Monday 30 November 2015

ஐஸ்வர்யம் அருளும் லக்ஷ்மி கடாக்க்ஷம்!

 
 
ஹிர’ண்யவர்ணாம் ஹரி’ணீம் ஸுவர்ண’ரஜதஸ்ர’ஜாம் |
சந்த்ராம்ஹிரண்ம’யீம்லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||
 
ஸ்ரீமகாலட்சுமி பொன் நிறம் கொண்டவள். மஞ்சள் நிறம் ஸ்வர்ணம், வெள்ளி இவற்றாலான மாலைகளை அணிந்திருப்பாள். சந்திரன் போன்று இருப்பவர்கள் இவளுடைய திருவருளால்தான் பொன், பசுக்கள், குதிரைகள், பணியாட்கள் இவைகளை நிறையப் பெற முடியும்.

ரத, கஜ, துரகம் முதலியவற்றையும் அளிப்பவள். மந்த ஹாஸ முகமுடையவள். சுவர்ண பிரகாரங்களைக் கொண்டது. இவள் பவனம் கருணையுடையவள். வஸ்திரம், ஆபரணம், அழகு இவற்றால் மிகவும் பிரகாசிப்பவள். அனைத்தும் தன்னிடம் நிரம்பியிருப்பதால்  பக்தர்களையும் திருப்திப்படுத்துபவள்.

தாமரை மலரில் அமர்ந்திருப்பவள். தேவர்களால் சேவிக்கத் தகுந்தவள் மிக்க உதாரகுணமுடையவள். இவள் "ஈம்'' என் பீஜாசரத்தை உடையவள். இவள் பக்தர்கள் சரணடையத் தகுந்தவள்.

மகாலட்சுமி சூரியன் போன்று பிரகாசிப்பாள். இவளுடைய தவத்திற்காகவே வில்வமரம் தோன்றியது. இவளை உபாசனை செய்ய குபேரனும் அவன் கஜானா அதிபதியான மணிபத்ரனும், சிந்தாமணி ரத்னத்துடன் வீடு தேடி வந்தடைவர். இவள் வருவதற்கு வழியாகின்றது சுகந்தம்.

இவள் செழிப்பைத் தருபவள். கோமயத்தில் (பசு மூத்திரம்) வாசம் செய்பவள். சர்வ தேவதைகளுக்கும் இவளே ஈச்வரி. ஆசையயை நிறைவேற்றி, வாக்குச் சத்தியத்தை அளித்து, ரூபமளித்து, உண்ணும் பொருட்களுக்கு ருசியையும் அளிப்பவள்.

மகாலட்சுமியின் குமாரர் கர்தமர். சிக்லீதர் என்பவரும் இவள் அன்புக்குமாரரே. இவள் கையில் பிரம்பு வைத்திருப்பாள். செங்கோல் செலுத்தும் ராஜலட்சுமி இவள்.



பதினான்கு மன்வந்திரங்களிலும் லட்சுமி பதினான்கு விதமாக அவதாரம் எடுத்திருக்கிறாள்.



1. ஸ்வாயம்பு மன்வந்திரத்தில் பிருகுவின் மகள் பார்கவியாக அவள் அவதரித்தாள்.
2. ஸ்வாரோசிஷ மன்வந்திரத்தில் நெருப்பிலும்,
3. ஒளலத்தம மன்வந்திரத்தில் நீரிலும்,
4. தாமச மன்வந்திரத்தில் நீரிலும்,
5. சாட்சூச மன்வந்திரத்தில் தாமரையிலும்,
6. ரைவத மன்வந்திரத்தில் வில்வமரத்திலும்,
7. வைவஸ்த மன்வந்திரத்தில் பாற்கடலிலும் தோன்றியவள் லட்சுமி.
இப்போது நடப்பது வைவஸ்த மன்வந்திரம். 
 
இந்த பெருமைகளையெல்லாம் பெற்ற ஸ்ரீமகாலட்சுமி நம்மை விட்டு அகலாதிருக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கப்படுகின்றாள்.

 ஸ்ரீசுக்தத்தை தினமும் 16 முறை ஐபம் செய்ய மகாலட்சுமியின் பேரரருள் முழுமையாகக் கிடைக்கும். 
 
 

No comments:

Post a Comment