Tuesday 1 December 2015

விநாயக சதுர்த்தி


விநாயக சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக் கொண்டு விநாயகரை வழிபடுவது சிறந்தது என்கின்றனர். ஒவ்வொரு இலைக்கும் தனிதனிப் பலன்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அந்த பலன்கள் குறித்த தகவல்கள் கீழே:


1.
முல்லை இலை - அறம் வளரும்.


2.
கரிசலாங்கண்ணி இலை - இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.




3.
வில்வம் இலை - இன்பம், விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.




4.
அருகம்புல் - அனைத்து நலன்களும் கிடைக்கும்.




5.
இலந்தை இலை - கல்வியில் மேன்மையை அடையலாம்.


6.
ஊமத்தை இலை - பெருந்தன்மை கைவரப்பெறும்.


7.
வன்னி இலை - பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.


8.
நாயுருவி இலை - முகப் பொலிவும், அழகும் கூடும்.


9.
கண்டங்கத்தரி இலை - வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.


10.
அரளி இலை - எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.


11.
எருக்கம் இலை - கருவிலுள்ள குழந்தைக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.


12.
மருதம் இலை - குழந்தைப்பேறு கிடைக்கும்.


13.
விஷ்ணுகிராந்தி இலை - நுண்ணிவு கைவரப்பெறும்.


14.
மாதுளை இலை - பெரும் புகழும், நற்பெயரும் கிடைக்கும்.


15.
தேவதாரு இலை - எதையும் தாங்கும் மனதிடம் கிடைக்கும்.


16.
மருக்கொழுந்து இலை - இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.


17.
அரசம் இலை - உயர்பதவியும், பதவியால் பெருமையும் கிடைக்கும்.


18.
ஜாதிமல்லி இலை - சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும்.


19.
தாழம் இலை - செல்வச் செழிப்புக் கிடைக்கும்.


20.
அகத்தி இலை - கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.


21.
தவனம் கர்ப்பூர இலை - நல்ல கணவன்/மனைவி அமையப்பெறும்.
























No comments:

Post a Comment