Monday 27 February 2017

அலைகடல் ஓரம் அழகிய ஆலயம்!

35

கர்னாடக மானிலம் உத்தர் தாலுகாவில் அரபிக்கடலோரம் அமைந்துள்ளது முருடீஸ்வரர் கோவில்.  123 அடி உயர சிவபெருமான் சிலை இங்குள்ளது. அதற்குக் கீழே தலபுராணம் எழுதப்பட்டுள்ளது. 

உயர்ந்த நிலை கோபுரம் சூரியனின் தேர்   கீதோபதேசக் காட்சி  பகீரதனுக்காக வந்த கங்கையைத் தாங்கிய கங்காதரன் சிலை என அழகு கொஞ்சும் சிலை வடிவங்கள். 

பல்வேறு சுதை வடிவங்கள்  திருமுகம் துலங்கும் அமைப்புக்கள்  நீண்ட பிரகாரங்கள் விரிந்த பெரும் பரப்பில் ஆலயம் என்று அமர்க்களமாக அமைந்துள்ளது.  தூய்மையும் பராமரிப்பும் வெகு அருமை. இந்த ஆலயத்தை அனைவரும் அவசியம் ஒரு முறையாவது சென்று பார்ப்பது நல்லது.


No comments:

Post a Comment