Sunday 7 May 2023

இஷ்டி காலம்!

 நாட்காட்டியில் இஷ்டி காலம் என்று குறிப்பிட்டிருப்பதைக் கண்டிருப்பீர்கள். அது என்ன 'இஷ்டி' என்று சிலருக்குத் தெரியாமல் இருக்கலாம். இதோ அவர்களுக்கான விளக்கம்...

இஷ்டி என்பது அமாவாசை அல்லது பௌர்ணமி திதியின் இறுதிப்பகுதியாகும். அதாவது, நான்காம் பாகமாகும். பிரதமை திதியின் முதல் மூன்று பாகமும்கூடிய காலம் இஷ்டி. நேற்று தை அமாவாசை முடிந்ததால், இன்று இஷ்டி காலமாக உள்ளது. இந்த நாளில் நாம் பூஜைகளை மேற்கொண்டால், பூஜைக்குரிய தேவர்கள் அருகிலேயே வந்து சூட்சும ரூபமாக நின்று வணக்கங்களை ஏற்றுக்கொள்வார்கள் என்று ஜோதிட, ஆன்மிக நூல்கள் சொல்கின்றன.

இந்த நாளில் செய்யப்படும் ஹோமங்கள் சக்தி வாய்ந்தவையாக அமையும். இஷ்டி நாளில் செய்யப்படும் தான தர்மங்கள், பன்மடங்கு புண்ணியப் பலன்களைத் தரும். 'இஷ்டி' என்றாலே பூஜை, யாகம் என்றுதான் அர்த்தம். 

'ஓம் இஷ்டி பதயே நமோ நம' என்று குமாரஸ்தவத்தில் முருகப்பெருமானைப் பற்றி குறிப்பிடும்போது சொல்லப்பட்டுள்ளது. பூஜைகளை, யாகங்களை விரும்பி ஏற்பவன் முருகப்பெருமான் என்றே இதற்குப் பொருள். 

இஷ்டி காலத்தில் பூஜைகள், ஹோமங்கள் செய்வது, சகல தேவர்களின் ஆசியைப் பெற்றுத்தரும் என்பதால், இன்றைய நாளில் உங்களின் இஷ்ட தெய்வங்களை வணங்கி வளம் பெறுங்கள்.

No comments:

Post a Comment