Tuesday 26 July 2016

மதுரை மீனாட்சியம்மன் ஆலயம்!


மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் சக்தி பீடங்களில் முதன்மையானது.

ராஜமாதங்கி சியாமளா பீடம் என்றழைக்கப்படுகிறது.



மூலவரான மீனாட்சியம்மன் சிலை முழுவதும் மரகதக் கல்லாலானது. தமிழகத்தில் மீனாட்சி சுந்த ரேஸ்வரர் ஆலயம் என்ற பெயரில் 366 கோவில்கள் உள்ளன. அதில் இக்கோவில்தான் முதன்மைக் கோவிலா கும். கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள இவ்வாலயம் இந்திய அதிசயங்களில் ஒன்றாகிவிட்டது.

பெரும்பாலான கோவில்களில் இறைவன் கிழக்கு முகமாகவும் இறைவி தெற்கு நோக்கியும் கோவில் கொண்டிருப்பர். ஆனால் மதுரையில் சுவாமியும் (சொக்கர்) அம்பிகையும் (மீனாட்சி) கிழக்கு நோக்கியே காட்சி தருகின்றனர்.

மதுரை தமிழகத்தின் 2-ஆவது பெரியநகரம். இது தூங்காநகரம் என பெயர் பெற்றது. இவ்வாலயம் கலையழகும், சிலையழகும், சிற்பத்திறனும், சித்திரவனப் பும் கொண்டது. நாத அமைப்பு கொண்ட தூண்களை உடையது. மூர்த்தி, தலம், தீர்த்தப்பெருமை கொண்டது. கடம்ப மரமும் வில்வ மரமும் தல விருட்சம். பொற்றாமரைக் குளம், வைகை நதி, கிருதமாலை, கொண்டாழி, தெப்பக் குளம், புறந்தொட்டி, நிர்மால்ய தீர்த்தம் ஆகியவை இத்தல தீர்த்தங்களாகும். சிறப்பு- மதுரைமல்லி, தாழம்பூ, குங்குமம், பிட்டு பலகாரம்.

பொற்றாமரைக் குளத்தைச் சுற்றி சிவனின் 64 திருவிளையாடல்களும் சித்திரங்களாக இடம்பெற் றுள்ளன. இதே 64 திருவிளையாடல்கள் சுவாமி கோவில் மகாமண்டபத்தில் வண்ணச்சிற்பங்களாக இடம் பெற்றுள்ளன.

திருக்குறள் பெருமையை நிலைநாட்டிய சங்கப் பலகை தோன்றிய இடம் பொற்றாமரைக் குளம்தான். இக்குளத்தின் தென்புறச் சுவரில் 1,330 திருக்குறளும் வெண்சலவைக் கற்களில் பொறித்துப் பதித்துள்ளனர். இக்குளத்தில் இப்போது திருப்பனந்தாள் மடத்தலைவர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி அருள்நம்பித் தம்பிரான் செய்தளித்த உண்மையான பொற்றாமரையையே மிதக்கவிட்டுள்ளனர்.

ராஜசேகர பாண்டியன் விருப்பப்படி நடராசர் தன் கால் மாற்றி ஆடிய தலமிது. அதுதான் வெள்ளி சபை என்ற ரஜத சபை. இது பஞ்ச சபைகளில் ஒன்று. பெயருக்கேற்றாற்போல் சந்நிதி முழுவதுமே வெள்ளியாலானது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த வெள்ளி வேலைப்பாடு கள் அனைத்தும் ஒரு முஸ்லிம் சிற்பியால் செய்து தரப் பட்டதுதான்.

மேலும் இவ்வாலயத்தில் பஞ்ச சபைகளும் உள்ளன. முதல் பிராகாரத்தில் கனகசபையும், ரத்ன சபையும்; வெள்ளியம்பலத்தில் ரஜதசபையும்; நூற்றுக்கால் மண்டபத்தில் தேவசபையும்; ஆயிரங்கால் மண்டபத்தில் சித்திர சபையும் அமைந்துள்ளன.

ஆயிரங்கால் மண்டபத்தில் ஒலியெழுப்பும் சிலைகள் பலவுள்ளன. அத்துடன் ஏழு இசைத்தூண்களும் உள்ளன.

இங்கு முக்கியமான இடம் திருமலை நாயக்கர் கோவிலிலுள்ள நூல் நிலையம். ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் இத்தலத்தைத் தரிசித்து மீனாட்சியம்மன் அருளைப் பெறுவது அவசியம்.

இவ்வாலயத்தில் 12 கோபுரங்கள் உள்ளன. அதில் மிகவும் உயரமானது தென்கோபுரம். உயரம் 160 அடி. இதில் 1,511 சிற்பங்கள் உள்ளன.

மேலை கோபுரத்தில் 1,124 சிற்பங்களும்; கீழை கோபுரத்தில் 1,011 சிற்பங்களும்; வடகோபுரத்தில் 404 சிற்பங்களும்; விமானத்தில் 174 சுதைச் சிற்பங்களும் என மேலும் பல சிற்பங்களுடன் மொத்தம் 4,224 வண்ணச் சிற்பங்களைக் காணலாம். அத்துடன் ஆலயத்தில் 264 சுவாமி சிலைகளும் உள்ளன.
தெப்பக் குளத்தில் கிடைத்த ஏழு அடி உயர முக்குறுகுணிப் பிள்ளையாருக்கு முக்குறுணி அரிசி மாவால் மிகப்பெரிய கொழுக்கட்டை செய்து விநாயகர் சதுர்த்தி யன்று படைப்பார்கள். அம்மனுக்கு 15 திருப்பெயர்களும் சுவாமிக்கு 14 திருப்பெயர்களும் உள்ளன. ஆலய பிரசாதம் பிட்டுதான்!

மதுரையில் சித்திரை மாதம் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாணமும், கள்ளழகர் வைகை எழுந்தருளலும் உலகப் பிரசித்தி பெற்ற விழாக்களாகும்.


 

No comments:

Post a Comment