Wednesday 24 February 2016

கோமாதா வழிபாடு!


தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலில் இருந்து ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன. அவை நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை ஆகியவை. இவை பொன்னிறம், கருமை, வெண்மை, புகை, சிவப்பு நிறம் கொண்டிருந்தன. இவற்றின் சந்ததிகளே பூலோகத்தில் நமக்கு உதவியாக இருந்து வருகின்றன. இவற்றில் இருந்துவரும் கோமயம்(சாணம்), கோமூத்திரம்(கோமியம்), பால், தயிர், வெண்ணெய் ஆகிய ஐந்தும் புனிதமானவை. இவற்றை குறிப்பிட்ட அளவில் கலந்து சிவபெருமானுக்கு செய்யும் அபிஷேகமே பஞ்சகவ்ய அபிஷேகம் எனப்படுகிறது. இப்பசுக்களில் மும்மூர்த்திகள், சத்தியம், தர்மம் என்று எல்லா தேவதைகளும் வசிக்கின்றனர்.
செல்வவளம் தரும் திருமகள் இதன் பிருஷ்டபாகத்தில்(பின்பாகம்) வசிக்கிறாள். இப்பகுதியை தொட்டு வழிபட்டால் முன்ஜென்ம பாவங்கள் விலகும். காலையில் எழுந்ததும் பசுவைத் தொழுவத்தில் காண்பது சுபசகுனம். தெருக்களில் கூட்டமாகப் பார்த்தால் இன்னும் விசேஷம். பாற்கடலில் பிறந்த ஐந்து பசுக்களும் கோலோகம் என்னும் பசுவுலகில் இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். பசுவைத் தெய்வமாக வழிபட்டால் கோலோகத்தை அடையும் பாக்கியம் உண்டாகும்.வைகுண்டம்’ ஸ்ரீமன் நாராயணனின் வாசஸ்தலம். வைகுண்டத்திற்கும் ஊர்த்தவ பாகத்தில் விளங்குவது விளங்குவது கோலோகம்.
பசுவுள் இருந்து அருளும் தேவர்கள்

நம் உடலில் உள்ள கோடிக்கணக்கான அணுக்களையும் நம் மூளையின் நுண்ணியமான பகுதிகள் பாதுகாத்தாலும், பொதுவாக கை, கால், இடுப்பு, மார்பு, கண், காது, மூக்கு, வாய், வயிறு, கல்லீரல், இதயம் ஆகிய முக்கிய உறுப்புக்களை மூளையின் சில பகுதி காக்கிறது என்றே கூறுகிறோம். அதுபோல, உலகை காக்கின்ற முப்பத்து முக்கோடி தேவர்களும் கோமாதாவின் (பசுவின் உடலில்) அடங்கி இருந்தாலும், கல்வி, செல்வம் போன்ற முக்கிய தேவைகளை நிறைவேற்றும் முக்கிய தெய்வங்கள் கோமாதாவின் திருவுருவில் எங்கெங்கு உள்ளனர் எனத் தெரிவிப்பதே வழக்கமாக இருக்கிறது. இதையே பல தெய்வங்களை உள்ளடக்கிய காமதேனு என்ற படத்தில் காண்கிறோம்.

கோமாதாவின் உடற் பகுதியும் அங்கே அருளும் தெய்வங்களும்:

1. முகம் மத்தியில் சிவன்
2. வலக் கண் சூரியன்
3. இடக் கண் சந்திரன்
4. மூக்கு வலப்புறம் முருகன்
5. மூக்கு இடப்புறம் கணேசர்
6. காதுகள் அஸ்வினி குமாரர்
7. கழுத்து மேல்புறம் ராகு
8. கழுத்து கீழ்புறம் கேது
9. கொண்டைப்பகுதி ப்ரும்மா
10. முன்கால்கள் மேல்புறம் சரஸ்வதி, விஷ்ணு
11. முன்வலக்கால் பைரவர்
12. முன் இடக்கால் ஹனுமார்
13. பின்னங்கால்கள் ப்ராசரர், விஷ்வாமித்திரர்
14. பின்னகால் மேல்பகுதி நாரதர், வசிஷ்டர்
15. பிட்டம் - கீழ்ப்புறம் கங்கை
16. பிட்டம் - மேல்புறம் லக்ஷ்மி
17. முதுகுப்புறம் பரத்வாஜர், குபேரர் வருணன், அக்னி
18. வயிற்றுப்பகுதி ஜனககுமாரர்கள் பூமாதேவி
19. வால் மேல் பகுதி நாகராஜர்
20. வால் கீழ்ப்பகுதி ஸ்ரீமானார்
21. வலக்கொம்பு வீமன்
22. இடக்கொம்பு இந்திரன்
23. முன்வலக்குளம்பு விந்தியமலை
24. முன்இடக்குளம்பு இமயமலை
25. பின் வலக்குளம்பு மந்திரமலை
26. பின் இடக்குளம்பு த்ரோணமலை
27. பால்மடி அமுதக்கடல்

7. பசு வழிபாடு வகை

பசு வழிபாடு இரண்டு வகைப்படும்.

1. பசு மாடுகளை சந்தன குங்குமம் போன்றவற்றால் அலங்கரித்து, எல்லா மந்திரங்களும் கூறி, மலர்களால் அர்ச்சித்து, தூப, தீப, நிவேதனங்களால் ஆராதிப்பது ஒரு முறை. ஈசனை விக்ரஹங்கள் வைத்து விரிவாக வழிபட முடியாதவர் இறைவனின் படத்தை மட்டும் வைத்து வழிபடுவது போல, வீட்டில், கோமாதாவின் படத்தை மட்டும் வைத்து வழிபாடு செய்வதும் முதல் வகையிலேயே அடங்கும்.

2. பசுவைத் திருநாமங்கள் கூறி வழிபடா விட்டாலும், வீட்டுப்பசுவுக்கு மட்டுமின்றி பசு இனத்துக்கே உதவுவதாக அவற்றின் நலனைப் பாதுகாத்துப் பராமரிப்பதும் பசுவழிபாடே.
அர்ச்சனை

ஓம் காமதேநவே நம
ஓம் பயஸ்வின்யை நம
ஓம் ஹவ்யகவ்யாயை நம
ஓம் பலப்ரதாயை நம
ஓம் வ்ருஷபத்ந்யை நம
ஓம் ஸெளரபேய்யை நம
ஓம் மஹாலக்ஷ்ம்யை நம
ஓம் ரோஹிண்யை நம
ஓம் ஸ்ருங்கிண்யை நம
ஓம் க்ஷீரதாரிண்யை நம
ஓம் காம்போஜஜநகாயை நம
ஓம் ஜநகாயை நம
ஓம் யவநஜநகாயை நம
ஓம் மாஹேய்யை நம
ஓம் நைசிக்யை நம
ஓம் ஸபள்யை நம
நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி;
(மஹாலக்ஷ்மி அஷ்டோத்திரம் கூறியும் அர்ச்சனை செய்யவும்)
1. கவாஷ்டகம்

1. ஓம் நமோ தேவ்யை மகாதேவ்யை ஸுரபியைச நமோ நம:
கவாம், பீஜஸ்வரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே.

2. கல்பவிருக்ஷ ஸ்வரூபாயை ஸர்வேஷாம் ஸததம்பரே
க்ஷீரதாயை தனதாயை புத்திதாயை நமோ நம:

3. சுபாயைச சுபத்ராயை கோப்ரதாயை நமோ நம:
யசோதாயை கீர்த்திதாயை தர்மதாயை நமோ நம:

4. பவித்ரரூபாம் பூதாஞ்ச பக்தானாம் ஸர்வகாமதம்
யதா பூதம் ஸர்வம் விசுவம் தாம் தேவீம் சுர பிம்பஜே.

5. கவார்ச்சனம் மகா புண்ணியம் தேவானுக்கிரக காரகம்
மகா பாப ப்ராயச்சித்தம் புக்தி முக்தி ப்ரதாயகம்.

6. யஸ்மாத் சரீரேஸான் நித்யம் த்ரிவிம்சத்கோடி தேவதா
ஸாதேனுர்பவ பூஜ்ய நித்யம் ஸ்ரீ கிருஷ்ணஸ்யாஜயா.

7. தர்மராஜ பிரதிஷ்டாம்ஸ்தி கோ, லக்ஷ்மீ பிரமதாமதா
கல்பவிருக்ஷ ஸ்வரூபாயை ஸாந்நித்யம் ஸேவ்ய பிரயத்னதா

8. கோபிரதிஷ்டா வினாசைய்வா வியர்த்தா ஸர்வ பிரதிஷ் டிதா
ஸர்வபிரதிஷ்டா மூலம்ஸ்யாத் ரக்ஷணீயா பிரயத்நதா

9. ஜாத்வாபூஜா ரகஸ்யஞ்ச பக்தி யுக்திச்ச மானவா
யபூஜ யச்சஸுரபி ஸச பூஜ்யோ பவேத்புஜிஹி.

10. அஷ்டகமிதம் ஸபுண்யம் பக்தியுக்திச்சயப் ப்டேத்
ஸ்ர்வ ஸித்தி மவாப்நோதி ராஜ்யம் ப்ராப்நோதி ஸர்வதா.
சுபம் 


No comments:

Post a Comment