Wednesday 6 January 2016

குரு கவசம்


 மறைமிகு கலைநூல் வல்லோன்
வானவர்க்கு அரசன் மந்திரி
நறைசொரி கற்பகப் பொன்
நாட்டினுக்கு அதி பனாகி
நிறைதனம் சிவிகை மண்ணில்
நீடு போகத்தை நல்கும்
இறையவன் குரு வியாழன்
இருமலர்ப் பாதம் போற்றி போற்றி.!
***
 
சீரியன் மனத்துள் வேண்டும்
சித்தி தந்து அளித்துச் செய்யும்
பாரியல் கருமம் கூட்டிப்
பரவுமெய்ஞ் ஞான வாழ்வு
மேரியல் செல்வப் பேறும்
யாவையும் ஒருங்கு நல்கும்
தேரியல் அறிஞன்  தேவர்
தேசிகன் திருத்தாள் போற்றி.

அரும் பிருகற்பதிப் பேர்
ஆண்டகை சென்னி காக்க
வருந்திரு நெற்றி காக்க
வானவர் குரவன் கன்னம்
விரும்பினன் காக்க நாட்டம்
வேண்டுவ தருவோன் காக்க
பருங்குமிழ் பொருவு நாசி
பண்ணவன் அரசன் காக்க!

பாட்டு அமர்செவ்வாய் வேத
பாரகன் காக்க துண்டம்
கூட்டு முற்றிவன் காக்க
குலவரைப் புயம் இரண்டும்
வேட்டமர் சுகம் தந்து ஆள்வோன்
விரும்பினன் காக்க செங்கை
வாட்டும் வச்சிரங் கைக்கொள்ளும்
வானவன் வழாது காக்க!

பருவரை பொருவு மார்பம்
பயிலுங்கீட் பதி புரக்க
விருதனம் வாக்கு வல்லோன்
என்றும் வந்து எய்திக் காக்க
வருசுகம் நல்கும் நாதன்
வயங்கு எழில் வயிறு காக்க
பொருவரு நீதி வல்லோன்
பொற்புஉறு நாபி காக்க!

எங்கும் சென்று அளிக்கும்ஈசன்
எழிற்கடி புரக்க ஊருத்
தங்கு புண்ணியன் புரக்க
சங்கமெய்ஞ் ஞானம் ஈயும்
புங்கவன் புரக்க பாதம்
புகல் உலகெல்லாமாகும்
அங்கணன் புரக்க மேனி
அமர் குருப் புரத்து காக்க!

 காலையும் உச்சிப் போதும்
கதிரவன் குடபான் மேவு
மாலையும் வானோர் போற்ற
 வருகுரு கவசம் என்னும்
நூலை அன்போடு உரைக்கும்
நுண்ணியன் வேட்டாங்கு எய்திச்
சோலைஅம் தரு விண்ணாட்ட
சுரரையும் வெற்றி கொள்ளும்.
 
குரு கவசம் முற்றும்.

No comments:

Post a Comment