவள் இவள். செல்வமும், உடல்நலமும் பெருகும். கற்கும் வித்தை சிறக்கும். 

த்வரிதா காயத்ரி
ஓம் த்வரிதாயை வித்மஹே 
மஹாநித்யாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

மூல மந்த்ரம்
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ரூம் ஹ்ரீம் ஹும் கே ச சே க்ஷ: 
ஸ்த்ரீம் ஹும் க்ஷேம் ஹ்ரீம் பட் ரூம் த்வரிதாயை நம:
த்யான ஸ்லோகங்கள்
ச்யாமவர்ணாம் சுபாகாராம் நவயௌவன
 சோபிதம் 
த்வித்விக்ரமாதஷ்ட நாகை: 

கல்பிதாபரணோஜ்வலாம்
தாடங்கமங்கதம் தத்வத்ரசனா நூபுராந்விதை:
விப்ர க்ஷத்ரிய விட்சூத்ர ஜாதிபிர்பீம
 விக்ரஹை:
பல்லவாம் சுக ஸம்வீதாம் சிகிபுச்சக்ருதை: 

சுபை:
வலயைர் பூஷிதபுஜாம் மாணிக்க 
மகுடோஜ்வலாம்
வர்ஹிவர்ஹ கர்மாபீடாம் தச்சத்ராம் 
தத்பதாகிநீம்
குஜ்ஜாகுண வஸத்வக்ஷ: 

குசகுங்கும மண்டநாம்
த்ரிநேத்ராம் சாருவதநாம் 
மந்தஸ்மித முகாம்புஜாம்
பாசாங்குச வராபீதி லஸத்புஜ
 சதுஷ்டயாம்
த்யாவைவம் தோதுலாம் தேவீம்
 பூஜயேச்சக்திபிர்வ்ருதாம்.

ரக்தாரவிந்த ஸங்காச ம்ருத்ய்ஸ்
ஸூர்ய ஸமப்ரபாம்
தத்தீம் அங்குசாம் பாசாம்
 பாணான் சாபம் மனோகராம்
சதுர்ப்புஜாம் மஹாதேவீம் ஸப்த
 மப்ஸரேகண ஸங்குலாம்
நமாமி த்வரிதாம் நித்யாம் பக்தா
நாமபயப்ரதாம். 

ஸ்யாமாங்கீம் ரக்த ஸத்பாணி
 சரணாம்புஜ ஸோபிதாம்
விருஷவாஹி ஸமஜ்ஜீராம் படா 
கண்ட ரத்ன விபூஷிதாம்
ஸ்வர்ணாம் ஸுகாம் பாண

 (ஸ்வர்ண) பூஷாம் வேஸ்யாஹி
 த்வந்த்வமேகலாம்
தனுமத்யாம் பனிவ்ருத்த
 குசயும்மாம் வராபயே
தததீம் ஸிகிபிச்சாபாம் வலயாங்
கத ஸோபிதாம்

குஞ்ஜாருணாம் ந்ருபாஹீந்த்ர
 கேயூராம் ரத்ன விபூஷிதாம்
த்விஜநாக ஸ்பரத்கர்ண பூஷாம்
 மத்தரூணேக்ஷணாம்
நீல குஞ்சித தம்மில்ல வனபுஷ்பாம்

 கலாபினீம்
கைராதீம்ஸிகி பிஞ்சாட்ய 
நிகேதன விராஜிதாம்
ஸ்பரத்ஸிம்ஹான ப்ரௌடாம்
 ஸம்ஸ்மரேத் த்வரிதாம் பத:
ந ஜானாமி மந்த்ரம் நஹி சக்ர பூஜாம்
ந ஜானாமி ஹோமம் நஹி யோக தீக்ஷாம் 
ந ஜானாமி முத்ராம் நஹி 
வேத சாஸ்த்ராம்

த்வதங்க்ரியுக்மம் த்வரிதாம்
 மனஸா ஸ்மராமி.
ஸ்ரீஸுக்த நித்யா ஸ்லோகம்
ஸ்ரீஸூக்த ஸம்ஸ்துதாம் ரூகார 
ப்ரக்ருதிக சசினீ கலாத்மிகாம்
ஸ்ரீத்வரிதா நித்யா ஸ்வரூபாம் 
ஸர்வரோக ஹர சக்ர ஸ்வாமினீம்
கந்தாகர்ஷிணீ சக்தி ஸ்வரூபிணீம்

ஸ்ரீவாமன வக்ஷஸ்தல 
கமலவாஸினீம்
ஸர்வமங்கள தேவதாம் 
வித்யாலக்ஷ்மி ஸ்வரூப த்வரிதா
 நித்யாயை நம: 
வழிபட வேண்டிய திதிகள்
சுக்ல பக்ஷ அஷ்டமி / கிருஷ்ண பக்ஷ அஷ்டமி
(அஷ்டமி திதி ரூப த்வரிதா நித்யாயை நம:)
நைவேத்யம்

முற்றிய தேங்காய்
பூஜைக்கான புஷ்பங்கள்
மரு, வில்வம்.
திதி தான பலன்
தேங்காய் நிவேதித்து தானம் செய்ய பல்வேறு 
விதமான தாபங்கள் அகலும். தரித்திரம் தொலையும்.

பஞ்சோபசார பூஜை
ஓம் த்வரிதா நித்யாயை கந்தம் கல்பயாமி நம:
ஓம் த்வரிதா நித்யாயை தூபம் கல்பயாமி நம:  
ஓம் த்வரிதா நித்யாயை தீபம் கல்பயாமி நம: 

ஓம் த்வரிதா நித்யாயை நைவேத்யம் கல்பயாமி நம: 
ஓம் த்வரிதா நித்யாயை கற்பூர நீராஞ்ஜனம் 

தர்சயாமி நம:இத்திதியில் பிறந்தோர் குண நலன்கள் பிறருக்கு தீங்கிழைத்து மகிழும் குணத்தைக் கொண்டவர்கள். நீச்சமான தொழில் புரிபவர். கபம் மிகுந்தவர். மனைவியுடன் கூடியவர். காமம் மிகுந்தவர். இத்திதியில் பிறந்தவர்கள் இந்த தேவியின் மூலமந்திரத்தை தினமும் 45 முறை பாராயணம் செய்தால் தீமைகள் விலகி 
நன்மைகள் பெருகும்.

யந்த்ரம் வரையும் முறை சந்தன குங்குமக் கலவையால் மேற்கில் வாயிலுடன் இரு சதுரங்கள் பின் இரு வட்டங்கள், எட்டிதழ்க் கமலம் கொண்ட சக்கரம் வரையவும். தேவியின் சக்திகளான ஹும்காரி, க்ஷேகாரி, சண்டி, சேதினி, க்ஷேபிணி, ஸ்ரீம், ஸ்ரீகரி, தும்காரி, க்ஷேமகரி, ஜயா, விஜயா எனும் சக்திகளை தியானித்து பூஜிக்கவும். 
இத்திதிகளில் செய்யத் தக்கவைஎதுவுமே இல்லை.

அகத்தியர் அருளிய சுக்லபக்ஷ அஷ்டமி துதி 
அஷ்டமியும் அஷ்டகிலம் அஷ்ட நாகம்
அஷ்டகிரி அஷ்டகஜம் அஷ்டபாலன்
இஷ்டமுடன் அஷ்டதுர்க்கி அஷ்டகும்பம்
ஏற்றமாய் அஷ்ட ஆருயிரும் தானாய்
திட்டமுடன் அன்பர்களும் பெரியோர் வானோர்

செல்வியே அஷ்டதிக்கில் தெவிட்டாத் தேனே
துஷ்டருக்கும் இஷ்டருக்கும் தானாய் நின்ற
சோதியா மனோன்மணியே சுழுமுனை 
வாழ்கவே!

அஷ்டகிலம் - எட்டு திக்கிற்குள் அடங்கிய எல்லா பூமிகளும்.
அஷ்டநாகம் - அனந்தன், கார்க்கோடகன், 
குளிகன், சங்கபாலன், தட்சன், பதுமன், மகா
பதுமன், வாசுகி.

அஷ்டகிரி - இமயம், ஹேமகூடம், கந்தமாதனம், மயிலை, எரிஷதம், நீலகிரி, மந்தாரம், விந்தியம்.
அஷ்டகஜம் - ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சார்வபௌமம், சுப்ரதீபம்.
அஷ்டபாலகர்கள் - இந்திரன், அக்னி, யமன், நிருருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்.
அஷ்டதுர்க்கி - சைலபுத்ரி, பிரம்மசாரிணி, 

சந்த்ரகண்டா, ஸ்கந்தமாதா, கூஷ்மாண்டா, காளராத்ரி, மஹாகௌரி, ஸித்திப்ரதா. 
அஷ்டகும்பம் - அனந்தன், சூக்ஷ்மன், 
சிவோத்தமன், ஏகநேத்திரன், ஏகருத்ரன், த்ரிமூர்த்தி, ஸ்ரீகண்டன், சிகண்டி. 
அஷ்ட ஆயிசர் -1008 சிவாலயத்திலுள்ள லிங்க மூர்த்திகள். 

அகத்தியர் அருளிய க்ருஷ்ணபக்ஷ அஷ்டமி தேவி துதி
திங்களொளியாய் அமர்ந்த சப்த கன்னி
தேவர்களுக்கமுதளித்த சிறு பெண்ணாத்தாள்
அங்கசித்தி ரீங்காரி அனந்த ரூபி
அண்டரெல்லாம் போற்ற அவதரித்த தேவி

மங்கலமாய் நவராத்திரி பூஜைக்காக 
வந்தமர்ந்த திரிசூலி மகிழோங்காரி
துங்கமிகு முயர் பரமானந்தி தாயே
சோதிமனொன்மணித்தாயே சுழிமுனை வாழ்வே!

மாத்ருகா அர்ச்சனை
ஓம் த்வரிதாயை நம:
ஓம் தோதுலாயை நம:
ஓம் தாத்ர்யை நம:
ஓம் கிராத்யை நம:
ஓம் கிருஷ்ண்யை நம:
ஓம் வாணிஜாயை நம:

ஒம் ஸர்வேஸ்வர்யை நம:
ஓம் த்ருவாயை நம:
ஒம் ஸர்வாயை நம:
ஓம் ஸர்வஜ்ஞான ஸமுத்பவாயை நம:
ஓம் த்ரிமாத்ராயை நம:
ஓம் த்ரிபுராயை நம:
ஓம் ஸர்வாகாராயை நம:

ஓம் அமேயாயை நம:
ஓம் ப்ரஹ்மாண்யை நம:
ஓம் ஸாந்திகர்யை நம:
ஓம் ஸர்வசக்த்யை நம: 
ஓம் கௌமார்யை நம:
ஓம் விஸ்வஜனன்யை நம:
ஓம் ஸூலஹஸ்தாயை நம:
ஓம் மஹேஸ்வர்யை நம:

ஓம் கிங்கர்யை நம:
ஓம் ஸக்தி ஹஸ்தாயை நம:
ஓம் தக்ஷ யக்ஞ விநாஸின்யை நம:
ஓம் வராயுதாயை நம:
ஓம் ஸங்கவராயை நம: 
ஓம் வைஷ்ணவ்யை நம:
ஓம் அவ்யக்தாயை நம:

ஓம் யோகின்யை நம: 
ஓம் வாராஹ்யை நம:
ஓம் ந்ருஸிம்ஹாயை நம:
ஓம் ஸிம்மவிக்ரமாயை நம:
ஓம் ஸஹஸ்ராக்ஷ்யை நம:
ஓம் வீராராட்யாயை நம:
ஓம் ஸர்வபாபஹராயை நம:

ஓம் ஸிவாயை நம:
ஓம் ஸிவதூத்யை நம:
ஓம் கோராரவாயை நம:
ஓம் க்ஷூரிபாஸாஸிகாரிண்யை நம:
ஓம் விகரள்யை நம:
ஓம் மஹாகால்யை நம:
ஓம் கபால்யை நம:
ஓம் பாபஹாரிண்யை நம:

ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
ஓம் மஹாகுக்ஷயே நம:
ஓம் யோகின்யை நம:
ஓம் ப்ருந்தவாதின்யை நம:
ஓம் ஷட்சக்ராயை நம:
ஓம் சக்ரநிலயாயை நம:
ஓம் சக்ரகாயை நம:
ஓம் யோனிரூபிண்யை

திதிகளின் தெய்வங்கள் !

சுக்லபட்சம்
1. பிரதமை –  குபேரன் மற்றும் பிரம்மா2. துவதியை – பிரம்மா
3. திரிதியை – சிவன் மற்றும் கெளரி மாதா
4. சதுர்த்தி –  எமன் மற்றும் விநாயகர்
5. பஞ்சமி – திரிபுர சுந்தரி
6. ஷஷ்டி – செவ்வாய்
7. ஸப்தமி – ரிஷி மற்றும் இந்திரன்
8. அஷ்டமி –  காலபைரவர்9. நவமி –  சரஸ்வதி
10. தசமி – வீரபத்ரர் மற்றும் தர்மராஜன்
11. ஏகாதசி – மஹாருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு
12. துவாதசி – மகா விஷ்ணு
13. திரயோதசி – மன்மதன்
14. சதுர்த்தசி –  காளி
15. பவுர்ணமி – லலிதாம்பிகை

கிருஷ்ணபட்சம்
1. பிரதமை –  துர்க்கை
2. துவதியை – வாயு
3. திரிதியை – அக்னி
4. சதுர்த்தி –  எமன் மற்றும் விநாயகர்
5. பஞ்சமி – நாகதேவதை
6. ஷஷ்டி – முருகன்
7. ஸப்தமி – சூரியன்
8. அஷ்டமி –  மஹாருத்ரன் மற்றும் துர்க்கை9. நவமி –  சரஸ்வதி
10. தசமி – எமன் மற்றும் துர்கை
11. ஏகாதசி – மஹாருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு
12. துவாதசி – சுக்ரன்
13. திரயோதசி – நந்தி
14. சதுர்த்தசி –  ருத்ரர்
15..அமாவாசை - பித்ருக்கள் மற்றும் காளி 


Saturday, 11 March 2017

காஞ்சி வரதராஜர் நடவாவி உற்சவம்!


காஞ்சிபுரம் வரதராஜர் நடவாவி உற்சவத்தில் என்ன சிறப்பு ?
வளர்பிறையில் பிரம்மாவின் வேள்வியில் இருந்து அவதரித்தவர் வரதராஜ பெருமாள் என்கிறது தலபுராணம். ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி அன்று அந்த வைபவம் நடவாவி உற்சவமாகக் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.
காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலிலிருந்து வரதர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அழகே தனி. அந்த திருநாளில் யாகம் வளர்த்து நெருப்பாலும், நடபாவி கிணற்று நீராலும், பாலாற்றங்கரையில் காற்றாலும் அபிஷேகம் செய்யப்பட்டு, மீண்டும் வரதராஜ பெருமாளை ஆலயத்திற்கு கொண்டு வருகின்றார்கள்.
காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலில் யாத்திரையை தொடங்கும் வரதர், நான்கு மாடவீதிகளில் வலம் வந்து, செவிலிமேடு, தூசி, அப்துல்லாபுரம், ஐய்கங்கார் குளம் வழியாக நடவாவி கிணற்றுக்கு வருகிறார். அங்கிருந்து பாலாறு, மீண்டும் செவிலிமேடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறமாக விளக்கடிக்கோயில் தெரு, காந்தி ரோடு வழியாக வரதராஜ பெருமாள் கோயிலுக்கு பெருமாளை அழைத்து வருகின்றார்கள்.
பெருமாளை பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று வருபவர்களுக்கு தனது அழகைக் காட்டி மயக்கிவிடுகிறார் பெருமாள். அவர்கள் மனதில் என்னென்ன பிரார்த்தனை செய்ய வேண்டும் என நினைக்கின்றார்களோ, அவர்கள் வேண்டாமலேயே பெருமாள் அதை  பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.
சுட்டெரிக்கும் வெயிலில் வீதிகளில் நீரை தெளித்து குளிர்வித்து, கோலமிட்டு பெருமாளை வரவேற்கிறார்கள் பக்தர்கள். வழியெங்கும் தோரணங்கள், இளைப்பாற பந்தல்கள் என குதூகலத்தோடு பெருமாளுக்கு வரவேற்பு கொடுக்கின்றார்கள்.
புளியோதரை, சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், தயிர்சாதம், சாம்பார்சாதம் என வழியெங்கும் அன்னதானம் செய்கிறார்கள். வெயிலில் வருபவர்களின் தாகம் தணிக்க பானகம், மோர், தண்ணீர் என கொடுக்கிறார்கள்.
நடவாவி கிணறு
வாவி என்றால் கிணறு என்று பொருள். நட என்றால் நடந்து வருதல் என்று பொருள்.
கிணற்றுக்குள் ஒரு கிணறு. தரைத்தளத்திலிருந்து படிக்கட்டுகளால் சுரங்கம் போன்றதொரு பாதை செல்கிறது.
அதற்குள் மண்டபம். மண்டபத்திற்குள் கிணறு. இதுதான் நடவாவி கிணறு என்று அழைக்கப்படுகின்றது.
சித்திரை பௌர்ணமியின் இருதினங்களுக்கு முன்பே, மண்டபத்தில் நீர் தேங்காத அளவிற்கு கிணற்றிலிருக்கும் நீரை வெளியேற்றுகின்றார்கள்.
48 மண்டலங்களை குறிக்கும் வகையில் 48 படிகள் அமைக்கப்பட்டுள்ளன.27வது படி வரை கீழே இறங்க முடியும். இந்த 27 படியும் 27 நட்சத்திரங்களை குறிக்கின்றன. 27 படி ஆழத்தில் மண்டபத்தை அடையமுடியும்.
12 ராசிகளை குறிக்கும் வகையில் 12 தூண்களால் கிணற்றை சுற்றி மண்டபம் அமைக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு தூணிலும் நாற்புறமும் பெருமாளின் அவதாரம் சிறிய மற்றும் பெரிய வடிவில் செதுக்கப்பட்டுள்ளன.
மேளங்கள் முழங்க, சிறப்பு அலங்காரத்துடன் நடவாவி கிணற்றுக்குள் இறங்கும் வரதராஜர், கிணற்றை மூன்றுமுறை சுற்றுகிறார். ஒவ்வொரு முறை சுற்றும் போதும் நான்கு திசைக்கும் ஒரு முறை தீபாராதனை நடைபெறுகிறது. இதுபோல் மொத்தம் 12 முறை தீபாராதனை நடைபெறுகிறது. கல்கண்டு, பழங்கள், என மொத்தம் 12 வகையான பிரசாதங்களை பெருமாளுக்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.
இரண்டாம் நாள் ராமர், லட்சுமணன், சீதாதேவி ஆகியோர் நடவாவி கிணற்றுக்கு வந்து செல்கின்றார்கள். அதைத் தொடர்ந்து உள்ளூர் பக்தர்கள் கிணற்றில் நீராடி மகிழ்கின்றனர். சித்திரை பௌர்ணமி முடிந்தும் 15 முதல் 20 நாள்வரை நீராடலாம்.
நடவாவி கிணற்றில் இருந்து கிளம்பும் வரதருக்கு,  பாலாற்றில் வைத்து பூஜை செய்கிறார்கள். ஆற்றில் நான்குக்கு நான்கு அடி அளவில் ஊறல் (அகழி போன்ற பள்ளம் ) எடுத்து, அதற்கு பந்தல் போட்டு அபிஷேகம் நடக்கின்றது. இதற்கு ஊறல் உற்சவம் என்று பெயர். அதைத் தொடர்ந்து காந்தி ரோடு வழியாக கோயிலுக்கு வந்தடைகிறார் வரதர்.
பெருமாள் செல்லும் இடங்களில் எல்லாம் திருவிழாவாகவே இருக்கின்றது.




Friday, 10 March 2017

தில்லை நடராஜர் திருக்கோயில்!






























அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில், சிதம்பரம் (கடலூர்)


மூலவர் : திருமூலநாதர் (மூலட்டானேசுவரர்,சபாநாயகர்,கூத்தப்பெருமான், விடங்கர், மேருவிடங்கர், தட்சிணமேருவிடங்கர்,பொன்னம்பல கூத்தன்)

உற்சவர் : -

அம்மன்/தாயார் : உமையாம்பிகை (சிவகாமசுந்தரி)

தல விருட்சம் : தில்லைமரம்



தீர்த்தம் : சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல் 

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : தில்லை

பாடியவர்கள்: அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்


தேவாரப்பதிகம்

அலையார் புனல்சூடி யாகத் தொருபாகம் மலையாள் மகளொடு மகிழ்ந்தான் உலகேத்தச் சிலையால் எயிலெய்தான் சிற்றம் பலந்தன்னைத் தலையால் வணங்குவார் தலையா னார்களே.-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது முதன்மையானது.

திருவிழா: 

மார்கழி திருவிழா - 10 நாள் திருவிழா - திருவாதிரை உற்சவம் இத்தலத்தில் மிக விசேசமாக நடக்கும். திருவாதிரை நட்சத்திரத்திற்கு முன் கொடி ஏற்றி பத்து நாள் விழா நடைபெறும். இத்திருவிழாவில் ஒரு தனி விசேசம் உண்டு. இவ்விசேசம் மாணிக்கவாசகருக்கு அமைவது. பத்து நாட்களிலும் சாயுங்கால தீபாராதனையின் போது மாணிக்கவாசகரை சுவாமியின் சன்னதிக்கு எழுந்தருளச் செய்து திருவெம்பாவை பாட்டுகள் பாடிச் சுவாமிக்குத் தீபாராதனை நடைபெறும். நாள்தோறும் காலை விழாவில் மாணிக்கவாசகரையும் எழுந்தருளச் செய்வதுடன் 10 ஆம் நாள் தரிசனம் முடிந்தவுடன் மாணிக்கவாசகருக்கும் தீபாரதனை நடைபெறும். சுவாமிக்கு விடையாத்தித் திருவிழா முடிந்த மறுநாள் மாணிக்கவாசகருக்கும் விடையாத்தித் திருவிழா நடைபெறும். ஆனித்திருமஞ்சனம் - 10 நாள் திருவிழா - ஆனி உத்திர நட்சத்திரத்திற்குப் பத்துநாள் முன் கொடிஏற்றி முதல்நாள் திருவிழா முதலாக எட்டாந்திருவிழா வரையில் உற்சவ மூர்த்திகளான சோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி, விநாயகர் , சுப்பிரமணியர், சண்டேசுவரர் முதலிய பஞ்சமூர்த்திகளும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வெள்ளி, தங்க வாகனங்களில் வீதியுலா வருவார்கள். சித்திரை வருடப்பிறப்பு, திருவாதிரை நட்சத்திரம், அமாவாசை முதலிய விசேச நாள்களில் நடராஜமூர்த்தி சிவகங்கையில் தீர்த்தம் கொடுத்தருள்வார். மற்ற மாதங்களிலும் இவ்வாறு தீர்த்தம் கொடுத்தருள்வார். சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரு மாதங்களில் மாதப்பிறப்பு, பிரதோசம், வெள்ளிக்கிழமை, திருவாதிரை, கார்த்திகை, அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் இரவு விழா நடைபெறும்.



தல சிறப்பு: 

இங்கு மூலவர் திருமூலநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆனால் நடராஜரே இங்கு பிரதான மூர்த்தி. பஞ்ச பூத தலங்களில் இது ஆகாய தலம் ஆகும். மூவர் பாடிய தேவார திருப்பதிகங்களை கண்டெடுத்த தலம் இது. சைவத்தில் கோயில் என்றால் அது சிதம்பரத்தைக் குறிக்கும்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 1 வது தேவாரத்தலம் ஆகும்.



பொது தகவல்: 

இத்தலம் தில்லை என்னும் மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றது. தில்லை என்னும் மரங்கள் இப்பொழுது சிதம்பரத்தில் காணக் கிடைக்கவில்லை. சிதம்பரத்திற்கு கிழக்கில் உள்ள பிச்சாவரத்திற்கு அருகே அமைந்துள்ள உப்பங்கழியின் கரைகளில் இம்மரங்கள் மிகுதியாக இருக்கின்றன. கோயிலுக்குள் திருமூலட்டானக் கோயில் மேற்கு பிரகாரத்தின் மேல்பால் இருக்கின்றது. கருங்கல் வடிவத்தில் செய்து வைக்கப்பட்டுள்ளது. நடராஜர் சன்னதியின் எதிரில் உள்ள மண்டத்தில் நின்றபடி பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரையும் தரிசிக்கலாம். நடராஜர் சன்னதி அருகிலேயே 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கோவிந்தராஜப் பெருமாள் தலம் இருப்பது விசேஷத்திலும் விசேஷம். சிவனுக்கும், சக்திக்கும் நடந்த போட்டி நடனத்தில், ஆடிய தில்லை காளியின் கோயில் நடராஜர் கோயில் அருகில் உள்ளது. 51 ஏக்கர் பரப்பளவில் அமைந்த பிரம்மாண்டமான சிவ தலம் இது. மிகச் சிறந்த கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்த அற்புத தலம். நடராஜரின் பஞ்ச சபைகளில் இது சிற்றம்பலம்.


சிதம்பரம் நடராஜர் கோயிலில் எட்டுத் திசைகளிலும் சாஸ்தாவின் எட்டு அவதாரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அந்த அவதாரங்கள் மகா சாஸ்தா, ஜகன்மோகன சாஸ்தா, பாலசாஸ்தா, கிராத சாஸ்தா, தர்மசாஸ்தா, விஷ்ணு சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, ருத்ர சாஸ்தா.

பிரார்த்தனை 

இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவோர் இத்தலத்தின் மேல் அதீத ஆர்வம் கொண்டு பிரார்த்தனை செய்தால் அவர் விரும்பிய வண்ணம் சிறப்பான எதிர் காலம் அமையும் என்பது நம்பிக்கை. மேலும் குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.



நேர்த்திக்கடன்: 

பால், பழம், பொரி முதலியவற்றை நைவேத்தியம் செய்து, தீபாராதனை செய்து, சுவாமியின் பாதுகையை வெள்ளி தங்கப்பல்லக்கில் எழுந்தருளப் பண்ணி கொண்டு வந்து நடராஜரின் அருகில் வைத்து நடராஜருக்கும் சிவகாமசுந்தரியம்பாளுக்கும் பால், பொரி, பழம் முதலியவை நைவேத்தியம் செய்து, தீபாராதனை செய்வதை திருவனந்தல் என்றும் பால் நைவேத்தியம் என்றும் அழைக்கின்றனர். இதை பக்தர்கள் தங்களின் கட்டளையாக ஏற்று செய்யலாம். சுவாமிக்கு நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம். இது தவிர சுவாமிக்கு சங்காபிசேகம், கலசாபிசேகம் ஆகியவையும் செய்யப்படுகிறது. அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம். உண்டியல் காணிக்ககை செலுத்தலாம். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.



தலபெருமை: 

இறைவன் இத்தலத்தில், நடராஜர் என்ற உருவமாகவும், ஆகாயம் என்ற அருவமாகவும், ஸ்படிக லிங்கம் என்ற அருவுருமாகவும் அருள்பாலிக்கிறார். சைவத்தில் கோயில் என்றால் அது சிதம்பரத்தைக் குறிக்கும்.

சிதம்பர ரகசியம்: 

சித்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில். இதில் உள்ள திரை அகற்றுப்பெறும். ஆரத்தி காட்டப் பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் தோன்றாது. தங்கத்தால் ஆன வில்வ தளமாலை ஒன்று தொங்கவிடப்பட்டுக் காட்சியளிக்கும். மூர்த்தி இல்லாமலேயே வில்வதளம் தொங்கும். இதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதுதான். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. அவனை உணரத்தான் முடியும் என்பதே இதன் அர்த்தம். பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலமாகும். சிதம்பர ரகசிய ஸ்தானத்தில் அம்மனுக்குரிய ஸ்ரீசக்ரத்தையும், சிவனுக்குரிய சிவசக்ரத்தையும் இணைத்து, ஒன்றாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் உண்டு. இந்த சக்ரத்தில் நடராஜப்பெருமான் ஐக்கியமாகி, தன் ஆனந்த நடனத்தினால் உலகை படைத்து, காத்து, மறைத்து, அழித்து, அருளிக் கொண்டிருக்கிறார். சிதம்பர ரகசியம் : சித்+அம்பரம்=சிதம்பரம். சித்அறிவு. அம்பரம்வெட்டவெளி. மனிதா! உன்னிடம் ஒன்றுமே இல்லை என்பது தான் அந்த ரகசியத்தின் பொருள்.


தேவாரம் கிடைத்த தலம்: 

மூவர் பாடிய தேவார திருப்பதிகங்களை கண்டெடுத்த தலம் இது. 

திருநாரையூரைச் சேர்ந்த நம்பியாண்டார் நம்பி என்பவரும் திருமுறை கண்ட சோழ மன்னனும் திருநாரையூர் தலத்தில் உள்ள பொல்லாப்பிள்ளையாரை வணங்கி அப்பெருமானுடைய திருவருளால் சிதம்பரத்தில் பொன்னம்பலத்தின் அருகே மூவர் திருக்கர முத்திரைகளோடு தேவார ஏடுகள் உள்ளன என்று அறிந்தனர். பின்பு தில்லையை வந்தடைந்து மூவருக்கும் விழா எடுத்து குறிப்பிட்ட இடத்தில் தேடும்போது கறையான் புற்று மூடிக்கிடக்க ஏடுகள் கிடந்தன. பின்னர் எண்ணெய் விட்டு புற்றினுள்ளே இருந்த சுவடிகளை எடுத்துப் பார்த்தபோது பல பகுதிகள் கறையானுக்கு இறையாகிப் போயிருந்தன. பின்பு உள்ளவற்றை எடுத்து பத்திரப்படுத்தினர். இவ்வாறு கிடைக்கப்பெற்றதே தற்போது நாம் படிக்கும் தேவாரப் பதிகங்கள். அத்தகைய அரிய தேவாரப்பதிகங்கள் கிடைத்த தலம் இது. திருநாளைப்போவார் என்று அழைக்கப்பட்ட நந்தனார் சிவன்பதம் அடைய அக்னி குண்டத்தில் இறங்கிய அருந்தவத் தலம். நால்வர் வந்த வழி: சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் நால்வர் என அழைக்கப்படுகின்றனர். அவர்கள் சிதம்பரத்தில் நடராஜனைக் காண திருக்கோயிலுக்குள் வந்தார்கள். சம்பந்தர் இறைவனையடைய சத்புத்திர மார்க்கத்தைக் கையாண்டவர். அதனால் தென்வாயில் வழியாக நேரே வந்து இறைவனைக் கண்டுகளித்தார். நாவுக்கரசர் தாச மார்க்கத்தைப் பின்பற்றியவர். தாச மார்க்கம் என்பது ஆண்டான் அடிமை உறவு. ஆகவே வலது புறமாக (கிழக்கு) வந்து ஏவல் கேட்கும் நோக்கத்துடன் இறைவனைக் கண்டார். சுந்தரர் நட்பு முறையில் இறைவனை வழிபட்டவர். அதனால் பின்புறமாக (வடக்கு) வந்து வேண்டியதை உரிமையுடன் பெற்றவர். மாணிக்கவாசகர் சன்மார்க்க முறையைக் கடைப்பிடித்தவர். (குரு சீட உறவு). ஆதலால் அருட்சக்தி (மேற்கு) பக்கம் வந்து இறைவனைக் கண்டார்.


இந்த ஊரின் தேரோடும் வீதிகளில் அப்பர் பெருமான் அங்கப்பிரதட்சணமே செய்தாராம். இலங்கையை சேர்ந்த புத்தமத மன்னனின் ஊமை மகளை மாணிக்கவாசர், நடராஜர் அருளால் பேசச் செய்த தலம். இத்தலத்து திருக்கோயிலில் சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்தசபை, இராசசபை என்னும் ஐந்து மன்றங்களும் அமைந்திருத்தலும், சிவன் விஷ்ணு இருவர் திருச்சந்நிதிகள் ஒரே இடத்தில் நின்று தரிசிக்கும்படி அமைந்திருத்தலும் தனிச் சிறப்புகளாகும். பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளும் கோயில் கொண்டுள்ள திருத்தலம் இது. இத்தலத்து முருகப்பெருமான் (சுப்ரமணியர்) குறித்து அருணகிரிநாதர் பத்து திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். மூலவர் யார் தெரியுமா? : பெரும்பாலான பக்தர்கள், சிதம்பரம் கோயிலின் மூலவர் என்றாலே அது நடராஜர் தான் நினைத்துக் கொண்டிருப்பர். கோயிலுக்குள் நுழைந்ததும், நடராஜர் சன்னதியை தேடியே ஓடுவர். ஆனால், இத்தலத்து மூலவர் லிங்கவடிவில் ஆதிமூலநாதர் என்ற பெயரில் அருள் செய்கிறார். பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் கயிலையில் தாங்கள் கண்ட சிவனின் நாட்டிய தரிசனத்தை, பூலோக மக்களும் கண்டு மகிழ விரும்பினர். எனவே இத்தலத்துக்கு வந்து ஆதிமூலநாதரை வேண்டி தவம் செய்தனர். இவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், திரிசகஸ்ர முனீஸ்வரர்கள் என்போரை கயிலையிலிருந்து, சிதம்பரத்திற்கு அழைத்து வந்து தைமாதம் பூசத்தில் பகல் 12 மணிக்கு நாட்டிய தரிசனம் தந்தார். இந்த திரிசகஸ்ர முனிவர்களே தில்லை மூலவாரயிவர் என்று சொல்வதுண்டு.


தரிசிக்க முக்தி : 

திருவாரூரில் பிறந்தால் முக்தி. காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி. காசியில் இறந்தால் முக்தி. திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி. உயிர் போகும் நேரத்தில் நினைக்க அருள்புரிவாய் அருணாச்சலா என அப்பர் கூறியுள்ளார். இதுபோல், வாழ்நாளில் ஒரு தடவையேனும் நடராஜரையும், திருமூலநாதரையும் தரிசித்தால் முக்தி கிடைத்து விடும். எனவே தான் நந்தனார் தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்குள் வரக்கூடாது என ஒதுக்கிய காலத்திலும், சிவன் மீது கொண்ட நிஜமான பக்தியால், சர்வ மரியாதையுடன் கோயிலுக்குள் சென்று, நடராஜருடன் ஐக்கியமானார். தேரில் நடராஜர்: இத்தலத்து நடராஜரைக் காண உலகமே திரண்டு வருகிறது. ஏராளமான வெளிநாட்டவர்கள் கூட, நடராஜரின் சிற்பச் சிறப்பைக் காண வருகின்றனர். அப்படிப்பட்ட அபூர்வ சிலையை, திருவிழா காலத்தில் தேரில் எடுத்து வருகிறார்கள்.



சிலையின் முன்னும் பின்னும் தீபாராதனை: ஒருமுறை பிரம்மா யாகம் ஒன்றை நடத்தினார். இதற்காக, தில்லைவாழ் அந்தணர் மூவாயிரம் பேரையும் சத்தியலோகத்துக்கு அழைத்தார். தில்லையிலேயே இருந்து, நடராஜரின் திருநடனத்தைக் காண்பதை விட அந்த யாகத்தில் எங்களுக்கு என்ன பலன் கிடைத்து விடப்போகிறது எனக் கூறினர். அப்போது, நடராஜர் யாகத்திற்கு செல்லும்படியும், யாகத்தின் முடிவில் அங்கேயே தோன்றுவதாகவும் வாக்களித்தார். அவ்வாறு தோன்றிய கோலத்தை ரத்னசபாபதி என்கின்றனர். இவரது சிலை நடராஜர் சிலையின் கீழே உள்ளது. இவருக்கு தினமும் காலையில் 10 11 மணிக்குள் பூஜை நடக்கும். சிலையின் முன்புறமும், பின்புறமுமாக இந்த தீபாராதனையைச் செய்வர். உடலின் அமைப்பில் நடராஜர் சன்னதி: மனிதனின் உருவ அமைப்பிற்கும், தங்கத்தால் ஆன நடராஜர் சன்னதிக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. பொன்னம்பலத்தில் நமசிவாய மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21 ஆயிரத்து 600 தங்க ஓடுகள், மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாசத்தின் எண்ணிக்கையைக் குறிக்கும் அளவில் உள்ளது.. பொன்னம்பலத்தில் அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள், மனிதனின் நாடி நரம்புகளைக் குறிக்கிறது. கோயிலில் உள்ள 9 வாசல்கள் மனித உடலிலுள்ள 9 துவாரங்களைக் குறிக்கிறது. இதுதவிர ஆன்மிக ரீதியான அமைப்பும் உண்டு. ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தின் ஐந்து படிகளும், 64 கலைகளின் அடிப்படையில் சாத்துமரங்களும், 96 தத்துவங்களைக் குறிக்கும் விதமாக 96 ஜன்னல்களும், 4 வேதங்கள், 6 சாஸ்திரங்கள், பஞ்ச (5)பூதங்களின் அடிப்படையில் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.



ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்ரம் அம்மன் சன்னதியில் உள்ளது. அர்த்தஜாம பூஜை இத்தலத்தின் தனி சிறப்பு. அர்த்தஜாம பூஜையில் உலகில் உள்ள அனைத்து தெய்வங்களும் கலந்து கொள்வதாக ஐதீகம். இதை அப்பர் புலியூர் (சிதம்பரம்) சிற்றம்பலமே புக்கார் தாமே எனப்பாடுகிறார். சேக்கிழார் இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் தான் பெரியபுராணம் பாடி அரங்கேற்றினார். அருணகிரிநாதர் இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை தனது திருப்புகழில் பாடியுள்ளார்.



சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்தக்கரையில் திருத்தொண்டத் தொகையீச்சரம் என்ற பெயரில் ஒன்பது லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை ஒன்பது தொகையடியார்களாக எண்ணி வழிபடுகின்றனர்.

தல வரலாறு: 

முனிவர்களுள் சிறந்தவரான வசிஷ்ட மாமுனிவரின் உறவினரான மத்யந்தினர் என்ற முனிவருக்கு மாத்யந்தினர் என்ற மகன் பிறந்தான். அவனுக்கு ஆன்மஞானம் கிடைக்கவேண்டுமெனில் தில்லை வனக் காட்டில் உள்ள சுயம்பு லிங்கத்தை வணங்குமாறு முனிவர் சொன்னார்.இதையடுத்து மாத்யந்தினர் தில்லை வனம் வந்தடைந்தார். இங்குள்ள லிங்கத்தை தினமும் பூஜை செய்தார். பூஜைக்கு தேவையான மலர்களை, பொழுது விடிந்த பிறகு எடுத்தால் தம் பூஜை, தவம் முதலியவற்றிற்கு நேரமாகிறபடியாலும், மலர்களில் உள்ள தேனை வண்டுகள் எடுப்பதால் அம்மலர்கள் பூஜைக்கு ஏற்றவையல்ல என்பதாலும் ஒவ்வொரு நாளும் மிகவும் மனம்வருந்திக் கொண்டே மலரெடுத்துப் பூஜை செய்து கொண்டு வந்தார். இக்குறையை சுவாமியிடம் முறையிட்டார். சுவாமி தங்கள் பூஜைக்காக பொழுது விடியுமுன் மலர்களைப் பறிக்க இருட்டில் மலர்கள் தெரியவில்லை.



பொழுது விடிந்த பின்னர் மலர்களைப் பறிக்கலாம் என்றால் மலர்களில் உள்ள தேனை வண்டுகள் எடுத்துவிடுவதால் பூஜைக்கு நல்ல மலர்கள் கிடைக்கவில்லை என்று கூறினார். உடனே சுவாமி மரங்களில் ஏறுவதற்கு வசதியாக வழுக்காமல் இருக்கப் புலியினுடைய கை கால்கள் போன்ற உறுப்புகளும், இருளிலும் நன்றாகத் தெரியும்படியான கண்பார்வையும் உனக்கு கொடுத்தோம் என்று கூறியருளினார். மேலும் புலிக்கால் புலிக்கைகளைப் பெற்றதால் உன் பெயரும் வியாக்கிரபாதன் என்றும் கூறினார். மாத்யந்தினரும் பெருமகிழ்வு கொண்டு தினமும் மனநிறைவோடு பூஜை செய்து வந்தார் என தல வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது.

சிறப்பம்சம்: 

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறா