Thursday 25 February 2016

சர்வ வல்லமை தரும் மகாமக துதிகள் - 1


"திருக்குடந்தை" கும்ப லிங்க துதி!

"திருக்குடந்தை' என்று புகழப்படும் கும்ப
கோணத்தின் சிறப்பை அறிந்த பிரம்மதேவர், மகாமகத் தீர்த்தத்தில் நீராடி கும்பேஸ்வரரை துதித்த அபூர்வ துதி இது. இதைச் சொல்லி வழிபட்டால் ஆரோக்கியம், புத்திரலாபம் போன்ற நலன்கள் கிடைக்கும்.

ஸ்ரீகுருப்யோ நம:


நமோ நம: காரண காரணாய
ஸ்ரீமத் ஸுதா கும்பக விக்ரஹாய/
கல்யாண ஸாந்த்ராய குணாகராய
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

பீமாய பீமாதிஹராய சம்பவே
நாகாய சாந்தாய மநோஹராய/
மஹாஜடாஜுட தராய பூதயே
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

ஸர்வாகமாம்நாய சரீரதாரிணே
ஸோமார்க்க நேத்ராய மஹேஸ்வராய/
யக்ஞாய யக்ஞேஸ்வர பூஜிதாய
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

காத்யாயனீ காமித தாயகாய
துர்க்கார்த்த தேஹாய க்ருதாகமாய/
காலாய காலேஸ்வர பூஜிதாய
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

விபூதி தாநேக சரீர தாரிணே
கல்பாய கல்பாந்தகராய சம்பவே/
விஸ்வாய வைஸ்வாநர லோசநாய
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

மாயா ப்ரபஞ்சாய மனோஹராய
மாயா கடேசாய மஹாதிஹாரிணே/
மாயா ப்ரபஞ்சைக நிதான மூர்த்தயே
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

போகீந்த்ர ஸம்பூஜித விக்ரஹாய
போகீந்த்ர பூஷாய பவாந்தகாய/
ஸ்ரீபாரதி சங்கர பூஜிதாய
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

தாம்ராய சாமீகர பூஷிதாய
ஸ்ரீசோம கோடீர விபூஷிதாய/
ஸமஸ்த ஸத்க்ஷேத்ர கலாவராய
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

ஸ்ருஷ்டி ஸ்திதி த்வம்ஸன காரணாய
ஸ்ரீஸ்ருஷ்டி பீஜாங்க மனோகராய/
ஸச்சாஸ்த்ர வேதாந்த களேபராய
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

ஷட்வர்க்க ஸம்பேதன தீக்ஷிதாய
ஷடானனாதித்ய பலப்ரதாய/
ஸமஸ்த மந்த்ரார்த்த நிதான ரூபிணே
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

கும்போத்பவ ப்ரமுக பூஜித விக்ரஹாய
வீராய வீராந்தகராய மாயினே/
பக்தேஷ்டதான நிபுணாய பவாப்தி போத்ரே
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

மூலாய மூலாகம பூஜிதாய
பாதாள மூலாய நிதீஸ்வராய//
நித்யாய ஸித்தேஸ்வர பூஜிதாய
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

ஸமஸ்த கல்யாண வரப்ரதாய
ஸமஸ்த கல்யாண நிதான மூர்த்தயே/
ஸ்ரீமங்களாம்பார்ச்சித பாதபத்மிநே
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

லக்னாதி பேசாய க்ரஹார்ச்சிதாய
ஸ்ரீகாமதேநு சுரஸங்க சுபூஜிதாய/
பஞ்சாநநாய பரமார்த்த நிதர்ஸகாய
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

தீர்த்தாதி நாதாய பலப்ரதாய
பலஸ்வரூபாய பலாங்கதாரிணே/
ஸ்ரீமந்த்ரபீடேஸ்வரீ வல்லபாய
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

பஞ்ச குரோச தல யாத்திரை: மகாமகப் புனித நீராடலுக்கு முன்பாக விரதமிருந்து யாத்திரை சென்று வரவேண்டிய ஐந்து தலங்களாக திருவிடை மருதூர், சுவாமிலை, தாராசுரம், திருநாகேஸ்வரம், கருப்பூர் என்னும் திருப்
பாடலவனம் ஆகியவை விளங்குகின்றன.

அஷ்டாதச தல யாத்திரை: பதினெட்டு
சிவஸ்தலங்களுக்கு மகாமகக் காலத்தில் யாத்திரை சென்றுவருதல் முக்கியம். அவை:திருவிடைமருதூர் என்ற மத்யார்ஜுனம், திருப்புவனம், அம்மாசத்திரம், திருநாகேஸ்வரம், செம்பியவரம்பல் (அய்யாவாடி), சிவபுரம், சாக்கோட்டை, மருதாநல்லூர், பட்டீஸ்வரம், திருச்சக்திமுற்றம், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, இன்னம்பூர், திருப்புறம்பியம், கொட்டையூர், கருப்பூர், வாணாதுரை.

பஞ்ச குரோச தலங்களையும், அஷ்டாதச ஸ்தானம் என்னும் தலங்களையும் ஒரே நாளில் தரிசிப்பவர்கள், பூமியை வலம் வந்த பலனை அடைவார்கள் என்பது ஐதீகம். பழங்கால கல்வெட்டுச் செய்திகளின்படி இத்தகவல் உள்ளது.





No comments:

Post a Comment