Monday 20 June 2016

சர்வ மங்களம் அருளும் ஸர்வ மங்களாதேவி!

தங்கநிறம் கொண்ட இத்தேவி தாமரை மலரில் வீற்றருள்பவள். அன்னையின் திருவுடலை செந்நிற ரத்தினக் கற்களும், முத்துகள் பொதிந்த பதக்கங்களும், மாலைகளும் அணிசெய்கின்றன. கைகளில் வளையல்கள், தோள்வளை, முத்துகளும் மாணிக்கங்களும் பதித்த மகுடம் மற்றும் தண்டை ஆகியவற்றை அணிந்து ஸர்வாலங்கார பூஷிதையாக தேவி பொலிந்து அருள்கிறாள்.

இந்த அம்பிகை எப்போதும் அனைத்து மங்களங்களுடனும் இருப்பவள்; அந்த மங்களங்களை தன் பக்தர்களுக்கு அருள்வதிலும் தன்னிகரற்றவள். இத்தேவியின் கடைக்கண் பார்வை அனவரதமும் அன்பர்களைக் காக்கின்றது. தன் நான்கு கரகமலங்களிலும் மாதுளம்பழம், தங்கப் பாத்திரம், அபயவரதம் தரித்துள்ளாள். சிவப்புப் பட்டு உடுத்தியவள். இந்த அம்பிகையைச் சுற்றி 72 சக்திகள் காவலாய் உள்ளதாய் புராணங்கள் பகர்கின்றன.

ஸர்வ மங்களாதேவி திதி நித்யா தேவிகளுக்கு மாறாக ஆயுதங்கள் ஏதுமின்றி சாந்த வடிவினளாக அருட்காட்சியளிக்கிறாள். சௌம்யமான அன்னையின் திருமுகத்தில் நிலவும் அமைதியுடன் கூடிய இளநகை அலாதியானது.



 அம்பாளை பூஜித்தால் என்னவெல்லாம் கிடைக்கும் என்று கேட்டால், கிடைக்காதது ஒன்றுமில்லை என்பதுதான் பதில். சர்வ மங்களா நித்யாவின் திருவடித் தாமரைகளைப் பணிந்து ஸர்வமங்களங்களும் பெறுவோம்.

வழிபடு பலன்:

உலகியல் வாழ்க்கைத் தேவைகள், கல்வி, வேலை, திருமணம், மகப்பேறு, தொழிலில் வெற்றி, செல்வம், செல்வாக்கு, புகழ், கௌரவம், அந்தஸ்து ஆகிய அனைத்தையும் தந்து அன்பர்களை ஆன்மிக நிலையிலும் மேம்படுத்துபவள் இந்த தேவி. பிரயாணங்களின் போது ஆபத்து நேராமல் காப்பவள்.

ஸர்வமங்களா காயத்ரி

ஓம் ஸர்வமங்களாயை வித்மஹே
சந்த்ராத்மிகாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.


மூல மந்த்ரம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஸ்வௌம் ஸர்வமங்களாயை நம:

த்யான ஸ்லோகங்கள்:

பார்ணவேந்து ஸந்நிபானானாம் ப்ரதீப்த குண்டலாம்
ஸர்வலோக பூஜிதாங்க்ரி திவ்ய பங்கஜாம்
சிவாம் ஸர்வலோகநாயகீம் ஸமஸ்த ஸௌபாக்ய தாயகாம்
 ஸர்வமங்களாம் பஜேப்ரஸனன்ன விக்ரஹாம்ஸதா.
ஸுவர்ண வர்ணீம் ருசிராம் முக்தா மாணிக்ய பூஷிதாம்

மாணிக்ய முகுடாம் நேத்ர த்வயப்ரேங்கத்யா பாராம்
த்விபுஜாம் ஸுஹாஸனாம் பத்மம் த்வஷ்ட ஷோடஸத்வயை:
பர்வீண நீபேதேஸ சதுர்த்வார பூஸத்மயக்மகை:
மாதுலிங்க பலம் தக்ஷே ததானாம் கர பங்கஜே

வாமேந நிஜபக்தானாம் ப்ரயச்சந்தீம் தனாதிகம்
ஸ்வ ஸமானாபிஹி ரபித: ஸக்திப்ய: பரிவாரிதாம்.
ஷட் ஸப்ததிபிரந்யாபி ரக்ஷரோத்தாபி ரந்விதாம்
ப்ரயோகேஷ்வந்யதா நித்ய ஸபர்யாசுக்த சக்தியாம்.

ஸுக்ல பக்தாஸனே ரம்யாம் சந்த்ரகுந்த ஸமத்யுதிம்
ஸுப்ரஸன்னாம் ஸஸிமுகீம் நாநாரத்ன விபூஷிதாம்
அனந்த முக்தாபரணாம் ஸ்ராவந்தீ பும்ருத த்ரவம்
வரதாபய வேஷாட்யாம் ஸ்மரேத் ஸௌபாக்ய வர்த்தனீம்.

ரக்தோத்பல சமப்ரக்யாம் மதுபத்ர நிபேஷணாம்
இஷு கார்முக புஷ்பை: சுபாசாங்குஸ ஸமன் விதாம்
ஸுப்ரஸன்னாம் ஸஸிமுகீம் நாநாரத்ன விபூஷிதாம்
ஸுப்ரபதாஸஸ்யாம் தாம் பஜாமி ஸர்வமங்களாம்.


ஸ்ரீஸூக்த நித்யா ஸ்லோகம்:

ஸ்ரீஸுக்த ஸம்ஸ்துதாம் ஓம்கார ப்ரக்ருதிக,
ஸ்ரீ ப்ரீதி கலாத்மிகாம் ஸ்ரீஸர்வமங்களா
நித்யா ஸ்வரூபாம் பீஜாகர்ஷிணீ ஸக்தி ஸ்வரூபாம்,
ஸ்ரீ ஸங்கர்ஷண வக்ஷஸ்தல கமல வாஸினீம்
ஸர்வமங்கள தேவதாம் ஸ்ரீசாந்தி லக்ஷ்மி ஸ்வரூப ஸர்வமங்கள நித்யாயை நம:


வழிபட வேண்டிய திதிகள்:

 ஸுக்ல பக்ஷ த்ரயோதசி / க்ருஷ்ண பக்ஷ த்ரிதியை (த்ரயோதசி திதி ரூப ஸர்வமங்கள நித்யாயை நம:)

திதி தேவதை: ரதி, மன்மதன்

நைவேத்யம் : கடலை சுண்டல்

பூஜைக்கான புஷ்பங்கள்: செந்தாமரைப் பூக்கள்.

திதி தான பலன்:

கடலை சுண்டல் செய்து தேவிக்கு நிவேதித்து தானம் செய்தால் சந்ததி விருத்தியாகும்.

பஞ்சோபசார பூஜை

ஓம் ஸர்வமங்களா நித்யாயை கந்தம் கல்பயாமி நம:
ஓம் ஸர்வமங்களா நித்யாயை தூபம் கல்பயாமி நம:
ஓம் ஸர்வமங்களா நித்யாயை தீபம் கல்பயாமி நம:
ஓம் ஸர்வமங்களா நித்யாயை நைவேத்யம் கல்பயாமி நம:
ஓம் ஸர்வமங்களா நித்யாயை கற்பூர நீராஞ்ஜனம் தர்சயாமி நம:


இத்திதியில் பிறந்தோரின் குணநலன்கள்:

ஆன்மிக நாட்டம் உடையவர்கள். தங்களின் தகுதிக்கு ஏற்ப தானம் செய்பவர்கள். அழகானவர்கள். மிகுந்த காமம் உடையவர்கள். எதிலும் வித்வானாகத் திகழ்பவர்கள். செல்வந்தர்கள்.சஞ்சல குணம் உள்ள புதல்வனை உடையவர்கள். நாட்டியத்தைக் கண்டு மகிழ ஆவல் கொண்டவர்கள். நாற்கால் பிராணிகளிடத்தில் பிரியமுள்ளவர்கள். திட்டமிட்டு செயல்படுபவர்கள்.

யந்திரம் வரையும் முறை:


சந்தன குங்குமக் கலவையால் வட்டம், எட்டிதழ்கள், பதினாறிதழ்கள், முப்பத்தியிரண்டு இதழ்கள், வட்டம் நான்கு வாயில்களுடைய இரு சதுரங்கள் என்று வரையவும். எட்டுத் தளங்களில் பத்ரா, பவானி, பாவ்யா, விசாலாக்ஷி, சுவிஸ்மிதா, கருணா, கமலா, கல்பா ஆகிய சக்திகளையும், 16 தளங்களில் கலா, பூரணி, நித்யா, அம்ருதா, ஜீவிதா, தயா, அசோகா, அமலா, பூர்ணா, புண்யா, பாக்யா, உத்யாதா,  விவேகா, விஸ்வா, விபவா, விநாதா போன்ற சக்திகளையும், 32 தளங்களில் காமினி, கேசரி, சர்வபூரணா, பரமேஸ்வரி, கௌரி, சிவா, அமேயா, விமலா, விஜயா, பரா, பவித்ரா, பத்மினி, திவ்யா, விஸ்வேஸி, சிவவல்லபா, அசேஷரூபா, ஆனந்தா, அம்புஜாக்ஷி, வரதா, வாக்ப்ரதா, வாணி, விவிதா, வேத விக்ரஹா, வித்யா, வாகீஸ்வரி, சந்தியா, சம்யதா, சரஸ்வதி, நிர்மலா, தனரூபா, தனதா, அபயங்கரீ போன்ற சக்திகளையும் பூஜிக்க வேண்டும்.

இத்திதியில் செய்யத் தக்கவைநற்செயல்கள்:

ஸௌபாக்கியத்தைத் தரவல்ல செயல்கள், நாட்டியம் பயிலுதல், கதை, கட்டுரை போன்றவற்றை எழுதுதல், அணிகலன்கள் வாங்குதல் போன்றவை.

அகத்தியர் அருளிய சுக்ல பக்ஷ ஸர்வ மங்களா நித்யா துதி:

திரயோதசியான தொருது இடையின் மையம்
சேர்ந்தாரா தாரமதில் வேரூமூன்றி
புரியாகும் ஆக்கினையைக் கடந்து மேவி
குருவாகிக் குரு பதத்தில் புரிக்கும் அம்மை

அறிவை அறிவால் அறிந்தே அனுபவத்தில்
வரியொடுங்கும் பாதமதை அருளிச் செய்வாய்
துறவுதனை மனமடையத் துணைசெய்தாயே
சோதியே மனோன்மணியே! சுழிமுனை வாழ்வே.


அகத்தியர் அருளிய கிருஷ்ண பக்ஷ ஸர்வமங்களா நித்யா துதி:

வாழ்வான உலகமெல்லாம் நீயேயம்மா
மண்டலங்கள் எங்கெங்கும் வளர்ந்த சோதி
தாழ்வேது உனையடைந்த சித்தர்க்கெல்லாம்
தங்கமயமாய் இருந்த தேவி ரூபி

பாழ்போகா வாக்கு நல்ல சித்தி தந்து
பாக்கியமே அடங்காத அண்டத்தூடே
சூழ்ந்திருந்து மகிழ்ந்தென்னை பெற்ற மாதா
சோதி மனோன்மணித்தாயே சுழிமுனைவாழ்வே.


மாத்ருகா அர்ச்சனை

ஓம் ஸர்வமங்களாயை நம:
ஓம் பவ்யாயை நம:
ஓம் மங்கலாயை நம:
ஓம் மங்கலப்ரபாயை நம:
ஓம் காந்த்யை நம:

ஓம் ஸ்ரியை நம:
ஓம் ப்ரீத்யை நம:
ஓம் சலாயை நம:
ஓம் ஜ்யோத்ஸ்னாயை நம:
ஓம் விலாஸின்யை நம:

ஓம் வரதாயை நம:
ஓம் வாரிஜாயை நம:
ஓம் வ்யாக்ராயை நம:
ஓம் சாரவ்யை நம:
ஓம் வாஸ்து தேவதாயை நம:

ஓம் அனந்த சக்த்யை நம:
ஓம் காமிகாயை நம:
ஓம் ஸக்தயே நம:
ஓம் அதுலாயை நம:
ஓம் ஸர்வஜ்ஞாயை நம:

ஓம் க்ஞான தாயின்யை நம:
ஓம் யுக்தயே நம:
ஓம் ஸுயுக்தயே நம:
ஓம் அன்வீக்ஷிக்யை நம:
ஓம் குக்ஷிபோதாயை நம:

ஓம் மதாலஸாயை நம:
ஓம் ப்ரஹ்ம வித்யாயை நம:
ஓம் ப்ரபாயை நம:
ஒம் வேக்ஷ்யாயை நம:
ஓம் மஹா யந்த்ராயை நம:

ஓம் ப்ரவாஹின்யை நம:
ஓம் த்யானாயை நம:
ஓம் த்யேயாயை நம:
ஓம் த்யானகம்யாயை நம:
ஓம் யோகின்யை நம:

ஓம் யோகஸித்திதாயை நம:
ஓம் அக்ஷராயை நம:
ஓம் ப்ரஹ்மவித்யாயை நம:
ஓம் ப்ரபாயை நம:
ஓம் வேக்ஷ்யாயை நம:

ஓம் மஹாயந்த்ராயை நம:
ஓம் ப்ரவாஹின்யை நம:
ஓம் ஸிவப்ரதாயை நம:
ஓம் பஞ்சப்ரஹ்மாத்மிகாயை நம:
ஓம் த்ரிபுராயை நம:

ஓம் பீஜ தத்வகாயை நம:
ஓம் ஸர்வ பீஜாத்மிகா ஸித்தயே நம:
ஓம் அஜ்ஜானோபாதி காமின்யை நம:
ஓம் கல்பாந்த தனோஜ்வலாயை நம:
ஓம் ஸத்வ்ருத்தயே நம:
ஓம் வ்யாள பூஷணாயை நம:



No comments:

Post a Comment