Tuesday 1 December 2015

அறமே சிறந்த பெருஞ்செல்வம்


பழமொழி நானூறு 


 95. அறமே சிறந்த பெருஞ்செல்வம்

வைத்ததனை வைப்பென்று உணரற்க தாமதனைத்
துய்த்து வழங்கி இருபாலும் - அத்தகத்
தக்குழி நோக்கி அறஞ்செய்யின் அஃதன்றோ
'
எய்ப்பினில் வைப்பென் பது'.



     
தாம் தேடிப் பாதுகாவலாக வைத்த செல்வத்தைத் தமக்கு ஆபத்துக் காலத்திலே உதவும் பெருநிதி யென்று எவரும் நினைக்க வேண்டாம். அதனைத் தாமும் அனுபவித்தும், பிறருக்கும் கொடுத்து, இருமைக்கும் அழகியதாகத் தக்க இடம் பார்த்து, முறையாக அறம் செய்து வந்தால், அதுவல்லவோ, தாம் தளர்ந்த காலத்து உதவும் பெருநிதி என்று சொல்லப்படுவதாகும்.

     
தருமநெறியே இருமையிலும் தன்மை தருவது. இதனை உணர்ந்து பொருளைப் பதுக்கி வைக்காமல் தருமத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்பது கருத்து, 'எய்ப்பினில் வைப்பென்பது' என்பது பழமொழி.

No comments:

Post a Comment