Wednesday 29 March 2017

ஜ்வாலாமாலினி நித்யா! 14

ஜ்வாலாமாலினி நித்யா இந்த நித்யாதேவி பிரளய கால அக்னியைப் போன்ற தேக காந்தியும், புன்முறுவல் தவழும் ஆறு திருமுகங்களும், பன்னிரெண்டு திருக்கரங்களும் கொண்டருள்பவள். தன் திருக்கரங்களில் முறையே பாசம், கத்தி, வில், கதை, சூலம், வரத முத்திரை, அங்குசம், கேடயம், பாணம், அக்னி, மழுவோடு அபய முத்திரையையும் தரித்திருப்பவள். 

ஆற்றலின் வடிவமாகத் திகழ்பவள். பத்மம் எனும் தாமரையின் மேல் நின்ற திருக்கோலம் கொண்டவள். அன்னையின் திருமுடிகளில் ஒளிமிக்க ரத்னாபரணங்கள் இழைத்த மகுடங்கள் மின்னுகின்றன. செவிகளில் தோடுகளும், கழுத்தில் ரத்னங்கள் இழைக்கப்பட்ட பளிச்சிடும் பதக்கங்கள், காசு மாலை, தோள்வளை, கை வளையல்கள், பாதங்களில் தண்டை, கொலுசு என ஸர்வாபரணபூஷிதையாய் பேரழகு பூத்துக் குலுங்கும் வடிவினளாகத் திகழ்கிறாள் இந்த நித்யா தேவி.

அனைத்து உயிர்களுக்கும் ஆதார சக்தியாக ‘‘ஜ்வாலா’’ பீடத்தில் ஸித்திதா எனும் மாபெரும் சக்தியாகத் திகழ்ந்து அம்பிகையை ஒளி வடிவில் கண்டு மகிழும் ஞானிகளுக்கும், யம தர்மராஜனின் பாசக்கயிற்றில் சிக்கி ஜீவனை இழுக்கும்போது அன்னையின் பேரொளியில் கலந்திட விரும்பும் அன்பர்களுக்கும் அருள்பவள்.

இந்த அம்பிகையின் அருள் எனும் மழையால் நம் துயரங்களெல்லாம் தீயிலிட்ட பஞ்சு போலாகும். நம் வினைகளையெல்லாம் தீர்க்கும் வித்தகி. வேண்டும் வரங்களை வாரிவாரி வழங்கி நம்மை ஆட்கொள்ளும் நாயகி. வரப்ரசாதி. முறையான வழியில் நிறைந்த வருவாயும் லாபமும் அளிக்கக் கூடியவள் இத்தேவி. 

பகை என்று ஏதும் இல்லாததாக்கி அனைவரையும் வல்லமை உடையவராக்கும் சக்தி படைத்தவள். தன்னை நிகர்த்த சக்தி கூட்டங்கள் சூழ தன்னைப் பணிந்த அனைவரையும் இன்புற்று வாழ வரம் தரும் தேவியின் பாத கமலங்களை சரணடைவோம். பண்டாசுரனுடன் லலிதா தேவி நடத்திய யுத்தத்தில் இந்த நித்யா தேவி 100 யோஜனை விஸ்தாரம் நீளமும், 30 யோஜனை விஸ்தாரம் அகலமும் 30 யோஜனை விஸ்தாரம் உயரமும் உள்ள ஒரு நெருப்புக் கோட்டையை சிருஷ்டித்த வல்லமை மிக்கவள். 

அவ்வளவு வல்லமை மிக்க தேவியின் கருணை பக்தர்களுக்காக  எதைத்தான் செய்யாது?வழிபடு பலன்இந்த அம்பிகையைத் துதிப்போர்க்கு தனாகர்ஷணமும், ஸர்வ வசியமும், ஸ்த்ரீ புருஷ சேர்க்கையும், துக்க நாசனமும் சித்திக்கும். தாக்க வரும் தீமைகளும், விரோதங்களும் சூரியனைக் கண்ட பனி போல் விலகும். சகல தேவதா ப்ரீதி சித்திக்கும்.

ஜ்வாலாமாலினி காயத்ரி
ஓம் ஜ்வாலாமாலின்யை 
வித்மஹே
மஹாஜ்வாலாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.

மூலமந்த்ரம்
ஓம் நமோ பகவதி ஜ்வாலாமாலினி
தேவ தேவி ஸர்வ பூத
ஸம்ஹாரகாரிகே ஜாதவேதஸி ஜ்வலந்தி
ஜ்வல ஜ்வல ப்ரஜ்வல
ப்ரஜ்வல ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ரரரரர
ரர ஜ்வாலாமாலினி ஹும்
பட் ஸ்வாஹா. 

த்யான ஸ்லோகங்கள் 
ஜ்வல ஜ்வல நஸம்காசாம் 
மாணிக்ய முகுடோஜ்வலாம்
ஷட் வக்த்ராம் த்வாதச புஜாம் 
ஸர்வாபரண பூஷிதாம்

பாசாங்குஸௌ கேட கட்கௌ 
சாப பாண கதா தரௌ
குவவந்நிவ சாபிநீ ததாநம் கரபங்கஜை:
ஸ்வஸமாநாபி ரபித: சக்திபி: 
பரிவாரிதாம்

சாருஸ்மித லஸத்வக்த்ர ஸரோஜாம்
 த்ரீஷணாத்விதாம்
த்யாத்வைவ முபசாரைஸ் 
தைரர்ச்சயேத்தாம்து நித்ய ச:
பாலாக்ஷாப்ஜ பவேந்த்ர 

விஷ்ணுநமிதாம் பட்கார 
வர்ணாத்மிகாம்
மாலாம் பக்த ஜனார்த்தி மங்களகராம் பாக்யப்ரதாம் ச்யாமளாம்
மூலாதாரகதாம், த்ரிலோக ஜனனீம் முக்திப்ரதான
 வரதாம்

ஜ்வாலாமாலினீம் நமாமி சிரஸாம் ஜாம்பூனதாபாம் சிவாம்.
த்யாயேத் தேவீம் மஹாநித்யாம் ஸ்வர்ணாபரண பூஷிதாம்
உத்யத் வித்யுல்லதா காந்தி ஸ்வணீம்ஸுக விராஜிதாம்
மஹா ஸிம்ஹாஸன ப்ரௌடாம்
 ஜ்வாலாமாலாம் கராவினீம்
அரிஸங்கௌ கட்க கைடௌத்ரி
ஸூலம் டமரும் ததா

பானபாத்ரம் ச வரதம் தததீ ஸத்ரு 
நாஸினீம்.
உத்யத் வித்யுல்லதா காந்தி 
ஸர்வாபரண பூஷிதாம்
மஹாஸிம்ஹாஸன ப்ரௌடாம்

 ஜ்வாலாமாலாம் கராகிணீம்
அரிஸங்கௌ கட்க கேடௌ 
த்ரிஸூலம் டமரும் ததா
பானபாத்ரம் ச வரதம் தததீம் 
ஸம்ஸ்மரேத் யஜேத்
யஸ்ய: ஸ்மரண மாத்ரேண
 பாலயந்தே பயாபஹ:

ஸுக்த ஜ்வாலாமாலினி 
நித்யா ஸ்லோகம்
 ஸுக்த ஸம்ஸ்துதாம் ஓளகார ப்ரக்ருதிக, அங்கதா கலாத்மிகாம்
ஜ்வாலாமாலினி நித்யா ஸ்வரூபாம் ஸர்வ ஸௌபாக்ய தாயக
சக்ர ஸ்வாமினீ ஆத்மாகர்ஷிணீ ஸக்தி ஸ்வரூபாம்

 வாஸுதேவ வக்ஷஸ்தல கமல வாஸினீம் ஸர்வமங்கள
தேவதாம் ஸாம்ராஜ்ய லக்ஷ்மி 
ஸ்வரூப ஜ்வாலாமாலினி
நித்யாயை நமஹ 

வழிபட வேண்டிய திதிகள்
ஸுக்ல பக்ஷ சதுர்த்தசி / க்ருஷ்ண 
பக்ஷ த்விதியை
(சதுர்த்தசி திதி ரூப ஜ்வாலாமாலினி நித்யாயை நமஹ)
நைவேத்தியம்

சத்துமாவு
பூஜைக்கான புஷ்பங்கள்
செவ்வரளி
திதிதான பலன்
சத்துமாவை தேவிக்கு நிவேதித்து தானம் அளித்தால் நோய் அகலும். சிவ கடாக்ஷம் கிட்டும்.
பஞ்சோபசார பூஜை

ஓம் ஜ்வாலாமாலினி நித்யாயை கந்தம் கல்பயாமி நமஹ
ஓம் ஜ்வாலாமாலினி நித்யாயை தூபம் கல்பயாமி நமஹ
ஓம் ஜ்வாலாமாலினி நித்யாயை தீபம் கல்பயாமி நமஹ
ஓம் ஜ்வாலாமாலினி நித்யாயை நைவேத்யம் கல்பயாமி நமஹ
ஓம் ஜ்வாலாமாலினி நித்யாயை கற்பூர நீராஞ்ஜனம் தர்சயாமி நமஹ

இத்திதியில் பிறந்தோரின் குண நலன்கள் சற்றே முன்கோபம் உடையவர்கள். மனோ வசியமுடையவர்கள். பெரும்பாலும் நாத்திகர்கள். இயல்பாகவே நல்ல தோற்றப் பொலிவைக் கொண்டிருப்பவர்கள். தங்களுடைய செயல்கள் எல்லாவற்றையும் வெற்றிகரமாக நடத்திக் கொள்ளும் திறமையை இயல்பாகப் பெற்றிருப்பர். தங்களை எதிர்ப்பவர்களையும் பகைப்பவர்களையும் வென்று தம்முடைய ஆற்றலை எளிதாக வெளிப்படுத்தும் வெற்றியாளர்களாகத் திகழ்பவர்கள். 

யந்திரம் வரையும் முறைசந்தன குங்குமக் கலவையால் எட்டிதழ்கள், நான்கு வாயில்களுடைய இரு சதுரங்கள் கொண்ட யந்திரம் வரையவும். முக்கோண மூலைகளில் இச்சா, க்ரியா, ஞான சக்திகள் பூஜிக்கப்படவேண்டும். ஷட்கோண மூலைகளில் டாகினி, காகினி முதலிய ஆறாதார அம்பிகைகளையும், அஷ்ட கோணங்களில் தேவியின் சக்திகளான கஸ்மாரா, விஸ்வகபாலா, லோலாக்ஷீ, லோலஜீவிகா, ஸர்வபக்ஷா, ஸஹஸ்ராக்ஷீ, நி:ஸங்கா, ம்ஹ்ருதிப்ரியா, போன்ற சக்திகளையும் எட்டு தளங்களில் அசிந்த்யா, அப்ரமேயா, பூர்ணரூபா, துராஸதா, ஸர்வகா, ஸித்திரூபா, பாவனா, ஏகரூபிணி போன்ற சக்திகளையும் பக்தியுடன் த்யானித்து பூஜிக்க வேண்டும். 

அகத்தியர் அருளிய சுக்ல பக்ஷ  சதுர்த்தசி ஜ்வாலாமாலினி நித்யா துதி 
சதுர்த்தசியான பதினான்காய் நின்ற
தற்பரத்தி சிற்பரத்தி சற்கோணத்தில் 
குதித்தோடிப் போகாமல் எட்டில் சேர்ந்து
கும்பகமாய்த் தம்பணத்துள் கூட்டியாடி
விதியான பிரமலபி வளரவென்றும்
விளங்குவுமே செய்வதுதான் விந்தை தாயே
துதிக்கறியாப் பாலனெனைக் காத்தல் வேண்டும்
சோதியே மனோன்மணியே சுழிமுனை வாழ்வே. 

சற்கோணம் தேவி வீற்றிருக்கும் நவகோணம் ‘‘ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே’ - அபிராமி அந்தாதி. நீ குடியிருக்கும் நவகோணத்தை விட்டு வந்து நான் செய்யும் அஷ்டாங்க யோகத்தில் சேர்ந்து உன் திருவடிகளில் என்னை சேர்த்துக் கொள் (அஷ்டாங்க யோகம் = யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், த்யானம், தாரணை, சமாதி)

அகத்தியர் அருளிய க்ருஷ்ணபக்ஷ சதுர்த்தசி ஜ்வாலாமாலினி நித்யா துதி
சேமமது தரவெனக்கு நேரே வாவா
திரிபுரையே சாம்பவியே மணப்பது வாணி
காமனையும் வாமனையும் 
படைத்த தாயே

கன்னிகையே வளர்பிறையே கனக மாதா
நீ மறைவாய் நின்றதென்ன நினைவேயம்மா
நீடுழி காலமெல்லாம் நினைவேயாகி
க்ஷேமகலை போலாகி உருவம் காட்டும்
சோதி மனோன்மணி சுழிமுனை வாழ்வே. 

மாத்ருகா அர்ச்சனை
ஓம் ஜ்வாலின்யை நமஹ
ஓம் மஹாஜ்வாலாயை நமஹ
ஓம் ஜ்வாலாமாலாயை நமஹ
ஓம் மஹோஜ்வலாயை நமஹ
ஓம் த்விபுஜாயை நமஹ

ஓம் ஸௌம்ய வதனாயை நமஹ
ஓம் க்ஜான புஸ்தகதாரிண்யை நமஹ
ஓம் கபர்தின்யை நமஹ
ஓம் க்ருதாப்லாஸாயை நமஹ
ஓம் ப்ரஹ்மாண்யை நமஹ
ஓம் ஸ்வாத்ம வேதின்யை நமஹ

ஓம் ஆத்மஞானாயை நமஹ
ஓம் அம்ருதாயை நமஹ
ஓம் நந்தாயை நமஹ
ஓம் நந்தின்யை நமஹ
ஓம் ரோமஹர்ஷிண்யை நமஹ

ஓம் காந்த்யை நமஹ
ஓம் கால்யை நமஹ
ஓம் த்யுத்யை நமஹ
ஓம் மத்யை நமஹ
ஓம் பீக்ஷயேச்சாயை நமஹ
ஓம் விஸ்வகர்ப்பாயை நமஹ

ஓம் ஆதார்யை நமஹ
ஓம் ஸர்வ பாலின்யை நமஹ
ஓம் காத்யாயன்யை நம:நமஹ
ஓம் காலயாதாயை நமஹ
ஒம் குடிலாயை நமஹ

ஓம் அனிமேக்ஷிக்யை நமஹ
ஓம் மாத்ரே நமஹ
ஓம் முஹூர்த்தாயை நமஹ
ஓம் அஹோராத்ர்யை நமஹ
ஓம் த்ருட்யை நமஹ

ஓம் கால விபேதின்யை நமஹ
ஓம் ஸோமஸூர்யாக்னி மத்யஸ்தாயை நமஹ
ஓம் மாயாத்யாயை நமஹ
ஓம் ஸுநிர்மலாயை நமஹ
ஓம் கேவலாயை நமஹ
ஓம் நிக்ஷ்கலாயை நமஹ

ஓம் ஸுத்தாயை நமஹ
ஓம் வ்யாபின்யை நமஹ
ஓம் வ்யோமவிக்ரஹாயை நமஹ
ஓம் ஸ்வச்சந்த பைரவ்யை நமஹ
ஓம் வ்யோமாயை நமஹ

ஓம் வ்யோமாதீதாயை நமஹ

ஓம் பதேஸ்தீதாயை நமஹ
ஓம் ஸ்துத்யை நமஹ
ஓம் ஸ்தவ்யாயை நமஹ
ஓம் ந்ருத்யை நமஹ

ஓம் பூஜ்யாயை நமஹ
ஓம் பூஜார்ஹாயை நமஹ
ஓம் பூஜகப்ரியாயை நமஹ


No comments:

Post a Comment