Wednesday 29 March 2017

நீலபதாகா நித்யா தேவி! (11)

ஒளிரும் நீலக்கல்லைப் போன்ற நிறத்தையுடையவள். ஐந்து திருமுகங்களும், பத்து திருக்கரங்களும் கொண்டவள். ஒவ்வொரு திருமுகமண்டலமும் முக்கண்களால் அருள் வெள்ளத்தைப் பாய்ச்சுகின்றன. பத்மாசனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் அருட்காட்சி தரும் அன்னையை முத்துக்களும், மாணிக்கங்களும் இழைக்கப்பட்ட அணிகலன்கள் அழகு செய்கின்றன. 

செந்நிற பட்டாடை அணிந்த தேவியின் சிரங்கள் கிரீடங்களால் ஜொலிக்கின்றன. ரத்தினக் கற்கள் பதித்த மேகலையும், பாதங்களில் தண்டையும், தோள் வளைகளும், கை வளையல்களும், அன்னையின் அழகுக்கு அழகு செய்கின்றன.தன் பத்து கரங்களிலும் பாசம், அங்குசம், வஜ்ராயுதம், கொடி, வாள், கேடயம், அம்பு, வில் ஆகியவற்றை ஏந்தி அபய-வரத முத்திரை தரித்தவள். ஆயுதபாணியாய் காட்சியளிக்கும் இவள் எல்லாவற்றிலும் வெற்றி அளிப்பவள்.

 சலனமும், குழப்பமும் பின்னிப் பிணைந்து கிடப்பதுதான் மனித வாழ்க்கை. ஆனால், இவையனைத்தையும் புறந்தள்ளி ஒன்றுமேயில்லாததாக்கி வெற்றிதரக் கூடிய அம்பிகை இந்த நீலபதாகா. 

அம்பிகையின் கண்கள் எல்லா விஷயங்களிலும் நமக்கு வெற்றி தேடித் தருவதாக உள்ளது. தேவியின் கடாக்ஷ வீக்ஷண்யத்தை த்யானம் செய்பவர்களுக்கு ஸம்ஷோபனம் போன்ற எட்டு வித ஸித்திகளும் ஏற்படும். நம்மைப் போன்ற பாமர மக்களுக்கு வேண்டியது அவளுடைய கமல நயனத்தின் கருணை கனிந்தொழுகும் பார்வைதான். குவளையைப் பழிக்கும் நயனங்கள் உடையாய்! குவலயம் காக்கும் அருள்விழி போற்றி!இத்தேவியின் சாயலைப் போன்றே பல்வேறு சக்திகள் அவளைச் சூழ்ந்துள்ளனர். 

இந்த அம்பிகையின் கருணை பிறவியிலேயே பேச்சற்றவரையும் பாட வைக்கும். திருநாம ஜபம் பக்தர்களை பாகாய் உருகச் செய்யும். அழகுத் திருவடிகள் சம்சாரம் என்னும் கடலைக் கடக்க உதவும். நல்லோர்களைக் காத்து தீயோர்களை அழிக்கும் பேரரசி இவள். பக்தர்களைக் கந்தன், கணபதி போன்ற தன் குழந்தைகளைக் காப்பது போல் காப்பவள். பரமனின் வாழ்க்கைத் துணையாக விளங்கும் இவள் நம்மையும் காத்தருள் புரிவாள். 

இவளின் திருவருளால் ஒரு நொடியில் நம் வாழ்வு மேன்மையுறும் என்பது உறுதி. அம்பிகையின் பாத கமலங்கள் தம் பக்தர்களுக்கு எதைத்தான் செய்யாது? ஆதி சங்கர பகவத்பாதாள் ஸௌந்தர்யலஹரி 38 பாடலில் ‘ஸமுன் மீலத் ஸம்வித் கமல மகரந்தைக ரஸிகம்’ என்கிறார். 

நன்றாய் மலர்ந்த ஞானத் தாமரையின் மகரந்தம் ஒன்றையே விரும்பி அனுபவிப்பவர்கள், அவர்கள் மனதாகிய மானஸஸரஸில் நீந்தும் அன்னங்களாக தேவ, தேவியரை ‘ஹம்’ என்று சிவனையும் ‘ஸ’ என்று சக்தியையும் உபாசிக்கும் மகான்கள் ஹம்ஸர்கள், பரமஹம்ஸர்கள் என்று சிறப்புப் பெயர் பெறுகிறார்கள்.

தேவி உபாசனையின் உயிர்நாடியே ‘ஹம்ஸ ஹம்ஸாய வித்மஹே பரம ஹம்ஸாய தீமஹி தன்னோ ஹம்ஸ: ப்ரசோதயாத்’ எனும் ஹம்ஸ காயத்ரியே ஆகும். ‘‘ஹம்ஸப் பறவை தண்ணீரிலேயே வாழ்ந்தாலும் அதன் உடம்பில் தண்ணீர் ஒட்டுவதில்லை. அதே போல் ஹம்ஸர்களும் உலகின் நடுவிலேயே இருந்தாலும், தோஷம், ஸ்பரிசம் எதுவும் அவர்களைத் தொடுவதில்லை. நீரில் வாழும் ஹம்ஸங்கள் மாலைப் பொழுதில் கூம்பும் தாமரை மலர்களைப் பரிகாசம் செய்கின்றன. தாமரை மலர்களைப் பழிப்பதும், பார்ப்பதும் ஹம்ஸப் பறவைகளுக்கு சுலபம். 

தேவியின் திருவடித் தாமரைகளோ பரமஹம்ஸர்களுக்கும் அரியவை. ஜடம் எனும் நீரிலேயே தாமரை இருக்கிறது. தேவியின் திருவடித் தாமரைகளோ தம்மை அண்டிய பக்தர்களின் 
அறியாமையைப் போக்குகிறது. தோஷம் என்ற மாலை நேரத்தோடு தாமரை மலர் வாடிவிடும். ஆனால், தேவியின் திருவடித் தாமரைகளுக்கோ தோஷங்கள் எனப்படும் குற்றங்களின் சம்பந்தமே கிடையாது,’’ என்கிறார். அவ்வளவு மகிமை வாய்ந்த தேவியின் திருவடித் தாமரைகளைப் பற்றிக் கொண்டு சகல நலங்களையும் வளங்களையும் பெறலாம்.

வழிபடு பலன்
எடுத்த செயல்களில் வெற்றி, தேர்வுகளில் வெற்றி.
நீலபதாகா காயத்ரி
ஓம் நீலபதாகாயை வித்மஹே மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.

மூல மந்த்ரங்கள்
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ஹ்ரீம் ப்ரேம் ஸ்ரூம்
க்ரோம் ஓம் க்லீம் ஐம் ப்லூம் நித்ய 
மதத்ரவே
ஹும் ப்ரேம் ஹ்ரீம்.
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ஹ்ரீம் ப்ரேம் ஸ்ரூம்
ஓம் ஆம் க்லீம் ஐம் ப்லூம் நித்யமதத்ரவே ஹும் 
ப்ரேம் ஹ்ரீம்.

ஓம் ஹ்ருத் காமேஸ்வரி காமாங்குசே காமபதாதிகே பகவதி நீலபதாகே பகவதி நமோஸ்துதே பரமகுஹ்யே ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் மதனே மதனதோப த்ரைலோக்யமாவேசய ஹும் பட் ஸ்வாஹா. 
த்யான ஸ்லோகங்கள்
நீலாம்பராம் நீல சரீர காந்திம் சத்ரோர் ஜயே நீலபதாககதாயாட்யாம் 

நீலாம்பரஸ்ய ப்ரியஸோதரீம் தாம் ஏகார ரூபாம் 
ப்ரணமாமி நித்யாம் 
பஞ்ச வக்த்ராம் த்ரிநயனாம் அருணாம் சுக தாரிணீம்
தசஹஸ்தாம்லஸன் முக்தாம் ப்ரயாப்ரண 

மண்டிதாம்
நித்ய நீலமேக ஸமப்ரக்நயனாம் தூம்ராக்ஷி 
சத்ருசப்ரபாம்
நீலபுஷ்ப அஸ்த்ரோஜ்பேதாம் த்யாயேதாம் 
நீலபதாகினீம்.

இந்த்ர நீல நிபாம் பாஸ்வன் மணிமௌலி 
விராஜிதாம்
ரத்ன ஸ்தபக ஸம்பின்னதேஹாம் சாரு 
ஸ்மிதானனாம்
பாசம் பதாகம் சர்மாஹி ஸாங்கம் சாபம் வரம் 
கரை: ஷிதை:

அங்குசம் சதத: ஸக்தீம் கட்கம் பாணம் ததாஅபயம்
ததானாம்தக்ஷிணை ஹஸ்தை: 
ஸர்வாபரண பூஷிதை:
ஆகாரவர்ண வேஷாட்யா பாண்யா
 யுத விபூஷணை:
ஸக்தி வ்ருந்தர்வ்ருதாம் த்யாயேத் தேவி நித்யார்ச்சன க்ரமே.

சக்தாம் ரக்தாம்ஸுக ப்ரௌடாம் நாநாரத்ன விபூஷிதாம்
இந்த்ர நீல ஸ்புரந் நீலபதாகாம் கமலேஸ்திதாம்
காமக்ரைவேய ஸம்லக்ன ஸ்ருணீ ச வரதாபயே
தததீம் பரமேஸானீம் த்ரைலோக்யாகர்ஷண க்ஷமாம்
ஸுப்ர வஸ்ராஸனாம் சந்த்ரகுந்த ஸமத்யுதிம்
ஸுப்ரஸன்னாம் ஸஸிமுகீம் நானாரத்ன விபூ ஷிதாம்
அனந்த முக்தாபரணை: ஸ்ரவந்தி மம்ருத 
த்ரவம்

வரதாபய ஸோபாட்யாம் ஸ்மரேந்நீல பதாகினீம்
ஏவம் நித்யாம் மஹாதேவீம் சிந்தயேத் தேஸிகோத்தம: 
ப்ரஹ்மேந்த்ர ருத்ர, கமலேச தினேச சந்த்ர
ஸாங்கேய ஸமாஜ முகார்ச்சித திவ்ய பாதாம்
தேவீம் த்ரிலோக ஜனனீம் த்ரிகுண ஸ்வரூபாம்
த்யாயாமி நீல சிகுராம் தளிநாக புஜ்ஜாம். 

ஸ்ரீஸுக்தநித்யா ஸ்லோகம்ஸ்ரீஸுக்த ஸம்ஸ்துதாம் ஏகார ப்ருக்ருதிக ஜ்யோத்ஸ்னா கலாத்மிகாம் ஸ்ரீநீலபதாகா நித்யா ஸ்வரூபாம் ஸர்வ ரக்ஷாகர சக்ர ஸ்வாமினீம் ஸ்ம்ருத்யாகர்ஷிணீ சக்தி ஸ்வரூபாம் ஸ்ரீபத்மநாப வக்ஷஸ்தல கமலவாஸினீம் ஸர்வ மங்கள தேவதாம் ஞானலக்ஷ்மீ ஸ்வரூப நீலபதாகா நித்யாயை நம:
வழிபட வேண்டிய திதிகள்சுக்ல பக்ஷ ஏகாதசி/க்ருஷ்ணபக்ஷ பஞ்சமி 
(ஏகாதசி திதி ரூப நீலபதாகா நித்யாயை நம:)
நைவேத்யம்
பசுந்தயிர்.

பூஜைக்கான புஷ்பங்கள்
நீல வர்ண புஷ்பங்கள்.
திதி தான பலன்
கோதுமையால் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை தேவிக்கு நிவேதித்து தானம் செய்தால் அன்னையின் இன்னருள் கிட்டும்.
பஞ்சோபசார பூஜை
ஓம் நீலபதாகா நித்யாயை கந்தம் கல்பயாமி நம: 
ஓம் நீலபதாகா நித்யாயை தூபம் கல்பயாமி நம: 
ஓம் நீலபதாகா நித்யாயை தீபம் கல்பயாமி நம:  
ஓம் நீலபதாகா நித்யாயை நைவேத்யம் கல்ப யாமி நம:  
ஓம் நீலபதாகா நித்யாயை கற்பூர நீராஞ்ஜனம் தர்சயாமி நம: 
இத்திதியில் பிறந்தோரின் குண நலன்கள்
இத்திதியில் பிறந்த அன்பர்கள் முன்னோர்

களிடத்தும், தேவதைகளிடத்தும் பக்தி செலுத்துபவர்கள். எடுத்த செயலை முடிப்பதில் முயற்சியுடையவர்கள். வெற்றி பெறுவதில் நாட்டம் உடையவர்கள். செல்வந்தர்கள். அரசனைப்போல் செயல் புரிபவர்கள். இவர்கள் இந்த அன்னையின் மூலமந்திரத்தை தினமும் 45 முறை பாராயணம் செய்து வந்தால் தீயவைகளிலிருந்து விடுபடலாம்.

யந்திரம் வரையும் முறைசந்தன குங்குமக் கலவையால் முக்கோணம், அறுகோணம், எட்டு வட்ட இதழ்கள், எண்கோணம், இருவட்டங்கள், நான்கு வாயில்களைக் கொண்ட இரு சதுரங்களைக் கொண்ட யந்திரம் வரைந்து பூஜிக்கவும். இந்த மகோன்னதமான யந்திரத்தில் தேவியின் ஆயுதங்கள், ஸப்தமாதர்கள், ஆறாதார அம்பிகைகள், ஸுமுகி, ஸுந்தரி, ஸாராஸ்ரீ, ஸுமனா, விஹ்வலா, ஆகர்ஷிணீ, லோலா, நித்யா போன்றோர் உறைகின்றனர். 

இத்திதிகளில் செய்யத்தக்கவைதிருமணம் செய்தல், பயிரிடுதல், வாணிபம் செய்தல், உபவாசம் இருத்தல், சிற்பவேலைகள் செய்தல், அணிகலன்கள் செய்தல் போன்றவற்றை இத்திதியில் செய்யலாம். 
அகத்தியர் அருளிய சுக்லபக்ஷ ஏகாதசி திதி துதி ஏகாதசியாமீதானத்துக்குள்ளேஇருந்தவுனை மயிர்பாலம் ஏறிக்கண்டு

சாகாத கால்வழியே ஓடிச்சென்று
தப்பாமல் படித்த பின் எங்கே போவாய்
வேகாத தலையை விட்டு வெளியில் போக
வேறுகதி உனையல்லால் எனக்கெங்குண்டு!
தோகாய் நீ என்னுள் இருந்து எனைக் காப்பாய்
சோதியே மனோன்மணியே! சுழுமுனை வாழ்வே!

மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி,
ஆக்ஞை என்ற ஆறாதாரங்களில் ஒவ்வொரு ஆதாரத்திலும் பொருந்தின 
தேவதைகளை தியானித்து சமாதியடைதலே ஆதார யோகம். 

அகத்தியர் அருளிய க்ருஷ்ணபக்ஷ ஏகாதசி நித்யா துதி
உன்னுடைய கிருபை வைத்துத் தவத்தைப்  பெற்றே
ஒன்றாகி இரண்டாகி ஆறுமாகி
தன்னுடைய தீக்ஷை வைத்து ஞானம் தந்த
சங்கரியே சாம்பவியே சாகாக் காலே

கன்னிகையே மதுரசமான தேவி
கற்பகமே கனகப்ரகாசமான
துன்னிதிரு சுழுமுனையி லாடுந்தேவி
சோதி மனோன்மணித்தாயே சுழிமுனை வாழ்வே. 
மாத்ருகா அர்ச்சனை
ஓம் நீலபதாகாயை நம:
ஓம் நீலாயை நம:
ஓம் மாயாயை நம:
ஓம் ஜகத்ப்ரியாயை நம:
ஓம் ஸஹஸ்ரவஜ்ராயை நம:

ஓம் பத்மாக்ஷ்யை நம:
ஓம் பத்மின்யை நம:
ஓம் ஸ்ரியை நம:
ஓம் அநுத்தமாயை நம:
ஓம் திவ்ய விக்ரஹாயை நம:
ஓம் திவ்ய போகாயை நம:
ஓம் திவ்யமால்யானுலேபின்யை நம:

ஓம் ஸுக்லாயை நம:
ஓம் அச்சவஸனாயை நம:
ஓம் ஸௌம்யாயை நம:
ஓம் ஸர்வாதுகுஸுமோசிதாயை நம:
ஓம் ஸர்வைஸ்வர்ய குணாபேதாயை நம:

ஓம் ப்ரணவாக்ராயை நம:
ஓம் அக்ர ஸம்பவாயை நம:
ஓம் வ்யஜ்ஜனாயை நம: 
ஓம் வ்யஜ்ஜன்யை நம:
ஓம் வ்யக்தாயை நம:
ஓம் ஸர்வ வர்ணானுவர்தின்யை நம:

ஓம் ஜகன் மாத்ரே நம:
ஓம் அபயகர்யை நம:
ஓம் பூதிதாத்ர்யை நம:
ஓம் ஸுதுர்லபாயை நம: 
ஓம் காமின்யை நம:
ஓம் தண்டின்யை நம:
ஓம் தண்டசாயை நம:

ஓம் கட்கமுத்ரபாணின்யை நம:
ஓம் ஸஸ்ராஸ்த்ர தர்ஸின்யை நம:
ஓம் பீஜாயை நம:
ஓம் விபீஜாயை நம:
ஓம் பீஜின்யை நம:
ஓம் பராயை நம:
ஓம் வாசஸ்பதிப்ரியாயை நம:

ஓம் தீக்ஷாயை நம:
ஓம் பரீக்ஷாயை நம:
ஓம் ஸிவஸம்பவாயை நம:
ஓம் ராஜஸ்யை நம:
ஓம் தாமஸ்யை நம:
ஓம் ஸத்வாயை நம:

ஓம் ஸத்வோதிக்தாயை நம:
ஓம் விமோஹின்யை நம:
ஓம் அதீதாநாகத க்ஞானாயை நம:
ஓம் வர்தமானோபேதேஸின்யை நம:

ஓம் வ்யப்தோபதேஸின்யை நம:
ஓம் ஸம்விதே நம:
ஓம் ஸத்வ வேத்யாயை நம:
ஓம் தராதராயை நம: 


No comments:

Post a Comment