Friday 23 December 2016

சாட்சி சொன்ன பத்மாவதி தாயார்!


<<சாட்சி சொன்ன பத்மாவதி தாயார் >>

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஓர் சம்பவம் இது.
 
அன்றைய நாட்களில் நெசவாளர்களில் இரு பிரிவுகள் இருந்தன. பத்மசாலி, பட்டுசாலி என்பதே அவை. இரு பிரிவினரும் ஒன்றாக இருந்தாலும் சில வேறுபாடுகள் இருந்தன. 16 ஆம் நூற்றாண்டில் இருவருக்கும் ஓர் விவாதம் ஏற்பட்டது. அது என்னவென்றால் திருச்சானூரில் அருளும் அலர்மேல்மங்கை தன் வகுப்பினை சார்ந்தவர் என்பதே. அதற்காக தாலப்பாக்கா சின்ன திருவேங்கடநாதா குருவிடம் சென்று தன் விவாதத்திற்கு ஓர் முடிவினை வேண்டினார்கள்.
 
அவர் தாயாரை வேண்ட , தாயார் எழுந்தருளி " நான் பத்மசாலி வகுப்பினை சேர்ந்தவள் " என்று கூறி " நான் அவர்கள் அளிக்கும் மரியாதையே முதலில் ஏற்பேன்" என்று கூறினாள். இந்த தீர்ப்பு அக்டோபர் 23, 1541 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதை செப்பு தகடில் எழுதப்பட்டுள்ளது. இதை கோவிலில் இன்றும் காணலாம்.


ஓம் நமோ வெங்கடேசாய!
 
 

No comments:

Post a Comment