Monday 4 April 2016

அட்சய திருதியை சிறப்புகள்!


 
 
அட்சய திருதியை  இந்துக்களுக்கு மட்டுமின்றி ஜைனர்களுக்கும் உரிய தினம். சமணர்கள் இந்த நாளினை அட்சயதீஜ் என அழைக்கின்றனர்.

பரந்தாமன் பரசுராம அவதாரம் எடுத்தது அட்சய திருதியை நாள் ஒன்றில்தான்.
அட்சயதிபருதியை தினம் ஒன்றில்தான் திரேதா யுகம் தொடங்கியதாகப் புராணங்கள் சொல்கின்றன.

புண்ணிய நதியான கங்கை சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்ததும் இந்நாளில்தான்.

சமணர்கள், ரிஷபதேவர் எனும் தீர்த்தங்கரின் நினைவு நாளாக இதனை அனுசரிக்கின்றனர்.

அக்ஷயம்எனும் வடமொழிச் சொல்லுக்கு, எப்போதும் குறையாதது என்று அர்த்தம்.

அட்சயதிருதியை தினம் விலை உயர்ந்த ஆபரணங்கள், பொருட்களை வாங்க மட்டுமின்றி, வணிகத்தினைத் துவங்குதல், பூமி பூஜை போடுதல், புதிய கலையினைக் கற்க ஆரம்பித்தல் போன்றவற்றுக்கும் உரியதாகக் கருதப்படுகிறது.

அட்சய தினத்தன்று ஆலிலையில் மிபருத்யுஞ்சய மந்திரத்தை ஜபித்து, தலையணை அடியில் வைத்தால், நோய்களின் கடுமை குறையும். குழந்தைகளின் படுக்கை அடியில் வைத்தால், கண் திருஷ்டி கழியும், பயங்கள் போகும். பூஜை அறியில் அல்லது வியாபார தலத்தில் வைத்திருந்தால் எதிரிபயம் விலகும்.

இந்த நாளில், குபேரபூஜை, லட்சுமி நாராயண பூஜை, சிவ பூஜை, மகாலட்சுமி பூஜை போன்றவற்றைச் செய்வது, நற்பலன்களைத் தரும்.

அட்சய திருதியை நாளில் இயன்ற அளவில் தானம் செய்வது மிக மிகச் சிறந்தது. இந்நாளில் செய்யப்படும் தானங்கள், பல மடங்கு அதிக நன்மை தரும்.

பித்ருகளை வணங்கவும், அவர்களுக்கு உரிய நீர்த்தார் கடன்களை செய்யவும் உரிய நாள் இது. இதனால் கிட்டும் முன்னோரின் ஆசி மூவாயிரம் மடங்கு நற்பலனைத் தரும் என்பது ஐதிகம்.

எல்லாவற்றையும் விட மிகமிக முக்கியமானது அட்சய திபருதியை நாளில் உப்பு வாங்குவதுதான். அட்சய திருதியை நாள் ஒன்றில்தான் கடலில் இருந்து மகாலட்சுமி வெளிப்பட்டாள் என்றும், அந்த சமயத்தில்தான் உப்பும் தோன்றியதாகவும் சில புராணங்கள் சொல்கின்றன. விலை மலிவானதாக இருந்தாலும் உப்பு மகாலட்சுமியின் அருள் நிறைந்தது.
 அட்சய திருதியை நாளில் வசதிக்கு ஏற்றபடி அன்னதானம், ஆடை தானம், கல்வி உதவி, மருத்துவ உதவி என்று ஏதாவது தானம் இயன்ற அளவில் செய்யுங்கள். மகாலட்சுமி, மகாவிஷ்ணு, சிவபிரான், பார்வதி, குபேரன் என்று உங்கள் மனதிற்குப் பிடித்த கடவுளை மனதாரத் துதியுங்கள். அஷ்டலட்சுமியர் அருளால் உங்கள் வீட்டில் அட்சயமாகச் செல்வம் வளரும். நிலைக்கும்.

கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு கலசம் வைத்து, அதில் கவுரியை எழுந்தருளச் செய்து சொர்ண கவுரி விரதம் கடைபிடிக்கின்றனர். இதன் மூலம் பார்வதி தேவி தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகிறார்கள். மணப்பேற, மழலைப் பாக்கியம், சுமங்கலித்தன்மை, குடும்ப ஒற்றுமை, எல்லோரின் உடல் நலம் ஆகியன வேண்டி அவர்கள் இந்த விரதம் இருக்கிறார்கள். விரத முடிவில் இயன்ற அளவில் தானமும் வழங்குவர்.

அட்சய திருதியை நாளில் புதன்கிழமையும் ரோகிணி நட்சத்திரமும் சேர்ந்து வருவது கூடுதல் சிறப்பு. அப்படி வரும் நாளில் செய்யப்படும் தான தர்மங்கள் பலகோடி மடங்கு பலன் தரும்.

அட்சய திருதியை விரதத்தினை முதன் முதலில் அனுசரித்தவன் மகோதயன் எனும் வணிகன். வறுமையில் வாடிய அவன் மனைவி தடுத்ததையும் பொருட்படுத்தாமல், அட்சய தினத்தன்று விரதம் இருந்து, தன்னிடம் மீதமிருந்த செல்வத்தையும் தானமாக அளித்தான். அதனால் அவனது தான பலன் பெருகி வளமை சேர்ந்தது. அஷ்டலட்சுமி கடாட்சம் நீங்காமல் நிலைத்தது. மறுபிறவியில் அவன் அரசனாகப் பிறந்து கொடை வள்ளலாகத் திகழ்ந்தான் என்கிறது பவிஷ்ய புராணம்.

சித்திரை திருதியை அன்று கௌரி சிவனை மணந்த நாள். அன்று மங்கல ஸ்நானம் செய்து கௌரி சிவன் இருவரையும் வழிபட வேண்டும். இருவரையும் அர்ச்சித்தல், தானங்கள் செய்தல் வேண்டும்.

வைகாசி, புரட்டாசி, மார்கழியின் வளர்பிறை திருதியையில் தொடங்கி தேவியை வழிபட்டு அந்தணத்தம்பதிகளுக்கு உணவளித்து, தானங்கள் அளித்தல்; மற்றும் இருபத்து நான்கு அந்தணர்களுக்கு உணவளித்தல் உகந்தது. இதனை சௌபாக்கிய சயன விரதம் என்பர்.
 
பங்குனி வளர்பிறை திருதியையில் தொடங்கிச்செய்தல். உப்பில்லா உணவு உட்கொள்ளுதல், அந்தணத் தம்பதியருக்கு உணவு அளித்துத் தர்மங்கள் செய்தல் வேண்டும். வைகாசி, புரட்டாசி, மாசியிலும் செய்யலாம்.

திருதியை விரதத்தை அனுஷ்டித்து வந்தால் தம்பதியர்களின் ஒற்றுமை மேலோங்கும்.
 
 

No comments:

Post a Comment