Friday 7 April 2017

மங்களங்கள் பெருக்கும் மானஸரோவர்!

51 சக்தி பீடங்கள் - 50

திபெத்  மானஸரோவர் ஏரி நீல நிறமாக அருட்காட்சியளிக்கிறது. ஆதிசங்கரர் தரிசித்த சக்தி பீடங்களுள் இப்பீடம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்தத் தடாகமே  தேவியாக வழிபடப்படுகிறது. இது இமாலயத்தில் உள்ளதாலேயே சிறப்பாகக் கருதப்படுகிறது. இந்த தடாகத்தின் நீர் உலகிலேயே மிகமிகத் தூய்மையானது.  இவ்வுலகில் தேவர்கள் மகிழ மானஸா எனும் இப்பீடத்தில் தாக்ஷாயணியாக தேவி விளங்குகிறாள். கருணையே வடிவான இவ்வன்னை தாங்க முடியாத  வேதனையில் வருத்தும் உயிர்களை அணைத்து ஆதரிப்பவள். உள்ளத்தில் புகும் பயனற்ற தீய குணங்களை நீக்குபவள். ஆதரவுடன் நல்ல உபதேசங்களைச்  செய்து மனித மனங்களில் பேதமற்று ஞானதீபத்தை ஏற்றுபவள். சோதனைகளை வெல்ல ஆற்றல் தருபவள். சாதனைகளைச் செய்ய அருள் பொழிபவள். இந்த  அன்னையை மனம் கசிந்து அன்புடன் பாடி நாத வெள்ளத்தைப் பெருக்க பேரின்பத்தைத் தருபவள். தாக்ஷாயணி அன்னையைப் பணிந்து அனைத்து நலன்களையும்  பெறுவோம். 

திபெத் என்ற சொல்லுக்கு ‘த்ரிவிஷ்டபம்’ என்ற சமஸ்கிருதப் பெயர் உண்டு. அதன் பொருள் சொர்க்கம் எனப்படும். மகாபாரதத்தில் இப்பகுதி தேவகுலம் என்று  குறிப்பிடப்பட்டுள்ளது. அர்ஜுனன் தவம் செய்த இடம் இதுவே. தவம் முடிந்து அர்ஜுனனை அழைத்துப் போக இந்திர ரதம் இவ்விடத்திற்குத்தான் வந்ததாம்.  எனவேதான் இவ்விடம் சொர்க்க பூமியாக கருதப்படுகிறது. இந்த மகாபுனிதமான ஏரியில் தேவகன்னிகைகள் குளிப்பதாகக் கூறப்படுகிறது. அன்னை இங்கு  மகாசக்தியாக விளங்குகிறாள். இமயமலையின் மணி முடியாம் கயிலயங்கிரிக்கு அருகில் இப்பீடமான மானஸரோவர் அமைந்துள்ளது. தட்சனின் மகள்  தாட்சாயணி. இப்பீட சக்தியின் பெயரும் அதுவே. பார்வதியின் அம்சமே அவள். இத்தடாகம் மிகவும் எழிலானது. அழகில் இதற்கு நிகரான தடாகம் உலகில்  எங்குமில்லை. 

கயிலை மலையும், மானஸரோவர் தடாகமும் சேர்ந்து கெளரி சங்கரம் எனும் சிவசக்தி வடிவாக அருட்காட்சியளிக்கின்றது. கயிலை மலைக்குத் தெற்கில் அதன்  அடியிலிருந்து 40 மைல் தொலைவில் இந்தப் புனிதத் தடாகம் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 15000 அடி உயரத்தில் உள்ளது. நான்முகனால்  தோற்றுவிக்கப்பட்ட தடாகம் இது எனும் ஐதீகம் உள்ளது. இதில் ஒருமுறை நீராடினால் பாவங்களும், தீவினைகளும் நீங்குவதாக திபெத்திய புராணத்திலும் இடம்  பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பாலி சமஸ்கிருத நூல்கள் இந்தத் தடாகத்தை அனேடாடா அல்லது அனவடாட்பா என்றும் மகாபாரதம் பிந்துசாரா என்றும் ஜைன  நூல்கள் பத்மஹரோடா என்றும் போற்றுகின்றன. இந்த தடாகத்தின் நடுவே பெரிய அரண்மனையில் நாகராஜா வசிக்கிறார். ஏரியின் கரையிலுள்ள நாவல்  மரங்களிலுள்ள பழங்கள் ஏரியில் விழுவதால் அந்த நிலப்பகுதி ஜம்புலிங் என்று அழைக்கப்படுகிறது. 

அவற்றில் சில நாகங்கள் உண்ணுவதாவும் சில பொன்னாக மாறி நீரில் மூழ்குவதாகவும் தங்கத்தாமரைகள் மலர்வதாகவும், ராஜஹம்ஸங்கள் நீந்துவதாகவும்,  மானஸரோவரைப்பற்றி புராணங்கள் பகர்கின்றன. காலை சுமார் 3 மணியளவில் தேவர்கள் ஜோதி வடிவமாக ஏரிக்கு மத்தியில் மூழ்கி நீராடும் அற்புதம் இங்கு  நிகழ்கிறது. அம்மையப்பனிடம் ஆணவம் இருக்கக்கூடாது. ஒரு முறை ராவணன் தேரில் இவ்விடம் வந்தபோது இமயமலையானது தேரைத் தடுத்ததால்  கோபமடைந்த ராவணன் இந்த இமயமலையை தூக்க முற்பட்டபோது மலை சற்றே ஆடியது. உடனே ஈசன் தன் கால் கட்டைவிரலால் அழுத்த ராவண்னின்  கைகள் மலைக்கு அடியில் சிக்கிக் கொண்டது. மிகவும் தவித்த பின்னர் அவன் ஈசனை சாம கானத்தால் பாட ஈசன் அவன் கைகளை விடுவித்தான். ஈசனும்  சக்தியும் உறைந்துள்ள இவ்விடத்தில் ராவணனின் ஆணவமும் அவன் கைகளைப் போன்றே நசுக்கப்பட்டது. 

காரைக்கால் அம்மையோ ஈசனின் இருப்பிடமாதலால் இமய மலையை மிதிக்க அஞ்சி தலையால் நடந்து முக்தி பெற்ற இடம். ஈசனுக்கு அணுக்கத் தொண்டராக  விளங்கிய கசுந்தரர் திருத்தொண்டத் தொகை பாட தென்னாட்டில் அவதரித்தார். ஈசன் அவரை யானை மேல் ஆரோகணித்து வரச் செய்து கயிலையில்  ஆட்கொண்டது வரலாறு. அப்பருக்கு அருள்புரிந்த எம்பிரான் அவரை மானஸரோவரில் குளிக்கச் செய்து திருவையாற்றில் தரிசனம் தந்தருளினார். தர்மரும்,  அர்ஜுனனும் குருக்ஷேத்திரப் போரில் வெற்றி பெற வேண்டி கண்ணனோடு இங்கு வந்து ஆயுதங்களைப் பெற்றுச் சென்றதாக மகாபாரதம் கூறுகிறது. ஈசன்  கருணை மலையாகவும், அம்பிகை தடாக வடிவிலும் அருள் பாலிக்கும் மானஸரோவரில் தாட்சாயணியின் திருவருளைப் பெற அவள் பாதங்களைப் பணிவோம்.

அக்ஷர சக்தி பீடங்கள்

பீடத்தின் பெயர் கரதோயா எனும் யுசாத்யா. தேவியின் வலது கால் கட்டைவிரல் விழுந்த பீடம். அக்ஷரத்தின் நாமம் . அக்ஷர சக்தியின் நாமம் ஷண்டாதேவி.  சிவந்த நிறத்துடன் மஞ்சள் பட்டாடை உடுத்தி இரு தாமரை மலர்களை ஏந்தி வர அபய முத்திரைகள் தரித்து கம்பீரமான ராஜஹம்ஸத்தில் ஆரோகணித்து  அமர்ந்தவள் இத்தேவி. பீட சக்தியின் நாமம் பூததாத்ரி. இப்பீடத்தை க்ஷீரகண்டகர் எனும் பைரவர் பாதுகாக்கிறார்.  பங்களாதேஷ் பார்த்தமான் (Bardhaman)  ரயில் நிலைய சந்திப்பிற்கு 32 கி.மீ. வடக்கே ஷீர்கஞ்ச் உள்ளது. அங்குதான் இந்த சக்திபீடம் உள்ளது. இத்தேவியை வணங்குவோர் பாவங்களும் பந்த பாசங்களும்  நீங்கும். செந்தாமரையும் வெட்கும் படியான மென்மையான திருவடிகளைக் கொண்ட தேவியிவள். பங்களாதேஷில் வழிபடப்படுவதால் அங்குள்ள இந்தியர்கள்  உருவமில்லாமல்தான் தேவியை வழிபடுகின்ற

No comments:

Post a Comment