Monday 8 January 2018

!! பாபாவின் உதி!!

"உதி" என்பது நெருப்புக்குண்டமான 'துனி'யில் உதித்த சாம்பல் ஆகும். அது பாபாவின் அளவற்ற அருளாற்றலின் அடையாளமாக விளங்கியது.

தற்போதும் விளங்கிக் கொண்டிருக்கிறது.
அடியவர்களின் அல்லல்களையும் அன்பர்களின் நோய்களையும் அடியோடு நீக்கும் அற்புத சக்தி கொண்டது. உதியை பிரசாதமாக அளிப்பதின் மூலம் பாபா இந்த உலகத்தின் நிலையற்றதன்மையை எடுத்துக் கூறுகிறார்

நம் உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. எல்லாவற்றையும் அனுபவித்து முடித்த பிறகு உடலானது ஓய்ந்து சாய்ந்து மாய்ந்து போகும். பின்னர் எரிக்கப்பட்டுச் சாம்பலாகிப் போகும்

உற்றார், பெற்றோர்,மற்றோர் ஆகிய அனைவரும் நம்முடையவர் அன்று. தனியாக வந்த நாம் தனியாகவே போக வேண்டி இருக்கும்

எனவே, வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொண்டு மெய்ப் பொருளை பிரம்மத்தை அறிய முயற்சிக்க வேண்டும்

இவை அனைத்தையும்உணர்த்துவதே உதி ஆகும். சாயிபாபாவின் உதி உடல் பிணிகளையும் மன நோய்களையும் ஒழித்திடும் ஒப்புயர்வற்ற உன்னத மருந்து.

பாபா உதியைஅன்பர்களின்நெற்றியில்
இட்டுத் தன் கையை அவர்கள் தலை மீது வைத்து ஆசீர்வதிப்பது வழக்கம்.

" உதியே கதி"


No comments:

Post a Comment