Tuesday 26 July 2016

புதாஷ்டமி விரதம்!

சிவ மகா புராணத்தில் அஷ்டமி விரதம் பற்றிய செய்திகள் சொல்லப்பட்டுள்ளன. அஷ்டமி என்பது எட்டாவது திதி. அதிலும் தேய்பிறையில் வரும் அஷ்டமி மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. இந்த விரதம் தொடங்குபவர்கள் மார்கழி மாதத்தில் தேய்பிறையில் வரும் அஷ்டமியில் ஆரம்பிக்க வேண்டும். அஷ்டமி நாட்களில் தட்சணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வதும் விரதமிருப்பதும் நல்ல பலன்களைத்தரும் அஷ்டமி விரதமிருப்பவர்கள் அழகிய உருவத்தைப் பெறுவார்கள். உடல் ஊனமில்லாமலும் செல்வச் செழிப்புடனும் இருப்பார்கள் என்றும் சிவபுராணம் கூறுகிறது.

கவுசிகன் என்பவன் மிக விலையுயர்ந்த எருது ஒன்றினை வளர்த்து வந்தான். அந்த எருது ஒரு சமயம் காணாமல் போய்விட்டது. காணாமல் போன எருதைத் தேடி புறப்பட்டான் கவுசிகன். அவன் சகோதரியும் உடன் சென்றாள். பல நாட்கள் தேடினார்கள். இறுதியில் ஒரு இடத்தில் குளத்தில் தேவலோகப் பெண்கள் ஜலக்கிரீடை செய்து கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். அவர்களிடம் சென்று தங்களுக்குப் பசிப்பதாகவும் பசிக்கு உணவு வேண்டும் என்றும் கேட்டார்கள். அப்போது அவர்கள் விரதம் ஒன்றைப் பற்றி சொல்லி அந்த விரதத்தை மேற்கொண்டால் உங்களுக்கு உணவும் கிடைக்கும் மேலும் காணாமல் போன எருதும் கிடைக்கும் என்றார்கள்.download (1)

தேவலோக பெண்களால் கூறப்பட்ட விரதம் புதாஷ்டமி விரதம். அதாவது வளர்பிறை அல்லது தேய்பிறையில் வரும் அஷ்டமியாவது புதன் கிழமை அன்று வந்தால் அந்த நாள் புதாஷ்டமி எனப்படும்.

கவுசிகன் புதாஷ்டமி விரதம் இருந்தான் காணாமல் போன காளை கிடைத்தது. அவன் சகோதரிக்கும் நல்ல கணவன் கிடைத்தான். கவுசிகன் புதாஷ்டமி விரதம் இருந்ததால் அரசனானான்.கவுசிகனுடைய பெற்றொர் நரகத்தில் அவதிப்பட்டு கிடந்தார்கள் விரதத்தின் பலனால் அவனுடைய பெற்றொர் நரக வேதனையிலிருந்து விடுபட்டார்கள்.

புதாஷ்டமி விரதமிருந்தால் இழந்த பொருளை திரும்பப் பெறலாம் நன் மக்கள் பேறு உண்டாகும் மரணத்துக்குப் பின் பேரின்ப வாழ்வு நிச்சயம்

No comments:

Post a Comment