Friday 23 December 2016

பத்மாவதி தாயாருக்கு நைவேத்தியம்!


தாயாருக்கு சுப்ரபாத சேவையில் பால் மற்றும் பழங்கள் சமர்ப்பிக்கப்படும்.

தினமும் புளியோதரை, வெண்பொங்கல்,  சர்க்கரை பொங்கல், தயிர் சாதம், ரவை கேசரி முதலியவை சமர்ப்பிக்கப்படும்.

மதிய வேளையில் லட்டு, வடைகள் சமர்ப்பிக்கப்படும்.

கல்யாண  உத்ஸவத்தின் போது அப்பம், சர்க்கரை பொங்கல், புளியோதரை சமர்ப்பித்து பக்தர்களுக்கு அளிக்கப் படும்.

வூஞ்சல் சேவையின்போது சுண்டல், ஏகாந்த சேவையின்போது சூடான பால், பஞ்ச கஜ்ஜயா முதலியவை சமர்ப்பிக்கப்படும்.

திருப்பாவாடை சேவையில்  புளியோதரை, ஜிலேபி சமர்ப்பிக்கப் படும்.

வெள்ளிக் கிழமை தோறும் மதிய வேளையில்   பாயசம், தோட்டத்தில் திருமஞ்சனத்திற்கு பிறகு வடபப்பு எனப்படும் வூற வைத்த பாசிப்பருப்பு, பானகம், பொங்கல் சமர்ப்பிக்கப்படும்.




அலங்காரத்திற்குப் பிறகு புளியோதரை, தோசை, சுண்டல் முதலியவை சமர்ப்பிக்கப்படும். 


 

No comments:

Post a Comment