Saturday 14 May 2016

மதனத்ரயோதசி!

 
மதனத்ரயோதசி

சைத்ர சுக்லபக்ஷ த்ரயோதசியான இன்று மாலை கணவன் மனைவி இருவரும் மன்மதனை,  ரதிதேவியுடன், மற்றும் நண்பன் வஸந்தருது தேவனுடனும் , கரும்பில் ஆவாஹனம்செய்து பூஜைசெய்து கீழ்கண்டவாறு ப்ரார்த்தனை செய்து கொண்டால் தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்படும்.

 
வஸந்தாய நமஸ்துப்யம் வ்ருக்ஷகுல்மல தாஸ்ரய
ஸஹஸ்ரமுக ஸம்வாஸ காமரூப நமோஸ்துதே.
( நிர்ணயஸிந்து-67)


நமோஸ்து பஞ்சபாணாய ஜகதாஹ்லாத காரிணே
மன்மதாய ஜகன்நேத்ரேரதி ப்ரீதி ப்ரியாயதே.


என்று ப்ரார்த்தனை செய்து கொண்டு




க்லீம் காமதேவாய நம:.
ஹ்ரீம் ரத்யை நம;.
ஸ்மர சரீராய நம;
அநங்காய நம;.
மன்மதாய நம;,
காமாய நம;.
வஸந்தஸகாய நம;,
ஸ்மராய நம;.
இக்ஷூசாபாய நம;
புஷ்பாஸ்த்ராய நம:

என்று 10 நாமங்கள் சொல்லி மன்மதனை நினைத்து தம்பதிகளாக ஸ்வாமி சன்னிதியில் நமஸ்காரம் செய்யலாம்.
 
இதனால் கணவன் மனைவிக்குள் மேன்மேலும் அன்பும், ப்ரேமையும் அதிகரிக்கும்.
 
 
 

No comments:

Post a Comment