Monday 30 January 2017

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவுக்குத் துலாபாரம்!



துலாபாரம் என்றால் இந்தக் காலம் போல வெங்காயம், விறகு, பத்துக்காசு நாணயம் அல்ல.

ங்கத்திலே துலாபாரம்! 

சத்தியபாமா தன் நகைகளையெல்லாம் கழற்றி வைக்கிறாள். தான் செல்வம் படைத்தவள் என்பதைக் காட்டத் தாய் வீட்டுச் சீதனங்களையெல்லாம் கொண்டுவந்து வைக்கிறாள். தட்டு நகரவில்லை.

மெதுவாக வருகிறாள் ருக்மணி. 

ஒரு துளசி தளத்தைக் கொண்டு வந்து ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் கால்களைத் தொட்டு வணங்கி விட்டு, அதைத் தட்டிலே வைக்கிறாள். 



என்ன ஆச்சரியம், தராசு சமமாகிறது! 

ஆணவத்தோடு கொடுக்கப்படும் தங்கத்தைவிட அன்போடு கொடுக்கப்படும் இலை தழைகளுக்குச் சக்தியும், மரியாதையும் அதிகம் என்பதை இந்தக் கதை நிரூபிக்கவில்லையா? 


 

No comments:

Post a Comment