Saturday 11 June 2016

சௌபாக்கியம் வர்ஷிக்கும் “ஒக்க லக்ஷ பசுப்பு!”




ஸெளமங்கல்யாம்பீப்ஸிதா: பதிமதீ: ஸெளந்தர்ய ரத்னாகரா:
பர்த்தாஸங்கமுபேயுஷீ: ஸுவஸனீ: ஸீமந்தனீஸ் ஸுப்ரியா:

ப்ரேம்ணா புத்ரகிருஹாதி பாக்யவிபவை: ஸம்யோஜ்ய ஸம்ரக்ஷதீம்

ஸ்ரீ விஷ்ணுப்ரியகாமினீம் சுபகரீம் ஸெளபாக்ய லக்ஷமீம் பஜே!





சௌமங்கல்யத்தை விரும்பும் சுமங்கலிகள்சௌபாக்கிய லட்சுமிக்கு பிரியமானவர்கள்.




அவர்களை ப்ரேமையுடன் குழந்தைகளையும், வீடு, தோட்டம், வாகனம், ஐஸ்வரியம், ஆரோக்கியம், மாங்கல்யம் முதலாக கொடுத்து ரட்சிக்கும் ஸ்ரீ விஷ்ணுவிடம் அதிகமாக ஆசை வைத்திருக்கும் லட்சுமிதான் சௌபாக்கிய லட்சுமி அன்னையை ஜபித்து பிரார்த்தித்தால் இக பர சௌபாக்கியங்களை அடையலாம் ..


ஆந்திர தேசத்தில் சுமங்கலிப் பெண்கள் நவராத்திரி தினங்களில் அனுஷ்டிக்கும் “ஒக்க லக்ஷ  பசுப்பு..” 





ஆந்திர தேசத்தில் சுமங்கலிப் பெண்கள் நவராத்திரி தினங்களில்  ஒன்பது நாட்களும் மௌன விரதத்தை அனுஷ்டித்து ஒரு தனி பூஜை அறையில் அமர்ந்திருப்பார்கள். 




மிகவும் சிரத்தையுடன் ஆசார அனுஷ்டானத்தை மேற்கொண்டு “ஒக்கப்போது ” என்னும் ஒரு நாளைக்கு ஒரே வேளை  மட்டும் உணவு.  அதுவும் உப்பு, காரம், புளி ,அரிசி  என்று  இதை எதுவும் சேர்க்காமல் உண்பதைக் கடைபிடிப்பார்கள்.


சிறப்பாக …, “ஒக்க லக்ஷ  பசுப்பு..” அதாவது அந்தப் பெண்கள் தங்களின் முன்பு மலை போல புத்தம் புதிய அல்லது காய்ந்த வரளி  மஞ்சள் இவற்றை மலை போலக் குவித்து வைத்துக் கொண்டு அவர்களைப் பார்க்க வரும் சுமங்கலிகளுக்கு அவர்களது புடைவைத் தலைப்பில் தனது  இரு கைகளின்  முழங்கை வரை மஞ்சள் கிழங்குகளை அள்ளி தாராளமாக எடுத்து மூன்று முறை நிரப்புவார்கள்.



அதே போலத் தான் சுத்தமான குங்குமமும்…அள்ளி அள்ளித் தருவார்கள்.




நவராத்திரி  ஒன்பது நாட்களுள் மூன்று லக்ஷம்  மஞ்சள்கிழங்குகள் வரை கூட அள்ளிக் கொடுப்பார்கள் சிலர்.




இது ஒரு சிறப்பான வேண்டுதல் ஆகும். இதைக் கொடுக்கும் வீட்டின் முன்பு எப்போதும் பெண்களின் கூட்டம் நிறைந்திருக்கும்.


இந்த முறையைப் பின் பற்றி தருபவருக்கும் பெறுபவருக்கும் சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும் என்பது ஐதீகம்.


“ஒக்க லக்ஷ  பசுப்பு..” சௌபாக்யம் அள்ளித் தரும் பூஜையாகும். 



விடியற்காலையில்  நான்கு மணியிலிருந்து அடுத்த நாள் இரவு ஒரு மணி வரை கூட நீண்ட வரிசையில்  மஞ்சள் வாங்கிக் கொள்ளப் பெண்கள் வரிசையில் காத்திருந்தபடியே “லலிதா சஹஸ்ரநாமம்” பாராயணம் செய்து கொண்டே இருக்கும் சுகமான அனுபவம் கிடைப்பதை பெரும் பேறு பெற்ற வரமாகவே சுமங்கலிப் பெண்கள் மகிழ்வார்கள்...





ஆந்திராவில் “லட்சப் பசுப்பு”என்று எழுதி வைத்திருக்கும் வீட்டின் முன்பு பெண்களின் கூட்டம் திரண்டு  அலைமோதும் கண்கொள்ளாக் கட்சியைப் பக்திப் பரவத்துடன் கண்டு களிக்கலாம்.



தமிழகத்தில் எப்படி “கொலு” வைத்திருக்கும் வீடுகளுக்குச் சென்று “கொலு பார்க்க வந்திருக்கோம்” என்று சென்று கொலுவைப் பார்த்துவிட்டு தாம்பூலமும் சுண்டலும் வாங்கிச் செல்வார்களோ…அதே போல ஆந்திராவிலும் “லட்சப் பசுப்பு” என்று எழுதி வைத்திருக்கும் வீட்டின் முன்பு பெண்களின் கூட்டம் அலைமோதும்.



Bhimavaram Sri Padmavathi Ammavaru receiving Poojas with 1 Lakh Turmeric Sticks (Pasupu Kommulu)


சுமங்கலி பிரார்த்தனை!

ஐந்து  சுமங்கலி பெண்களை  வரசொல்லி  அவர்களுக்கு கால்களில் நலங்கு இட்டு, வெற்றிலை. பாக்கு பழம், புஷ்பம், தக்க்ஷினை, சீப்பு, கண்ணாடி, மஞ்சள், குங்குமம்  கொடுத்து, ரவிக்கை துண்டு, கண்மை, மருதாணி  பவுடர் கொடுத்து சாப்பாடு போட்டு அனுப்ப வேண்டும்.


லக்ஷம் மஞ்சள் கிழங்குகளை  நூறு  நூறாக ஆயிரம் பாக்கட்டுகளில் அல்லது ஐநூறு  ஐநூறாக இரு நூறூ பாக்கட்டுகள் செய்து கொண்டு 45 நாட்களுக்குள் கொடுத்து விட வேண்டும். கொடுக்கும் போது ஒவ்வொருவருக்கும், குங்குமம், வெர்றீலை பாக்கு, தக்ஷிணை, பழம், புஷ்பம் மஞ்சள் பாக்கட்டுடன் கொடுக்க வேண்டும்.




மாங்கல்ய பலம் தரும் அபிராமி அந்தாதி



துணையும் தொழுந் தெய்வ மும்பெற்ற தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதி கொண்ட வேரும் பனிமலர்பூங்
கணையும் கருப்புச்சிலையுமென் பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுர சுந்தரி யாவது அறிந்தனமே.


கைலாச கௌரி பூஜை :  utube view:















No comments:

Post a Comment