Monday 5 September 2016

சிரமமின்றி ஐயப்பனை வழிபட முன் பதிவு செய்யலாம்!

சபரிமலை ஐயப்பனை சிரமமின்றி எளிதில் வழிபட இணையதளத்தில் விண்ணப்பித்து முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை அயப்பன் கோவிலுக்கு சாமி தரிசனத்துக்காகச் செல்லும் பக்தர்கள் www.sabarimalaq.com என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.
இந்த இணையத்தில் பக்தர்கள் தங்களுடைய பெயர், முகவரியோடு, புகைப்படத்தையும் வெர்ச்சுவல் கியூ கூப்பன் திட்ட இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்த பக்தர்கள் தங்களுடைய பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், ஏதாவது ஒரு அடையாள அட்டை, பதிவு செய்த பின்னர் பதிவிறக்கம் செய்யப்பட கூப்பன் ஆகியவற்றுடன் பம்பை செல்ல வேண்டும்.

அங்கு இதற்கான சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டிருக்கும். அங்கு பக்தர்கள் கொண்டு செல்லும் கூப்பன், அடையாள அட்டையை சோதனை செய்த பின்பு, பக்தர்களை பம்பையில் இருந்து மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவர். கூப்பனில் பதிவு செய்யப்பட்ட நேரத்துக்கு 30 நிமிஷத்துக்கு முன்பாகச் சென்றால் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலின் பதினெட்டாம் படியை ஏறி சாமி தரிசனம் செய்து விடலாம்.

இந்த கூப்பன் மூலம் அதிகாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை முன்பதிவு வசதியைப் பெறலாம். மேலும், இத்திட்டத்தின் மூலம், ஒரு மணி நேரத்தில் 600 முதல் ஆயிரம் பக்தர்கள் வரை சிரமமின்றி சாமி தரிசனம் செய்யலாம். இந்தத் திட்டத்துக்கு எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

No comments:

Post a Comment