Friday 7 April 2017

கரும்பன்ன வாழ்வருளும் கரும்பார்குழலி!

51 சக்தி பீடங்கள் - 49

சிறிக்கும் குளித்தலைக்கும் இடைப்பட்ட மலை ரத்னாசலம் எனப்படும். தமிழக சக்தி பீடங்களுள் இந்த சக்திபீடம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சக்திபீடநாயகி அராளகேசியம்மன் என்றும் கரும்பார்குழலியம்மை என்றும் வணங்கப்படுகிறாள். இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் தேவி கோலோச்சுகிறாள். இந்த சக்திபீடத்தைச் சுற்றியுள்ள சிவாலயங்களில் ஈசன் காலையில் கடம்பர், மதியத்தில் சொக்கர், மாலையில் திருஈங்கோய் மலைநாதர், அர்த்தசாமத்தில் சிம்மேசர் என வழிபடப்
படுகிறார். மதியம் சொக்கர் என்று வணங்கப்படுபவர். இந்த ரத்னாசலமலையில் வீற்றிருக்கும் ரத்னகிரீஸ்வரரை வாட்போக்கிநாதர், சொக்கர் என வணங்குகின்றனர். இவருக்கு அபிஷேகம் செய்யும்பால் உடனே கெட்டித்தயிராக மாறும் அற்புதம் இன்றும் நிகழ்கிறது. இம்மலையின் மீது காகங்கள் பறப்பதில்லை. 

இந்த சக்திபீடநாயகி அபய வரதம் தாங்கிய கீழிரு கரங்களும், தாமரை மலர்களைத் தாங்கிய மேலிரு கரங்களுமாக திருவருட்பாலிக்கிறாள். இங்கு வரும் பக்தைகள் தங்கள் மாங்கல்யம் நிலைக்க தேவியை வேண்டி நிற்கின்றனர். வேண்டி நிற்போரின் குறைகளைத் தீர்ப்பவள்தானே அம்பிகை. குமாரி எனும் திருப்பெயரில் இந்த சக்தி பீடமாம் ரத்னாவளி பீடத்தில் அரசாள்பவள். இவளே சூரபத்மன் போன்ற அசுரர்களை அழித்த முருகப் பெருமானை ஈன்றவள். ஈசன் மகிழ முருகப் பெருமானுக்கு வேலாயுதத்தை தந்தருளியவள். அப்பெருங்கருணையை மனிதர்களும் பெற்ற ஐம்பத்தோரு சக்தி பீடங்களிலும் பரவி நிற்பவள். நீலகண்டனின் உயிர். இவளே மதுரையில் மலயத்வஜ பாண்டியன் மகிழ மீனாட்சியாகவும், காசியிலே விசாலாட்சியாகவும், காஞ்சியிலே காமாட்சியாகவும் திருவருட்பாலிப்பவள். இந்த அம்பிகை ஈசனுடன் இணைந்து இந்த ரத்னாவளி பீடத்தில் ஜொலிக்கிறாள். 

தேவி திருவருட்பாலிக்கும் ரத்னாசல மலைக்குக் கீழே ஐயனார் சந்நதியும், வைரப்பெருமாள் சந்நதியும் உள்ளது. பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஐயனார் சந்நதியில் பூட்டு வாங்கி பூட்டுகின்றனர். தங்கள் பிரச்னைகள் யாவும் பூட்டு போட்டதுபோல் தீர்ந்து விடும் என்பது அவர்கள் அனுபவ நம்பிக்கை. அதே போன்று அவர்களின் பிரச்னைகளும் ஐயனார் திருவருளால் தீரும் அற்புதம் இங்கே நிகழ்கிறது. அதே போன்று வைரப் பெருமாள் சந்நதியில் ஒரு தலையற்ற உருவம் உள்ளது. அதன் காரணம் யாதெனில், முன்னொரு காலத்தில் சிவபக்தரான பெருமாள் தன் தங்கைக்கு மழலை வரம் வேண்டி ரத்னேஸ்வரரிடம் வேண்டினார், அவ்வாறு மழலை வரம் கிட்டினால் மழலையின் தலையைக் கொய்து காணிக்கையாக்குவதாகவும் வேண்டிக் கொண்டார், அதன்படி ஈசன் அவருக்கு மழலைவரம் தர அந்த மழலையின் தலையைக் கொய்து காணிக்கையாக்கினார். 

ஈசன் அவர் பக்தியை மெச்சி அந்த மழலையை பழையபடி மாற்றியருளினார். இன்றும் ஈசனுக்கு கற்பூர ஆரத்தி எடுத்த பின் வைரப் பெருமாளுக்கும் காண்பித்த பின்னரே பக்தர்களுக்கு ஆரத்தி அளிக்கப்படுகிறது. ஈசனின் நிர்மால்ய மாலையும் வைரப் பெருமாளுக்கு சாத்தப்படுகிறது. மழலை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வேண்டிக்கொண்டு பலன் பெறுகின்றனர். சுந்தரர் இம்மலைக்கு வந்தபோது இம்மலையே ரத்னமாக ஜொலித்ததாம். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மழைக்காலத்தில் மழையினால் மண் கரைந்து போகும்போது இம்மலையின் ஏராளமான ரத்னங்கள் கிடைக்குமாம். ஒரு முறை பதினோரு செட்டியார்கள் ஒன்று சேர்ந்து தங்கள் வணிகத்தால் கிடைத்த லாபத்தைக் கோயிலில் பிரித்துக் கொண்ட போது எத்தனை முறை பிரித்தாலும் பன்னிரெண்டு பங்கே வந்து திகைத்தபோது அசரீரி வாக்கின்படி 12வது பங்கை ஈசனுக்கு அளித்தாராம். 

இன்றும் அந்தச் செட்டியார்களின் வம்சத்தவர் வருடத்திற்கு ஒருமுறை இங்கு வந்து விலையுயர்ந்த ஆபரணங்களைச் செலுத்தி வழிபடுகின்றனர். 
ஒருமுறை ஆலயத்திற்கு வந்த ஆரிய அரசரிடம் அங்கிருந்த அந்தணர் காவிரி நீரைக் கொணர்ந்து ஈசனுக்கு அபிஷேகம் செய்ய கட்டளையிட, அதன்படி செய்த அரசர் எவ்வளவு நீரை எடுத்து வந்தாலும் நீர் கொட்டப்படும் பாத்திரம் நிரம்பாமல் போகவே தன் வாளால் அந்த அந்தணரை வெட்ட முயலும் போது அவர் ஈசனாக மாறி அருளியதால் இத்தலநாதர்  வாட்போக்கி நாதராக அருள்கிறார், இன்றும் இவருக்கு காவிரி நீரிலேயே அபிஷேகங்கள் செய்யப்படுகிறது. 
அம்பிகையின் கடைக்கண் பார்வை சிறிதே சிறிது பட்டாலும், அவர்கள் உலகம் முழுவதையும் ஒரு குடைகீழ் ஆள்வார்கள். 

அவன் தேவேந்திரனாகி ஐராவதத்தில் ஆரோகணித்துச் செல்வான், தேவர்கள் அவனுக்கு ஏவல் புரிவர். மன்மதன் பார்த்துப் பொறாமை கொள்ளும் வகையில் பேரெழில் படைத்து, தேவதாசிகள், அப்ஸரஸ்கள் போன்றோர் காதல் கொள்வர். அவன் வாக்குகளில் தாம்பூல நறுமணம் வீசும். அவர்கள் நித்திய யெளவனுத்துடன் வாழ்வர் என மூகர் தன் மூகபஞ்சசதியின் ஸ்துதி சதகத்தில் கூறியபடி கரும்பார் குழலி தன் பக்தர்களுக்கு மேற்சொன்ன பலன்கள் அத்தனையையும் தந்தருளும் ஸர்வசக்தி படைத்தவள். கரும்பார்குழலியின் பதமலர்கள் பணிந்து கரும்பைப் போல் இனிய வாழ்வு பெறுவோம்.

அக்ஷர சக்தி பீடங்கள்

பீடத்தின் பெயர் ஜயந்தி. தேவியின் இடது கணுக்கால் விழுந்த சக்தி பீடம். அக்ஷரத்தின் நாமம்(   ). அக்ஷர சக்தியின் நாமம் ஸ்ரீதேவி எனும் மங்கள கெளரி தேவி. இவள் ஒளிரும் பொன்னாபரணங்கள் அணிந்து, பொன்னிற ஆடை உடுத்தி, இரு கைகளிலும் தாமரை மலரை ஏந்தி கீழிரு கைகளை அபய, வரத
முத்திரை காட்டிய வண்ணம் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் எழுந்தருளி அருட்பாலிக்கிறாள். பீட சக்தியின் நாமம் ஜயந்தி.  இந்த சக்தி பீடம் க்ரமதீஸ்வரர் எனும் பைரவரால் காக்கப்படுகிறது. அஸ்ஸாம் ஷில்லாங்கிலிருந்து 52 கி.மீ. தொலைவில் ஜயந்தியா மலையில் இப்பீடம் உள்ளது. பார்பாக் (Paurbagh) என்பது இந்த சக்திபீடம் உள்ள கிராமத்தின் பெயரா

No comments:

Post a Comment