Wednesday 30 March 2016

சகல வைபோகங்களையும் தரும் அதிர்ஷ்ட தேவி!

 
 
 
செல்வத் திருமகளான மகாலக்ஷ்மியை ஐஸ்வர்ய லக்ஷ்மி, சௌபாக்ய லக்ஷ்மி, சௌந்தர்ய லக்ஷ்மி, யோக லக்ஷ்மி, குபேர லக்ஷ்மி என பல வடிவங்களில் நாம் வழிபடுகிறோம். வட இந்தியாவில்  அதிர்ஷ்டத்தை தரும் லக்ஷ்மியை அதிர்ஷ்ட தேவியாக வழிபடுகின்றனர்.

இந்தியாவில் சில பிரிவினர், அக்னி பூஜை செய்வதால் அதிர்ஷ்டதேவியின் அருளைப் பெறலாம் என்று உறுதியாகக் கூறுகிறார்கள்.

வட இந்தியர்களும், சீனர்களும், மலேசியா- சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சில பிரிவினரும் அதிர்ஷ்ட தேவதை என்ற ஒன்று இருப்பதாகவே நம்புகின்றனர். வீடுகளில் பஞ்ச பூதங்களையும் ஒவ்வோர் இடத்தில் நிறுத்தி, பென்சுயி அல்லது வாஸ்து முறையில் அதிர்ஷ்ட சக்தியை நிலை நிறுத்தமுடியும் என்பது சீனர்களின் நம்பிக்கை.

வட மாநிலங்களில் 'லக்கி மா’ என்ற பெயரில் அதிர்ஷ்ட தேவியை வழிபடுகிறார்கள்.



தெய்வ அனுக்கிரகத்தால் கைகூடும் வரமாக இருந்தாலும், அதோடு அதிர்ஷ்டமும் நமக்குத் துணை புரிந்து, நம் வாழ்க்கை வளமாக அதிகாலையில் எழுந்து செய்யும் வழிபாடு, பெறுகின்ற ஆசிகள் அனைத்தும் இரட்டிப்பான பலன்களைத் தரும். இல்லங்களில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்போது, அதிகாலையில் எழுந்து தீபம் ஏற்றி, வாசலில் கோலம் போடுவார்கள். வீடு மங்களகரமாக உள்ள தென்று, பிரம்ம முகூர்த்த வேளையில் வாசல் வழியாகச் செல்லும் மகாலட்சுமி வீட்டினுள் நுழைந்துவிடுவாளாம்.

நமது ஞானநூல்கள் சில, அதிர்ஷ்ட தேவி வழிபாட்டை விவரிக்கின்றன.

 
அதிர்ஷ்ட தேவி பூஜை முறை
 
பௌர்ணமி, பூரம் நட்சத்திர நாள், வெள்ளிக் கிழமை ஆகிய நாட்களில் இந்த வழிபாட்டைச் செய்யலாம்.

பூஜையறையைக் கழுவிக் கோலமிட்டு அலங்கரித்து, ஸ்ரீஅதிர்ஷ்ட தேவி திருவுருவப் படத்தை நடுநாயகமாக இருத்தி, சந்தன-குங்குமம் இட்டு, பூமாலைகள் சார்த்தவேண்டும். நிவேதனத்துக்கு இனிப்பு, பழங்கள், தாம்பூலம் ஆகியவற்றையும் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும்.


முதலில், விநாயகர் துதி!

அடுத்து, அதிர்ஷ்ட தேவியின் தியான ஸ்லோகம் கூறவேண்டும்.

அன்றைய திதி, நாள்- நட்சத்திரத்தைச் சொல்லியபடி, கூப்பிய கரங்களில் மலர்களை வைத்துக்கொண்டு, கீழ்க்கண்ட தியான ஸ்லோகத்தைப் படிக்க வேண்டும்.
  

பங்கஜாட்சீம் சுவர்ணாபாம் சுரத்ன மகுடான் விதாம்
நாகாபரண சம்யுக்தாம் புஜத்வய சமன்விதாம்
சுதா பேடக சாலீஞ்ச வாம ஹாஸ்தேன தாரிணீம்
ஸவ்யேகரே சுபத்மஞ்ச லம்ப கேசேன சோபனாம்
பத்மோபவிஷ்டாம் ஸுவஸ்த்ராம் லம்பபாத யுகாம் சுபாம்
பாதாதஹ பங்கஜோ பேதாம் சங்கோலூக சமன் விதாம்
தீர்த்த மத்யே ஸ்திதாம் தேவீம் தான்ய லக்ஷ்மீ மஹம் பஜே.


கருத்து: தலையில் மாணிக்கக் கிரீடம் அணிந்து, செந்தாமரை மீது அமர்ந்தவளாக, வலக் கையில் தாமரையும் இடக்கையில் பொற்கிழியும் ஏந்தியவாறு, தன்னை வழிபடுபவர்களுக்கு மனமுவந்து கொடுப்பதற்காக நெற்கதிரும் வைத்திருக்கிறாள் அதிர்ஷ்ட தேவி.



தாமரைக் குளத்தில் செந்தாமரையில் அமர்ந்திருக்கும் இந்தத் தேவியைக் கண்ட குபேரன் வலம்புரிச் சங்கின் வடிவிலும், திருமகள் சிந்தாமணி மற்றும் சாளக்கிராம வடிவிலும் அருகில் திகழ, மங்கலப் பொருட்களும் நிறைவாகச் சிதறிக் கிடக்கின்றன. இந்த தேவிக்கு ஆந்தையே சகுனப் பட்சியாக அமர்ந்துள்ளது.

 
அதிர்ஷ்டதேவியின் திருவுருவைச் சிறப்பிக்கும் இந்த தியான ஸ்லோகத்தைச் சொல்லி, தேவியை வணங்க வேண்டும்.

அடுத்து, காமாட்சி விளக்கு ஒன்றை ஏற்றி வைத்து, யோக சக்தியான அதிர்ஷ்டதேவியை வர்ணித்து, 26 நாமாவளிகளைக் கூறி பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.



அவை:

ஓம் ஸ்ரீம் தாராயை நம,
ஓம் ஸ்ரீம் வித்யாயை நம,
ஓம் ஸ்ரீம் முநின்யை நம
ஓம் ஸ்ரீம் சரத்தாயை நம,
ஓம் ஸ்ரீம் ஜராயை நம,
ஓம் ஸ்ரீம் மேதாயை நம,
ஓம் ஸ்ரீம் ஸ்வதாயை நம,
ஓம் ஸ்ரீம் ஸ்வஸ்தியை நம,
ஓம் ஸ்ரீம் வர்மின்யை நம,
ஓம் ஸ்ரீம் பாலின்யை நம,
ஓம் ஸ்ரீம் ஜ்வாலின்யை நம,
ஓம் ஸ்ரீம் க்ருஷ்ணாயை நம,
ஓம் ஸ்ரீம் ஸ்மிருத்யை நம,
ஓம் ஸ்ரீம் காமாயை நம,
ஓம் ஸ்ரீம் உன்மத்யை நம,
 ஓம் ஸ்ரீம் ப்ரஜாயை நம,
ஓம் ஸ்ரீம் சிந்தாயை நம,
ஓம் ஸ்ரீம் க்ரியாயை நம,
ஓம் ஸ்ரீம் க்க்ஷாந்த்யை நம,
ஓம் ஸ்ரீம் சாந்த்யை நம,
ஓம் ஸ்ரீம் தாந்த்யை நம,
ஓம் ஸ்ரீம் தயாயை நம,
ஓம் ஸ்ரீம் ஸ்வஸ்திதாயை நம,
ஓம் ஸ்ரீம் தூத்யை நம,
ஓம் ஸ்ரீம் கத்யாயை நம,
ஓம் ஸ்ரீம்  அதிர்ஷ்ட கலாயை நம:


நாமாவளி அர்ச்சனை முடிந்ததும், தூப- தீபங்கள் காட்டி, நிவேதனம் செய்து,



'ஓம் ஸ்வர்ண ரூப்யைச வித்மஹே
கமல ஹஸ்தாய தீமஹி
தந்தோ அதிர்ஷ்டதேவி ப்ரசோதயாத்’

என்ற அதிர்ஷ்டதேவி காயத்ரீ மந்திரத்தை மூன்றுமுறை சொல்லி, ஆரத்தி செய்ய வேண்டும்.

அதிர்ஷ்ட தேவி படம் முன்பு அமர்ந்து,
 
 'ஓம் ஸ்ரீம் அதிர்ஷ்ட தேவ்யை ஸ்வர்ண வர்ஷின்யை சுவாஹா’

என்று 108 முறை ஜெபம் செய்வது விசேஷம்!

 
 

No comments:

Post a Comment