Wednesday, 29 March 2017

குலஸுந்தரி நித்யா! (9)




குலஸுந்தரி எனில் குண்டலினி சக்தியையே குறிக்கும். தேவியின் நாமங்களில் புஜங்கினி எனும் நாகமும் ஒன்றாகக் கருதப் படுகிறது. நம் சரீரமே குலம். அதை இயக்குபவள் இவள். கு என்றால் ப்ருத்வி தத்துவம். அது இருப்பிடமான மூலாதாரத்தையும் அதனுடன் சம்பந்தப்பட்ட சுஷும்னா மார்க்கத்தையும் குலம் என்று குறிப்பிடுவர். இந்த அன்னைக்குப் பன்னிரண்டு கரங்கள், தாமரையையொத்த ஆறு திருமுகங்கள். ஒவ்வொரு முகத்திலும் முக்கண்கள் கொண்டு தாமரை பீடத்தில் அமர்ந்தருள்பவள். 

திருமேனி முழுவதும் திருவாபரணங்கள் துலங்க வலது கரங்களில் மாலை, தாமரை, கமண்டலம், கோப்பை, மாதுளம்பழம் ஆகியவற்றை ஏந்தியும், இடது கரங்களில் புத்தகம், தாமரை, எழுத்தாணி, மாலை, சங்கு, வரத முத்திரை தரித்தும் தரிசனம் தருபவள். வலது கரம் அபூர்வமான வ்யாக்யான முத்திரை தரித்துள்ளது. இது, மனிதனைக் குழப்பும் அத்தனை சந்தேகங்களுக்கும் விடை தரும் முத்திரையாகும். 

சாதாரண கல்வி முதல் ஆத்ம ஞானம் வரை விளங்க வைக்கும் பராசக்தி இவள். கல்வியில் சிறப்புற்று விளங்கவும் நினைவாற்றல் அதிகரிக்கவும், பெரும் விருதுகள் பெறவும் இந்த தேவியை வணங்கி வர வேண்டும். கருநீல நிறத்திலோ, சாம்பல் நிறத்திலோ இவளை உருவகித்துத் தியானித்தால் பகைவர்கள் தோற்றுப் போவார்கள். எடுத்த செயல்கள் வெற்றிகரமாக முடியும். 

அநேக முகங்கள், அநேக கரங்கள் கொண்டு தேவி திருக்காட்சியளித்தாலும் பக்தர்களைக் கரை சேர்ப்பது தேவியின் இரு திருப்பாதங்கள்தான். தேவி இரு பாதங்கள் மட்டும் கொண்டதேன்? மனிதனுக்கு இரு கைகள் மட்டுமே உள்ளது. அவனால் பற்றிக்கொள்ள முடிந்த அளவிற்கே தனக்கு பாதங்கள் இருக்க வேண்டும் என்று தேவி திருவுளம் கொண்டதால்தான் இரு பாதங்கள். என்னே தேவியின் கருணை! 

தேவர்களும், கந்தர்வர்களும், கின்னரர்களும் இந்த அம்பிகையைச் சுற்றியிருந்து அவள் புகழ் பாடிய வண்ணம் உள்ளனர். யட்சர்களும், அரசர்களும் கூட இந்த அம்பிகையின் அருள் வேண்டி நிற்கின்றனர். சந்திரனின் வடிவமாய் பிரகாசிப்பவள் இத்தேவி. பக்தர்களை தன் குழந்தைகளாக நினைத்து அருள்பவள். நல்லோர்களைக் காத்து தீயவர்களை அழிக்கும் பேரரசி. திரிபுரமாலினி. நிலையற்றுத் திரியும் மனதை அடக்கி நிலைப்படுத்துபவள். ஆனந்த ஸ்வரூபிணி. அவளைப் பணிபவர்களுக்கு துன்பங்கள் தூசு போலாகும்.

இந்த அன்னையை காதலோடு கசிந்து உள்ளம் பாகாய் உருக, கண்களில் நீர் பெருக, தன்னை மறந்து கருணையே வடிவாய் கருத்தில் வைத்தோர்க்கு முடியாது என்ற செயலே கிடையாது. இன்பமான அமைதி தரும் அம்பிகையைப் பணிவோம். அதிக வரம் பெறுவோம். தன்னை உபாஸிக்கும் அன்பர் தம் குலம் காக்கும் அன்னை இவள். தேவியின் திருவடித் தாமரையை தாமரை மலர் தாங்குகிறது. அம்பிகையை உபாசனை செய்வதால் என்ன பயன் என்பதைப் பற்றி காஞ்சிப் பெரியவர் தன் தெய்வத்தின் குரலில் அருளியுள்ளதைக் காணலாம். 

அம்பாளை உபாஸிப்பதே ஜன்மா எடுத்ததின் பெரிய பலன். அன்பு மயமான அம்பிகையைத் தியானிப்பதைவிடப் பேரானந்தம் எதுவும் இல்லை. பெரிய சித்தாந்தங்கள் மதங்கள் எல்லாம் எத்தனையோ இருக்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் முடிவாகக் கிடைக்கிற பெரிய பலன் அம்பாளைத் தியானிப்பதால் லகுவாகக் கிட்டிவிடுகிறது. “அம்மா! நான் எத்தனையோ தோஷம் உள்ளவன். என்றாலும் உன்னை நம்பி விட்டேன். நீ கடாக்ஷித்துவிட்டால் எத்தனை தோஷமானாலும் தூர ஓடிவிடும். 

நான் எப்படி இருக்க வேண்டுமோ அந்த மாதிரியாக இருக்கும் படியாக நீயே பண்ணம்மா” என்று அவளிடம் நம்மை ஓயாமல் ஒப்புக்கொடுத்துக் கொண்டிருந்தாலே போதும்.  அதைவிடப் பெரிய மதமோ, சித்தாந்தமோ, அநுஷ்டானமோ இல்லை. எல்லாம் அவள் சித்தப்படி ஆகட்டும் என்று விட்டு விட்டு, நாம் பஞ்சு மாதிரி மனசில் எந்த கனமும் இல்லாமல் லேசாகிவிட்டால் அதைவிட பேரானந்தம் இல்லை.

அம்பாளை உபாஸிப்பதற்கு வேறு பலன் எதுவும் வேண்டாம். அதுவே அதற்குப் பலன். ஆனாலும், இந்த லோகத்தின் மாயையில் நாம் எல்லோரும் ஒன்றாகச் சிக்கிக் கொண்டிருப்பதால், ‘நான்’ என்பதைவிட்டு, அவளை அவளுக்காகவே உபாஸிக்கிற ஆனந்தம் நமக்கு ஆரம்பதசையில் புரியமாட்டேன் என்கிறது. நமக்கு என்று எதேதையோ எதிர்பார்த்து, அதை எல்லாம் அவள் பூர்த்தி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதற்காக அவளை உபாஸிக்கத் தொடங்குகிறோம். இந்த நிலையில் அவளும்கூட நம்மை விட்டுப்பிடிக்கிற மாதிரி, நம் பிரார்த்தனைகளை நிறை வேற்றி வைக்கிறாள். தர்மத்துக்கு விரோதமாக இல்லாத வரையில் நாம் செய்கிற பிரார்த்தனைக்கு செவிசாய்க்கிறாள்.

மநுஷ்ய ஸ்வபாவம் ஆச்சார்யாளுக்கு நன்றாகத் தெரியும். அம்பாள் உபாஸனையால் ஜனன நிவிருத்தி கிடைக்கும், மோக்ஷம் கிடைக்கும் என்று சொன்னால் எடுத்த எடுப்பில் யாரும் அதில் ஈடுபடமாட்டார்கள் என்பது ஆச்சார்யாளுக்குத் தெரியும். அதனால் அம்பாளை உபாஸிப்பதன் பலன் இன்னின்ன என்று ‘ஸௌந்தரிய லஹரி’யில் சொல்கிறபோது, முதலில் படிப்பு, செல்வம், அழகு முதலியன கிடைக்கும் என்கிறார்.

அம்பாளை உபாஸிப்பவர்கள் தனியாக லக்ஷ்மி, ஸரஸ்வதி இருவரையும் உபாஸிக்க வேண்டும் என்பதில்லை. அவர்கள் இரண்டு பேரும் இவளுக்கு இரண்டு பக்கத்திலும் சாமரம் வீசிக்கொண்டிருக்கிறார்கள். 

இப்படியே லலிதா ஸஹஸ்ரநாமத்தில் சொல்லியிருக்கிறது. (ஸ சாமர ரமாவாணீ ஸவ்ய தக்ஷிண ஸேவிதா). சகல சக்திக்கும் ஆதாரமான பராசக்தியை உபாஸித்தால் இவளே ஸரஸ்வதியையும், லக்ஷ்மியையும் கடாக்ஷிக்கச் செய்கிறாள். காமாக்ஷிக்கு ஸரஸ்வதியும் லக்ஷ்மியும் இரண்டு கண்கள். ‘க’என்று பிரம்மாவுக்குப் பெயர்  ‘சிவ’பத்தினி சிவா என்பதுபோல் ‘க’வின் பத்தினியான ஸரஸ்வதிதான் ‘கா’. ‘மா’ என்றால் மஹாலக்ஷ்மி. ‘மா’ தவன் என்றால் லக்ஷ்மிபதி. ‘கா’வையும் ‘மா’வையும் தன் அக்ஷங்களாக (கண்களாகக்) கொண்டவள் எவளோ அவளே “காமாக்ஷி”.

ஸரஸ்வதி கடாக்ஷம், லக்ஷ்மி கடாக்ஷம் இரண்டும் அம்பாள் அநுக்கிரஹத்தால் கிடைக்கும் என்றேன். இந்த இரண்டையும் பற்றி மநுஷ்ய சுபாவம் ரொம்பவும் விசித்திரமாக இருக்கிறது. எல்லோருக்கும் தங்களுக்கு ரொம்பவும் ஸரஸ்வதி கடாக்ஷம், அதாவது புத்திசாலித்தனம் இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்  தங்களை மஹா புத்திசாலிகளாகவே வெளியில் காட்டிக் கொள்ளப் பிரியப்படுகிறார்கள். ஆனால், நல்ல புத்தி வேண்டும் என்று அதற்காகத் தாபத்தோடு யாரும் பிரார்த்திப்பதாகத் தெரியவில்லை. 

பொதுவாக புத்திசாலித்தனம் என்பது சாமர்த்தியம் என்றுதான் நினைக்கப்படுகிறது. ஞானமும் விவேகமும்தான் உண்மையான புத்திமானின் லக்ஷணங்கள். இவற்றுக்கு யாரும் ஆசைப்படுவதில்லை. நமக்கு நிறைய சாமர்த்தியமும் சாதூர்யமும் இருக்கின்றன. அதாவது ‘யாரையும் ஏமாற்றிவிடலாம்’ என்று அவரவரும் சந்தோஷப்பட்டுக்கொண்டு, இந்த ‘புத்திசாலித்தன’த்தோடு நின்றுவிடுகிறோம். ஆனால் லக்ஷ்மி கடாக்ஷம் மட்டும் எவ்வளவு இருந்தாலும் நமக்குப் போதமாட்டேன் என்கிறது. மண்டுவாக இருந்தாலும்கூட தன்னைப் புத்திசாலியாகக் காட்டிக்கொள்வதற்கு நேர் மாறாக, நமக்கு எத்தனை சம்பத்து இருந்தாலும் அது வெளியில் தெரியக்கூடாது என்று ஏழை வேஷம்தான் போடுகிறோம். 

ஒருத்தனைப்பற்றி யாராவது ‘எத்தனை புத்திசாலி’ என்று பேசினால் சந்தோஷப்படுகிறான். ஆனால் ஒருத்தன் பாங்கில் லட்ச லட்சமாகப் பணம் போட்டிருக்கிறான் என்று யாராவது சொன்னால், அவனுக்குக் கோபம்தான் வருகிறது. தங்களுக்கு இருக்கிற செல்வம் போதாது என்று நினைப்பதால்தான் இவர்களுக்கு அதைப்பற்றிச் சொன்னாலே கோபம் வருகிறது. அதிருப்திதான் தரித்திரம். திருப்திதான் சம்பத்து. 

ஆகையால், நாம் நிஜமான புத்திசாலிகளானால் தரித்திரர்களாக இருந்தாலும்கூட, அப்படிச் சொல்லிக் கொள்ளாமல், மனஸால் நிறைந்து, திருப்தியால் பணக்காரர்களாக இருந்துகொண்டிருக்கலாம். தரித்திரம் என்று சொல்லிக் கொண்டால்தான் நமக்கு யார் பணம் கொடுக்கிறார்கள்? சொல்லிக்கொள்ளாமலேதான் பணக்காரரை விடத்திருப்தியாக இருப்போமே!
இத்தனையும் இருந்து தீர்காயுசு இல்லை என்றால் என்ன பிரயோஜனம்? அம்பாள் சிரஞ்ஜீவித்துவமும் தருவாள் என்கிறார்.

‘இதற்குமேல் வேறென்ன வேண்டும்?’ என்று தோன்றலாம். ஆனால், இதற்குமேல்தான் அம்பாளின் பரமாநுக்கிரஹத்தை தேடச் செய்யும் கேள்வியே பிறக்கும். ‘இத்தனை பணம், அழகு, புத்தி எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு இத்தனை காலம் ஓட்டியாச்சு; இதிலெல்லாம் வாஸ்தவத்தில் என்ன மனநிறைவைக் கண்டோம்? இதையெல்லாம் வைத்துக்கொண்டு எப்போது பார்த்தாலும் சஞ்சலப்பட்டுக்கொண்டே, ஒன்றை விட்டால் இன்னொன்று என்று தாவிக்கொண்டே இருந்துவிட்டோம். நிரந்தர சௌக்கியத்தை, சாந்தத்தை இவை எதனாலும் பெற்றதாகத் தெரியவில்லையே! இதை எப்படிப் பெற்றுக்கொள்வது?’ என்கிற கேள்வி பிறக்கும். நடுநடுவே நமக்கு இந்தக் கேள்வி தோன்றினாலும், அடுத்த க்ஷணமே மாயை நம்மை இழுத்துக் கொண்டு போகிறது. 

ஆனால், நாமாக இப்படி நினைக்காமல் அம்பாளை உபாஸிப்பதன் பலனாக, அவள் நம்மை இப்படி நினைக்கப் பண்ணுகிறபோது, அந்த நினைப்பு நாளுக்குநாள் மேலும் மேலும் தீவிரமாக ஆகும். ‘பணம் வேணும், படிப்பு வேணும், அழகு வேண்டும், ஆயுசு வேண்டும்’ என்பதெல்லாம் மேலும் மேலும் நம்மைப் பாசத்தில் கட்டிப் பிரமையில்தான் தள்ளிக் கொண்டிருந்தது என்கிற அறிவு உண்டாகும். 

பணம், புத்தி, ஆயுள், அழகு ஆகிய சிற்றின்பங்களுக்குத் தவித்த மனஸில் இவற்றின் கட்டுக்களே வேண்டாம் என்கிற வைராக்கியம் உண்டானால், அப்புறம் பேரின்ப மயமாவதற்கான ஸாதனைகளில் இறங்கி, முடிவில் அம்பாள் அருளால் பேரின்பமாகவே ஆகலாம். அதைவிடப் பெரிய பலன் வேறில்லை. முடிந்த முடிவாக அம்பாள், பக்தனை இந்தப் பரமானந்த ரஸத்தில் திளைத்துக் கொண்டிருக்குமாறு அநுக்கிரஹம் செய்கிறாள் என்று ஆச்சார்யாள் முடிக்கிறார்.

வழிபடு பலன்
இந்த அன்னையின் அபூர்வ அருளால் உபாசனை
 புரிபவர்கள் சர்வ ஞானமும் அடைவர். 
செல்வவளமும் சொத்து சேர்க்கையும் கிட்டும்.
குலஸுந்தரி காயத்ரி
ஓம் குலஸுந்தர்யை வித்மஹே காமேஸ்வர்யை 

தீமஹி
தன்னோ சக்தி ப்ரசோதயாத்.மூலமந்த்ரம்
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் லூம் ஐம் க்லீம் ஸௌ: லூம் குலஸுந்தர்யை நம:
த்யான ஸ்லோகங்கள்

லோஹிதாம் லோஹிதாகார ஸக்தி வ்ருத்த நிஷேவிதாம்
லோஹிதாம் ஸுகபூஷாங்ருக் லேபநாம் ஷண்முகாம்புஜாம்
ப்ரதிவக்த்ரம் த்ரிநயனாம் ததாசாருஸ்மிதாநநாம்
அநர்க்ய ரத்நகடித மாணிக்ய முகுடோஜ்வலாம்

தாடங்கஹார கேயூர ரஸனா நூபுரோஜ்ஜ்வலாம் 
ரத்நஸ்தப கஸம்பிந்ந லஸத் வக்ஷஸ்தலாம் ஸுபாம்
காருண்யாநந்த பரமா மருணாம் புஜவிஷ்டராம்
பஜைர் த்வாதஸபிர்யுக்தாம் ஸர்வேஷாம் 
ஸர்வவாங்மயீம்

ப்ரவாளாக்ஷ ஸ்ரஜம்பத்மம் குண்டிகாம் 
ரத்ந நிர்மிதாம்
ரத்னபூர்ணாம் தச்சஷகம் லுங்கீம் வ்யாக்யாந
முத்ரிகாம்
ததாநாம். 

ஸதாஸிவ குடும்பினீம் ஸகல மந்த்ர 
ஸம்சாரிணீம்
ஸுஜன க்லேச சம்ஹாரிணீம் கதாதர 
ஸகோதரீம்
கஜமுகப்ரியாம் ஸாங்கியுகம் பஜாமி
குலஸுந்தரீம் ப்ரதம நாயகீம் சந்ததம்.

த்யாயேத் தேவீம் மஹேஸானீம் 
கதம்பவன மத்யகாம்
ரத்ன மண்டப மத்யேது மஹாகல்ப வனாந்தரே
முக்தாபத்ர சாயாயாம் ரத்ன 
ஸிம்ஹாஸனேஸ்திதாம்
அனர்க்ய ரத்ன கடித முகுடாம் ரத்ன குண்டலாம்

ஹாரக்ரைவேய ஸத்ரத்ன சித்ரிதாங்காம் 
கர்ணோஜ்ஜ்வலாம்
ஹரி முக்தாலஸத் பூஷாம் ஸுக்ல 
க்ஷௌம விராஜிதாம்
ஹீர மஜ்ஜீர ஸுபக ரக்தோத்பல பதாம்புஜாம்

ஸுபாங்க ராக ஸுபகாம் கற்பூர 
ஸகலோஜ்வலாம்
புஸ்தகம் சாபயம் வாமே தக்ஷிணே 
சாக்ஷமாலிகாம்
வரதான ரதாம் திவ்யாம் மஹாசாரஸ்வதப்ரதாம்

ஏவம் த்யாயேத்  மஹா நித்யாம் தேவேஸீம்
குலஸுந்தரீம். 
அருணகிரண ஜாலை: ரஞ்சிதாஸாவகாஸா
வித்ருத ஜபபடீகா புஸ்தகாபீதிஹஸ்தா
இதரகர வராட்யா: புல்ஹ கல்ஹார ஸம்ஸ்தா
நிவஸது ஹ்ருதி பாலா: நித்ய கல்யாண சீலா:

ஸ்ரீஸுக்த நித்யா ஸ்லோகம்
ஸ்ரீஸுக்த ஸம்ஸ்துதாம் ல்ருகார ப்ரக்ருதிக 
சந்த்ரிகா கலாத்மிகாம்
குலஸுந்தரி நித்யா ஸ்வரூபாம் ஸர்வ 
ஸித்திப்ரத சக்ர ஸ்வாமினீம்
சித்தாகர்ஷிணி சக்தி ஸ்வரூபிணீம், ஸ்ரீ ஸ்ரீதர வக்ஷஸ்தல

 கமலவாஸினீம் ஸர்வமங்கள தேவதாம்
 ஸ்ரீதுஷ்டிலக்ஷ்மி ஸ்வரூப குலஸுந்தரி நித்யாயை நம:
வழிபட வேண்டிய துதிகள் 
சுக்ல பக்ஷ நவமிக்ருஷ்ண பக்ஷ ஸப்தமி 
(நவமி திதி ரூப குலஸுந்தர்யை நம:)
நைவேத்யம்
நெல் பொரி.
பூஜைக்கான புஷ்பங்கள்
செந்தாமரை.

திதி தான பலன்
இந்த தேவிக்கு நெற்பொரியை நிவேதித்து தானம் அளித்தால் இவ்வுலக சுகங்கள் விருத்தியாகும். 
பஞ்சோபசார பூஜை
ஓம் குலஸுந்தரி நித்யாயை கந்தம் கல்பயாமி நம:
ஓம் குலஸுந்தரி நித்யாயை தூபம் கல்பயாமி நம:  

ஓம் குலஸுந்தரி நித்யாயை தீபம் கல்பயாமி நம:  
ஓம் குலஸுந்தரி நித்யாயை நைவேத்யம் 
கல்பயாமி நம:  ஓம் குலஸுந்தரி நித்யாயை கற்பூர நீராஞ்ஜனம் 
தர்சயாமி நம:இத்திதியில் பிறந்தோரின் குணநலன்கள்

பெரும்பாலும் நாத்திகர்கள். பயமற்றவர்கள். கல்வி கேள்விகளில் புகழ் பெற்று விளங்குவார்கள். சிலர் வஞ்ச நெஞ்சம் கொண்டவர்களாகத் திகழ்வர். சூரர்கள். பண்டிதர்கள். தனக்கு அடங்காப் பிள்ளையைப் பெறுபவர்கள். பிறரைத் தன்வயப்படுத்துபவர்கள். எப்போதும் எச்சரிக்கை மிக்கவர்கள். 

யந்திரம் வரையும் முறை

சந்தன குங்குமக் கலவையால் ஒன்பது கோணம், வட்டம், எட்டிதழ், இரு வட்டங்கள், கிழக்கு மேற்கு வாயில்களுடன் கூடிய யந்திரம் வரையவும். தேவியின் பரிவார சக்திகளான பாஷா, சரஸ்வதி, வாணி, ஸம்ஸ்க்ருதா, பிராக்ருதா, பரா, கட்கரூபா, வித்தரூபா, ரம்யா, ஆனந்தா, கௌதுகா போன்றோரை தியானித்து பூஜிக்கவும். 

இத்திதிகளில் செய்யத் தக்கவை

இத்திதியில் போரிடுதல், பகைவரை சிறையிடுதல், நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடு செய்தல் போன்ற எதிர்மறை செயல்களையே செய்யலாம்.

அகத்தியர் அருளிய சுக்ல பக்ஷ நவமி துதி
நவமியிலே நவரத்ன கிரீடம் சூட்டி
நவகோடி நாதருளைப் பணிந்து போற்ற
தவம் பெருக ஒரு நான்கு பாலும் ஈந்து
தற்காத்தாய் பிள்ளைகளைத் தயவு வைத்து
சிவவெளியும் சிவபதமும் தெரிசித்தார்கள்
சிவகாமி நினதுடைய செயலினாலே
சுதன் எனக்கும் அப்படியே தருவாய் அம்மா
சோதியே! மனோன்மணியே! சுழுமுனை வாழியவே!

நவ கோடிநாதர்  நவநாதங்கள் ஒன்பது வகைப்படும். அவை சத்ய நாதர், சதோக நாதர், ஆதி நாதர், அனாதி நாதர், வெகுளி நாதர், மதங்க நாதர், மச்சேந்திர நாதர், கடேந்திர நாதர், கோரக்க நாதர் போன்ற சித்தர்களையும் குறிக்கும்.நவரத்னம்  கோமேதகம், நீலம், பவளம், மரகதம், மாணிக்கம், முத்து, புஷ்பராகம், வைரம், வைடூரியம்.
நான்கு பால்  அறம், பொருள், இன்பம், வீடு.  

அகத்தியர் அருளிய க்ருஷ்ணபக்ஷ நவமி நித்யா துதி
பந்தவினை போக்கிடுமென் அருமைத்தாயே
பாக்யவதி பூரணியே பருவமாதா
வந்து நீ அருள்க என்னை வளர்த்த மாதா
வான் வழங்கப் பெற்ற சுடரொளியே கண்ணே
என்றனையும் சித்தனெனப் பெயருமிட்டே
எட்டெழுத்தின் மூன்றெழுத்தாய் விளங்கி நின்றாய்
சுந்தரியே கன்னிகையே அகண்ட ரூபி
சோதி மனோன்மணித் தாயே சுழிமுனை வாழியவே!

மாத்ருகா அர்ச்சனை
ஓம் பாலாயை நம:
ஓம் உமாயை நம:
ஓம் பைரவ்யை நம:
ஓம் ஸாந்தாயை நம:
ஓம் த்ரிபுராயை நம:
ஓம் த்ரிபுரேஸ்யை நம:

ஓம் அஹிம்ஸாயை நம:
ஓம் திமரக்ன்யை நம:
ஓம் பாஸ்வராயை நம:
ஓம் ஸூர்யமண்டலாயை நம:
ஓம் வராயுதாயை நம:
ஓம் வராரோஹாயை நம:

ஓம் வரேண்யாயை நம:
ஓம் விஷ்ணுவல்லபாயை நம:
ஓம் ஸ்ருத்யை நம:
ஓம் நிரந்தராயை நம:
ஓம் வேத்யாயை நம:
ஓம் ஸித்யை நம:

ஓம் ஸர்வார்த்த ஸித்தின்யை நம:
ஓம் பஞ்ச பஞ்சாத்மிகாயை நம:
ஓம் குஹ்யாயை நம:
ஓம் கோநிவாஸாயை நம:
ஓம் கோதனாயை நம:
ஓம் ஸாத்யயோகோத்பவாயை நம:

ஓம் ஸக்தயே நம:
ஓம் மாத்ரே நம:
ஓம் காஷ்டாயை நம:
ஓம் கலாத்மிகாயை நம:
ஓம் பியூஷாயை நம:
ஓம் வாஜி ஜிஹ்வாயை நம:

ஓம் ரஸாத்ராயை நம:
ஓம் இரம்மதாயை நம:
ஓம் வித்யுதே நம:
ஓம் ஸதக்ன்யை நம:
ஓம் ஸிம்ஹாக்ஷ்யை நம:
ஓம் ஏகபிங்காங்கிதாயை நம:

ஓம் கபால்யை நம:
ஓம் வேத்யாயை நம:
ஓம் வேதாள்யை நம:
ஓம் பூத ஸங்க நமஸ்க்ருதாயை நம:

ஓம் ஸ்ப்ருஷ்டாயை நம:
ஓம் பவாயை நம:
ஓம் விபவாயை நம:
ஓம் தேஸபாஷிண்யை நம:
ஓம் ஸர்வாரம்பாயை நம:
ஓம் நிராரம்பாயை நம:

ஓம் ஆரம்பாயை நம:
ஓம் பவவாஹின்யை நம:
ஓம் பாரத்யை நம:
ஓம் பாஸ்வராயை நம: 
ஓம் மஹாதேவ்யை நம!


சாதனைகள் புரிய அருளும் த்வரிதா நித்யா!

திதி நித்யா மண்டலத்தின் நடு நாயகியாய்த் திகழ்பவள் இத்தேவி. சுக்ல பட்சத்திலிருந்து எட்டாவது நித்யா, கிருஷ்ண பட்சத்திலிருந்தும் எட்டாவது நித்யாவாகத் திகழும் பெருமை பெற்றவள் இவள். இந்த நித்யாவிற்கு தோதலாதேவி என்ற திருப்பெயரும் உண்டு. பக்தர்களுக்கு சீக்கிரம் அருள்வதால் ‘‘த்வரிதா’’ என்று அழைக்கப்படு கிறாள். தழைகளை ஆடையாக அணிந்தவள். எட்டு நாகங்களை தேவி தன் உடலில் அணிகலன்களாக சூடியருள்கிறாள்.  


கருநீல வண்ண உடல் நிறத்தைக் கொண்டவள் இவள். முக்கண்களுடனும், நான்கு திருக்கரங்களுடனும் புன்முறுவல் பூத்த திருமுகத்துடன் பொலிகிறாள். கால்களில் கொஞ்சும் சதங்கை யும், இடையில் மேகலையும், மேனியில் மின்னும் ரத்னாபரணங்கள் துலங்க அருள்கிறாள். தன் சிரசில் மயிற்பீலிகளைச் சூடிக் கொண்டு அலங்கார தரிசனம் அளிக்கிறாள். தேவியின் வரத அபய கரங்கள் பக்தர்களைக் காக்க நான் இருக்கிறேன் என்பதைக் கூறாமல் கூறுவது போல் உள்ளது. இத்தேவியைத் துணை கொள்வோர்க்கு அணிமாதி ஸித்திகளும், ஞானமும் கை கூடும் என்பர். 

அரை நொடியேனும் அன்னையை மனதில் நினைப்போர்க்குத் துன்பமும் உண்டோ? கருணை வடிவான இந்த அம்பிகை தாங்க முடியாத வேதனையில் வருந்தும் உயிர்களை அணைத்து 
ஆதரிப்பவள். சாதனைகளைச் செய்ய அருள்பவள். நம்பினோர்க்கு அபயம் தருபவள். அழகுப் பெட்டகமாய் அருளும் பேரரசி. எந்த ஒரு குழந்தையும் தன் தாயாரைப் போல பேரழகி உண்டா எனத்தான் கூறும். 

ஸர்வாங்க சுந்தரியான இந்த ஜகஜ்ஜனனியின் பேரழகையோ ஆதிசங்கரரே கூறுவது போல நான்முகனான பிரம்மனாலோ, ஐந்து முகனான பரமேஸ்வரனாலோ, ஆறுமுகனான ஷண்முகனாலோ, ஆயிரம் தலைகளை உடைய ஆதிசேஷனாலோ கூட வர்ணிக்க இயலாதது. மற்றவர்களின் கதியென்ன? இருப்பினும் வாக் தேவதைகள் தேவியின் அருளால் தேவியின் அழகினை அடுத்து வர்ணிக்கின்றனர்.

ஜிதேந்திரியராக காமனையே கண்ணால் பொசுக்கிய காமேஸ்வரரே மயங்கும் அழகுடைய அன்னையின் அழகை அவளது தாயன்பை முக்கியமாகக் கூறியதை இங்கு பார்க்கலாம்.

இயற்கையிலேயே தேவியின் கூந்தலுக்கு நறுமணம் உண்டு என்பதை நிலைநாட்ட அந்தப் பரமேஸ்வரனே நக்கீரருடன் வாதிட்டாரல்லவா? அந்த கூந்தலில் செண்பகம், அசோகம், புன்னாகம், ஸௌகந்திகம் என்ற நறுமணம் மிக்க மலர்களைச் சூடிக்கொண்டிருக்கிறாளாம் அன்னை. 

அதன் மேல் பத்மராக மணிகள் வரிசையாகப் பதிக்கப்பட்ட ஒளிவீசும் அழகிய கிரீடத்தை அணிந்திருக்கிறாளாம். அஷ்டமி தின சந்திரன் போல இந்த அஷ்டமி தின தேவதையான த்வரிதாவின் நெற்றி அழகுற விளங்குகிறதாம். சந்திரன் எனக் கூறும் போதே அதிலுள்ள களங்கமும் நினைவில் வருகிறதல்லவா? அந்தக் களங்கம் போல் அம்பிகையின் கஸ்தூரிப் பொட்டு விளங்குகிறதாம்.

அழகின் உருவம் மன்மதன் வசிக்கும் மங்கள வீடாக அம்பிகையின் முகமண்டலம் விளங்குவதால் அதன் வாயில் தோரணம் போல் அவளது புருவங்கள் விளங்குகின்றனவாம். அந்த முகத்தின் அழகு வெள்ளத்தில் நீந்தும் மீன்களைப் போல அவளது கண்கள் விளங்குகின்றனவாம். காது வளர நீண்டிருக்கும் அந்தக் கண்களால் எந்த திக்கிலும் இருக்கும் தனது குழந்தைகளை ஒரு தாய் மீன் தனது பார்வையாலேயே குஞ்சுகளைக் காப்பது போல இந்த தேவியும் காக்கின்றாளாம். 

அன்றலர்ந்த செண்பக மலர் போல அவளது மூக்கு விளங்குகின்றதாம். அதில் நக்ஷத்திரத்தினும் ஒளி மிகுந்த மூக்குத்தியை அணிந்திருக்கிறாளாம் இந்தத் தாய்.  மனோஹரமான கதம்ப மலரை செவிப்பூவாக அணிந்திருக்கிறாளாம். சந்திர  சூர்யர்களை செவிகளில் தாடங்கங்களாக அணிந்திருக்கிறாளாம் அன்னை. இந்த தாடங்கங்களின் மஹிமையாலன்றோ ஆலகால விஷத்தை அருந்திய போதிலும் அவளது கணவரான காமேஸ்வரர் பிரளயங்களையும் தாண்டி கவலையற்று அன்னை ஒருத்தி மட்டுமே காண ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருக்கிறார்!

பத்மராகக் கல்லினாலான கண்ணாடியை விடவும் பிரகாசமாக அன்னையின் கன்னங்கள் மின்னுகின்றனவாம். அவற்றில் பிரதிபலிக்கும் தாடங்கங்களால் நான்கு சக்கரங்களை உடைய மன்மதனின் தேர் போல அவளது முகம் விளங்குகின்றதாம். புதிய பவழத்தை விட, கோவைப்பழத்தை விட ஒளி பொருந்தியவையாக அவளது உதடுகள் விளங்குகின்றனவாம். க்ஷோடஸாக்ஷரி (16)போன்று இரு வரிசைப் பற்கள் விளங்குகின்றனவாம். 

அவள் தரித்திருக்கும் ஏலக்காய், லவங்கம், பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, கேஸரி, ஜாதிக்காய், ஜாதிபத்திரி முதலியவை கலந்த கற்பூர வீடிகா எனும் நறுமணம் மிக்க தாம்பூலம் எத்திக்கிலுள்ளோரையும் கவர்ந்து இழுக்கின்றதாம். இந்த தாம்பூலச் சாறேயல்லவா பிறவி ஊமையையும் மூகஸங்கரராக மாற்றியது! முப்புரம் ஜெயித்த பரமேஸ்வரனது கீர்த்தியை அன்னை முன் பாட ஆரம்பித்து தனது கச்சபி எனும் வீணையை ஸ்ருதி சேர்த்த ஸரஸ்வதியும் வெட்கித் தனது வீணையை மறுபடி உறையிலிட்டு வைக்குமாறு செய்த வீணையைப் பழித்த இனிய குரலை உடையவளாதலால் அன்னையின் ஓர் “ஆஹா’’காரம் கூட வீணையின் நாதத்தைவிட இனியதாக இருக்கின்றதாம்,  காமேஸ்வரரையே சொக்கி மூழ்கும்படி அன்னையின் புன்சிரிப்பு பிரவஹிக்கிறதாம். 

அவளது முகவாயோ உவமையற்றதாக விளங்குகிறதாம்.  காமேஸ்வரர் கட்டிய மங்கல நாணுடன் அவளது கழுத்து பிரகாசிக்கின்றதாம். பொன் தோள்வளைகளும், ரத்தினப் பதக்கத்துடன் கூடிய முத்து அட்டிகையும் அன்னை தரித்திருக்கிறாள். ரத்ன கலசம் போன்ற தனது ஸ்தனங்களைக் கொடுத்து காமேஸ்வரரது, பிரேமையை விலைக்கு வாங்கி விட்டவளாக விளங்குகிறாளாம் அன்னை. இந்த ஸ்தனங்களன்றோ விநாயகரை கணேஸராகவும், முருகனை தேவ ஸேனாதி பதியாகவும், திருஞானஸம்பந்தர், ஆதிசங்கரர் போன்ற திராவிட சிசுக் களை மஹான்களாகவும், மஹா
கவிகளாகவும் தனது பாலால் மாற்றியது! 

அவளது குழந்தைகளான நாம் அடுத்து மற்ற தெய்வங்களால் கைகளாலும் தரமுடியாத அளவுக்கு தனது கால்களாலேயே தரும்  அன்னை யின் கால்களுக்குத் தாவுவோம். தன் பாதங்களில் வணங்குவோரின் அகத்திலுள்ள இருளைத் தனது நகங்களின் காந்தியினால் அன்னை போக்கி விடுகிறாளாம்.

தாமரையினும் அழகுவாய்ந்த பாதங்களில் ஒலிக்கும் ரத்தினப் பரல்கள் கொண்ட சிலம்புகளணிந்து மெல்லிய தனது நடையினால் ஹம்ஸங்களுக்கும் நடைபழகக் கற்றுக் கொடுக்கிறாளாம் அன்னை. 

இவ்வளவு பேரெழிலொடு இன்பமான அமைதி தரும் தேவியின் திருவடித் தாமரைகளை தியானித்து வணங்க, அறிவு தெளிவு பெறும். ஆற்றலோடு சிவனருளும் ஜீவன் முக்தியும் கிட்டும். வழிபடு பலன் சகலவித பயங்களும் இத்தேவியை நினைத்த மாத்திரத்திலேயே நாசமடையும். கலைகளில் தேர்ச்சி பெறவும், பூரண ஆயுளுடன் திகழவும் அருள்பவள் இவள். செல்வமும், உடல்நலமும் பெருகும். கற்கும் வித்தை சிறக்கும். 

த்வரிதா காயத்ரி
ஓம் த்வரிதாயை வித்மஹே 
மஹாநித்யாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

மூல மந்த்ரம்
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ரூம் ஹ்ரீம் ஹும் கே ச சே க்ஷ: 
ஸ்த்ரீம் ஹும் க்ஷேம் ஹ்ரீம் பட் ரூம் த்வரிதாயை நம:
த்யான ஸ்லோகங்கள்
ச்யாமவர்ணாம் சுபாகாராம் நவயௌவன
 சோபிதம் 
த்வித்விக்ரமாதஷ்ட நாகை: 

கல்பிதாபரணோஜ்வலாம்
தாடங்கமங்கதம் தத்வத்ரசனா நூபுராந்விதை:
விப்ர க்ஷத்ரிய விட்சூத்ர ஜாதிபிர்பீம
 விக்ரஹை:
பல்லவாம் சுக ஸம்வீதாம் சிகிபுச்சக்ருதை: 

சுபை:
வலயைர் பூஷிதபுஜாம் மாணிக்க 
மகுடோஜ்வலாம்
வர்ஹிவர்ஹ கர்மாபீடாம் தச்சத்ராம் 
தத்பதாகிநீம்
குஜ்ஜாகுண வஸத்வக்ஷ: 

குசகுங்கும மண்டநாம்
த்ரிநேத்ராம் சாருவதநாம் 
மந்தஸ்மித முகாம்புஜாம்
பாசாங்குச வராபீதி லஸத்புஜ
 சதுஷ்டயாம்
த்யாவைவம் தோதுலாம் தேவீம்
 பூஜயேச்சக்திபிர்வ்ருதாம்.

ரக்தாரவிந்த ஸங்காச ம்ருத்ய்ஸ்
ஸூர்ய ஸமப்ரபாம்
தத்தீம் அங்குசாம் பாசாம்
 பாணான் சாபம் மனோகராம்
சதுர்ப்புஜாம் மஹாதேவீம் ஸப்த
 மப்ஸரேகண ஸங்குலாம்
நமாமி த்வரிதாம் நித்யாம் பக்தா
நாமபயப்ரதாம். 

ஸ்யாமாங்கீம் ரக்த ஸத்பாணி
 சரணாம்புஜ ஸோபிதாம்
விருஷவாஹி ஸமஜ்ஜீராம் படா 
கண்ட ரத்ன விபூஷிதாம்
ஸ்வர்ணாம் ஸுகாம் பாண

 (ஸ்வர்ண) பூஷாம் வேஸ்யாஹி
 த்வந்த்வமேகலாம்
தனுமத்யாம் பனிவ்ருத்த
 குசயும்மாம் வராபயே
தததீம் ஸிகிபிச்சாபாம் வலயாங்
கத ஸோபிதாம்

குஞ்ஜாருணாம் ந்ருபாஹீந்த்ர
 கேயூராம் ரத்ன விபூஷிதாம்
த்விஜநாக ஸ்பரத்கர்ண பூஷாம்
 மத்தரூணேக்ஷணாம்
நீல குஞ்சித தம்மில்ல வனபுஷ்பாம்

 கலாபினீம்
கைராதீம்ஸிகி பிஞ்சாட்ய 
நிகேதன விராஜிதாம்
ஸ்பரத்ஸிம்ஹான ப்ரௌடாம்
 ஸம்ஸ்மரேத் த்வரிதாம் பத:
ந ஜானாமி மந்த்ரம் நஹி சக்ர பூஜாம்
ந ஜானாமி ஹோமம் நஹி யோக தீக்ஷாம் 
ந ஜானாமி முத்ராம் நஹி 
வேத சாஸ்த்ராம்

த்வதங்க்ரியுக்மம் த்வரிதாம்
 மனஸா ஸ்மராமி.
ஸ்ரீஸுக்த நித்யா ஸ்லோகம்
ஸ்ரீஸூக்த ஸம்ஸ்துதாம் ரூகார 
ப்ரக்ருதிக சசினீ கலாத்மிகாம்
ஸ்ரீத்வரிதா நித்யா ஸ்வரூபாம் 
ஸர்வரோக ஹர சக்ர ஸ்வாமினீம்
கந்தாகர்ஷிணீ சக்தி ஸ்வரூபிணீம்

ஸ்ரீவாமன வக்ஷஸ்தல 
கமலவாஸினீம்
ஸர்வமங்கள தேவதாம் 
வித்யாலக்ஷ்மி ஸ்வரூப த்வரிதா
 நித்யாயை நம: 
வழிபட வேண்டிய திதிகள்
சுக்ல பக்ஷ அஷ்டமி / கிருஷ்ண பக்ஷ அஷ்டமி
(அஷ்டமி திதி ரூப த்வரிதா நித்யாயை நம:)
நைவேத்யம்

முற்றிய தேங்காய்
பூஜைக்கான புஷ்பங்கள்
மரு, வில்வம்.
திதி தான பலன்
தேங்காய் நிவேதித்து தானம் செய்ய பல்வேறு 
விதமான தாபங்கள் அகலும். தரித்திரம் தொலையும்.

பஞ்சோபசார பூஜை
ஓம் த்வரிதா நித்யாயை கந்தம் கல்பயாமி நம:
ஓம் த்வரிதா நித்யாயை தூபம் கல்பயாமி நம:  
ஓம் த்வரிதா நித்யாயை தீபம் கல்பயாமி நம: 

ஓம் த்வரிதா நித்யாயை நைவேத்யம் கல்பயாமி நம: 
ஓம் த்வரிதா நித்யாயை கற்பூர நீராஞ்ஜனம் 

தர்சயாமி நம:இத்திதியில் பிறந்தோர் குண நலன்கள் பிறருக்கு தீங்கிழைத்து மகிழும் குணத்தைக் கொண்டவர்கள். நீச்சமான தொழில் புரிபவர். கபம் மிகுந்தவர். மனைவியுடன் கூடியவர். காமம் மிகுந்தவர். இத்திதியில் பிறந்தவர்கள் இந்த தேவியின் மூலமந்திரத்தை தினமும் 45 முறை பாராயணம் செய்தால் தீமைகள் விலகி 
நன்மைகள் பெருகும்.

யந்த்ரம் வரையும் முறை சந்தன குங்குமக் கலவையால் மேற்கில் வாயிலுடன் இரு சதுரங்கள் பின் இரு வட்டங்கள், எட்டிதழ்க் கமலம் கொண்ட சக்கரம் வரையவும். தேவியின் சக்திகளான ஹும்காரி, க்ஷேகாரி, சண்டி, சேதினி, க்ஷேபிணி, ஸ்ரீம், ஸ்ரீகரி, தும்காரி, க்ஷேமகரி, ஜயா, விஜயா எனும் சக்திகளை தியானித்து பூஜிக்கவும். 
இத்திதிகளில் செய்யத் தக்கவைஎதுவுமே இல்லை.

அகத்தியர் அருளிய சுக்லபக்ஷ அஷ்டமி துதி 
அஷ்டமியும் அஷ்டகிலம் அஷ்ட நாகம்
அஷ்டகிரி அஷ்டகஜம் அஷ்டபாலன்
இஷ்டமுடன் அஷ்டதுர்க்கி அஷ்டகும்பம்
ஏற்றமாய் அஷ்ட ஆருயிரும் தானாய்
திட்டமுடன் அன்பர்களும் பெரியோர் வானோர்

செல்வியே அஷ்டதிக்கில் தெவிட்டாத் தேனே
துஷ்டருக்கும் இஷ்டருக்கும் தானாய் நின்ற
சோதியா மனோன்மணியே சுழுமுனை 
வாழ்கவே!

அஷ்டகிலம் - எட்டு திக்கிற்குள் அடங்கிய எல்லா பூமிகளும்.
அஷ்டநாகம் - அனந்தன், கார்க்கோடகன், 
குளிகன், சங்கபாலன், தட்சன், பதுமன், மகா
பதுமன், வாசுகி.

அஷ்டகிரி - இமயம், ஹேமகூடம், கந்தமாதனம், மயிலை, எரிஷதம், நீலகிரி, மந்தாரம், விந்தியம்.
அஷ்டகஜம் - ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சார்வபௌமம், சுப்ரதீபம்.
அஷ்டபாலகர்கள் - இந்திரன், அக்னி, யமன், நிருருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்.
அஷ்டதுர்க்கி - சைலபுத்ரி, பிரம்மசாரிணி, 

சந்த்ரகண்டா, ஸ்கந்தமாதா, கூஷ்மாண்டா, காளராத்ரி, மஹாகௌரி, ஸித்திப்ரதா. 
அஷ்டகும்பம் - அனந்தன், சூக்ஷ்மன், 
சிவோத்தமன், ஏகநேத்திரன், ஏகருத்ரன், த்ரிமூர்த்தி, ஸ்ரீகண்டன், சிகண்டி. 
அஷ்ட ஆயிசர் -1008 சிவாலயத்திலுள்ள லிங்க மூர்த்திகள். 

அகத்தியர் அருளிய க்ருஷ்ணபக்ஷ அஷ்டமி தேவி துதி
திங்களொளியாய் அமர்ந்த சப்த கன்னி
தேவர்களுக்கமுதளித்த சிறு பெண்ணாத்தாள்
அங்கசித்தி ரீங்காரி அனந்த ரூபி
அண்டரெல்லாம் போற்ற அவதரித்த தேவி

மங்கலமாய் நவராத்திரி பூஜைக்காக 
வந்தமர்ந்த திரிசூலி மகிழோங்காரி
துங்கமிகு முயர் பரமானந்தி தாயே
சோதிமனொன்மணித்தாயே சுழிமுனை வாழ்வே!

மாத்ருகா அர்ச்சனை
ஓம் த்வரிதாயை நம:
ஓம் தோதுலாயை நம:
ஓம் தாத்ர்யை நம:
ஓம் கிராத்யை நம:
ஓம் கிருஷ்ண்யை நம:
ஓம் வாணிஜாயை நம:

ஒம் ஸர்வேஸ்வர்யை நம:
ஓம் த்ருவாயை நம:
ஒம் ஸர்வாயை நம:
ஓம் ஸர்வஜ்ஞான ஸமுத்பவாயை நம:
ஓம் த்ரிமாத்ராயை நம:
ஓம் த்ரிபுராயை நம:
ஓம் ஸர்வாகாராயை நம:

ஓம் அமேயாயை நம:
ஓம் ப்ரஹ்மாண்யை நம:
ஓம் ஸாந்திகர்யை நம:
ஓம் ஸர்வசக்த்யை நம: 
ஓம் கௌமார்யை நம:
ஓம் விஸ்வஜனன்யை நம:
ஓம் ஸூலஹஸ்தாயை நம:
ஓம் மஹேஸ்வர்யை நம:

ஓம் கிங்கர்யை நம:
ஓம் ஸக்தி ஹஸ்தாயை நம:
ஓம் தக்ஷ யக்ஞ விநாஸின்யை நம:
ஓம் வராயுதாயை நம:
ஓம் ஸங்கவராயை நம: 
ஓம் வைஷ்ணவ்யை நம:
ஓம் அவ்யக்தாயை நம:

ஓம் யோகின்யை நம: 
ஓம் வாராஹ்யை நம:
ஓம் ந்ருஸிம்ஹாயை நம:
ஓம் ஸிம்மவிக்ரமாயை நம:
ஓம் ஸஹஸ்ராக்ஷ்யை நம:
ஓம் வீராராட்யாயை நம:
ஓம் ஸர்வபாபஹராயை நம:

ஓம் ஸிவாயை நம:
ஓம் ஸிவதூத்யை நம:
ஓம் கோராரவாயை நம:
ஓம் க்ஷூரிபாஸாஸிகாரிண்யை நம:
ஓம் விகரள்யை நம:
ஓம் மஹாகால்யை நம:
ஓம் கபால்யை நம:
ஓம் பாபஹாரிண்யை நம:

ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
ஓம் மஹாகுக்ஷயே நம:
ஓம் யோகின்யை நம:
ஓம் ப்ருந்தவாதின்யை நம:
ஓம் ஷட்சக்ராயை நம:
ஓம் சக்ரநிலயாயை நம:
ஓம் சக்ரகாயை நம:
ஓம் யோனிரூபிண்யை

திதிகளின் தெய்வங்கள் !

சுக்லபட்சம்
1. பிரதமை –  குபேரன் மற்றும் பிரம்மா2. துவதியை – பிரம்மா
3. திரிதியை – சிவன் மற்றும் கெளரி மாதா
4. சதுர்த்தி –  எமன் மற்றும் விநாயகர்
5. பஞ்சமி – திரிபுர சுந்தரி
6. ஷஷ்டி – செவ்வாய்
7. ஸப்தமி – ரிஷி மற்றும் இந்திரன்
8. அஷ்டமி –  காலபைரவர்9. நவமி –  சரஸ்வதி
10. தசமி – வீரபத்ரர் மற்றும் தர்மராஜன்
11. ஏகாதசி – மஹாருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு
12. துவாதசி – மகா விஷ்ணு
13. திரயோதசி – மன்மதன்
14. சதுர்த்தசி –  காளி
15. பவுர்ணமி – லலிதாம்பிகை

கிருஷ்ணபட்சம்
1. பிரதமை –  துர்க்கை
2. துவதியை – வாயு
3. திரிதியை – அக்னி
4. சதுர்த்தி –  எமன் மற்றும் விநாயகர்
5. பஞ்சமி – நாகதேவதை
6. ஷஷ்டி – முருகன்
7. ஸப்தமி – சூரியன்
8. அஷ்டமி –  மஹாருத்ரன் மற்றும் துர்க்கை9. நவமி –  சரஸ்வதி
10. தசமி – எமன் மற்றும் துர்கை
11. ஏகாதசி – மஹாருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு
12. துவாதசி – சுக்ரன்
13. திரயோதசி – நந்தி
14. சதுர்த்தசி –  ருத்ரர்
15..அமாவாசை - பித்ருக்கள் மற்றும் காளி