Thursday 5 May 2016

ஐஸ்வர்யம் தரும் ஸ்ரீ கிருஷ்ணர் ஜாதகம்!

சாமானியனையும் சாதிக்க வைக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஜாதகம்!



சிறப்பு வாய்ந்த கண்ணனின் ஜாதகத்தை வீட்டுப் பூஜையறையில் மட்டுமல்லாது அலுவலகத்திலும் வியாபாரத் தலங்களிலும் தொழிற்சாலைகளிலும் ஆலயங்களிலும் ஆன்மிகத்தைப் பரப்பும் ஆசிரமங்களிலும் வைத்துப் பூஜிப்போமேயாகில் மறைமுக எதிரிகள் வீழ்வர். சூழ்ச்சிகள் தோற்றுப்போகும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.


 எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு என்ற கருத்து மனதில் பதிந்தாலே போதும்; பொன்னும் பொருளும் தானாகத் தேடி வரும். தர்ம சிந்தனை உயரும். முழு ஈடுபாட்டோடு அவன் மீது பக்தியைச் செலுத்தினால் அர்ஜுனனுக்கு மட்டுமல்ல, நமக்கும் கூட சாரதியாக இருந்து வழிகாட்டுவான், பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் என்பதை நம் அனுபவத்தில் உணரலாம்.

கண்ணனை ஆராதிப்போம். கவலைகள் மறப்போம்.



 

No comments:

Post a Comment