Friday 19 August 2016

விரும்பிய நல்ல வேலை கிடைக்க !

ஐராவத கஜாரூடம் ஸ்வர்ணவர்ணம் கிரீடினம்
ஸஹஸ்ர நயனம் சக்ரம் வஜ்ரபாணிம் விபாவயேத்!

-
ஸ்தோத்ர கதம்பம் (இந்திரன் துதி)

பொதுப்பொருள்:

பாற்கடலிலிருந்து தோன்றிய வெள்ளை யானையான ஐராவதத்தை வாகனமாகக் கொண்டவரே, இந்திரா நமஸ்காரம். தங்க நிற கிரீ டத்தைத் தரித்தவரே, ஆயிரம் கண்கள் கொண்டவரே, சக்கரம், வஜ்ராயுதத்தை ஆயுதங்களாகக் கொண்டவரே, தேவேந்திர பட்டினத்திற்குத் தலைவரே, நமஸ்காரம்.


(இத்துதியை தினமும் கூறி வர, அவரவர் தகுதிக்கேற்ப, உரிய, விரும்பிய வேலை கிடைக்கும்.)


21 விதை தூவுங்க! டிரான்ஸ்பர் வாங்குங்க!

விருப்பமான இடத்திற்கு டிரான்ஸ்பர் பெற விரும்புவோர் ஒரு வழிபாட்டை தொடர்ந்து செய்யலாம். அதிகாலையில் சூரியன் உதயமாவதற்கு முன் எழுந்து நீராடி தூய உடை உடுத்துங்கள்.

உதயமாகும்போது, கிழக்கு நோக்கி சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். அப்போது காய்ந்த மிளகாயின் 21 விதைகளை சூரியனுக்கு பக்தியுடன் சமர்ப்பியுங்கள். மூன்று நாட்கள் தொடர்ந்து இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும். அப்போது, சூரியனுக்குரிய 12 மந்திரங்களை ஜபிக்க வேண்டும்.

ஓம் ஆதித்யாய நமஹ

ஓம் திவாகராய நமஹ

ஓம் பாஸ்கராய நமஹ

ஓம் ப்ரபாகராய நமஹ

ஓம் சஹஸுத்ர்ஷனவே நமஹ

ஓம் த்ரிலோசனாய நமஹ

ஓம் ஹரிதாஸவயே நமஹ

ஓம் விபாவஷே நமஹ

ஓம் தினக்ருதே நமஹ

ஓம் த்வாதசேத் மகயே நமஹ

ஓம் த்ரையி மூர்த்தயே நமஹ

ஓம் சூர்யாய நமஹ என்று சொல்லி வணங்குங்கள்.

சூரியன் அருளால் விரைவில் விரும்பிய இடத்திற்கு டிரான்ஸ்பர் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மனிதனை அதிகாரப் பதவியில் அமர்த்தும் கிரகம் சூரியன். எனவே, வேலை சார்ந்த சிரமங்களைச் சந்திப்போர் எல்லாருமே இந்த வழிபாட்டைச் செய்யலாம்.


பதவி உயர்வைத் தரும் மந்திரம்

மந்திரம் 1:

சதுரங்க பலாபேதாம் தனதான்ய ஸீகேஸ்வரீம்

அச்வாரூடா மஹம் வந்தே ராஜலக்ஷ்மீம் ஹிரண்மயீம்


மந்திரம் 2:

அச்வ பூர்வாம் ரதமத்யாம் ஹஸ்திநாத ப்ரபோதினீம்

ச் ரீயம் தேவி முபஹ்வயே ஸ்ரீர்மாதேவீர் ஜீஷதாம்

இந்த இரண்டு மந்திரங்களையும் ஜபிக்கும்போது,லட்சுமியை வெள்ளைத் தாமரை மற்றும் குங்குமப்பூவால் அர்ச்சிக்க வேண்டும்.இப்படி தொடர்ந்து 48 நாட்கள் ஜபித்துவந்தால், மிக உயர்ந்த பதவி/பதவி உயர்வு கிடைக்கும்.இந்த வழிமுறையை நமக்கு சித்விலாஸ விருத்தி என்ற நூல் சொல்லுகிறது.


 

No comments:

Post a Comment