Saturday 14 May 2016

பவானி உத்பத்தி- ஜயந்தி!




சைத்ரமாதம் சுக்லபக்ஷ அஷ்டமி அன்று அம்பாள் பவானியாக உலகில் அவதரித்தாள்.


பவம் என்றால் ( ஸம்ஸார) ஸம்ஸார காட்டிலிருந்து நம்மை காப்பாற்ற பிறந்தவள் .பவானி.

இன்றையதினம் பவானி ரூபத்திலிருக்கும் அம்பாளை பூஜைசெய்து பவானி அஷ்டோத்ரம் அர்ச்சனை செய்து நமஸ்கரித்து ப்ரார்தித்துக் கொள்ளலாம்.

ப்ருஹ்மவைவர்த்தம் என்னும் நூல்

“”பவானீம்யஸ்துபச்யேதசுக்லாஷ்டம்யாம்மதெளநர: நஜாதுசோகம்லபதேஸதாஆனந்தமயோபவேத்””

என்றுசொல்கிறது.

வாழ்க்கையில் துன்பம் வராது. எப்போதும் ஆனந்தத்துடன் இருப்பார் என்கிறது காசிகண்டம். கீழ்கண்ட ஸ்லோகத்தை 108 முறை சொல்லி பவானி அம்மனை ப்ரார்த்திக்கலாம்.

“சரண்யே வரேண்யேஸு காருண்ய மூர்த்தே
ஹிரண்யோ தராத்யைர கண்யேஸு
புண்யே பவாரண்ய பீதேஸ்சமாம் பாஹிபத்ரே.
நமஸ்தே, நமஸ்தே, நமஸ்தே பவானி”

 

No comments:

Post a Comment