Tuesday 26 July 2016

தர்மபுரி (தகடூர்) கோட்டை கல்யாண காமாட்சி!


 
கொடை வள்ளல் அதிய மான் ஆட்சிபுரிந்த `தகடூர்' தான் இன்றைய தருமபுரி.  அன்னை, கல்யாண காமாட்சியாக எழுந்தருளியுள்ள  தலம்.

`கோட்டை காமாட்சி யம்மன் கோயில்' என்றுதான் மக்கள் குறிப்பிடுகிறார்கள்.

அரிதிலும் அரிதான குடவேல மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட கோயில் இது.

கன்னிராசியில் அஸ்த நட்சத்திரக்காரர்கள் வணங்கவேண்டிய தலமும் இதுவே.

ஐராவதம், ராமர் துர்வாசர், அர்ச்சுனன் முதலியோர் வழிபட்ட தலம்.

இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

இறைவர் திருப்பெயர் : மல்லிகார்ச்சுனர்.

இறைவியார் திருப்பெயர் : கல்யாண காமாட்சி!

தல மரம் : வேளா மரம். (தற்போதில்லை)

வைப்புத்தலப் பாடல்கள் : சுந்தரர்



மூன்று கோயில்கள்!

தகடூர் கோட்டைக் கோயிலுக்குள்ளே மூன்று தனிக்கோயில்களாக காட்சி தருபவை, மல்லிகார்ஜுனே சுவரர் சந்நதி, காமாட்சியம்மன் சந்நதி மற்றும் இன்று சித்தே சுவரர் என்று அழைக்கப்படும் சோமேசுவரர் சந்நதிகளே ஆகும்.

கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் கடந்து மகாமண்டபத்தை அடைகிறோம். நான்கு வரிசைகளில் 16 தூண்களைக் கொண்டது அது. பாசுபதம் பெற்ற பார்த் தன், சிவபக்த ஆஞ்சநேயர், சம்பந்தர் பெருமான் இப்படி ஒவ்வொரு தூணிலும், அழகிய சிற்பங்கள்.

தென்கோடியில் வீரபத்தி ரர் சிலையைக் கடந்து சென் றால், நிருத்த மண்டபம். `ஐராவத மண்டபம்' என்றும் இதனை அழைப்பர். பழமையும் புதுமையும் சேர்ந்து, அவற்றின் காலத்தை நிர்ணயிக்க முடியாத நிலை.

கருவறையையொட்டி அமைந்ததே நவரங்க மண்ட பம். தெய்வீகக் கலைத்திறனும், கலாசாரப் பெருமையும் ஒன்றையொன்று மிஞ்சிடும் நிலை. நுளம்ப பல்லவர் காலத்துச் சிற்பிகளின் கைவண்ணம்!



கருவறையில் நாம் தரி சிப்பது, நான்கடி உயர சிவலிங்கத் திருமேனியராக எழுந்தருளியுள்ள, மல்லிகார்ஜுனரைத்தான். சுயம்பு மூர்த்தி!

அர்ச்சுனன் வழிபட்ட திருமேனி!



அன்னை காமாட்சியின் திருக்கோயில், மல்லிகார்ஜுனே சுவரர் சந்நதிக்கும், சோமேசுவரர் சந்நதிக்கும் இடையே உள்ளது. பதினெட்டுப் படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். எதிரில் நான்கு கால் மண்டபம். அதற்கும் ஓர் அழகிய விமானம், புதுமையானதோர் அமைப்பு.



தாமரை மலரைப் போல 48 இதழ்கள், மூலைகள், 44 தளங்கள், 43 கோணங்கள் கொண்ட அந்தக் கரு வறையைத் தாங்கி நிற்பவை பதினெட்டு யானைகள். 18 யானைகளின் மத்தகங்கள் மீது நிற்பது அன்னையின் கருவறை.

சோமசூத்திர பிரதட்ச ணம் போல, வலமிருந்து இடப் புறமாகச் சுற்றி வந்தால், அதிஷ்டானத்தின் அடிவரிசையிலே, ஓர் அடி உயரமும், இரண்டடி நீளமும் கொண்ட பலகைச் சிற்பங்களாக நாம் கண்டு அதிசயிப்பது, ராமாயண காதையைத்தான்.

கருவறையின் பின்னால் உள்ள இரண்டாவது யானை யின் பக்கம் துவங்குகிறது ராமகாதை. புத்ரகாமேஷ்டி யாகத்தில் தோன்றிய அமுத கலசத்தை தசரதன் மூன்று பத்தினிமார்களுக்கும் அளித் தல், ராம லட்சுமண, பரத, சத்ருகன் அவதாரம். அதனையடுத்து குருகுலவாசம், வசிஷ்டரிடம் சிறுவர்கள் கல்வி பயிலுவது, விசுவாமித்ரர் வருகை, தாடகை வதம், சீதா கல்யாணம், கைகேயி வரம், குகனோடு கங்கையை கடத்தல், சூர்ப்பனகை மானபங்கம், கர தூஷண வதம்...

மாயமானாக மாரீசன் வருகை, சீதா அபகரணம், சுக்ரீவன் நட்பு, அனுமனின் சாகசங்கள், சேது பந்தனம், இலங்கைப் போர், மேக நாத னின் மாயப்போர், கும்பகர் ணன் வதம், இலங்கேசுவர வதம், விபீஷணபட்டாபிஷேகம், ராமபட்டாபிஷேகம், சீதை வனம் செல்தல், லவகுசா ஜனனம், அசுவமேத யாகம்... இப்படி, முப்பத்தைந்து சிற்பங்களில் முழுக்கதையும் நம் கண் முன்னே!
 
அன்னை கல்யாண காமாக்ஷி அம்பிகைக்கு ஆடிப்பூர  வளையகாப்பு விழா !





ஈசனின் கருவறையை விட பெரியதாக அமைந்துள் ளது அன்னை காமாட்சியின் கருவறை. அவள் அழகும், கருணையும் எல்லையற்றவை. தங்கக் கவசம் சார்த்திய கோலத்தில் அன்னையைத் தரிசித்திட பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.



நான்கு கரங்களோடு, அபய வரத ஹஸ்த கோலம் கொண் டுள்ள அன்னை காமாட்சி, கருணை ததும்பும் தனது பார்வையினாலேயே நமது அத்தனை கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்ளும் அருட்கோலம் அது.

பதினெட்டுப் படிகள் ஏறி சாட்சியம் சொல்வதும், சத்தியப் பிரமாணம் செய்வதும் அந்த நாட்களில் வழக்கமாக இருந்ததாம். கல்யாண காமாட்சி முன்னே உள்ள `உலோகத்தினால் ஆன கிளி' ஒன்று அதற்கு சாட்சி. ஊர்ப் பஞ்சாயத்தில், காமாட்சியே கிளி வடிவில் பறந்து சென்று சாட்சி சொன்னாளாம்.

சற்று வித்தியாசமாக, வட்ட வடிவில் அமைந்த பலகைச் சிற்பமாக பைரவர் சிலையையும் காண்கிறோம்.

ஸ்ரீ ராஜ துர்காம்பிகை சுயரூபக் காட்சி!

"சூலினி" ராஜதுர்க்காம்பிகை!


 இத்தலத்தில் அருளும் ராஜதுர்க்கை ‘சூலினி’ எனப் போற்றப்படுகிறாள். தர்மர் இருபத்தேழு மூல மந்திரங்களால் வழிபட்ட மூர்த்தினி இவள்.
 
சங்கு சக்ரம் ஏந்தி மகிஷனை வதைக்கும் கோபரூபத்தில் இவள் இருந்தாலும் நாடிவரும் அன்பருக்கு நலங்கள் பல சேர்ப்பவள். செவ்வாய் தோஷம் போக்குபவள்.
 
ஒவ்வொரு தை மாதமும் சண்டிஹோமம் கொண்டருளுகிறாள் சூலினி. இங்கு ப்ரத்யங்கிரா தேவியும் சிறப்பாக வழிபடப்படுகிறாள்.
 

"சூலினி" ராஜதுர்க்காம்பிகை!

சூலினி ராஜ துர்காம்பிகை சூலம், சங்கு ஏந்தி மகிஷனை வதம் செய்யும் தோற்றத்தில் எருமைத் தலையும், மனித உடலும் கொண்ட மகிஷன் கத்தி, கேடயங்களுடன் கீழே விழுந்திருப்பது போலவும், மகிஷனின் கொம்பை ஒரு கரத்தில் பற்றியும், இடது காலால் மகிஷனின் கழுத்தை மிதித்தபடியும் சம்ஹாரத் தோற்றத்தில் அருள்புரியும் திருக்காட்சி மூலஸ்தான கருவரையில் கிழக்கு நோக்கி இருப்பது இந்தக் கோயிலின் சிறப்பாகும்.
 

" ராகுவை போல் கொடுப்பார் இல்லை"எனும் முதுமொழிபடி ராகு கிரக அதி தேவதை ஸ்ரீ துர்க்கையை ஸ்ரீ தர்மர் முதலானோர் வழிபட்டு, இழந்த நாடு முதல் அனைத்தையும் பெற்றுள்ளார்.
 

ஆடி 2-ம் செவ்வாய்,
"சூலினி" ராஜதுர்க்காம்பிகை. வெள்ளி கவச அலங்காரம்.

ரத்னத்ரயம் எனும் வகையில் மூவகை சூலங்களுடன் காரண, காரணி, அதற்கான பலன் எனும் மூவகை பயன்களை அருளும் ஸ்ரீ சூலினியை முழுவதும் சந்தனக் காப்பு தோற்றத்தில் வருடத்தில் ஆடி 3 ம் செவ்வாய்க் கிழமை மதியம் 4.15 முதல் இரவு 9.15 வரை மட்டுமே தரிசிக்க முடியும்.



"சூலினி" ராஜதுர்க்காம்பிகை. சந்தன காப்பு அலங்காரம்.
 
நிகழ்ச்சி நிரல்:
 



 
ஆடி 3 ம் செவ்வாய்க்கிழமை
 
காலை 9 மணிக்கு கோட்டை முனியப்பன் சுவாமி கோயிலில் இருந்து பால் குடம் ஊர்வலம்.
 
காலை 10.30 மணி முதல் 12 மணி வரை பால் குடம் அபிஷேகம்,அன்னப்பாவாடை சமர்ப்பித்தல்,மஹாதீபாராதனை.

  
மதியம் 12 மணிக்கு அன்னதானம்
 
மதியம் 3.45 மணிக்கு ஸ்ரீ ராஜ துர்காம்பிகை சுயரூபக் காட்சி
 
 
மாலை 6 மணிக்கு அருள்தரும் அன்னை எம்பிராட்டி ஸ்ரீ ராஜ துர்காம்பிகை சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி உலா.
 
இரவு 9.30 மணிக்கு ஸ்ரீ ராஜ துர்காம்பிகைக்கு மஹாஅபிஷேகம்.
 
இரவு 11 மணிக்கு மஹாதீபாராதனை.
 
ஆதி காமாக்ஷி அம்பிகைக்கு சௌபாக்ய திரவ்யங்கள் சமர்ப்பணம்..
 


 
அமாவாசை நாட்களில், பெண்கள் பதினெட்டுத் திருப்படிகளிலும் திருப்படி பூஜை செய்வதோடு, உற்சவ திருமேனியைத் தாங்களே சுமந்து கோயிலினுள்ளே வலம் வருவது சிறப்பு. 
 
 
சித்தேசுவரர்

மூன்று கோயில்களில், வடபுறம் அமைந்துள்ள சந் நதியே `சித்தேசுவரர்' என இன்று அழைக்கப்படும் சோமேசுவரர் சந்நதி. சந்திரனுக்கு அருள் செய்தவர். மனக்குழப்பம் நீங்க, உள்ளத் தெளிவு பெற, சோமேசுவரரை வழிபடுதல் பயன்தரும்.

ஒவ்வொரு மாதப் பிறப்பிலும் முதல் வழிபாடு இவருக்குத்தான் நடத்தப் பெறுகிறது.

இவை தவிர, கோஷ்ட தெய்வங்கள், சண்டிகேசுவரர், நவகிரகங்கள் எல்லாம் கோட்டை காமாட்சியம்மன் கோயிலில் உண்டு. வில்வ மரத் தடியில் நாகர் சிலைகளும், ரேணுகாதேவி சிலையும் உள் ளன.

சனத் குமார நதியைத் தவிர, மூன்று அழகிய திருக்குளங் கள் இருந்ததாம். அவற்றில் ஒன்று மட்டும் உருமாறி, பெயர் மாற்றத்துடன் ஒரு குறுகிய சந்தில் உள்ளது.

இங்குள்ள பைரவர் சந்நிதி விசேஷமானது. வாகனத்துடன், சூரிய சந்திரர் இருபுறமும் விளங்க, கோயிலின் குபேர பாகத்தில் எழுந்தருளியுள்ளார்.


தொங்கும் தூண்கள்!





சர்வ மங்கள கல்யாண காமாட்சி!


ஆடிப்பூர  வளையகாப்பு விழா!





ஆடிப்பூர  வளையகாப்பு விழா!





மூன்றாம் வெள்ளி - மஹாமேரு நிலயா
த்ரிபுர சுந்தரி




 



 

 

 

 

 

No comments:

Post a Comment