Friday 5 January 2018

காரிய சித்தி நட்சத்திரங்கள்!

அனைத்து காரியங்களில் வெற்றி பெற

புனர்பூசம்
பூரம்
ஸ்வாதி
உத்திரட்டாதி

ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுடன் தொடர்பு ஏற்படும் காலங்களில்
அனைத்து காரியங்களில் வெற்றி கிடைக்கும்

வாழ்வில் தொடர்ந்து அனைத்து காரியங்களில் சித்தி கிடைக்க
இவர்களுடன் ஆன நட்பு , பழக்கம் , ஆசிகள் கிடைக்க இது நாளும் வளரும்
இது என் அனுபவத்தில் இன்றளவும் நடந்து கொண்டு இருக்கிறது
ஏன் என்றால் என் குருநாதர்  நட்சத்திரம் பூரம் ஆகும்


சரி இது எப்படி ? ஏன் ? எதற்கு என்று பார்ப்போமா

அமி்ர்தாதி யோக அட்டவணையை கவனித்து பார்த்தால் இந்த விஷயம்
கண்ணில் புலப்படும் அதாவது இந்த நான்கு நட்சத்திரங்கள் எந்த கிழமையோடு சேர்ந்து வந்தாலும்  மரண யோகமோ
பிரபலாரிஷ்ட யோகமோ உண்டவாதில்லை / வருவதில்லை .
பயன்படுத்தி பலன் பெறவும்

வாழ்க வளமுடன்



பூசம்

பொது ஐன வசியம் கிடைக்க இந்த நட்சத்திர நாளில் தட்சிணா மூர்த்தியை
வணங்க பலன் தரும்/

அதே போல இந்த நாளில் வித்யாரம்பம் குரு உபதேசம் கும்பாபிஷேகம்
ஆலய திருப்பணி செய்ய உகந்த நட்சத்திரம் தீராத வியாதிக்கு மருந்துண்டு
குணம் பெறலாம்.


 No automatic alt text available.



சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள்.

சாம்பிராணி காட்டுவது என்பது நமது நாட்டில் தொன்று தொட்டு இருக்கும் ஒரு வழக்கம். அது எந்தந்த நாட்களில் இறைவனுக்கு காட்டினால் எந்தெந்த பலன்கள் கிடைக்கும் என்பதனை சொல்லும் ஒரு கட்டுரை தொகுப்பு தான் இது.

ஞாயிறு அன்று சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் - ஆத்ம பலம், சகல செல்வாக்கு,புகழ் உயரும், ஈஸ்வர அருள் கிட்டும்.

திங்கள் அன்று சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் – தேக,மன ஆரோக்கியம்,மன அமைதி, அம்பாள் அருள் கிடைக்கும்.

செவ்வாய் அன்று சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் – எதிரிகளின் போட்டி,பொறாமை மற்றும் தீய-எதிர் மறை எண்ணங்களின் மூலம் உண்டான திருஷ்டி கழிதல், எதிரிகளின் தொல்லை நீங்குதல், முருகனின் அருள் , கடன் நிவர்த்தி போன்ற பல நல்ல பலன்கள் உண்டாகும்.

புதன் அன்று சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் – நம்பிக்கை துரோகம், சூழ்ச்சிகளில் இருந்து தப்புதல், நல்ல சிந்தனை வளர்ச்சி, வியாபார வெற்றி, சுதர்சனரின் அருள் கிட்டல் போன்ற பல நல்ல பலன்கள் உண்டாகும்.

வியாழன் அன்று சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் – சகல சுப பலன்கள், பெரியோர்கள் குருமார்கள் ஆசி கிட்டுதல், அத்துடன் சித்தர்களின் மனம் குளிரும், முன்னேற்றங்கள் தொடரும்.

வெள்ளி அன்று சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் - லட்சுமி கடாட்சம், சகல காரிய சித்தி போன்ற பல நல்ல பலன்கள் கிடைக்கப் பெறும்.

சனி அன்று சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் – சோம்பல் நீங்குதல், சகல துன்பங்கள் நீங்கி சனி பகவான், பைரவர் போன்றோரின் அருள் கிட்டும்.



No comments:

Post a Comment