Tuesday 26 July 2016

கதிராமங்கலம் வனதுர்க்கா!

 
கிலமெல்லாம் ஆளுகின்ற மகாசக்தி அம்பிகை, கதிராமங்கலத்தில் வனதுர்க்கை என்ற திருப்பெயரோடு கோவில் கொண்டு தன்னை நாடிவரும் அன்பர்களுக்கு தாயுள்ளத்தோடு அருள்புரிந்து வருகிறாள்.

நவதுர்க்கைகளில் முதலாவதாக விளங்குபவள் வனதுர்க்காதான்.

அவள் வரலாறைப் பார்ப்போமா...

அசுரர்களால் ஈரேழு லோகத்திலும் இடர் பெருகியது. அது நீங்க மும்மூர்த்திகளும் தேவர்களும் ஆதிபராசக்தியின் அருள்வேண்டி பெரியதொரு யாகம் செய்தனர். அந்த யாக குண்டத்தில் தேவியானவள் எழுந்தருளி, "விரைவில் மகிஷன், சும்பன், நிசும்பன், பண்டன் இவர்களது கதை முடியும்' எனக் கூறி மறைந்தாள்.

அன்னை பராசக்தி பூவுலகம் வந்து மலைச் சாரலில் இளம்பெண்ணாக சஞ்சரித்தாள். அவளைக் கண்டு அசுரர்கள் மயங்கி, நெருங்கினர். அவர்களை மாய்க்க, அம்பிகை சர்வ தேவாதிதேவர்களின் அம்ச சக்தியையும் ஆத்மசக்தியையும் ஒன்றிணைத்து ஒரு வெற்றித் திருமகளை உருவாக்கினாள். அந்த மகாசக்திதான் துர்க்கை. அந்த துர்க்கையானவள் அசுரர்களை அழித்து அமரர்களைக் காத்தாள். பின்னர் ஏகாந்தியாக சிவமல்லிகாவனம் என்ற தலத்தில் தங்கி உலகநலன் கருதி தவம்புரியத் தொடங்கினாள். அந்தத் தலம்தான் தற்போது கதிராமங்கலம் என்று அழைக்கப்படுகிறது.

கம்பருக்கு அருளிய துர்க்கை!

தேரழுந்தூரில் வாழ்ந்துவந்த கவிச்சக்கரவர்த்தி கம்பர் அன்னை வனதுர்க்கையின்மேல் அளவுகடந்த பக்தி கொண்டவர். இவளை வழிபடாமல் எந்த ஒரு செயலையும் துவங்குவதில்லை. ஒருநாள் மழைக்காலத்தில் கம்பர் வீட்டுக் கூரை சிதைந்தது. வீட்டுக்குள் மழைநீர் கொட்டியது. அப்போது கம்பர் மனமுருகி, "அம்மா! அடைமழை இடைவிடாது பெய்கிறதே. ஒரு கூரைகூட இல்லாமல் நீயே நனைந்தபடி நிற்கிறாய்! உன் அருள் மழை என்றும் என்னைக் காக்கும்' என்று மழையைப் பொருட்படுத்தாது ஆழ்ந்த உறக்கத்தில் ஈடுபட்டார். காலை விழித்தெழுந்து பார்த்தபோது அவர் வீட்டுக் கூரை நெற்கதிர்களால் வேயப்பட்டு இருந்ததைக் கண்டு வியந்து, "கதிர்தேவி, கதிர்வேய்ந்த மங்களநாயகி' என பாடிப் பரவினார். இதுதான் நாளடைவில் கதிராமங்கலம் என மருவியதாகக் கூறுகின்றனர்.

அகத்தியருக்கு அருளிய துர்க்கை!

உலகைச் சமன் செய்ய அகத்தியர் தென் திசை வந்தபோது, அதற்கு இடையூறாக எழுந்து நின்ற விந்திய அரக்கனை இந்த வனதுர்க்கையின் அருள்பெற்றுதான் அகத்தியர் அழித்தாராம்

என்று மனம் குளிர வாழ்த்திவிட்டு, திருக் கடவூருக்கு மகிழ்வோடு சென்றார். அதன்பின் மார்க்கண்டேயருக்கு, என்றும் பதினாறு என்று ஈசன் அருளியது அனைவரும் அறிந்ததே.

மிருகசீரிட நட்சத்திரம், செவ்வாய்க்கிழமை இணைந்த நாளில்தான் மிருகண்டு மகரிஷிக்கு காட்சி தத்தாளாம் தேவி.

அங்காரகனுக்கு அருளிய துர்க்கை!

முருகவேள் நரகாசுரனோடு போரிட்டபோது பூதப்படை வீரர்கள் காயமுற்றனர். அவர்களைக் காக்க பெருமளவில் ரத்தம் தேவைப்பட்டது. ரத்தத்துக்கு அதிபதியான செவ்வாய் அதற்கான சக்தியைப் பெறும்பொருட்டு, அங்காரகனுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமையன்று, துர்க்கை வழிபாட்டிற்கு உகந்த ராகு காலத்தில் வனதுர்க்கை திருமுன் வந்தார். 54 எலுமிச்சம் பழங்களை இருகூறாக்கி அவற்றின் சாற்றினைப் பிழிந்து சேகரித்து, பின் அந்த எலுமிச்சை தோல்களை 108 அகல் விளக்குகளாக்கி, நெய் ஊற்றி, தாமரைத்தண்டுத் திரியினைப் போட்டு தீபம் ஏற்றும் நிலையில் வைத்தார். பின்னர் எலுமிச்சைச் சாற்றினை வனதுர்க்கைக்கு அபிஷேகம் செய்து, அந்த சாற்றினை ஒரு பாத்திரத்தில் சேகரித்து வைத்து, அதன்பின் 108 எலுமிச்சை தீபங்கள் ஏற்றி தேவியை வணங்கி, பின்னர் அபிஷேக சாற்றினை அங்காரகன்  பருகினார். பெரும் வலிமை பெற்றார். செவ்வாய்க்கு அங்காரகன், மங்களன் என்ற பெயர்களும் உண்டு. மங்களன் வழிபட்டதால், "மங்கள துர்க்கா' எனவும் இந்த தேவி அழைக்கப் படுகிறாள்.

குலதெய்வ வழிபாடு!

காவிரி தெற்கு வடக்காக ஓடும் வடகரை ஸ்தலமான கதிராமங்கலத்தில் வனதுர்க்கா பரமேஸ்வரி சர்வசக்தியாக விளங்குகிறாள். பொதுவாக ராகுவுக்கு அதிதேவதை துர்க்கை.

அதற்கேற்ப அன்னையின் முன்பக்கத் திருவுருவம் அம்பாள் வடிவமாகவும், பின்பக்கம் சர்ப்பாகாரமாய் பாம்பு படம் எடுத்தது போல் அமைந்து கண்டதுவாரம், கஷ்கதுவாரமில்லாமல் ஸ்வயம்புமூர்த்தமாய் உள்ளது. எனவே ராகு- கேது தோஷ நிவர்த்திக்கும் இவ்வன்னையை வணங்கலாம்.

ஆகம விதிப்படி விநாயகர் சந்நிதி இல்லாமல் கோவில் எதுவும் அமைவதில்லை. ஆனால் இங்கு விநாயகர் அம்பாளுடனே கலந்திருப்பதாக ஐதீகம். அதனால் தனியே விநாயகர் சந்நிதி இல்லை.  மற்ற தலங்களில் துர்க்கை வடக்கு அல்லது மேற்கு நோக்கி சிம்மவாஹினியாக மகிஷாசுரனை பாதத்தில் வதைத்த வண்ணம் திருக்காட்சி தருவாள்.

ஆனால் இந்தத் தலத்திலோ கிழக்கு நோக்கி, அருளையும் பொருளையும் வாரி வழங்கும் மகாலஷ்மி அம்சமாக தாமரைப் பூவில் தாள் பதித்த வண்ணம், வலது மேற்கரத்தில் தீவினையறுக்க பிரத்யேக சக்கரம், இடதுமேற்கரத்தில் சங்கு, வலது கீழ்க்கரத்தில் அபயஹஸ்தம், இடது கீழ்க்கரம் இடுப்பில் வைத்த எழிலான பாவனையுடன் அருளாட்சி புரிகிறாள். இது மிக அபூர்வ அமைப்பாகும்.

அதனால் குலதெய்வம் என்னவென்றே தெரியாதவர்கள், இந்த வனதுர்க்கைக்கு நான்கு எலுமிச்சை தீபமேற்றி நான்கு முறை வலம்வந்து குங்கும அர்ச்சனை செய்தால், அவரவர் குலதெய்வத்தின் அருள்கிட்டும்.

""இத்தல துர்க்கைக்கு காசி விசாலாட்சி, ஸ்ரீஅன்னபூரணி ஆகியோருடன் தொடர்புள்ளதால், அம்பாள் தினமும் காசி போய்வருவதாகவும் ஒரு ஐதீகம் உள்ளது. இதற்கேற்ப இன்றும் அம்பாளின் கோபுர விமானத்தில் அம்பாளுக்கு நேரே ஒரு சாண் சதுர அளவில் ஒரு துவாரம் உள்ளது. இதனால் இவளை ஆகாசதுர்க்கா என்றும் சொல்வர்'' என்கிறார் பரம்பரை ஆலய அர்ச்சகர்.

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில் கதிராமங்கலம் உள்ளது. கும்பகோணத்திலிருந்து கிழக்கே 20 கிலோமீட்டர் தொலைவிலும்; மயிலாடுதுறையிலிருந்து மேற்கே 15 கிலோமீட்டர் தொலைவிலும் இவ்வாலயம் அமைந்துள்ளது. காலை 7.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரையிலும்; மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.



 

No comments:

Post a Comment